Jump to content

கிழக்கு முனைய விவகாரம்; விசேட அறிக்கை வெளியிட்ட இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019ம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
 

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மேற்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு முனைய விவகாரம்; விசேட அறிக்கை வெளியிட்ட இந்தியா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

இதைத்தான் நான் பலமுறை இங்கு எழுதி இருக்கிறேன் பலரும் எழுந்த மாத்திரத்தில் எதிர்க்கருத்து எழுதுவார்கள் அதுக்கு முக்கிய காரணம் நீண்ட கால அரசியல் கொள்கை இல்லாததுதான் முதல் காரணம் 
சுதந்திரம் அடைந்து இன்றுவரை இந்தியாவை சுற்றி ஒரு நட்பு நாடு கூட இந்தியாவுக்கு இல்லை 
அதுவே முதலாவது தோல்வி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே கொள்கை வகுப்பாளர்களும் விலை  போன தேசம் என்றால் அது இந்தியா ஒன்றாகத்தான் இருக்கும் .

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

நீங்கள் கூறிய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது. அதனால்தான் இப்போது கிழக்கு முனையத்தை விடுத்தது  மேட்கு முனையத்தை கொடுப்பதட்கு ஆயத்தமாகிறார்கள். இருந்தாலும் இந்திய அதட்கு சம்மதிக்குமா என்பது வேறு விடயம்.

கச்சத்தீவு, இந்திய கப்பல்கள் இலங்கையை புறக்கணிப்பது, சேது சமுத்திர திடடம், தமிழர் பிரச்சினை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் , போர்க்குற்றம் இப்படியாக நிறைய காரியங்கள் இருக்கின்றன. அதட்காக இலங்கை தமிழர்களுக்கு ஈழத்தை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை.

என்னை பொறுத்த வரைக்கும் இந்திய ராணுவ ரீதியாக முன்னரைவிட முன்னேற்றமடைந்ததுடன் , பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்தது என்றே சொல்லலாம்.சில காரியங்களளை ராஜதந்திர ரீதியாகவும் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

6 hours ago, Robinson cruso said:

 சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது.

கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கின்றது. உங்கள் உரிமையை மதிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

14 hours ago, நிழலி said:

கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கின்றது. உங்கள் உரிமையை மதிக்கின்றேன்.

இது சிலருக்கு கனவாக இருக்கலாம் . ஆனால் அதுதான் நிஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210203-150146.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முனைய விவகாரம் – அதிச்சியில் இந்தியா! ஜனாதிபதி, பிரதமருடன் தூதுவர் அவசர பேச்சு

 
Indian-HC-696x348.png
 33 Views

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41125

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகம்: இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை - என்ன நடந்தது?

2 பிப்ரவரி 2021
புதுப்பிக்கப்பட்டது 3 பிப்ரவரி 2021
இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (பிப்ரவரி 1) அனுமதி வழங்கியது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்டிருந்தார்.

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 1) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க போவதில்லை என பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) முதல் போராட்டத்தை கைவிட துறைமுக தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இவ்வாறான நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி மாலை குறித்த விடயம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை பிப்ரவரி 1ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியா எதிர்ப்பு

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையம் பிப்ரவரி 1ஆம் தேதி பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நினைவுப்படுத்தியுள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும், ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, செயற்பட வேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையின் ஊடாக கூறியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தன.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 49 வீதமும், இலங்கைக்கு 51 வீதமும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கடந்த ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை, தற்போது நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சித்த நிலையிலேயே, போராட்டம் வலுப் பெற்றது.

பொருளியலாளரின் பார்வை

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் என உறுதி வழங்கியதன் பின்னர், அதனை மீறப் பெறுவது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியியல்துறை விரிவுரையாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை, பெரும்பாலான விடயங்களில் இந்தியாவையே நம்பி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவை பகைத்துக்கொள்வது தவறான விடயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படாத பட்சத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இந்தியாவிலிருந்து மிக அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், அவ்வாறான பொருள் இறக்குமதிகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55910927

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

கொழும்பு துறைமுகம்: இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை - என்ன நடந்தது?

