Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்க்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அநாவசியச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதேநேரம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றிப் பணமும் அச்சிடப்படுகின்றது.

விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரம் இன்மை ஆகியவற்றால் பட்டினி நிலைமை உருவாகின்றது. இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. அனைத்து நகரங்களிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விவரங்களின்படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறிகளின் முகப்புப் பெறுமதி 2020 ஆம் ஆண்டு முதலாம் திகதி 74 ஆயிரத்து 74 பில்லியனாகும். அது இப்போது ஆயிரத்து 442 பில்லியன்களாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் இலங்கை மத்திய வங்கி ஆயிரத்து 368 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போன்று ஆகியிருக்கின்றது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
  • Replies 72
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் .................................

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பகிடிக்குததானே   கேட்கிறீங்க 🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

ஓம். மகிந்த குடும்பம் தங்களிடம் உள்ள பழைய தாள்களை மாத்தி புது தாள்களாக அடுக்கி வைக்க போகினமாம்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அச்சடித்த பணத்தை அடுக்கி வைத்துவிட்டுதான் பணம் கையிருப்பில் இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்களோ? இப்போ யாரையும் கடத்தி கப்பம் பெற்று ஏப்பம் பெற முடிவதில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அடிக்கிற காசு உள்நாட்டில தானே புழங்கும்?! இதனால என்ன நன்மை? பழைய தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்குவார்களோ!

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

வியாபாரங்கள் நேரடியாக பாதிப்படையும் ( வருமானம் குறைவடையும், கடனுக்கு பொருள்களை வழங்கிய நிறுவனக்கள் நட்டமடையும், வேலையாதளுக்கு சம்ம்பளம் பணவீக்கத்திற்கேற்ப அதிகரிக்காமல் குறைவடைதல் மற்றும் வேலையிழத்தல் ஏற்படும்,நுகர்வோர்நெருக்கடி(Consumer confident) ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

g91LlH8KQB3AprZu5Ycw_Stagflation.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, பெருமாள் said:

கவனம் கோத்தா  விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுது பாஸ் .🤣

9 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

ஆர்...? இஞ்சை அப்பிடி ஒருத்தரும் இல்லை. எல்லாரும் தமிழின விசுவாசிகள். 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

கோத்தாவை குறைகூறினால் மட்டும் சிலருக்கு நாட்டுப்பற்று பீறிக்கொண்டுவரும், பிறகு களம் தாங்காது!

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, உடையார் said:

அவர்களை இந்த திரியில் காணமுடியவில்லையே இன்னும்😎

கொஞ்சம் பொறுங்கள்! அவர்கள் இன்னும் தூக்கத்திலிருந்து எழவில்லை, எழுந்ததும் விழுந்தடித்துக்கொண்டு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது என்னை கூப்பிட்டனீங்களோ.😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பொதுவாக ஒரு அரசு தனது நிதியாண்டிற்கான வரவு செலவினை முன்னராகவே திட்டமிட்டுவிடும், அதனை பாதீடு (Budget) என்பார்கள். அதாவது முதலில் செலவுகளை திட்டமிட்டு அதற்கான வருமானத்தினை எவ்வாறு பெறுவது என திட்டமிடுவார்கள். வருமானம் போதுமான அளவில் இல்லாவிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் மூலம் அதனை ஈடு செய்வார்கள்.

ஒருநிதியாண்டில் திட்டமிடப்படாத வகையில் ஏதாவது செலவு ஏற்படும் பட்சத்தில் ஒரு சிறிய பாதீடு செய்வார்கள், உதாரணமாக கோவிட் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவை.

அரசு கடன் பெறமுடியாத மோசமான நிலையிலேயே உள்நாட்டுக்கடன் வட்டி மற்றும் அரசின் செலவுகளை ஈடு செய்வதற்காக பணத்தினை அச்சிடுவர், பொதுவாக எந்த அரசும் பணத்தினை அச்சிடும் முடிவை எடுக்காது ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேதத்தினை அது உருவாக்கும்.

பனம் அச்சிடும் போது பணவீக்கம் ஏற்படும், இது இயல்பான பணவீக்கம் அல்ல, இயல்பான பணவீக்கம் என்பது வேலையின்மை விகிதம் குறையும் போது ஏற்படும், இதனை மத்திய வங்கி வட்டி விகிதம் மூலம் கட்டுப்படுத்தும்.

