Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்: சபையில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

ரகளை என்றால் என்ன ?

கேள்விகள் கடுமையாக கேட்டவர்கள்  திட்டியவர்கள்  அதொன்றும்  உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை அல்ல இங்கு உள்ள எம்பி மாருக்கு விழாத திட்டா சுமத்திரனுக்கு விழுந்தது சுமத்திரனை  பார்த்து கேள்வி கேட்டது குற்றமா ?

 அதென்ன முன்னாள் கைகால் இல்லாத புலிகளை தனக்கு கிளைமோர் குண்டு வைக்க முயற்சித்தவர்கள்  என்று சொல்லி மாட்டிவிட்டவர் இப்ப அவர்களும் கைதிகள்  அவர்களுக்கு விடுதலை இல்லை யார் அந்த அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிய விட்டது ? சிங்கள அரசா? சுமத்திரனா ?

 

நான் நினைக்கிறன், உங்கள் அளவீட்டின் படி அது ரகளையாக இருக்காது! அது தீவிர தேசியர்களின் baseline tone ஆக இருக்கும் போல! அப்ப ரகளை இல்லை! ஒத்துக் கொள்கிறேன்!

  • Replies 70
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

நான் நினைக்கிறன், உங்கள் அளவீட்டின் படி அது ரகளையாக இருக்காது! அது தீவிர தேசியர்களின் baseline tone ஆக இருக்கும் போல! அப்ப ரகளை இல்லை! ஒத்துக் கொள்கிறேன்!

மழுப்ப வேண்டாம் ரகளை என்றால் என்னங்க ? தெரியாட்டி  தெரியாது என்று சொல்லுங்க .

சரி கீழே உள்ள விடடயத்துக்கு  வாங்க அதுக்கும் பதில் தெரியாது என்று ஓடவேண்டாம் .

அதென்ன முன்னாள் கைகால் இல்லாத புலிகளை தனக்கு கிளைமோர் குண்டு வைக்க முயற்சித்தவர்கள்  என்று சொல்லி மாட்டிவிட்டவர் இப்ப அவர்களும் கைதிகள்  அவர்களுக்கு விடுதலை இல்லை யார் அந்த அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிய விட்டது ? சிங்கள அரசா? சுமத்திரனா ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

உண்மையில் நக்கலடிக்கவில்லை, அது எனது கோபத்தின் பிரதிபலிப்பு(கொஞ்சம் நாகரீகமாக). 

நீங்கள்  "அரசியல் கருத்துக்கள் பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரம் தற்போது தமிழரிடம்  இல்லாதத்து நிம்மதி" என்று இப்படியொரு கருத்தை இங்கே கொட்டி பழைய காயங்களைக் கிளற வேண்டிய தேவையே இல்லை. 

( ஆயுததாரிகளின்கொலைக் கலாச்சாரம் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை. அது தமிழர்களிடம்தான் இருந்தது. இன்னமும் இருக்கிறது. நீங்கள் குற்றம் சொல்ல வேண்டுமென்றால் ஒட்டுமொத்த தமிழரையும்தான் குற்றம் சொல்ல வேண்டும் 😏)

அதெப்படி? சுட்டிக் காட்டினால் "காயத்தைக் கிளறாதே, பேசாமலிரு! "

அவர் சும்மாயிருந்தால் பத்து வருடம் கழிச்சு "எல்லோரும் தான் காரணம், ஆயுதம் தாங்கினவனை மட்டும் குற்றம் சொல்வது எப்படி?" என்ற கேள்வி! 

தெரியாமல் கேட்கிறேன்: எந்தக் காலத்தில் எந்த ஆயுதக் குழுவும் செய்த அரசியல் கொலைகளை சாதாரண தமிழ் மக்கள் முழுமையாக ஆதரித்தனர்?

ஒரு சிறு பகுதி நியாயம் இருக்கிறது என்று கூறி ஒதுங்கி கொண்டது! பெரும்பான்மை: ஒன்றும் சொல்லவில்லை? ஏன் ? யாரும் சொல்ல மேடை அமைத்துக் கொடுக்கவில்லை! 

இந்த நிலையில் எப்படி "எல்லாரும் காரணம்" என்று போர்வை போர்த்துகிறீர்கள்?

5 minutes ago, பெருமாள் said:

மழுப்ப வேண்டாம் ரகளை என்றால் என்னங்க ? தெரியாட்டி  தெரியாது என்று சொல்லுங்க .

சரி கீழே உள்ள விடடயத்துக்கு  வாங்க அதுக்கும் பதில் தெரியாது என்று ஓடவேண்டாம் .

அதென்ன முன்னாள் கைகால் இல்லாத புலிகளை தனக்கு கிளைமோர் குண்டு வைக்க முயற்சித்தவர்கள்  என்று சொல்லி மாட்டிவிட்டவர் இப்ப அவர்களும் கைதிகள்  அவர்களுக்கு விடுதலை இல்லை யார் அந்த அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிய விட்டது ? சிங்கள அரசா? சுமத்திரனா ?

