Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

(துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)

 

நம்ம சுமந்திரன் ஓகே இல்லையா? :cool:

உங்கை ஒருசில இடங்களிலை சம்சும் எண்டால் தேனருவியாய் ஓடுதெல்லோ. 😂

  • Replies 72
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

(துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)

 

புலம்பெயரிகளுக்கு வழிகாட்ட புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து பலதையும் கற்றுத் தெளிந்து அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்றார்கள். உள்ளூர் அரசியலை கவனமாகக் கையாள அவர்களே போதும். வீரத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும்வரை பாதகமில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியாக எழுப்பப்படும் தலைப்பு தவறானது, சிந்தாந்த அடிப்படையில் கூட.

அரசியல் மக்களுக்கான சேவை.

ஆனால், சீமானின் அரசியலில் மிகப் பெரிய நேரடி விளைவுகள், ஈழத்தமிழருக்குக்கு அரசியல் இடத்தை விரிவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 13:48, கிருபன் said:

தனிப்பட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்து, இந்தியாவை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது. மத்தியை நரேந்திர மோடி ஆண்டாலும், நாளை ராகுல் காந்தி ஆண்டாலும், அவர்களுடனான உறவைப் பேணியாக வேண்டும். அதுபோலவே, தமிழகத்திலும் ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும், அந்த உறவைப் பேணியாக வேண்டும்.  

அதே மஜில்ஸ் அண்ட் குஜால்ஸ்  ஏன் இலங்கையை கோத்தபாய ஆண்டாலும், மஹிந்த ஆண்டாலும் 
நாமல் ஆண்டாலும் தாயக தமிழர்கள் உறவை பேணியாகவேண்டும், சிங்களவர்களுடன் இரண்டறக்கலக்க வேண்டும் என்பதையும், இலங்கையை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம் இதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது என்பதை வலியுறுத்தாது  , இனவாதத்தையும்,பிரிவினையையையும் (போராட்டம் வெடிக்கும், இரத்தத்திலகம்,P2P ஸ்டண்ட் பேரணி ) வைத்து அரசியல் செய்யும்  கூத்தமைப்பை ஆதரிக்கினம், எங்களுக்கு மஜில்ஸையும் தெரியும் மஜில்ஸ்ட குஜால்ஸ்களையும் தெரியும்,குஜால்ஸ்களோட ஹிப்போகிரிசியும் தெரியும்     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயரிகளுக்கு வழிகாட்ட புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து பலதையும் கற்றுத் தெளிந்து அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்றார்கள். உள்ளூர் அரசியலை கவனமாகக் கையாள அவர்களே போதும். வீரத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும்வரை பாதகமில்லை.😎

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

புலம்பெயரிகள்தானே தாயகத்தில் போய் அரசியல் தலைமை தாங்கவேண்டும் என்று முன்னர் ஒருமுறை கூறியிருந்தீர்கள்.  இப்போது ஏன் வழி கேட்கின்றீர்கள்?😏

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

வாயால வடை சுடுபவர்களின் கொள்ளளவு இவ்வளவு தான்.

இளைஞர்கள் வருவார்கள் செய்வார்கள். வானத்தில் இருந்து என்று எழுத மறந்து விட்டார்.

அவர்களை அணுகணும் ஒன்றிணைக்கணும்  நிர்வாக நிதி ஆட்பலம் கொண்ட பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கணும். 

யார் செய்வது?

யார் செய்கிறார்கள்??

 

1 hour ago, Kapithan said:

"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" பதில்.

🤦🏼‍♂️

 

நீங்கள் கேட்ட கேள்வி புலம் பெயரிகளுக்கான வழிகாட்டி யார் என்பது. புலம் பெயரிகளுக்கான அரசியல் வழிகாட்டியாக புலம் பெயர் நாடுகளில் கற்றுத் தேர்ந்த இளைய தலைமுறையினர் என்ற  கிருபனின் பதிலில் என்ன தவறு? 

