Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

  • Replies 89
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

5 minutes ago, வாத்தியார் said:

Hochwasser in Köln: Stromausfälle und Verkehrschaos – das müssen Sie wissen. Lange Staus auf der A1 bei Erftstadt: Infolge des Unwetters waren mehrere Autobahnen in Nordrhein-Westfalen gesperrt. (Quelle: dpa/Marius Becker)

Erftstadt Unwetter DHL Wagen

DSC08434

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

என்னுடைய ஊரிலிருந்து 30  km  க்கு அப்பால்
பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும்.
ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70  பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதில் ஒரே நகரில் 60  பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள்.
போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

 

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் பெரும் மழையினால் பெரும் வெள்ளம் குறைந்தது 66 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 70 பேர் காணவில்லை என்று செய்தியில் சொன்னார்கள்.

50 minutes ago, Kandiah57 said:

நான் சுகமாகயிருக்கிறேன்

மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

54 minutes ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

  • கருத்துக்கள உறவுகள்

1300 பேரைக் காணவில்லை என்று காடியன் பத்திரிக்கை கூறுகின்றது.  கு. சா அண்ணா நலமுடன் இருப்பார் என நம்புகின்றேன்.

https://www.theguardian.com/world/2021/jul/16/western-germany-floods-angela-merkel-horror-catastrophe-deaths-missing-search-flooding-belgium

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் (சி.என்.என்) ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை, ஒரு நூற்றாண்டில் பெய்த மழையால் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை பேரழிவு தரக்கூடிய கொடிய ஃபிளாஷ் வெள்ளம் ஏற்பட்டது, இது ஒரு பெரிய அளவிலான மீட்பு முயற்சியைத் தூண்டியது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் வேகமாக நகரும் நீரோடைகள் முழு நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து கட்டிடங்கள் இடிந்து விழுந்து குடியிருப்பாளர்களை சிக்கித் தவிக்கின்றன என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடுமையான வெள்ளத்தில் 55 பேர் இறந்துள்ளனர், ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் ஜெர்மனி 49 பேர் இறந்த நிலையில், 6 பேர் இறந்தனர். லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. "
சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இவ்வளவு மழைப்பொழிவை நாங்கள் காணவில்லை" என்று ஜெர்மன் வானிலை சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பிரீட்ரிச் சி.என்.என். "சில பகுதிகளில் மழையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக நாங்கள் கண்டிருக்கிறோம், இது வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக சில கட்டிட கட்டமைப்புகள் இடிந்து விழுகின்றன."

ஒரு ஜெர்மன் மாநிலத்தில் குறைந்தது 30 பேர் இறந்தனர்

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் இறந்து கிடந்ததாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சி.என்.என். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், குறைந்தது 19 பேர் இறந்து கிடந்தனர், ஆனால் "அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கோப்லென்ஸில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சி.என்.என். பேட் நியூனேஹர்-அஹ்ர்வீலர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் அவசரகால தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், வாஷிங்டன் டி.சி.க்கு தனது ஸ்வான்சோங் விஜயத்தில் இருக்கிறார், தனது நாட்டின் சில பகுதிகளை தாக்கியுள்ள கொடிய வெள்ளம் ஒரு "பேரழிவு" என்று கூறினார். "இங்கே வாஷிங்டனில், எனது எண்ணங்கள் எப்போதுமே நம் தாயகத்தில்தான் இருக்கின்றன" என்று மேர்க்கெல் வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பிடனுடனான சந்திப்புக்கு முன்னதாக கூறினார். "இந்த மணிநேரங்களில் அமைதியான இடங்கள் ஒரு பேரழிவைச் சந்திக்கின்றன, ஒரு சோகம் என்று ஒருவர் கூறலாம். கடுமையான மழை மற்றும் வெள்ளம் இதை விவரிக்க மிகவும் போதாத சொற்கள் - எனவே இது உண்மையில் ஒரு பேரழிவு." வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் உடனடி பதிலளிப்பதில் கவனம் செலுத்துவதாக மேர்க்கெல் கூறினார், ஆனால் மீட்புக்கு உதவ நீண்டகால நிதி உதவிக்கான ஒரு மூலோபாயத்தில் பணியாற்ற தனது நாட்டின் நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். .
"இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்காக நான் துக்கப்படுகிறேன் - இந்த எண்கள் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் பலர் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இரங்கல் தெரிவித்தார். "வெள்ளப் பகுதிகளில் ஏராளமான மக்கள் தாங்க வேண்டிய பேரழிவால் நான் அதிர்ச்சியடைகிறேன். இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள் தெரிவிக்கின்றன" என்று சீபர்ட் ட்விட்டரில் எழுதினார்.

https://www.cnn.com/2021/07/15/europe/germany-deaths-severe-flooding-intl/index.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

உறவுகள் நலமா?

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

 

 

 

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செய்தி.

ஒரு நாளில், ஒரு சதுர மீற்றருக்கு... 20 லீற்றர் மழை பெய்தமையால், 
இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவி அண்ணா பிரான்ஸ் என நினைகிறேன்.

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

6 hours ago, புங்கையூரன் said:

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

ஓம் ஒரு கண நேரத்தில் எல்லாம் மாறி விடும்.

Edited by goshan_che

3 hours ago, goshan_che said:

 

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

 

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

சாந்தி அக்கா சுகம் என அறிந்தது சந்தோசம். நானும் எழுதும் போது யோசித்தேன். அவவின் கட்டுரை ஒன்றில் ரைன் நதியை ரயிலில் கடப்பது போல வரும். வீணாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எழுதவில்லை. 

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி?

 

10 minutes ago, goshan_che said:

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

குமாரசாமி அண்ணைக்கு... தற்போது தொலைபேசி எடுத்து பார்த்தேன்.
மணி அடிக்கின்றதே தவிர, பதில் வரவில்லை.

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

இந்த வெள்ளம்...  கண நேரத்தில், 
தாம் சுதாகரிக்க முன்னம்... பாய்ந்து வந்தது என்று, 
பாதிக்கப் பட்டவர்கள்... தொலைக் காட்சியில் தெரிவிக்கின்றார்கள்.

32 minutes ago, தமிழ் சிறி said:

 

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

 

 

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு யேர்மனியின் பகுதி.

Reinland-Germany1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பாதகாப்பாக இருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் உறவுகள்.. ஒவ்வொருத்தரா வந்து சைன் வைத்துட்டு போனால் நன்று... அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.👋

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

அந்தாளின்ரை... சுபாவமே அப்படித்தானே, நிழலி. :)
அதனால்... நாம், எல்லோரும்... அவரை விரும்புகின்றோம். 💓

 (கையோடை... அவரின் திண்ணை தடையை எடுத்து விடுங்களேன்.)  🤣

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும் சுகங்களை  அறியத்தந்தமைக்கும் நன்றி உறவுகளே

குமாரசாமியண்ணையின் சுகங்கள் அறிய  ஆவல்

சுவி அண்ணை பரிசில் நிற்பதாக சொன்னார்

எனவே  கவலைப்பட ஏதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

நாதம்ஸ்.... 
இங்கு, வெள்ளம் வந்த இடத்திலும்... 
சென்ற கிழமை,  பயங்கர வெய்யில் அடித்தது.
சனம் எல்லாம்.. சந்தோசப்பட,  இப்படி நடந்து விட்டது.

இந்த... வெள்ளம் வரப் போகுது என்று... ஏன் அறிவிக்கவில்லை என்று,
அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு.... 

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.