 

தீவிர தேசியர்களைப் பொறுத்த வரை உரையாடலே ரகளை தானே? இதில் என்ன மழுப்பல் இருக்கிறது?
 

பதில் தெரிய என்ன இருக்கிறது? அவர்கள் சந்தேக நபர்கள். அவர்களின் பெயர்களை சுமந்திரன் குறிப்பிட்டு "கொல்ல வந்தார்கள்" என்று கொடுத்த முறைப்பாடு எதுவும் இருக்கிறதா? அப்படி இல்லா விட்டால் அது சிங்கள பொலிசின் பொய்க்குற்றச் சாட்டாகவும் இருக்கலாம். ஆனால், இதில் சும் என்ன செய்ய முடியும்? அவர் இலக்கு, சந்தேக நபர்களின் சட்டவாதியாக அவர் வேலை செய்ய வேண்டுமா?
 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், துல்பென், கு.சா அண்ணா, விசுகு அண்ணர், நாதம்ஸ், ஜஸ்டின், கட்பித்தான் எல்லோர் பெயரும் மனதுக்குள் வரவில்லை... ( இன்னும் பலருக்கு)  
எல்லா (அரசியல் / தமிழர்/ தேசியம்) சார்ந்த திரிகளிலும் இரண்டு பக்கங்களின் முரண்பாட்டை தெரிவித்து புடுங்குபட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? 
யாழில் இப்போதெல்லாம் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, தோழமை, நட்பு பாராட்டல் போன்ற மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு குறைந்து ஏட்டிக்கு போட்டியாக நீயா நானா என்பது போல மட்டும் தான் கருத்துக்கள் வருகின்றன. 
இது ஒரு துரதிஷ்டம். 
இரண்டு பக்கமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற வக்கிர கருத்துக்கள், சீண்டல்கள், ஏளனங்கள், எள்ளி நகையாடல்கள் இது தான் இன்று மிச்சம்.!!!! 🙏
  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

பெருமாள், துல்பென், கு.சா அண்ணா, விசுகு அண்ணர், நாதம்ஸ், ஜஸ்டின், கட்பித்தான் எல்லோர் பெயரும் மனதுக்குள் வரவில்லை... ( இன்னும் பலருக்கு)  
எல்லா (அரசியல் / தமிழர்/ தேசியம்) சார்ந்த திரிகளிலும் இரண்டு பக்கங்களின் முரண்பாட்டை தெரிவித்து புடுங்குபட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? 
யாழில் இப்போதெல்லாம் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, தோழமை, நட்பு பாராட்டல் போன்ற மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு குறைந்து ஏட்டிக்கு போட்டியாக நீயா நானா என்பது போல மட்டும் தான் கருத்துக்கள் வருகின்றன. 
இது ஒரு துரதிஷ்டம். 
இரண்டு பக்கமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற வக்கிர கருத்துக்கள், சீண்டல்கள், ஏளனங்கள், எள்ளி நகையாடல்கள் இது தான் இன்று மிச்சம்.!!!! 🙏
  

இந்த திரி தொடர்பாகவும் பேசக்கூடாதா? சம்பந்தம் கலக்க வந்தது போல எப்பவும் ஒளிச்சு மறைச்சுத் தான் பேச வேணுமா சசி? 😂

பேசுவதைச் சாதாரணமாக்குங்கள்! சும்மா எல்லாவற்றிற்கும் ஒரு உணர்ச்சியை தொடர்பு படுத்தாமல் உரையாடுவது சாத்தியம் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இந்த திரி தொடர்பாகவும் பேசக்கூடாதா? சம்பந்தம் கலக்க வந்தது போல எப்பவும் ஒளிச்சு மறைச்சுத் தான் பேச வேணுமா சசி? 😂

பேசுவதைச் சாதாரணமாக்குங்கள்! சும்மா எல்லாவற்றிற்கும் ஒரு உணர்ச்சியை தொடர்பு படுத்தாமல் உரையாடுவது சாத்தியம் என நினைக்கிறேன்!

அது எப்படி பேச்சு, உரையாடல் + உணர்வுக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது. 
இது ஸ்ரீல ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளை விட உயர்ந்த தத்துவம். 
கற்றுத்தாருங்கள் பெற்றுக்கொள்கிறேன்.. 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

அது எப்படி பேச்சு, உரையாடல் + உணர்வுக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது. 
இது ஸ்ரீல ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளை விட உயர்ந்த தத்துவம். 
கற்றுத்தாருங்கள் பெற்றுக்கொள்கிறேன்.. 😃

அதாவது நான் வானம் நீல நிறம் என்றால், நீங்க அண்ணாந்து பார்த்து விட்டு நீலம் என்றால் "சரி" என்றிருக்க வேண்டும். சிவப்பு என்றால் "இல்லையே, சிவப்பாயிற்றே?" என்று சொல்ல வேண்டும். 