உங்கள் கேள்வி தாயகத்தில் உள்ளோருக்கு என்று கேட்டால் அங்கும் ஏறத்தாள அதே பதில் தான்.  அங்கு இதுவரை பல தசாப்தங்களாக தலைமை வகித்தவர்கள் எவரும் சிறந்த வழிகாட்டிகளாக அமையவில்லை என்பதையே தமிழரின் தொடர்சசியான அரசியல் பின்னடைவுகளும் அதைத் தொடர்ந்த இறுதி பேரழிவும் அந்த பேரழிவை நிவர்ததி செய்யமுடியாமல் தவிதக்கும் தற்போதைய அரசியல்வாதிகளின் நிலையும்  தெளிவாக காட்டி நிற்கிறது. ஆகவே அங்கும் கல்வி கற்ற  புதிய இளைய தலைமுறையினரே பழைய தலைமுறையின் கற்பனாவாத அரசியலை நன்கு புரிந்து அதிலிருந்து மீண்டு தமது புதிய அரசியல் வழிமுறையுடன்   அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும். 

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

12 hours ago, zuma said:

சரியாக சொன்னீர்கள் நீங்கள். நாம் யாரையும் நம்பி நடக்க கூடாது. ஊரிலை சொல்லுவார்கள் நம்ப நட நம்பி நடவதே என்று. இந்தியா அரசியலே எமக்கு யாரும் எதிரிகள் அல்ல. அப்படி யாரும் ஒருசாரார் எதிரி என்று எமக்கு சொன்னால்,  சொல்லுகிறவன் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் ஆகும். 

நீங்கள் தான் இன்னும் சரியாய் சொல்லுகிறீர்கள் .

வைக்கோல் பட்டை ...மாதிரி அடிமைகளுடன் அவதானமாக இருக்கவேண்டும்   தானும் படுக்காது தள்ளியும் படுக்காது .சரியான சபை குழப்பியல் .

அதில் ஒரு ஆனந்தம் .

Edited by appan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாயால வடை சுடுபவர்களின் கொள்ளளவு இவ்வளவு தான்.

இளைஞர்கள் வருவார்கள் செய்வார்கள். வானத்தில் இருந்து என்று எழுத மறந்து விட்டார்.

அவர்களை அணுகணும் ஒன்றிணைக்கணும்  நிர்வாக நிதி ஆட்பலம் கொண்ட பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கணும். 

யார் செய்வது?

யார் செய்கிறார்கள்??

 

நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁

மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை..

இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது. 

தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கேட்ட கேள்வி புலம் பெயரிகளுக்கான வழிகாட்டி யார் என்பது. புலம் பெயரிகளுக்கான அரசியல் வழிகாட்டியாக புலம் பெயர் நாடுகளில் கற்றுத் தேர்ந்த இளைய தலைமுறையினர் என்ற  கிருபனின் பதிலில் என்ன தவறு? 

உங்கள் கேள்வி தாயகத்தில் உள்ளோருக்கு என்று கேட்டால் அங்கும் ஏறத்தாள அதே பதில் தான்.  அங்கு இதுவரை பல தசாப்தங்களாக தலைமை வகித்தவர்கள் எவரும் சிறந்த வழிகாட்டிகளாக அமையவில்லை என்பதையே தமிழரின் தொடர்சசியான அரசியல் பின்னடைவுகளும் அதைத் தொடர்ந்த இறுதி பேரழிவும் அந்த பேரழிவை நிவர்ததி செய்யமுடியாமல் தவிதக்கும் தற்போதைய அரசியல்வாதிகளின் நிலையும்  தெளிவாக காட்டி நிற்கிறது. ஆகவே அங்கும் கல்வி கற்ற  புதிய இளைய தலைமுறையினரே பழைய தலைமுறையின் கற்பனாவாத அரசியலை நன்கு புரிந்து அதிலிருந்து மீண்டு தமது புதிய அரசியல் வழிமுறையுடன்   அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும். 

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

உண்மையில் உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லையா அல்லது 

நான்தான் குழம்புகிறேனா

🤯

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நீங்கள்  backseat driver ஆக இருக்கவேண்டும் என்று  விரும்புவர் என்று தெரியும்.😁

மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக இருப்பதால் ஒரு மேய்ப்பன் வேண்டும் என்று கபிதான் கேட்கின்றார். ஆனால் ஒரு மேய்ப்பன் என்று சொல்ல யாரும் இல்லை என்பதுதான் நிலைமை..

இந்த நிலை மாறவேண்டுமென்றால், அது இளையோரிடம் இருந்துதான் வரவேண்டும். அப்படித்தான் முன்னைய வரலாறும் இருக்கின்றது. 

தாயகத்தில் உள்ளவர்கள் தமக்கான தலைமையை தாமே கண்டடைவார்கள். புலம்பெயரிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் போதும்.

