Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!

spacer.png

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பெரும்பாலும் பார்வையில் இருந்து விலகியே இருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இளவரசர் பிலிப், அண்மையில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், ஆரோக்கியத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தார்.

பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இளவரசராக இளவரசர் பிலிப் உள்ளார்.

இந்த தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பூட்டக் குழந்தைகள் உள்ளனர்.

இளவரசரின் இறுதிச் சடங்கு குறித்து அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு ஒரு மாநில இறுதி சடங்காக இல்லாமல் அரச சடங்காக இறுதி சடங்கு நடைபெறும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

ராணி இறுதி நாட்களில் இறுதி திட்டங்களில் கையெழுத்திடுவார்.

கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி கோர்பு தீவில் பிறந்தார்.

18 வயதில் இளவரசர் ரோயல் கடற்படையில் சேர்ந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலில் பணியாற்றினார்.

1947ஆம் ஆண்டில் அவர் தனது கிரேக்க மற்றும் டேனிஷ் அரச பட்டங்களை கைவிட்டார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி-  இளவரசர்  திருமணம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த முதல் பெரிய அரச சந்தர்ப்பமாகும். திருமணம் நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றது. ராணி ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இளவரசர் ராணியை மணந்தார்.

https://athavannews.com/2021/1208864

 

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் ஃபிலிப் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

 
1-25-1.jpg
 24 Views

பிரித்தானியா அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99 வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரித்தானியா அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேமுலும்”மேதகு இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் செஞ்சுரி அடிக்க முதல் போட்டார்.. ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

 அதுசரி பேரன்ரை செத்தவீட்டுக்கு ஹரியை வர விடுவினமோ?

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சாகிற வயசா இது. 

மகராசாவுக்கு அஞ்சலி!

மேல் உலகுக்கு ராசாவுக்கு ராணிக்கும் போக விருப்பம் இல்லாமல் இருந்ததாம் ஏன் என்றால் அங்கு மருமகள் டயானா இருப்பதால் .🥱

1 hour ago, குமாரசாமி said:

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

 அதுசரி பேரன்ரை செத்தவீட்டுக்கு ஹரியை வர விடுவினமோ?

அஞ்சலிகள்.

புத்திசாலிகள் என்றால் அதுகள் வ்ராதுகள் வந்தால் தான பேத தர்ம தண்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நதிமூலம் ரிஷிமூலம் பாத்தால் இவர் ஒரு ஜேர்மன்காரர்

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

32 Photos of Queen Elizabeth and Princess Margaret Being PYTs | Young queen  elizabeth, Young queen victoria, Queen elizabeth

Young Queen Elizabeth II, 1944 [2494x3484] : HistoryPorn

Queen Elizabeth II Through the Years - Photos of Queen Elizabeth II

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

இவர், கிரேக்க, டேனிஷ் ரத்தம் ஓடுற அரச வம்சத்துக்காரர்.

இவரது மனிசி தான் ஜெர்மன்காரி.

ஆனாலும், நல்ல வடிவான பொம்பிளைய பிடிச்சவர் எல்லோ... 

32 Photos of Queen Elizabeth and Princess Margaret Being PYTs | Young queen  elizabeth, Young queen victoria, Queen elizabeth

Young Queen Elizabeth II, 1944 [2494x3484] : HistoryPorn

Queen Elizabeth II Through the Years - Photos of Queen Elizabeth II

ஆழ்ந்த  இரங்கல்கள் ஜேரமன்காரிகள் வடிவான பெண்கள் தான்😜😜😜😜😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kandiah57 said:

ஜேரமன்காரிகள் வடிவான பெண்கள் தான்😜😜😜😜😜

அதுவும் வெய்யில் காலத்திலை எண்டால் இன்னும் வடிவு. 😎

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

எப்பிடியும் பொருத்தம் பாத்துத்தான் செய்திருப்பினம்.😷

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

73 வருடகால பந்தம் ! இளவரசர் பிலிப்பின் பின்னணி !

கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921 ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் பிலிப், 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார்.

13.jpg

4 குழந்தைகளைப் பெற்ற இவர்கள் 8 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் மூலம் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் பார்த்துள்ளனர்.

14.jpg

இங்கிலாந்து வரலாற்றிலேயே மிக நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்த அரச தம்பதிகள் என்ற பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

_98828456_pa-33715649.jpg

1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 திகதி கிரீஸ் மற்றும் டென்மார்க் இளவரசர் அன்ட்றூவுக்கு மகனாக கிரீஸ் நாட்டில் பிறந்தார். (அப்போது கிரீஸ் நாடு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தியது. 1923 ஆண்டுக்கு பின் கிரகேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டது).

1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரீஸ் மன்னர் கொன்ஸ்டன்டைன் உத்தரவின் படி, இவரது குடும்பம் பிரான்ஸின் பாரிசுக்கு இடம் பெயர்ந்தது.

1.jpg

1928 ஆம் ஆண்டளவில் ஜேர்மன், பிரிட்டனில் கல்வி பயின்றார் பிலிப்.

1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை கிரிக்கெட், ஹொக்கி அணியில் அணித் தலைவராக  இருந்தார்.