இந்தப் பரிமாற்றத்தில் எங்கே உணர்ச்சி வருகிறது என்று சொல்லுங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

அதாவது நான் வானம் நீல நிறம் என்றால், நீங்க அண்ணாந்து பார்த்து விட்டு நீலம் என்றால் "சரி" என்றிருக்க வேண்டும். சிவப்பு என்றால் "இல்லையே, சிவப்பாயிற்றே?" என்று சொல்ல வேண்டும். 

இந்தப் பரிமாற்றத்தில் எங்கே உணர்ச்சி வருகிறது என்று சொல்லுங்கள்? 

நிச்சயமாக இந்த பரிமாற்றத்தில் உணர்ச்சி வராது ...வானம் ..நீலம் ..சிவப்பு.
அது மருதரின் காஜலிசம் போல தொடர்ந்தும் உரையாடலாம்.
ஆனால் இங்கேய பேசப்படுவது ரத்தமும், தசையும், உயிரும், உறவும் இனமும் அதன் இருப்பமாய் இருக்கும் பட்சத்தில் அது சாத்தியமா குருஜி...🙏

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

கபிதன் நானும் அதை தான் கூறுகிறன். தமிழ் அரசியலில் கருத்துகளுடன் ஒத்து போகாதவர்களை கொலை செய்யும் கொலைக்கலாச்சாரம் 1970 களின் ஆரம்பத்தில் தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை.

தமிழரசுக்கட்சி தலைவர் திரு செல்வநாயகம் மேடையில் இருந்த ஒரு கூட்டத்தில் தமிழரசுக்கட்சி பிரமுகர் காசி ஆனந்தன் உரையாற்றுகையில்,  "திரு.துரையப்பா,திரு.சுப்ரமணியம்,திரு.அருளம்பலம்,திரு.ஆனந்தசங்கரி ஆகியோர் தமிழ் இனத்தின் எதிரிகள். அவர்கள் இயற்கையான மரணத்திற்கோ அல்லது விபத்தான மரணத்திற்கோ தகுதியானவர்கள் அல்லர் என்றும், தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அவர்கள் எப்படி மரணிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று", குறிப்பிட்ட போதே தமிழ் அரசியலில் கொலைக்கலாச்சாரத்தின் முதல் விதை விதைக்கப்பட்டது.

70 களில் முக்கிய பிரமுகர்களில் தொடங்கிய அந்த கலாச்சாரம் 1983 இன் பின்னர் சாதாரண தமிழ் மக்கள் மீது பதம் பார்க்க தொடங்கியது. ஐயோ மீண்டும் சாதாணர தமிழ் மக்களிடம் உரையாடுவது போல் இந்த யாழ் இணையத்திலும் பேசிவிட்டேன். மன்னித்தருள்க கபிதன்.😂

ம்ம்... 😂

நானும் சதா தமிழன்தான். அதில் எனக்கு  வியப்பில்லை.

ஆனால் எதை எங்கு எப்போது கூறவேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். எல்லா இடத்திலும் பழையதைக் கிழற வேண்டிய அவசியமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

நிச்சயமாக இந்த பரிமாற்றத்தில் உணர்ச்சி வராது ...வானம் ..நீலம் ..சிவப்பு.
அது மருதரின் காஜலிசம் போல தொடர்ந்தும் உரையாடலாம்.
ஆனால் இங்கேய பேசப்படுவது ரத்தமும், தசையும், உயிரும், உறவும் இனமும் அதன் இருப்பமாய் இருக்கும் பட்சத்தில் அது சாத்தியமா குருஜி...🙏

இந்த ரத்தமும் சதையும் உயிரும் இருந்தாலும் facts பற்றிப் பேசும் போது உணர்ச்சி ஏன்? அனேகமாக என்ன நடக்கிறது என்று பார்த்தால்:

1.  ஒரு சம்பவம் குறிப்பிடப் படும்!

2. அது நடக்கவில்லை என ஒரு தரப்பு மறுக்கும்

3. மறு தரப்பு அதை அழுத்திச் சொல்லும்! 

இந்தப் பரிமாற்றத்தில் facts மறைந்து , மறைத்ததை மழுப்புவதும், அழுத்திச் சொல்வதும் தொடரும்! இந்த நச்சுச் சக்கரத்தை எங்கே நிறுத்துவது? நிச்சயமாக facts ஐச் சொல்லாதே என்று தடுக்க இயலாதென நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

எந்தக் காலத்தில் எந்த ஆயுதக் குழுவும் செய்த அரசியல் கொலைகளை சாதாரண தமிழ் மக்கள் முழுமையாக ஆதரித்தனர்?

பெரும்பான்மை தமிழ் மக்கள் கொலைகளை ஆதரிப்பவர்கள் இல்லை  
****

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:


அது மருதரின் காஜலிசம் போல தொடர்ந்தும் உரையாடலாம்.
 

பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள் 
மனிதர்களிடம் அழகென்று 
எதை காண்கிறார்களோ 
அதுவே காஜலிசம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

EtmR42EUcAAzL2Q?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நாம் கேட்ட கேள்விக்கும் அவுசுக்கும் என்ன சம்பந்தம் ?

புலிகளால் தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லித்தானே STF பாதுகாப்பு பெற்றவர் அதிலும் மகிந்த அனுமதிக்கும் போது  ஆறாக இருந்த எண்ணிக்கை கோத்தா வந்தவுடன் 9 ஆக கூட்டியவர் அப்படி எண்ணிக்கையை கூட்டும் அளவுக்கு சுமத்திரன்  என்ன செய்தவர் ?

சும் ,அரசு தான் புலிகளால் தனக்கு ஆபத்து இருக்கு என்று அதிரடிப்படையை பாதுகாப்பாய் போட்டதாக அண்மையில் சொல்லி இருந்தார் ...தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இவருக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும்போது கூறப்பட்ட காரணம் புலிகளினால் அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதே. அதை சுமந்திரன் அன்று மறுக்கவில்லை. இப்போ இந்தப் பேரணியை புலிகளின் பேரணி, இதில் சுமந்திரன் கலந்து கொண்டதால் அவர்களால் சுமந்திரனுக்கு ஆபத்தில்லை என்பதுபோல் சித்திரித்து வாபஸ் பெற்றுக்கொண்டது. இப்போ ஏன் சுமந்திரன் கதறுகிறார்? அரசு அன்று பாதுகாப்பு கொடுக்கும்போது சொன்ன காரணத்தையே திரும்பப்பெறும்போதும் சொல்லுகிறது. அன்று பேசாமடந்தையாக இருந்துவிட்டு இன்று ஓடோடி வந்து  நான் கேட்காதபோது வழங்கினீர்கள், இப்போ ஏன் திரும்பப் பெறுகிறீர்கள் என்று கேள்வி  கேட்கிறார். அன்று புலிகளால் ஆபத்து என்பதை மௌனத்தின் மூலம் அங்கீகரித்துவிட்டு, இப்போ மறுதலிக்கிறார்.  இன்று அரச படையால் ஆபத்து ஏற்பட்டாலும் முன்னாள் போராளிகளை  குறிவைத்தே  அன்றைய இவரின் மௌனமும் இன்றைய இவரது கதறலும் நகருகிறது. தீயவருடன் சேரும் கூட்டு எப்போதும் நமக்கு ஆபத்து. அவர் எமக்கு செய்வது அவருக்கு அவரே தேடிக்கொள்வது. பாம்போடு உறவு வைப்பது போலாகும்.

சிங்களவன் அன்று சொன்ன காரணம் தவறானது ஆனால் சுமந்திரன் அப்போ அங்கீகரித்தார். இன்று  சொல்லும் காரணம் சரியானது. ஆனால் சுமந்திரன் தனக்கு பாதுகாப்பு அவசியம் என்கிறார். அப்படியானால் முன்னாள் போராளிகளால் தனக்குஆபத்து என்கிறாரா? தனக்கு யாரால் ஆபத்து என்று வெளிப்படையாக சொல்ல அஞ்சுகிறாரா? உண்மையில் அரச படை பாதுகாப்பு கொடுத்தாலும் செய்ய நினைத்தால் யாரும் தடுக்க முடியாது என்பதை சுமந்திரன் அறியாதவரல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, ரதி said:

சும் ,அரசு தான் புலிகளால் தனக்கு ஆபத்து இருக்கு என்று அதிரடிப்படையை பாதுகாப்பாய் போட்டதாக அண்மையில் சொல்லி இருந்தார் ...தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் முதல் முக்கிய பணி உலகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பது. அதை செய்ய மாட்டார்கள்.

சும்மா இப்பவும் புறக்கணிப்பு அரசியலில் ஈடுபட்டால் சிங்கள இனவாதத்திற்கு சகலதும் ஏதுவாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

பெருமாள், துல்பென், கு.சா அண்ணா, விசுகு அண்ணர், நாதம்ஸ், ஜஸ்டின், கட்பித்தான் எல்லோர் பெயரும் மனதுக்குள் வரவில்லை... ( இன்னும் பலருக்கு)  
எல்லா (அரசியல் / தமிழர்/ தேசியம்) சார்ந்த திரிகளிலும் இரண்டு பக்கங்களின் முரண்பாட்டை தெரிவித்து புடுங்குபட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? 
யாழில் இப்போதெல்லாம் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, தோழமை, நட்பு பாராட்டல் போன்ற மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு குறைந்து ஏட்டிக்கு போட்டியாக நீயா நானா என்பது போல மட்டும் தான் கருத்துக்கள் வருகின்றன. 
இது ஒரு துரதிஷ்டம். 
இரண்டு பக்கமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற வக்கிர கருத்துக்கள், சீண்டல்கள், ஏளனங்கள், எள்ளி நகையாடல்கள் இது தான் இன்று மிச்சம்.!!!! 🙏
  

இதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நான் செய்து செய்து கெஞ்சி தோற்றது. மீண்டும் முதலில் இருந்தா ராசா?  நான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும்??😂

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

சும் ,அரசு தான் புலிகளால் தனக்கு ஆபத்து இருக்கு என்று அதிரடிப்படையை பாதுகாப்பாய் போட்டதாக அண்மையில் சொல்லி இருந்தார் ...தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

 

இதை நீங்க நமது  நண்பர் சசியிடம் கேட்கவேண்டிய கேள்வி இந்த திரியில் என் பங்கு அவ்வளவுதான் நன்றி வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதாரணம் உங்களுக்கும் பொருந்தும்  நான் வானம் நீலம் என்றல்  நீங்கள் பார்க்காமலேயே இல்லை..இல்லை. சிவப்பு  என்கிறிர்கள்.. 

1 hour ago, Justin said:

அதாவது நான் வானம் நீல நிறம் என்றால், நீங்க அண்ணாந்து பார்த்து விட்டு நீலம் என்றால் "சரி" என்றிருக்க வேண்டும். சிவப்பு என்றால் "இல்லையே, சிவப்பாயிற்றே?" என்று சொல்ல வேண்டும். 

இந்தப் பரிமாற்றத்தில் எங்கே உணர்ச்சி வருகிறது என்று சொல்லுங்கள்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

இந்த உதாரணம் உங்களுக்கும் பொருந்தும்  நான் வானம் நீலம் என்றல்  நீங்கள் பார்க்காமலேயே இல்லை..இல்லை. சிவப்பு  என்கிறிர்கள்.. 

 

அப்படியா? எங்கே? 

1 hour ago, விசுகு said:

இதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நான் செய்து செய்து கெஞ்சி தோற்றது. மீண்டும் முதலில் இருந்தா ராசா?  நான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும்??😂

கேட்டீர்கள், கெஞ்சினீர்கள், ஆனால் சில உரையாடல்களை நடத்த முற்றாக  தடை போட வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு பிரச்சினையின் பாகமாக மாறியதும் நீங்கள் தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

 

MP's on M.P.Sumanthiran's Security matter
 
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் திரு சுமந்திரன் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக எதிர்கட்சியினருக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் தமிழ் சுருக்கும் பின்வருமாறு:

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், திரு சுமந்திரன் அவர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் அவரது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகெர "அவரது விசேட பாதுகாப்பினை நானே அகற்றியிருந்தேன். பொலிஸாரது தடையுத்தரவை மீறி அவர் இப்பேரணியில் கலந்து கொண்டமையினாலேயே விசேட பாதுகாப்பினை நீக்கியிருந்தேன். பொலிஸாரின் மற்றும் நீதிமன்றத்தின் கட்டளையினை மதிக்காது செல்லும் ஒருவருக்கு பொலீஸ் பாதுகாப்பு தேவையில்லை, அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென அறிவுறுத்தப்பட்ட பின்பு, இரண்டாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் சேருமிடத்திற்கு அவர் சென்றிருக்கக் கூடாது. அவ்வாறு அவர் சென்றும் அவருக்கு ஒன்றும் நிகழவில்லை என்றால் அவருக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லையென்றே பொருள்படும். எனவே தான் அவரது விசேட பாதுகாப்பினை அப்புறப்படுத்தியிருந்தேன். அவருக்கு இவ்வச்சுறுத்தல் தொடர்பான விடயங்களை நான் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தும் அதனை பொருட்படுத்தாது அவர் செயற்படும் போது அவருக்கான பாதுகாப்பு தொடர்பான பொறுப்பினை நாம் தொடர்ந்தும் ஏற்க முடியாது. பொலீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் ஒருவருக்கு பாதுகாப்பினை தொடர்ந்தும் வழங்குவது நகைப்புக்குரிய விடயமாகிவிடும்."

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் திரு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில் இது ஜனநாயக நாடெனவும், இங்கு மொழி சுதந்திரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம், பேரணிகளில் பங்குபெறும் சுதந்திரம் போன்று ஜனநாயக வழியான முறைமைகளுக்கு இடமுண்டெனவும், அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பாதுகாப்பு நீக்கப்படுவது தவறெனவும், யாராவது சட்டத்தினை மீறியிருந்தால் அவற்றை வேறு வழிகளிலேயே அணுக வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய ரவூப் ஹக்கீம் அவர்கள் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்: "இது புலனாய்வு துரை தொடர்பான விடயமாகும். திரு.சுமந்திரன் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதென பல அறிக்கைகள் புலனாய்வு துறை சமர்பித்திருந்ததை பொது பாதுகாப்பு அமைச்சர் நன்கு அறிவார். அதனாலேயே அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது அரசியல் கொள்கைகளை விரும்பாதோர் இரு தரப்பிலும் காணப்படுகின்றனர். சட்டப்பூர்வமான மக்கள் பேரணியில் கலந்து கொண்ட ஒரே நோக்கத்திற்காக, அவரது பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்திருந்தபோதும், உணர்ச்சிவசப்பட்டு ஒரு அவசரமான முடிவினை எடுத்திருப்பது பழிவாங்கும் நோக்கமாகவே கருதப்பட முடியும். இவர் பாதுகாப்பை உறுதி செய்வதைக் குறித்து தொடர்ந்தும் நாம் அமைச்சரை நம்ப முடியாது, எனவே திரு.சுமந்திரன் அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வது சபாநாயகரின் கடமையாகும்."