ஒரு செயலை

அல்லது முயற்சியை இவ்வாறு தான் உங்கள் போன்றவர்களால் கேவலப்படுத்த முடியும் என்று தெரியும்.

ஆனால் நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

அந்த பின் சீற்றில் நான் கொண்டு திரிந்து வளர்ந்த இளையவர்களில் சிலர் இன்று பிரான்சில் தமிழர் சார்பாக பேசும் வல்லமை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். 

இனி அவர்களுக்கு அனுபவம் படிப்பு உணர்வு இருக்கிறது

பார்த்து கொள்வார்கள். 

28 minutes ago, விசுகு said:

ஒரு செயலை

அல்லது முயற்சியை இவ்வாறு தான் உங்கள் போன்றவர்களால் கேவலப்படுத்த முடியும் என்று தெரியும்.

ஆனால் நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

அந்த பின் சீற்றில் நான் கொண்டு திரிந்து வளர்ந்த இளையவர்களில் சிலர் இன்று பிரான்சில் தமிழர் சார்பாக பேசும் வல்லமை பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். 

இனி அவர்களுக்கு அனுபவம் படிப்பு உணர்வு இருக்கிறது

பார்த்து கொள்வார்கள். 

உங்களை யார் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவை ஊட்ட சொன்னது. நாங்கள் அவர்களை தெருவில் நின்று தறுதலையாக திரிய வேண்டும் என்று எவ்வளவு கஸ்ரப்படுகிறோம். நீங்கள் என்ன என்றால்  உங்களை எல்லாம் திருத்த முடியாது. இப்படியே போனால் நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

 

கபிதான் கைகாட்டியிருக்கு😁

👇🏾👇🏾

46 minutes ago, விசுகு said:

நான் பலருக்கு நிஐமாகவே முன் சீற்றில் ரைவராக இருந்திருக்கின்றேன். அதில் இன்றும் பெருமை தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கபிதான் கைகாட்டியிருக்கு😁

👇🏾👇🏾

இந்த கை காட்டுதல் மற்றும் முன் மொழிதல் 2009க்கு பின்னர் பல தடவைகள் வந்தன. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இங்கும் யாழில் பல முறை எழுதிய தான் எனது பைல் உலகுக்கு இன்றுவரை அலர்சியாகவே உள்ளது. எனவே புது முகங்களில் புதிய வழிகளில் புதிய தலைமுறையின் வழி நடாத்துதலில் தான் நாம் பயணிக்கணும்.

இந்த முடிவுக்கு நான் வந்து 12 வருடமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உண்மையில் உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லையா அல்லது 

நான்தான் குழம்புகிறேனா

🤯

நீங்கள் வேற. எங்களுக்கு கேள்வியெல்லாம் நல்லாத்தான் விளங்குது. ஆனால் பதில்தான் தெரியாதே. என்ன செய்யிறது. அதுதான் வெளிநாட்டிலை இளையதலைமுறை கொண்டுநடத்தும் எண்டு ஒரு புருடாவிடுறது. யார் யார் என்ன செய்யினம்? எப்படி செய்யினம்? என்றுகேட்டால் எஸ்கேப்!!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் வேற. எங்களுக்கு கேள்வியெல்லாம் நல்லாத்தான் விளங்குது. ஆனால் பதில்தான் தெரியாதே. என்ன செய்யிறது. அதுதான் வெளிநாட்டிலை இளையதலைமுறை கொண்டுநடத்தும் எண்டு ஒரு புருடாவிடுறது. யார் யார் என்ன செய்யினம்? எப்படி செய்யினம்? என்றுகேட்டால் எஸ்கேப்!!

இல்லாத ஒன்றை பிடித்து தொங்கினால் எல்லாத்துக்கும் வசதி 
சரி பிழையை பற்றி யாரும் பெரிதாக அலட்ட முடியாது 

அப்போதான்  இருக்கிறது எல்லா மீதும் 
எங்கள் வெறுப்பை கச்சிதமாக உமிழ்ந்துகொண்டு 
மாய ஜாலம் பேசிக்கொண்டு இருக்கலாம் 

இறங்கி ஒரு ரோட்டில் கிடக்கும் கல்லை என்றாலும் 
தூக்கி அருகில் போடுபவனுக்கே இன்னொருவனின் உழைப்பு
பற்றி புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

👍

வார்த்தை ஜாலங்களில் மயங்கி இருப்பவர்களுக்கு நல்லதொரு அறிவுரை.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

எங்கோ அடுத்த நாட்டில் தமது சுயநல அரசியலுக்காக வார்ததைஜால(Populism) அரசியலை நடத்தும் அரசியல்வாதிகளை நம்புவது மேலும் பின்னடைவையே கொண்டுவரும்.  