2 பிப்ரவரி 2021
புதுப்பிக்கப்பட்டது 3 பிப்ரவரி 2021
இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (பிப்ரவரி 1) அனுமதி வழங்கியது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்டிருந்தார்.

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 1) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க போவதில்லை என பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) முதல் போராட்டத்தை கைவிட துறைமுக தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இவ்வாறான நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி மாலை குறித்த விடயம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை பிப்ரவரி 1ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியா எதிர்ப்பு

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையம் பிப்ரவரி 1ஆம் தேதி பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நினைவுப்படுத்தியுள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும், ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, செயற்பட வேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையின் ஊடாக கூறியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தன.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 49 வீதமும், இலங்கைக்கு 51 வீதமும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கடந்த ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை, தற்போது நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சித்த நிலையிலேயே, போராட்டம் வலுப் பெற்றது.

பொருளியலாளரின் பார்வை

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் என உறுதி வழங்கியதன் பின்னர், அதனை மீறப் பெறுவது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியியல்துறை விரிவுரையாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை, பெரும்பாலான விடயங்களில் இந்தியாவையே நம்பி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவை பகைத்துக்கொள்வது தவறான விடயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படாத பட்சத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இந்தியாவிலிருந்து மிக அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், அவ்வாறான பொருள் இறக்குமதிகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55910927

உவர் தமிழர்தானே.. பதில் இப்படித்தான் வரும். சிங்களவரிடம் கேட்டிருந்தால் பதில் வேறு விதமாக வந்திருக்கலாம்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு கொள்கலன் முனையம்: இலங்கையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அதிருப்தி - சீனா காரணமா?

  • சரோஜ் சிங்
  • பிபிசி நிருபர், தில்லி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜபக்‌ஷ் மற்றும் மோடி

பட மூலாதாரம்,TWITTER/@MEAINDIA

இலங்கையில் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது. இதில், தொழிற்சங்கங்கள், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுடனான ஒரு டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.

இந்த டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டம் கிழக்கு கொள்கலன் முனையம் (East container terminal) என்று அழைக்கப்படுகிறது. இதை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2019 மே மாதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் போது செய்யப்பட்டது, இதை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செய்யவிருந்தன. இந்தியத் தரப்பிலிருந்து, அதானி துறைமுகம் இந்தத் திட்டத்தில் பணியாற்றவிருந்தது.

செய்தி

பட மூலாதாரம்,EPAPER.ISLAND.LK

இந்த ஒப்பந்தம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம். இதில் 51 சதவீத பங்குகளை இலங்கையும், 49 சதவீத பங்கை இந்தியாவும் ஜப்பானும் வைத்திருந்தன.

 

திங்களன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, துறைமுகங்களை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் தொழிற்சங்கங்களிடம், கிழக்கு கொள்கலன் முனையத்தின் 100 சதவீதப் பங்கும் இலங்கை துறைமுக ஆணையத்திற்குச் (SLAP) சொந்தமானதாக இருக்கும் என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரது அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவுடனான கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகச் செய்தி வந்தது.

கிழக்கு கொள்கலன் முனையம்

பட மூலாதாரம்,SLPA

ஈஸ்ட் கன்டெய்னர் டர்மினலின் முக்கியத்துவம் என்ன?