இதன்போது திரு. சரத் வீரசேகர அவர்கள், "இது பழிவாங்கும் ஒரு நடவடிக்கை அல்ல, சில மாதங்களுக்கு முன்பு திரு சுமந்திரன் அவர்கள் விசேட பாதுகாப்பு படையினரை வெளியே நிறுத்திவிட்டு விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடாத்திய ஒருவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார், அப்போதே அவரது பாதுகாப்பினை நீக்க தீர்மானம் செய்தோம், இருப்பினும் தனிப்பட்டவிதமாக அவரை சந்தித்து அவருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் முதல் தடைவை மன்னித்து இப்பாதுகாப்பினை தொடர்ந்தோம். இதன் பின்பதாக நீதிமன்ற மற்றும் பொலீஸ் உத்தரவுகளை அவமதித்து சட்டவிரோத பேரணியில் கலந்துகொண்ட ஒருவருக்கு சட்டரீதியான பாதுகாப்பினை வழங்க முடியாதென தீர்மானித்தோம். இரண்டாவதாக அவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிந்தால் அவர் வீட்டிலிருந்திருக்க வேண்டும். இவரான பேரணிகளில் கலந்துகொண்டிருக்கக்கூடாது!" என தெரிவித்தார்.

இதன் போது சரத் பொன்சேகா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சுகாதார விதிமுறைகளை மீறுவதற்காக பாதுகாப்பினை நீக்குவது தவரெனவும் சுமந்திரன் 'பயங்கரவாதிகளுக்கு' அஞ்சலி செலுத்தியமைக்காக அவருடைய பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை கொலை செய்த கருணா அம்மான், பிள்ளையான் போன்றோருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றதென வினவினார். தன்னை சுற்றி அதிகளவிலான இராணுவத்தினரை பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் பிள்ளையானை பார்க்கும்போது தான் வெட்கப்படுவதாகக் கூறினார். மேலும், "திரு சுமந்திரன் ஒரு போதும் இவர்களைப் போல் தீவிரவாதத்தினை ஆதரித்ததில்லையெனவும்
இப்பிடியான நிலையில் சுமந்திரனுக்கான பாதுகாப்பினை நீக்கியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும்" சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தொடர்ந்தும் லக்ஷமன் கிரியெல்ல அவர்கள் உரையாற்றுகையில், நடரஜா ரவிராஜ் போன்ற பல ஆற்றல் மிக்க தமிழ் தலைவர்கள் கடந்த காலங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனரெனவும் எமது சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் பாதுகாக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

இதன் போது சரத் வீரசேகராவின் கருத்துக்களுக்கு பதிலளித்த எம். ஏ. சுமந்திரன்:
"எனது பாதுகாப்பு நீக்கப்பட்ட விடயத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் நீதிமன்ற உத்தரவினை மீறியதாக தெரிவித்தார். இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவை தனி நபர்களுக்கு எதிராக வழங்கப்படும் உத்தரவுகளாகும், இந்த நீதிமன்ற உத்தரவுகள் எதிலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே எந்தவொரு நீதிமன்ற உத்தரவினையும் நான் மீறவில்லை. அவ்வாறே மீறியிருந்தாலும் கூட, அவர்கள் கூறுவதற்கேற்ப எனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்குமாயின் எனது பாதுகாப்பினை அவர் தன்னிச்சையாக நீக்க முடியாது. மேலும் இவ்வமைச்சரே ஒரு மாதத்திற்கு முன் தனிப்பட்டமுறையில் என்னிடம் வந்து இன்னமும் எனக்கு கொலை அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், என்னை கவனமாகவிருக்குமாறும் அறிவுறுத்தினார். அண்மைக் காலங்களில், புலனாய்விற்கு கிடைத்திருந்த தகவல்களுக்கேற்ப குறித்த இடங்களில் எனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இதற்கு மேலாக, என்னை கொலை செய்ய முயற்சித்தமைக்காக அரசே கிட்டத்தட்ட மூன்றோ நான்கு வழக்குகள் தொடுத்துள்ளார். இவையொன்றை குறித்தும் நான் ஒரு முறைப்பாடு கூட செய்திருக்கவில்லை. இவை அனைத்தும் அரசினாலேயே முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு எனக்கு ஒருமுறை மன்னிப்பு கொடுத்ததாக கூறியிருந்தார், எதற்காக அவர் எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்? யாரிடமும் மன்னிப்பு பெறவேண்டிய தேவை எனக்கில்லை. நான் ஒரு தவறும் இழைக்கவில்லை! என் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலிருக்கின்றதென அரசு கூறுகின்றதென்றால் பதவியிலிருப்பவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்தல் வேண்டும். எனக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்பு பற்றி தீர்மானிக்கையில் நான் எவ்வாறு நடந்துகொள்கின்றேன் என்பதை பற்றி பரிசீலிக்க எந்த அவசியமுமில்லை! நான் இதனை நேற்றைய தினமும் தெரிவித்திருந்தேன், எனக்கு யாதேனும் ஆபத்து ஏற்படுமாயின் சரத் வீரசேகர அவர்களே தனிப்பட்டமுறையில் அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்" எனச் சாடினார்.