சரியாக சொன்னீர்கள். அப்பப்ப கட்டுமரம் கருணாநிதியை இழுத்து விடுகிறீர்கள்.

அவரது வாய் ஜாலத்தினை நம்பி, வெளியே வந்து, செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த மக்களை சொல்கிறீர்கள் போலும். ம்..ம்ம்ம்ம்ம் என்ன செய்யிறது.

அரசியல்.... என்ன பண்ணுறது...

22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

வார்த்தை ஜாலங்களில் மயங்கி இருப்பவர்களுக்கு நல்லதொரு அறிவுரை.

 

Edited by Nathamuni

34 minutes ago, Nathamuni said:

சரியாக சொன்னீர்கள். அப்பப்ப கட்டுமரம் கருணாநிதியை இழுத்து விடுகிறீர்கள்.

அவரது வாய் ஜாலத்தினை நம்பி, வெளியே வந்து, செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த மக்களை சொல்கிறீர்கள் போலும். ம்..ம்ம்ம்ம்ம் என்ன செய்யிறது.

அரசியல்.... என்ன பண்ணுறது...

நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை.

மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 07:48, கிருபன் said:

அத்தோடு, ஒரு கட்டம் வரையில் தலைவர் பிரபாகரனைத் தன்னுடைய வளர்ச்சிக்காக முன்னிறுத்திய சீமான், இன்றைக்கு பிரபாகரனைத் தாண்டிய ஒருவராகத் தன்னை முன்னிறுத்த முனைகிறார்.   

புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஈழம் கிடைத்து விட்டது அதற்கான உலக நாடுகளின்    அங்கீகாரம் தான் தேவை என்ற நிலையில் இருந்த நாங்கள் இன்று....
நாம் தமிழர் கட்சி தான்    எங்களுக்கு எல்லாமே என்ற நிலையில் நிற்பது வேதனைக்குரியது
பணத்தை வீசினால்   விடுதலை கிடைக்கும் என நான் நம்பவில்லை
முடிவில் பூஜ்ஜியம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

தமிழ் ஈழம் கிடைத்து விட்டது அதற்கான உலக நாடுகளின்    அங்கீகாரம் தான் தேவை என்ற நிலையில் இருந்த நாங்கள் இன்று....
நாம் தமிழர் கட்சி தான்    எங்களுக்கு எல்லாமே என்ற நிலையில் நிற்பது வேதனைக்குரியது
பணத்தை வீசினால்   விடுதலை கிடைக்கும் என நான் நம்பவில்லை

என்னைப்பொறுத்தவரை நான் என்றுமே அப்படி நினைத்தில்லை. என்னைப்போன்றவர்கள் சீமானுக்கு ஆதரவு என்றவுடன் ஏதோ தனிநாடு தனித்தமிழீழம் என்று நினைத்து   மற்றவர்கள் தேவையில்லாத மீம்ஸ்களோடு அநாவசியமான தனிமனித தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

சென்ற தேர்தலில் கூட சீமானின் வளர்ச்சியை எதிர்பார்த்தோம். சீமான் முதலமைச்சர் பதவியை அல்ல.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. அவர்கள் தவறு விடும் போது சுட்டிக்காட்டுவதும் எமது கடமை. மாறாக எமக்கு ஆதரவு தருபவர்களை இழிவு படுத்துவது நமக்கு அழகல்ல.

எமக்கு தேவை ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரல். அது எங்கு கிடைக்கின்றதோ அங்கே எமது குரலும் இருக்கும்.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 21:50, zuma said:

சீமானை குறித்து, புலம்பெயந்தவர்களை விட தாயாக மக்களும், அரசியல்வாதிகளும், அரசியல்  விமர்சகர்களும், பத்திரிகையாளரும் தெளிவாக இருப்பது மன மகிழ்ச்யை கொடுக்கின்றது. 