பணத்தினை அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்தினால் வியாபாரங்கள் சுருக்க நிலை ஏற்படும், அதே நேரம் நுகர்வோர் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்படும் (மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல) இதனால் பொருளாதாரம் நீண்ட பின்னடைவை எதிர்கொள்ளும்.

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?

நட்பு...நன்மை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு
ஒருகட்டத்தில் சிறுவயதில் ராக்கெட் செய்துவிளையாடிய கொப்பியின்  நடுத்தாள் 1000 ரூபாய் தாளை விட விலை மதிப்பாக போகுமளவுக்கு நன்மை. ஒரு இறாத்தல் பாண் வாங்க தள்ளுவண்டியில் காசை நிரப்பிக்கொண்டு போகுமளவுக்கு கொண்டுவந்து விடும், 
 உதாரணம் :- சிம்பாபே     

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nochchi said:

கோத்தா மாத்தயா அடிக்கிறதான் அடிக்கிறார், அடிச்சு ஒரு மில்லியன் ஒரு குடும்பத்துக்கு என்று குடுத்தால் உந்தக் கஸ்ரம் கொஞ்சம் குறையுமெல்லோ ? ஆராவது அவருக்கு ஆலோசனை சொல்லமாட்டீங்களா?

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொன்னால் கேட்டால் தானே, நான் முதலிலேயே வீட்டுக்கொரு பிரின்டிங் மெஷின் என்ற திட்டத்தை பரிந்துரைத்தேன் , அவரவர்களுக்கு தேவையான அளவுக்கு அடித்துக்கொள்ளட்டும் அரசுக்கும் பிரின்டிங் செலவு மிச்சம் என்று.... கேட்டால் தானே ....?
அந்த அரை லூசு மாத்தையா வெடிமன்னன் "கப்சா"  கப்ரால் சொன்னால் மட்டும்தான் கேக்குமாம், சரி மாத்தையாவாச்சு  கப்சாவாச்சு என்று நானும் அமைதியாக நடையை கட்டிப்போட்டன்     


சிலநேரம் 'ஸி யின்பிங்' சொன்னாக் கேட்பார்தானே? அப்ப அவருக்கு எழுதலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அரசிற்கு செலவு செய்வதற்கு காசு வேண்டும், ஆனால் அரசிடம் காசில்லை, கடனும் வாங்க முடியவில்லை.வேறு தெரிவு எதுவும் அரசிடம் இல்லை,

அத்தியாவசிய பொருதளின் விலையேற்றத்திற்கான காரணம் யாரென்பது கூட தெரியவில்லை அரசிற்கு.

அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா?
அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

ஏனண்ணை டொலர் அடிச்சா எல்லா கடனும் அடைக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

ஜஸ்டின் ஆகட்டும், குமாரசாமி ஆகட்டும், கோசானாகட்டும், கற்பகதருவாகட்டும், எங்களுக்கெல்லம் சிறிலங்கா is a joke.  சும்மா வந்து கருத்தெழுதி விட்டு போவோம், கடிபடுவோம் அங்கே என்ன நடந்தாலும் எம்மை, எம் குடும்பத்தை ஒன்றும் செய்யாது. எம்மை பொறுத்தவரை கொஞ்சம் தெரிஞ்ச சனம் இலங்கையில் இருக்கிறது, ஆப்கனிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானிக்கும் இலங்கைக்கும் அதுதான் ஒரே வித்தியாசம்.

ஆனால் உங்களுக்கு இது life. முடிந்தளவு சுயசார்பு வாழ்க்கைக்கு தயாராவது நல்லம். 

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

Be careful what you wish for, lest it come true.

10 minutes ago, goshan_che said:

அடிக்கிறதுதான் அடிக்கிறியள், குவைத் தினார் மாரி நல்ல பெறுமதியான காசை அடிக்கலாம்தானே?

ஐடியா இல்லாத பசங்க 🤣

அது தானே.  நல்ல Quality paper  இருக்கு தானே. அதை use பண்ணலாம் தானே. கொஞ்சமும் யோசிக்காத பசங்க. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.