1934 ஆம் ஆண்டு காலத்தில் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடந்த பிலிப் உறவினர் திருமணத்தில், எலிசபெத்தை முதன்முதலாக சந்தித்தார்.

4.jpg

1939 ஆம் ஆண்டில் பிரிட்டன் கப்பல்படையில் பிலிப் பயிற்சி பெற்றார்.

1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கல்லுாரியில் படித்த எலிசபெத், அவரது தங்கை மார்க்ரெட் பாதுகாப்புக்கு உடன் சென்ற பிலிப் மீது எலிசபெத்துக்கு காதல் மலர்ந்தது.

1940 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆறு மாதம் கப்பல்படையில் பணியாற்றினார்.

1943 ஆம் ஆண்டு இவரது புகைப்படத்தை தனது டிரஸ்சிங் டேபிள் மீது எலிசபெத் வைத்திருந்தார்.

15.jpg

1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் உலகப்போரின் போது இந்திய பெருங்கடல் பகுதியில் 'எச்.எம்.எஸ்., வெல்ப்' போர்க்கப்பலின் கேப்டனாக பணியாற்றினார்.

1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஜப்பான் சரணடையும் போது, டோக்கியோ கடல் பகுதியில் பணியில் இருந்தார்.

1946 ஆம் ஆண்டு பிரிட்டன் திரும்பினார் பிலிப். எலிசபெத்தை திருமணம் செய்து வைக்க மன்னர் ஆறாம் ஜோர்ஜிடம் கோரிக்கை விடுத்தார்.

1947 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி டென்மார்க் , கிரீஸ் இளவரசர் பட்டத்தை விட்டுக்கொடுத்து, பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் அபே சேர்ச்சில் நடைபெற்றது.

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி மன்னர் ஆறாம் சார்லஸ் மறைவுக்குப்பின் அவரது மகள் எலிசபெத் பிரிட்டன் ராணி ஆனார்.

1956 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் இயக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை ( லைசென்ஸ் ) பெற்றார்.

1961: இந்திய பயணத்தின் போது ஜெய்ப்பூரில் துப்பாக்கியால் புலியை சுட்டுக் கொன்றார். இது சர்ச்சையானது.

2009 ஆம் ஆண்டு பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றில் நீண்டகால இளவரசரானர்.

9.jpg

2011 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பிலிப் - எலிசபெத் தங்களது 73 ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிலிப், எலிசபெத் இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி உடல்நலக்குறைவால் இளவரசர் பிலிப் காலமானார்.

 

https://www.virakesari.lk/article/103616

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் உயர் அட்மிரல் பிரபு பதவியில் இருந்த பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் அவருக்கு துப்பாக்கி வேட்டுக்களால் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், பிலிப்பின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

Flags-flew-at-half-mast-across-Australia-where-a-gun-salute-was-fired-600x337.jpg

அத்துடன், நியூசிலாந்து இராணுவம் நாளை ஞாயிற்றுக்கிழமை வெலிங்டனில் உள்ள பொயின்ற் ஜெர்னிங்ஹாமில் துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் மரியாதை செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1209014

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

சில ஆண்களுக்கு மனைவிமார்தான் கவசம் போன்றவர்கள்.

இன்னரின் கணவர் என்றால்தான் தெரியும். இந்த ஆண்களின் பண்புகள் பெண்ணின் ஆளுமையில் மறைந்து விடும்.

 

இந்திராகந்தியின் கணவர் பெரோஸ் கானும் இவ்வாறே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, colomban said:

இன்னரின் கணவர் என்றால்தான் தெரியும். இந்த ஆண்களின் பண்புகள் பெண்ணின் ஆளுமையில் மறைந்து விடும்.

 

இந்திராகந்தியின் கணவர் பெரோஸ் கானும் இவ்வாறே. 

நான் அடிச்சு சொல்லுறன்  இவருக்கு எங்கடை சனங்களோடை பழக்கம் இல்லையெண்டு...😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் அடிச்சு சொல்லுறன்  இவருக்கு எங்கடை சனங்களோடை பழக்கம் இல்லையெண்டு...😎

யாருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

யாருக்கு?

பிலிப் கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்பாடாதது ஏன்? - www.pathivu.com

இவருக்குத் தான். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா இளவரசர் பிலிப் இறுதி நிகழ்வு சனிக்கிழமை – முப்பது பேரே பங்குபற்றுகின்றனர்

 
Capture.JPG-2-1.jpg
 56 Views

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளை நாட்டில் அமுலில் உள்ள கொரோனா சுகாதார விதிமுறைகளை அனுசரித்து முப்பது பேருடன் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு St George’s Chapel இல் நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் இளவரசர் ஹரி உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முப்பது பேர் மட்டுமே பிரசன்னமாகுவர் என்று தெரிவித்து அவர்களது பெயர் விவரங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
 
முப்பது பேரில் ஒருவராக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று அவரது டவுனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச குடும்பத்தில் நெருக்கமான வேறு ஒருவருக்கு இடமளிக்கும் பொருட்டே பிரதமர் இறுதி நிகழ்வைத் தவிர்க்கிறார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபதின் கணவரும் எடின்பரோ பகுதியின் இளவரசருமான பிலிப் மவுன்பட்டன் (99) கடந்த வெள்ளிக்கிழமை (09) வின்சர் அரண்மனையில் காலமானதாக பக்கிங்கம் அரண்மனை தெரிவித்திருந்தது.