ஆம் உண்மை ..சீமான் இந்தியன். ...தமிழ்நாடு இந்தியா. ...இந்தியா என்கின்ற. தமிழ்நாட்டை நம்ப முடியாது.இந்தியன்  என்கிற சீமான். இலங்கைத்தமிழருக்கான  அரசியலை செய்யவும் முடியாது  தற்போது. இலங்கைத்தமிழருக்கு நல்ல தலமையில்லை ...எதிர்காலத்தில் இலங்கைத்தமிழரிலிருந்து  நல்ல தலமை உருவாகும்..தலைவரின்  படத்தை கூட்டங்களில் வைத்த சீமான். இந்தியச்சட்டம் அனுமதிக்கவில்லையென்று  வைக்கமால்விட்டார் ...இவருக்கு  இந்தியச்சட்டம் முதலில் தெரியாதா?.  நான் படத்தைத்தொடர்த்தும் வைப்பேன்  நீங்கள் செய்வதைச்செய்யுங்கள் என்று சொல்லியிருந்தால்  ...இவரைத் தலைவராகப்பார்த்திருக்கமுடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

என்னைப்பொறுத்தவரை நான் என்றுமே அப்படி நினைத்தில்லை.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. அவர்கள் தவறு விடும் போது சுட்டிக்காட்டுவதும் எமது கடமை. மாறாக எமக்கு ஆதரவு தருபவர்களை இழிவு படுத்துவது நமக்கு அழகல்ல.

 

இதைத் தான் நானும் சுட்டிக் காட்டுகின்றேன்
சீமான் அவர்கள் இப்போது செய்வது இந்தியத் தமிழர்களின்  ஈழத்து தமிழர்களின் ஆதரவு அலையைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதே.
அப்படியான ஒரு அரசியலால் அவரால் எதையும் அடைந்து விட முடியாது.
ஈழத்து அடையாளங்களை அகற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் பின்னர்
ஈழத்தவர்களுக்கு அவர் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
http://www.nillanthan.com/wp-content/uploads/2021/05/181669999_4552120971481973_1764314736031570882_n.jpg
 

தமிழகத்தில் புதிய ஆட்சி வந்திருகிறது. அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளில் இருந்து எப்படி வெற்றிகரமாக கையாளலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாயிருக்கும்.

தமிழகம் எனப்படுவது தட்டையான எகபரிமாணம் கொண்ட ஒரு மக்கள்தொகுதி அல்ல. அது பல பரிமாணங்களைக் கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கலவை.  முதலாவது அடுக்கு தமிழக அரசு. அது ஒரு மாநில அரசு. இந்திய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அரைச் சமஸ்டி கட்டமைப்பு. கவனியுங்கள் அது ஒரு முழுச் சமஸ்டி கட்டமைப்பு அல்ல.

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள். மூன்றாவதாக தமிழகத்திலுள்ள ஈழ உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களர்கள்.நாலாவது அடுக்கு  தமிழகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள். ஐந்தாவதாக சிவில் சமூகங்களையும் ஊடகங்களையும் கூறலாம்.இந்த ஐந்து அடுக்குகளையும் ஒரே விதமாக அணுக முடியாது. ஒரே விதமாக கையாளவும் முடியாது.

முதலாவதாக மாநில அரசுக் கட்டமைப்பு.தமிழக அரசை அதன் வரையறைகளுக்குள் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும். அது எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் எதிர்பார்க்கலாம்.ஒரு மாநில அரசாக அதற்கு இருக்கக்கூடிய வரையறைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதையும் செய்யமுடியும்..

இரண்டாவது தமிழகத்தில் உள்ள கட்சிகள்.தமிழகத்திலுள்ள கட்சிகளில் ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமான கட்சிகளும் உண்டு. நெருக்கம் குறைந்த கட்சிகளும் உண்டு. எப்படியானாலும் இக்கட்சிகள் யாவும் அங்கேயுள்ள தேர்தல் அரசியலுக்கு உட்பட்டவை. எனவே ஈழத் தமிழர் விவகாரத்தையும் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு ஊடாகவே கையாள முயல்வார்கள். அதில் தேர்தல் நோக்குநிலையிலான நலன்கள் இருக்கும். அந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர் விவகாரம் கையாளப்படும். இதில் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான சில அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் பொறுத்து மாறாத நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்கள்.அவர்களோடு ஈழத்தமிழர்கள் மானசீகமான உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் கட்சி நலன் என்று வரும்பொழுது குறிப்பாக தேர்தல் அரசியல் என்று வரும் பொழுது அவர்கள் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பார்கள். அதில் ஈழத்தமிழர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள். இவர்கள் தேர்தல் நோக்குநிலை அற்றவர்கள். கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருங்கி வருவார்கள். இவர்களோடு கொள்கை அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம். அது ஒருவிதத்தில் மாறாத உறவாகவும் இருக்கும்.