கௌரவ எரான் விக்ரமரத்ன அவர்கள் பேசுகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் எப்பின்னணியில் இருந்து வருகின்றனர் என்ற பாகுபாடின்றி, அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தினை மீறினார்களா இல்லையா என்ற கேள்வி எழுமாயின் இங்கிருக்கும் அநேகர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சட்டத்தினை மீறியவர்களாகவே காணப்படுவோம். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், சில வேளைகளில் எமது செயல்கள் பெரு நன்மை கருதி முன் எடுக்கப்படுவதனால் அவை நடந்து அரங்கேறிய பின்பே அவற்றை நியாயப்படுத்த முடியும். எனவே திரு சுமந்திரன் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான ஆய்வறிக்கையின்படி மாத்திரமே அவருக்கான பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படுத்தல் வேண்டுமென கேட்டுக்கொண்டார்
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

அதெப்படி? சுட்டிக் காட்டினால் "காயத்தைக் கிளறாதே, பேசாமலிரு! "

அவர் சும்மாயிருந்தால் பத்து வருடம் கழிச்சு "எல்லோரும் தான் காரணம், ஆயுதம் தாங்கினவனை மட்டும் குற்றம் சொல்வது எப்படி?" என்ற கேள்வி! 

தெரியாமல் கேட்கிறேன்: எந்தக் காலத்தில் எந்த ஆயுதக் குழுவும் செய்த அரசியல் கொலைகளை சாதாரண தமிழ் மக்கள் முழுமையாக ஆதரித்தனர்?

ஒரு சிறு பகுதி நியாயம் இருக்கிறது என்று கூறி ஒதுங்கி கொண்டது! பெரும்பான்மை: ஒன்றும் சொல்லவில்லை? ஏன் ? யாரும் சொல்ல மேடை அமைத்துக் கொடுக்கவில்லை! 

இந்த நிலையில் எப்படி "எல்லாரும் காரணம்" என்று போர்வை போர்த்துகிறீர்கள்?

ஜஸ்ரின்

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.

எப்போதுமே ஒரு பகுதியினரை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பீர்களா..?

துல்பன் தெளிவாகவே கூறிவிட்டார், கொலைக் கலாச்சாரத்தின் ஆரம்பப் புள்ளி எது என்று. எனவே ஆயுதததைத் தூக்கி கொடுத்து, யார் யாரையெல்லாம் கொலை செய்யவேண்டுமென்று கையையும் காட்டிவிட்டு, தற்போது சுடுகுது மடியைப் பிடி என்றால் ஆகுமா...?

நீங்களே ஆயுதங்களையும் கொடுத்து கொலை செய்ய வேண்டிய ஆட்களையும் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு இப்போது அதற்கும் எமக்கும் தொடர்பில்லையென்றால்....?

தேவையென்றால் ஆயுத்ம் கொடுப்பீர்கள். சுடவேண்டிய ஆட்களையும் காட்டுவீர்கள். தேவை முடிந்தவுடன்... கொலைக் கலாச்சாரம்....

😏

கொஞ்சம் மனச்சாட்சியுடன் கதையுங்கள். (உண்மையில் விசனத்துடன் கூறுகிறேன்) பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் ஆட்களால்தான் பிரச்சனையே.

ஏனென்றால், சாதாரண மக்கள் எதிலும் அரசியல் செய்ய முனைவதில்லை. ஆனால் ..........

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎02‎-‎2021 at 22:39, பெருமாள் said:

இதை நீங்க நமது  நண்பர் சசியிடம் கேட்கவேண்டிய கேள்வி இந்த திரியில் என் பங்கு அவ்வளவுதான் நன்றி வணக்கம். 

நான் ஏன் அவரிடம் கேட்க வேண்டும் ...நீங்கள் எழுதிய கருத்திற்கு  நான் பதில் சொல்லி இருக்கேன் ...உங்களுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை அல்லது முடியா விட்டால் பேசாமல் கடந்து போங்கள் ...நன்றி ...வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 22:23, Kapithan said:

ஜஸ்ரின்

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.

எப்போதுமே ஒரு பகுதியினரை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பீர்களா..?