1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இளவரசியை அவர் மணமுடித்த பின்னர், ஐந்து வருடங்களில் எலிசபத் மகாராணியாக முடிசூடப்பட்டிருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும், 8 பேரப்பிள்ளைகளும் உண்டு.’

18 மாத குழந்தையாக இருந்த போது கிறீஸ் நாட்டில் இருந்து தோடம்பழ பெட்டிக்குள் மறைந்து இருந்து பிரான்ஸ்இற்கு அகதியாக குடும்பத்துடன் வந்த பிலிப், தனது முயற்சியால் மீண்டும் உயர்ந்து பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் இணைந்து கொண்டது, நம்பிக்கை உடைய எவரும் வீழ்வதில்லை என்பதை காட்டியுள்ளது.

அவரின் தந்தையார் டென்மார்க்கை சேர்ந்தபோதும், தாய் ரஸ்யா நாட்டை சேர்ந்தவர் என்பதுடன் இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் இருந்த தனது உடன்பிறப்புக்களுக்கு எதிராகவும் அவர் போரிட்டிருந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இறுதி நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் நாடு
முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். பிலிப்பின் உடல் வைக்கப்பட்ட பேழையைப் பொதுமக்கள் எவரும் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
 
பிலிப்பின் உடல் விசேடமாக வடிவமைக் கப்பட்ட ‘லான்ட் ரோவர்’ (Land Rover) வாகனத்தில் இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படும். தனது உடலைச் சுமந்து செல்லும் இறுதி ஊர்வல வண்டியை வடிவமைப்பதில் இளவரசர் பிலிப்பும் பங்கு கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 
கொரோனா வைரஸ் விதிகள் காரணமாக இரங்கல் செய்தி எழுதும் புத்தகங்கள் பொது இடங்களில் வைக்கப்பட மாட்டாது. அவை இணையத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2021 at 04:18, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

 

On 10/4/2021 at 04:18, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்........! 

காதல் திருமணமா... இல்லாட்டி,  பெரிசுகள் பேசிச்  செய்த திருமணமா..

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

மருதங்கேணி... பல அரிய தகவல்களை, உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
நீங்கள் கடைசியாக கூறிய வசனம்.. நூற்றுக்கு நூறு  வீதம், உண்மையாக நடக்கும்.
மகாராணி  எலிசெபத்திற்கு  பிறகு.. அரச வம்சத்தை, 
யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள், என்றே நானும்  நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

18 மாத குழந்தையாக இருந்த போது கிறீஸ் நாட்டில் இருந்து தோடம்பழ பெட்டிக்குள் மறைந்து இருந்து பிரான்ஸ்இற்கு அகதியாக குடும்பத்துடன் வந்த பிலிப், தனது முயற்சியால் மீண்டும் உயர்ந்து பிரித்தானியாவின் அரச குடும்பத்தில் இணைந்து கொண்டது, நம்பிக்கை உடைய எவரும் வீழ்வதில்லை என்பதை காட்டியுள்ளது.

Truck Shipping Sticker by Hapag-Lloyd AG for iOS & Android | GIPHY

அட... பக்கிங்காம் மாளிகையிலும், ஒரு அகதி... 
நெஞ்சை நிமித்தி, கெத்தாக வாழ்ந்து இருக்கின்றார்.  :grin:

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்....
பிரித்தானியாவுக்கு 1920´ம்  ஆண்டுகளிலேயே...
அகதிகள், தோடம்பழ  பெட்டிக்குள் இருந்து வந்திருக்கிறார்கள்.
இப்ப...  "லொறி கொன்ரெய்னர்களில்" வருகிறார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.

அத்தோடு அவரது உடல் இருக்கும் சவப் பெட்டியை, பொது வெளியில் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்படப் போவதில்லை. அதற்கு பதிலாக, இளவரசர் ஃபிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, வின்சர் கோட்டையில் இருக்கும் தனி தேவாலயத்தில் வைக்கப்படவிருக்கிறது.

பொதுமக்கள், பூங்கொத்துகளை வைப்பதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வுக்காக, யார் எல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது யார் எல்லாம் இறுதி நிகழ்வில் பங்கெடுக்கவிருக்கிறார்கள் என்கிற விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

https://athavannews.com/2021/1209410

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

 

காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல் 
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு 
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார் 
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார் 
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார். 

மிகுந்த கெட்டிகாரி எலிசபெத் 
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர் 
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்  
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை 
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும் 
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு 
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு  இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை 
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர் 
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர் 

ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன் 

மார்கிரெட் தச்சருக்கு செக் வைக்குமளவு அரச குடும்பத்தில் யாருக்குமே அதிகாரம் கிடையாது. அரசகுடும்பம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவுக்குத்தான் அங்கு அதிக அதிகாரம். இதை இளவரசர் கரியே ஒரு பேட்டியில கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.