நாலாவது சாதாரண தமிழக மக்கள். இதுதான் பெரிய தொகை. எல்லா கட்சிகளிலும் இவர்கள் உண்டு. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் இன ரீதியாக கொதித்து எழுவார்கள். மொழிரீதியாக கொதித்து எழுவார்கள். அவர்களுடைய கட்சித் தலைவர்கள் அவர்களை தேர்தல் நோக்கு நிலைகளில் இருந்து வழிநடத்தக் கூடும். ஆனால் ஈழத்தமிழர்களுக்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு என்பது தூய்மையானது. அரசியல் நலன்கள் அற்றது.சுயநலம் அற்றது.அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு  காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.

எனவே தமிழகத்தின் சாதாரண ஜனங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. அந்த உறவை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும். ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்ற தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். எனவே தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் சாதாரண தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே எதையும் செய்ய வேண்டும்.இதுவிடயத்தில் சாதாரண தமிழக மக்களை பகைநிலைக்கு தள்ளாத ஒரு நிதானப்போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐந்தாவது ஊடகங்களும் சிவில் அமைப்புக்களும்.கருத்துருவாக்கிகளும்.இங்கேயும் ஈழத்தமிழர்களுக்காக  நலன்சாராது விசுவாசமாக உழைப்பவர்கள் உண்டு.

மேற்கண்டவற்றின் அடிப்படையில் தொகுத்துச் சிந்தித்தால் ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து தமிழகத்தை எப்படி கையாள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழி வரைபடம் கிடைக்கும். துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அவ்வாறான வழிவரைபடம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்ட காலத்தில் இருந்து இன்றுவரையிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் தொடர்பாடல் மையங்கள் என்று கருதத்தக்க அலுவலகங்கள் அல்லது தகவல் வழங்கும் நிலையங்கள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குக்கூட கட்சிகளிடம் பொருத்தமான கட்டமைப்புக்கள் இல்லை.தமிழக ஊடகங்களுக்கும் ஈழத்தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் ஒரு பொதுவான தொழில்சார் இடையூடாட்டக் கட்டமைப்பும் இல்லை.தமிழகத்திலுள்ள கருத்துருவாக்கிகளுக்கும் ஈழத்தமிழ் கருத்துருவாக்கிகளுக்கும் இடையிலும் ஒரு இடையூடாடட்டப் பரப்பு இல்லை.தமிழகத்து சிவில் அமைப்புகளுக்கும் ஈழுத்து சிவில்அமைப்புகளுக்கும் இடையிலும் பொதுவான ஒரு இடையூடாடட்டத் தளம் கிடையாது.

எனவே கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இடையூடாடக்கூடிய பொதுப்பரப்புகளை கட்டமைப்புகளை ஈழத்தமிழர்கள் உருவாகியிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் கூட அதைச் செய்திருக்கவில்லை. குறிப்பாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் மோசமாக சேதமடைந்த நிலைமைகளை சீர்செய்யும் விதத்தில் தீர்க்கதரிசனம் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.உதாரணமாக,ராஜீவ் காந்தி கொல்லப்பட முன்பு ஈழத் தமிழர்களுக்கு மிக ஆதரவாக காணப்பட்ட தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் ஈழத்தமிழர்களை நோக்கி  இன்றுவரையிலும் முன்னரளவுக்கு நெருங்கிவரவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.

இவ்வாறான பாரதூரமான ஒரு வெற்றிடத்தில் தமிழகத் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒரு பகுதி ஈழத்தமிழர்கள் எதிர்பார்கிறார்கள்.தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருக்கும் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் பொறுத்தும் ஒருபகுதி ஈழத்தமிழர்களின் நோக்குநிலை அணுகுமுறை அவ்வாறுதான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாருமே எங்களை நேசிக்க வேண்டும் எங்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும் என்று ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு அப்பாவித்தனமான விருப்பம். ஏனெனில் தாயகத்துக்கு வெளியே இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் அல்லாத வெளி இனத்தவர்களும் அவரவருக்கேயான அரசியல் சூழ்நிலைகளில் கைதிகளே.அவரவர் தங்களுடைய நிலைமைகளுக்குள்ளிருந்துதான் ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியும்.