இந்தக் கொள்கலன் முனையம் வியூக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தின் மொத்த வணிகத்தில் சுமார் 70% இதன் மூலமே செய்யப்படுகிறது. இது, கொழும்புவுக்கு அருகில் உள்ளது. அண்டை நாடாக இருப்பதால், இந்தியாவும் இதை அதிகம் பயன்படுத்துகிறது.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு பதில் இப்போது மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் உதவியுடன் இயக்க இலங்கை அரசு விரும்புகிறது. இதன்படி, இந்தியா மற்றும் ஜப்பானுடன் அரசு- தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இலங்கை அதை உருவாக்க விரும்புகிறது. இருப்பினும், இதுவரை புதிய திட்டம் குறித்து இந்திய அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல்

சமீபமாக இந்தியா 50 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கைஅரசும் இந்திய அரசின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கையை, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு என்று பாராட்டினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பின்னர் இலங்கை அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, இதன் பின்னணியில் உள் நாட்டு அரசியலும் தொழிற்சங்கத்தின் தலையீடும் இருப்பதாகக் கருதுகிறார்.

சென்னையில் இருந்து பேசிய அவர், "இலங்கையை ஆளும் எந்த அரசும் தொழிற்சங்கத்துக்கு விரோதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் துணியாது. அந்த அளவுக்குத் தொழிற்சங்கங்களுக்கு அரசியல் தலையீடு உள்ளது. அவர்களின் அதிருப்திக்கு ஆளாகும் எந்தக் கட்சிக்கும் அது பெரிய இழப்பாகவே இருக்கும். சில கட்சிகள் இதை ஒப்புக்கொள்கின்றன, சில ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும். முந்தைய அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அவர்களது ஆட்சிக்காலத்தில் கூட இதன் பணிகளை தொடங்க முடியவில்லை." என்று கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா இதில் ஈடுபடுவதை தொழிற்சங்கம் விரும்பாத நிலையில், ஆளும் கட்சி அதன் கோபத்திற்கு ஆளாக விரும்பாது.

மூத்த பத்திரிகையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் இந்தியாவுடனான திட்டத்தை ரத்து செய்வதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறார். முதல் காரணம், இந்தியாவின் தமிழ்ச் சமூகம் மற்றும் இலங்கையின் சிங்களச் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் என்கிறார் அவர்.

கிழக்கு கொள்கலன் முனையம்

பட மூலாதாரம்,SLPA

"தமிழ்ச் சமூகத்தினர் அங்கு சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவிலிருந்து வரும் எந்த உதவியும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கமாகவே அவர்களால் பார்க்கப்படுகிறது. எனவே அங்குள்ள தொழிற்சங்கத்தினர், இந்தியாவின் உதவியுடன் எந்தத் திட்டமும் வருவதை விரும்பவில்லை. துறைமுகத் தொழிற்சங்கத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், சிங்களர்களின் ஆதிக்கமே நிலவுகிறது," என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக தனியார்மயமாக்கலுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும், ஆளும் கட்சி பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இதன் காரணமாக ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று ஆளும் கட்சி அஞ்சுகிறது. துறைமுகத் தொழிற்சங்கம் தனியார்மயமாக்கலை எதிர்ப்பது மட்டுமல்லாமல், இப்போது பொது மக்களும் அவர்களுடன் சேர்ந்துள்ளனர்.

இலங்கையில் சீனாவின் தலையீடு

ஷி ஜின் பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி.ஆர்.ராமச்சந்திரன், சீனாவின் அதிகரித்துவரும் அழுத்தத்தை இலங்கையின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள இரண்டாவது காரணியாகக் கருதுகிறார்.

"அடுத்த 15-20 ஆண்டுகளில், இலங்கையின் மக்கள் தொகையில் முழு ஆதிக்கத்தைச் சீனா பெற்றுவிடும். அந்த அளவுக்கு இன்று சீனர்களின் தொகை அங்கு அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்சமயம் சீனாவின் திட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்து சீனா வெளியேற்றப்படவில்லை. இது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். " என்பது அவர் கருத்து.

"சிறு சிறு நாடுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி அவர்களை அடிமைப்படுத்துவதே சீனாவின் உத்தியாக உள்ளது. இலங்கையிலும் இதுவே நிலை. இதனால், சிறிய நாடுகளுக்குத் தங்களின் நன்மை தீமைக்கான முடிவுகளை எடுக்கும் திறன் இல்லாமல் போய் விடுகிறது." என்று விளக்குகிறார் டி.ஆர்.ராமச்சந்திரன் .

