Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Popular Post

                                          பரிசு.

விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு.

 

அன்று 

எனது பிறந்தநாள் 

நிறைய 

நண்பர்கள், நண்பிகள் 

ஏராளம் !

வாழ்த்துக்கள்,பரிசுகள் 

தங்க ஆபரணங்கள் 

தங்கி விட்டன தந்தப் பேழையில் 

வெள்ளிப் பாத்திரங்கள் 

படுத்திருக்கின்றன பரண்மேல் 

எதுவும் என் 

இதயத்தில் தங்கவில்லை !

தங்கியது 

பாவையவள் பரிசளித்தாள் 

வாசமுள்ள ரோஜா மலர் 

மலரின் மணம் நாசிகளில் 

மங்கை முகம் மனக்கண்ணில் 

இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது 

விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் 

இன்று --- அவள் 

சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

மூச்சின் சுவாசம் சீராகியது 

செவ்விதழில் முத்தமிட 

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

பிடியிடை தழுவிட 

மூலாதாரம் முழுதும் துடிக்குதடி 

கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் 

கண்களுக்குள் நிறைந்து நின்றாய் 

கண்களுக்குள் உன்னைப் பார்த்து 

யானை பார்த்த குருடனானேன்......!

 

யாழ் அகவை 23 க்காக 

ஆக்கம் சுவி.......! 

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில வாற பாட்டு மாதிரி இருக்கிறது...தொடருங்கள்.🤭

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

மூச்சின் சுவாசம் சீராகியது 

செவ்விதழில் முத்தமிட 

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

பிறகு.....பிறகு......???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புங்கையூரன் said:

பிறகு.....பிறகு......???

பிறகென்ன வெளியிலை போய் மாங்காய் புடுங்கி திண்டதுதான் மிச்சம்..😁

Bild

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

                                         

இன்று --- அவள் 

சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

மூச்சின் சுவாசம் சீராகியது 

செவ்விதழில் முத்தமிட 

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

பிடியிடை தழுவிட 

மூலாதாரம் முழுதும் துடிக்குதடி 

கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் 

கண்களுக்குள் நிறைந்து நின்றாய் 

கண்களுக்குள் உன்னைப் பார்த்து 

யானை பார்த்த குருடனானேன்......!

 

யாழ் அகவை 23 க்காக 

ஆக்கம் சுவி.......! 

 

spacer.png

 

இன்றைய நாட்களில் அநேகமாக இந்தமாதிரி சங்கு அமைப்பில்தான் சுவாசம் சீராகிறது.

 

 

நிறையக்காலம் காத்திருந்து எழுதிய கவிதை மாதிரி இருக்கு கடைசியிலை நாங்களெல்லாம் கொக்குப்பார்த்த குருடன் கதைதான் கேட்டிருக்கிறோம் அம்மாடி யானை பார்த்த குருடனா?????????? கொக்கை என்றாலும் குருடன் தடவிப்பார்த்து புரிந்திருப்பான்.

யானையை எப்படி?

பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சுவி உங்கள் கவிதையைப் படித்து யானை பார்த்த குருடனாக திரும்ப திரும்ப படித்துப் பார்த்தேன் எங்க விழுந்து எங்க கலந்து என்று எதுவுமே எனக்கு புரியவில்லை. வயது போன காலத்தில  இப்பிடி நிறைய யோசிக்க வைக்காதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தொடக்கமே கலக்கல்.

8 hours ago, suvy said:

பாவையவள் பரிசளித்தாள் 

வாசமுள்ள ரோஜா மலர் 

வலன்ரையின்டே கொண்டாட்டம் முடியலையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