உதாரணமாக மனோகணேசன். அவர் ஒரு தென்னிலங்கை மைய அரசியல்வாதி.அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் இனவாதத்துக்கு எதிரான ஒரு தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலே போதும்.அதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு பலம்.

அடுத்த உதாரணம் சிங்கள திரைக்கலைஞர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலே போதும். அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பின்தளமாக இருந்தது.இது வரையிலும் 19பேர் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள்.இவைகாரணமாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை தாயகம் என்று அழைத்துக் கொண்டு அளவுக்குமிஞ்சி நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள் ; அளவுக்கு மிஞ்சி தமிழகத்தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.இது ஒருவகையில் வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலில் ஒரு கிளைதான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பதே தன் பலமிழந்து வெளிநோக்கி காத்திருப்பதுதான். அது அடிப்படையிலேயே பலவீனமான அரசியல். அந்த பலவீனம்தான் மற்றவர்கள் எல்லாரும் தங்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதும் ஆகும்.

ஆனால் அரசியல்உறவுகள் அவ்வாறு உண்மையானவை அல்ல. நலன்சாரா உறவுகளும் அல்ல. அவை முழுக்கமுழுக்க நலன்சார் உறவுகளே. இதைப் புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டால் ஈழத்தமிழர்கள் தமிழகத் தலைவர்களிடம் அளவுக்குமிஞ்சி எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வாறு எதிர்பார்த்து அதில் ஏமாற்றம் அடையும்போது அளவுக்குமிஞ்சி வெறுக்கவும் மாட்டார்கள். கடந்த 12 ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை தொகுத்துப் பார்க்கும் எவருக்கும் இது தெளிவாகத் தெரியும்.சமூகவலைத்தளங்கள் இது விடயத்தில் முழுத் தமிழர்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக் கொள்கிறது. எனினும் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் எதிர்பார்ப்பு அது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இப்போது தமிழகத்தில் ஒரு புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை எப்படி நெருங்க வேண்டும்? எந்த அடிப்படையில் நெருங்க வேண்டும்?யாருக்கூடாக நெருங்க வேண்டும்?யாரை வைத்து யாரை கையாளவேண்டும்?  போன்ற எல்லா உபாயங்களை முதலில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் ஈழத்தமிழர்கள் இதுதொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு விதத்தில் எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்பக் கூறுவது போல ஈழத்தமிழர்களுக்கான வெளியுறவு கட்டமைப்புத்தான்.  அந்த வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் ஒரு வழி வரைபடம் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் புதிய அரசாங்கத்தில் ஈழத் தமிழர்களோடு தொடர்ச்சியாக நெருக்கமாக நிற்கும் வைகோவிற்கு நான்கு ஆசனங்கள் உண்டு. மற்றொருவர் திருமாவளவன்.அவருடைய கட்சிக்கும் 4 ஆசனங்கள் உண்டு. இது தவிர திமுகவிற்குள்ளும் மருத்துவர் எழிலனைப் போல பலர் ஈழத்தமிழர்களோடு நெருக்கமான மானசீகமான உறவை கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்குள்ளும் வானதி சிறினிவாசன் புலம்பெயந்த தமிழர்களோடு நெருக்கமாயுள்ளார்.அவர்களைப்போல மேலும் புதிய ஆளுமைகளை எப்படி சம்பாதிக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இடதுசாரி மரபில் வந்த ஒரு தமிழக நண்பர் அடிக்கடி கூறுவார் தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு என்பது ஒரு உள்ளுறையும் சக்தி. அதை ஒரு தூலமான சக்தியாக மாஸ் போர்ஸ் ஆக மாற்ற வேண்டும் என்று. ஆம்.அதை ஈழத்தமிழர்களின் ஒத்துழைப்போடு தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும்தான் செய்ய முடியும்.அதை ஈழத்தமிழர்கள் நேரடியாக செய்ய முடியாது.

http://www.nillanthan.com/4980/?fbclid=IwAR0wd7CnmQFY2qhsfPLJS3XDI-4DKW-ZmoEfDVTYQjqNCnpRrqjA1sghbYo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.