இதற்கு உதாரணமாக ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவின் கடனை அடைக்க முடியாததால், இலங்கை, ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டது. 2017 ஆம் ஆண்டில், இந்த துறைமுகம் 1.12 பில்லியன் டாலருக்கு அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனுடன், அருகிலுள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலமும் தொழில்துறை மண்டலமாக சீனாவுக்கு வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளுடனும் சமரச முயற்சி

இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் மூத்த பத்திரிகையாளரும், டைம்ஸ் ஆப் இந்தியாவின் இராஜரீக பிரிவின் ஆசிரியருமான இந்திராணி பாக்ச்சியும் இந்த முடிவுக்குப் பின்னால் சீனாவும் ஒரு காரணம் என்று கருதுகிறார்.

பிபிசியுடனான உரையாடலில், "கிழக்கு கொள்கலன் முனையத்தில் இலங்கையின் 100% பங்குகளை தொழிற்சங்கம் விரும்பினால், அங்குள்ள அரசாங்கம் ஏன் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு முன்மொழிகிறது? தொழிற்சங்கத்திற்கு அதில் எந்த பிரச்னையும் இல்லையா? சீனாவுடனான எந்தத் திட்டத்திலும் இவ்வாறு தடையில்லையே ஏன்?," என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "சிறிசேன அரசு இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட போதும், சீனா பெரும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது. ராஜபக்ஷ சீனாவுக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற கருத்தும் நிலவுகிறது. புதிய அரசாங்கம் சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகளையும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டு, இருவருடனும் சமரசம் செய்ய முயற்சிக்கிறது." என்று தெரிவிக்கிறார்.

பொருளாதார ரீதியில் ஒரு நாட்டுடனும் பாதுகாப்பு ரீதியில் இன்னொரு நாட்டுடனும் உடன்பட்டிருப்பது என்பது நடைமுறையில் சிக்கலானது என்று இந்திராணி கூறுகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு நிச்சயமாக இந்திய அரசின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கு விழுந்த ஒரு அடியாகும்.

ஆனால் இந்திராணி இதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகக் கருதவில்லை. ஒரு திட்டம் கை நழுவிப் போனதால் அப்படிச் சொல்லி விட முடியாது என்றாலும், இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் எப்போதும் சிக்கலானவையே என்றும் இது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

புதிய அரசுடன் இந்தியாவின் நெருக்கம்

இலங்கை

பட மூலாதாரம்,RAVEENDRAN / GETTY

2019 நவம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, இதுவரை இந்தியா இதுபோன்ற பல முயற்சிகளை எடுத்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாகவே காணப்பட்டது.

இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது முதலில் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மறுநாள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்றார். அவர் கோத்தபய ராஜபக்ஷவைச் சந்தித்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இதன் பின்னர் கோதபய ராஜபக்ஷ நவம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார், இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டது.

இந்த விஜயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை கண்காணித்த நிபுணர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. ஏனென்றால் கோத்தபய, சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இதன் பின்னர், ஜனவரி மாதம் இலங்கை சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவின் தரப்பிலிருந்து இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளித்தார்.

அண்மையில், கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பு மருந்தும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். ஆனால் மோடி அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பது போல் இன்றைய நிலை உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இலங்கை அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வைக்க இந்திய அரசின் முயற்சிகள் இன்னும் தொடர்வதாக மூத்த பத்திரிக்கையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் கூறுகிறார்.

"இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி இலங்கை செய்தித்தாள்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த பிரச்னையை இலங்கை அரசாங்கத்தால் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இந்திய அரசு நம்பிக்கையிழக்கவில்லை. இந்த விவகாரம் சற்று சிக்கலானதும் தீவிரமானதும் கூட என்பதால் தீர்வு காண கால தாமதாம் ஆகலாம்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவிலான டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகத்தை இந்தியா கட்டினால், இலங்கை மீதான சார்புநிலையைக் குறைக்க முடியும் என்று இந்திராணி கூறுகிறார். இது இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டாலும், இலங்கையும் இதனால் அதிகம் பாதிக்கப்படும். ஆனால், இலங்கை சீனாவுடன் இன்னும் நெருக்கமாகச் செல்லவும் நேரலாம்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55926539

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுக உடன்படிக்கையில் இலங்கையின் திடீர் மாற்றத்தால் அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர்.