யானை பார்த்த குருடர் கதை எல்லோருக்கும் தெரியும்தானே, யானையை யாரும் முழுதுமாய் பார்க்கவில்லை. தங்கள் பார்த்த இடத்தில் இருந்து அடுத்ததை பார்க்க அவர்களால் முடியவில்லை.அப்படியே அவனும் பார்த்தது பார்த்தபடி...... உடனே எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதியது. நேற்று மாலைதான் பாரிஸில் இருந்து வந்திருந்தேன்.சகோதரி கண்மணி அவர்களின் ஆக்கத்தைப் பார்த்தவுடன் எழுதியது........ஒரு கதையும் எழுதவேண்டும் இன்னும் தயாராகவில்லை. வீடு மாறும் பிரச்சினை. நானும் அவளும் மட்டும்தான் இங்கு.பிள்ளைகள் எல்லாம் பாரிஸில். அதுதான் வேலை அதிகமாய் இருக்கு. 😂.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, வல்வை சகாறா said:

பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

ஆரந்த இலக்கியவாதி எனக்கு உன்மை தெரிஞ்சாகணும்

கவிதைக்கு பொய் அழகு வாழ்த்துக்கள் சுவியர்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இலக்கிய பூர்வமாக சிந்தித்து கருத்தெழுதவும் விடுகிறார்கள் இல்லை. ஐயகோ...:cool:

நீங்கள் தலைப்யே ஏதோ டப்பிங் படம் மாதிரி எழுதினால் என்ன செய்வது...🤭

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இது இலக்கிய பூர்வமான கவிதையா அதுதான் விளங்கவில்லைபோலும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆரந்த இலக்கியவாதி எனக்கு உன்மை தெரிஞ்சாகணும்

நீங்கள் நான் அங்காலை நிக்கிறவர் இஞ்சாலை நிக்கிறவர் அந்தா முறைச்சு பாக்கிறவர் எல்லாரும்தான் இலக்கியவாதிகள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 20:57, suvy said:

மலரின் மணம் நாசிகளில் 

மங்கை முகம் மனக்கண்ணில் 

இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது 

இலக்கியம் நடனம் கொள்கிறது உங்கள் கவிதையில் அருமை தொடருங்கள் சுவி 

நான் இத்தனை நாளா வாலி மட்டும் தான் வாலிபக் கவிஞர் என்று நினைச்சிட்டிருந்தன். இப்ப தான் விளங்குது சுவி அண்ணாவுக்குள்ளும் ஓர் வாலிபக் கவி இருக்கிறார் என்று. 

வயதாக ஆக வாலிபர்களாவது அபூர்வம். வீட்டில திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ.

காதல் ரசமுள்ள கவிதைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பாராட்டுக்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 20:57, suvy said:

                                          பரிசு.

  மூச்சின் சுவாசம் சீராகியது  

செவ்வாயில் அமிலம் சுரந்தது 

ஆக்கம் சுவி.......! 

 

அண்ணோய் திருமூலர் அருளிய திருமந்திர மூச்சுப்பயிற்சி நன்றாக செய்கிறீர்கள். அதுதான் செவ்வாயில் அமிலம் சுரந்திருக்கிறது.  சத்துணவு களில் கிடைக்காத 24வகையான விற்றமின்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. 

பி.கு :- திருமூலர் அருளிய திருமந்திரம் படித்துப் பயனடைக. 😷

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்தவர்களுக்கும் கருத்திட்டவர்களுக்கும் ஊக்கம் தந்தவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்

தலைசிறந்த இலக்கியவாதி சுவி தாத்தா வாழ்க

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 21:56, கிருபன் said:

இதயம் சுமக்கும் மலரைப் பரிசாகத் தந்தவளின் பிடியிடை தழுவி குருடனாக முடியுமா?🤭

பிடியிடை தழுவி இதயத்துக்குள் முகம் புதையும்போது கண்கள் குருடாகி விடும் கிருபன்......!

கொஞ்சமாவது காதலித்திருக்க வேண்டும் அல்லது கலியாணமாவது செய்திருக்க வேண்டும் அப்போது புரிந்திருக்கும். வாழ்நாளில் அரைவாசியை வீணாக்கி விட்டீர்கள் கிருபன்.....!  😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரவர இவருக்கு வயது மறந்துபோய் குசும்பு கூடிப்போச்சு. 😀😂 இருந்தாலும் நல்லாய் இருக்கு கவிதை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.