துல்பன் தெளிவாகவே கூறிவிட்டார், கொலைக் கலாச்சாரத்தின் ஆரம்பப் புள்ளி எது என்று. எனவே ஆயுதததைத் தூக்கி கொடுத்து, யார் யாரையெல்லாம் கொலை செய்யவேண்டுமென்று கையையும் காட்டிவிட்டு, தற்போது சுடுகுது மடியைப் பிடி என்றால் ஆகுமா...?

நீங்களே ஆயுதங்களையும் கொடுத்து கொலை செய்ய வேண்டிய ஆட்களையும் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு இப்போது அதற்கும் எமக்கும் தொடர்பில்லையென்றால்....?

தேவையென்றால் ஆயுத்ம் கொடுப்பீர்கள். சுடவேண்டிய ஆட்களையும் காட்டுவீர்கள். தேவை முடிந்தவுடன்... கொலைக் கலாச்சாரம்....

😏

கொஞ்சம் மனச்சாட்சியுடன் கதையுங்கள். (உண்மையில் விசனத்துடன் கூறுகிறேன்) பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் ஆட்களால்தான் பிரச்சனையே.

ஏனென்றால், சாதாரண மக்கள் எதிலும் அரசியல் செய்ய முனைவதில்லை. ஆனால் ..........

 

கொலையை அன்றும் எதிர்த்து இன்றும் எதிர்ப்பவர்களைப் பார்த்து "நீங்களும் காரணம்" என்பதன் அர்த்தம் புரியாமலா அதைச் சொல்கிறீர்கள்? அப்படி சொல்வதன் அர்த்தமே மற்றவர் மேல் பழியை போட்டு விட்டு செய்தவர்களை வெள்ளையடிக்கும் முயற்சி!

இதைச் சொல்லிக் கொண்டு அதே வசனத்தில் மனச்சாட்சி பற்றியும் அறிவுரை வந்திருப்பது வேடிக்கை!😂

கொலையை ஆரம்ப கால தமிழ் அரசியல் வாதிகள் தூண்டினார்கள் சரி, மக்கள் என்ன செய்தார்கள்? எனவே, என் போன்ற சாதாரண மக்கள் "கொலையில் பங்கு" என்று போர்வை போர்த்துவதை நிறுத்துங்கள்!

உங்கள் பங்கை பற்றி மட்டுமே நீங்கள் பேச உரிமையுண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

கொலையை அன்றும் எதிர்த்து இன்றும் எதிர்ப்பவர்களைப் பார்த்து "நீங்களும் காரணம்" என்பதன் அர்த்தம் புரியாமலா அதைச் சொல்கிறீர்கள்? அப்படி சொல்வதன் அர்த்தமே மற்றவர் மேல் பழியை போட்டு விட்டு செய்தவர்களை வெள்ளையடிக்கும் முயற்சி!

இதைச் சொல்லிக் கொண்டு அதே வசனத்தில் மனச்சாட்சி பற்றியும் அறிவுரை வந்திருப்பது வேடிக்கை!😂

கொலையை ஆரம்ப கால தமிழ் அரசியல் வாதிகள் தூண்டினார்கள் சரி, மக்கள் என்ன செய்தார்கள்? எனவே, என் போன்ற சாதாரண மக்கள் "கொலையில் பங்கு" என்று போர்வை போர்த்துவதை நிறுத்துங்கள்!

உங்கள் பங்கை பற்றி மட்டுமே நீங்கள் பேச உரிமையுண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

நல்ல நியாயம், 

""உங்கள் பங்கை மட்டுமே நீங்கள் பேச உரிமையுண்டு""

😂😂

அப்படியென்றால் இதுவரை நீன்கள் பேசியது உங்கள் பங்கு மட்டும்தானா.. 🤣

நன்மையில் மட்டும்தான் பங்கு கேட்பீர்களோ... 🤣🤣

தீமைக்கும் உங்களுக்கும் எட்டாப் பொருத்தமோ... 😫

 

அடிடா சக்கை எண்டானாம்.. 😏

 

கொலையை அன்றும் இன்றும் எதிர்த்தீர்களா.. 😬 ஆம் நம்பீட்டம்.

எந்தக் கொலையை எதித்தீர்கள்.. ? 🤣 அரசியற் கொலைகளா.. ? ஆயுதமேந்திய எதிர்த் தரப்பைக் கொல்லும்போது அது அரசியற் கொலைகளாக உங்களுக்குப் படவில்லையா.. 😏

விட்டால் மகாத்மா காந்தி உங்கள் பேர் என்பீர்களே....?

😏

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2021 at 09:01, குமாரசாமி said:

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் முதல் முக்கிய பணி உலகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பது. அதை செய்ய மாட்டார்கள்

அவர்கள் தங்களுக்குள்ளேயே இன்னும் ஒருங்கிணையவில்லை, ஒருவருக்கொருவர் குழி பறிக்கிறார்கள். இதில நீங்கள் வேற கற்பனையில் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.