(ஆர்.யசி)

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் திடீரென மாற்றியுள்ளதை அடுத்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளதுடன், இலங்கையின் திடீர் மாற்றம் குறித்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இலங்கையின் தீர்மானத்தை  இன்னமும் இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என்பதை அரசாங்கம் கூறியுள்ளதுடன்  எதிர்வரும் நாட்களின் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் முதலீடுகளை கொண்டு அபிவிருத்தி செய்ய இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்திப்புகளை நடத்தியுள்ளார். இலங்கையின் அவசர முடிவுகள் குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிய வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51வீத உரிமம் இலங்கைக்கு 49 வீத உரிமத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் முதலீடுகளை செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இலங்கையுடன் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றினை செய்துள்ள நிலையில் அந்த உடன்படிக்கைக்கு அமையவே இதுவரை காலமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென நாட்டில் எழுந்த துறைமுக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபைக்கே வழங்குவதாகவும், மேற்கு முனையத்தை இந்திய, ஜப்பான் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது அறிவித்துள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக உடன்படிக்கையில் இலங்கையின் திடீர் மாற்றத்தால் அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தின் அடியில் படுத்து தவம் கிடக்க வேண்டியான். அணில் தாவி சீனாவுக்கு  போய்விடும். வாலை தொங்கபோட்டுக்கொண்டு, தன்னையே நொந்துகொண்டு, வந்த வழியே திரும்புவதன்றி வேறு வழியில்லை.

6 hours ago, பெருமாள் said:

Image result for அணில் ஏற  விட்ட நாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை

இத்து எப்பிடியிருக்கு...? 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முனையம்: சர்வதேச வாக்குறுதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும்- இந்தியா

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இலங்கை, தனது சர்வதேச வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமென இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சின்பேச்சாளர் அனுரக் ஸ்ரீவத்சவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா,  இலங்கை மற்றும்  ஜப்பான் அரசாங்கங்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்து இயக்குவதற்காக கடந்த 2019 மே மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டமை அனைவரும் தெரிந்த விடயமாகும்.

மேலும், துறைமுகம் எரிசக்தி போன்றவற்றில் இலங்கையின் உட்கட்டமைப்புகளை இந்தியா சீனாவின் முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்வது, பரஸ்பர நன்மையளிக்க கூடிய விடயமாக காணப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக  சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றியமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கிழக்கு-முனையம்-சர்வதேச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210205-112958.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2021 at 06:33, Robinson cruso said:

நீங்கள் கூறிய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

நீங்கள் சொல்வது ( இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது) முற்றாக இல்லாவிட்டாலும், ஹிந்தியா  தனித்து நிற்பதற்கு அதனிடம் நம்பிக்கை இல்லை.

இந்த நம்பிக்கை சீனவிடம் இருக்கிறது.

மலையாளிகள் விட்டது என்பது நிரந்தரமானது என்பதை உலகின் நம்பிக்கையை பெற்ற கிந்தியாவின் கேந்திர மூலோபாய  ஆய்வாளரான பிரம்ம சலெனியின் முடிவு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2021 at 06:33, Robinson cruso said:

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது. அதனால்தான் இப்போது கிழக்கு முனையத்தை விடுத்தது  மேட்கு முனையத்தை கொடுப்பதட்கு ஆயத்தமாகிறார்கள்.

இந்த மேற்கு விடயம் மைத்திரியும் செய்து பார்த்து தான் கிழக்கே வேண்டும் என்று ஹிந்தியை அலுங்கு பிடி பிடித்து, சிங்களத்தில் சொல்வதானால் பறையா (இங்கு சாதியை குறிப்பிடவில்லை) டெமுலு dR. ஜெயசங்கர் வந்து எச்சரிக்கை எல்லாம் கொடுத்து, காசும் கொடுத்து, கோவிட மருந்தும் கொடுத்த பின், சிங்களம் கிந்தியாவுக்கு குளிசை கொடுத்து ஆப்படித்து இருக்கிறது.

ஆம், சிங்களம் பாதுகாப்புச்சபைக்கும் தயார் சீன தயாவில். கிந்தியாவே unhrc இல் வைத்து இருக்கிறது, unsc க்கு போனால் கிந்தியா ஓரம் கட்டப்படும் என்று.

மற்றது, சொறி சிங்களம் ஒன்றையும் கிந்தியாவுக்கு கொடுக்காது. மேற்கை கிந்திய ஏற்றுகுமாயின், சிங்களத்துக்கு பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கும். சட்ட இடையூறுகள், இறைமை, சுற்றுசூழல் நலன் என்று சொல்லி சிங்களம் இழுக்க, மேற்கத்தி தோண்ட பல தொல்பொருள் சான்றுகள் வரும்,    
மற்ற பக்கத்தால் வேலையில்லாமல் திண்டு கொழுத்து இருக்கும் மொட்டந்தலைகள் தோல்புருள் ஆய்விடம் என்று சொல்லி வெளிக்கிடுவினம்.     

ஆனால், சிங்களம் செய்ததை நான் வரவேற்றுகிறேன். இரத்த, வரலாற்று தொடர்புள்ள அயலவனாக வரவேட்ப்பு அறைக்கு வந்து கூடி கலந்து உறவாட அழைக்க, கிந்தியா படுக்கை அறையில் வந்து நின்று வெளிச்சம் போடு பார்க்க வேண்டும் என்கிறது. 

தமிழ் தரப்பு விட வீட்டுக் கொண்டு இருக்கும் பிழையும் அது தான். சும்மா எமோஷனல்  ஹிந்தியை / இந்தியா என்று.   

எங்கெளுக்கென்ன கூத்து தானே.  ஹிந்திவாவுடன் ஈழத்தமிழரின் அணுகு முறையும் கண்போனலும் பிரச்னை இல்லை, கிந்தியாவுக்கு தலை போனால் எல்லாம் நன்றே. 

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

இந்த மேற்கு விடயம் மைத்திரியும் செய்து பார்த்து தான் கிழக்கே வேண்டும் என்று ஹிந்தியை அலுங்கு பிடி பிடித்து, சிங்களத்தில் சொல்வதானால் பறையா (இங்கு சாதியை குறிப்பிடவில்லை) டெமுலு dR. ஜெயசங்கர் வந்து எச்சரிக்கை எல்லாம் கொடுத்து, காசும் கொடுத்து, கோவிட மருந்தும் கொடுத்த பின், சிங்களம் கிந்தியாவுக்கு குளிசை கொடுத்து ஆப்படித்து இருக்கிறது.

ஆம், சிங்களம் பாதுகாப்புச்சபைக்கும் தயார் சீன தயாவில். கிந்தியாவே unhrc இல் வைத்து இருக்கிறது, unsc க்கு போனால் கிந்தியா ஓரம் கட்டப்படும் என்று.

மற்றது, சொறி சிங்களம் ஒன்றையும் கிந்தியாவுக்கு கொடுக்காது. மேற்கை கிந்திய ஏற்றுகுமாயின், சிங்களத்துக்கு பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கும். சட்ட இடையூறுகள், இறைமை, சுற்றுசூழல் நலன் என்று சொல்லி சிங்களம் இழுக்க, மேற்கத்தி தோண்ட பல தொல்பொருள் சான்றுகள் வரும்,    
மற்ற பக்கத்தால் வேலையில்லாமல் திண்டு கொழுத்து இருக்கும் மொட்டந்தலைகள் தோல்புருள் ஆய்விடம் என்று சொல்லி வெளிக்கிடுவினம்.     

ஆனால், சிங்களம் செய்ததை நான் வரவேற்றுகிறேன். இரத்த, வரலாற்று தொடர்புள்ள அயலவனாக வரவேட்ப்பு அறைக்கு வந்து கூடி கலந்து உறவாட அழைக்க, கிந்தியா படுக்கை அறையில் வந்து நின்று வெளிச்சம் போடு பார்க்க வேண்டும் என்கிறது. 

தமிழ் தரப்பு விட வீட்டுக் கொண்டு இருக்கும் பிழையும் அது தான். சும்மா எமோஷனல்  ஹிந்தியை / இந்தியா என்று.   

எங்கெளுக்கென்ன கூத்து தானே.  ஹிந்திவாவுடன் ஈழத்தமிழரின் அணுகு முறையும் கண்போனலும் பிரச்னை இல்லை, கிந்தியாவுக்கு தலை போனால் எல்லாம் நன்றே. 

பொறுத்திருந்து பார்ப்போம் ஹிந்தியாக்காரன் என்ன செய்கிறான் என்று. இப்படியே போய் தமிழனுக்கு ஒரு தீர்வாவது கிடைத்தால் நல்லதுதானே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://thodarum.com/ltte-intelligent-mathavanmaster/ இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958   தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புலனாய்வுத்துறையில் மிகத் திறமையான செயற்பாடுகளை உடைய பலரை இனம் கண்டு அவர்களின் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கான புலனாய்வின் வீச்சை அதிகரித்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் மாதவன் மாஸ்ரர் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென பதிவுசெய்தவர். தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ள  மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்ட புலனாய்வுத் துறைப் போராளிகள் பலரை முள்ளி வாய்க்காலில் இருந்து கடுமையான முயற்சிகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரால் பயிற்றப்பட்டு சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், அரச நிர்வாகங்களுக்குள்ளும், அதன் படைகளுக்குள்ளும் ஊடுருவி தமது செல்வாக்கைச் செலுத்தி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர், கடைசி நேர சரணடைவின் போது மிகக் கடுமையான காயங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் இருந்து  மாதவன் மாஸ்ரர் அவர்களும் பாதுகாப்பாக வெளியேறியிருப்பார் என எண்ணியிருந்த போராளிகளுக்கு இவரின் வீரச்சாவு செய்தி ஏற்க முடியாத ஒன்றாகவே அமையும். அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம். சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது. தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வனஜா, ,ஜனனி, ஜெயா,.. ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார். நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள். அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது. வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு. ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார். 26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர். ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது. அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது. கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார். ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார். அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர். அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயாராகியது. புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது. பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது. பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள். யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர். பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது. புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது. குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார். யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார். பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். யாழ்மாவட்டம் மாதகல் ராஜன் , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள், எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது. இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது. அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது. இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது. கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார். அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது. மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார். இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள். அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர். கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும் அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார். 1993 காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வெவ்வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார். மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது. குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது. மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை. யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது. 09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர். முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது. குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது. அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும், எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது. நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர். எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது. அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம் புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர். தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும். நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான். புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது. 17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண். காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம். 6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. 30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா விடுதலைப்புலிகள் முதல்பெண் கரும் புலியை உருவாக்கிபெருமைக்குரியவரும்.அவர்களின் புலனாய்வுத்துறையின்பணிகளானது ஒரு தனி வரலாறு. புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது. இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும். எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார். இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம். பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது. இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது. பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம். ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது. இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது. ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது. புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள். இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர். இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது. 2009 மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு. பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார். தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார். 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார். புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….! புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார். உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.     நினைவுப்பகிர்வு : சாந்தி நேசக்கரம்
    • அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.