Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்!
பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாடல். 'கன்னத்தில் முத்தமிட்டால் ' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்:
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். 

நான் இந்த பாடல் எம் எஸ் வி பாடியது என நினைத்திருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆழ்ந்த இரங்கல். 

நான் இந்த பாடல் எம் எஸ் வி பாடியது என நினைத்திருந்தேன்.

எம்.எஸ்.வி, மாணிக்கவிநாயகம், பால்ராம்,  வெபி(Febi) மணி, ஏ ஆர். ரெகானா ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு புகழஞ்சலி. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

 

காந்தக் குரல் மாணிக்க விநாயகம் மறைவு!

spacer.png

 

பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார்.

பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். தொழில்முறையில் நாட்டுப்புறப் பாடல்களும், பக்தி பாடல்களைப் பாடியதன் மூலம் அடித்தட்டு மக்கள் வரை, இவரது பாடல்கள் சென்றடைந்தது.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்னணிப் பாடகர்கள் இருந்தபோதிலும் மறைந்த சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் குரல்கள் தனித்துவமானது, காந்தம் போன்று பாடலைக் கேட்போரைக் கட்டிப் போடும் வலிமைமிக்கது.

அவர்களுக்குப் பின் மாணிக்க விநாயகம் சினிமாவில் பாடியது, நடித்தது குறைவு என்றாலும் ஒவ்வொரு பாடலும் காலம் கடந்து மனித மனங்களைக் கொள்ளை கொள்ளக்கூடிய காந்த குரலுக்குச் சொந்தக்காரர் அவர்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ படத்தின் மூலம் மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். விக்ரம் - ஜோதிகா நடிப்பில் தரணி இயக்கிய இந்தப் படத்தில் இடம்பெறும் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்கிற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மாணிக்க விநாயகம்.

இதையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அருண் விஜய், ஷாம் நடிப்பில் வெளியான இயற்கை படத்தில் இடம்பெறும் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு’ என்கிற பாடலும் மாணிக்க விநாயகம் பாடியதுதான். காதல் தோல்வியின் வலியைக் கேட்பவர்களும் உணரும் வண்ணம் தன்னுடைய காந்தக் குரலின் மூலம் வலியைக் கடத்தி இருப்பார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய ’விடைகொடு எங்கள் நாடே’ என்கிற பாடல் இன்றளவும் கேட்டால் மனித மனங்களைக் கலங்க வைத்து, சிலிர்ப்பை ஏற்படுத்தும். இந்தப் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து பாடியிருந்தார் மாணிக்க விநாயகம்.

லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படத்தில் ‘தேரடி வீதியில்’ என்கிற பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெறும் ‘கட்டுக் கட்டு கீர கட்டு’ என்கிற பாடலை பாடியவரும் மாணிக்க விநாயகம்தான்.

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் இடம்பெறும் ரொமாண்டிக் பாடலான ‘ஐயய்யோ’ பாடல் இவரின் குரல் மூலம் ரசிகர்கள் மனதில் ஓங்கி ஒலித்தது என்றே சொல்லலாம்.

இதுதவிர ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் இடம்பெறும் ‘கொக்கு பற பற’ போன்று தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் மாணிக்க விநாயகம்.

நடிக்க முடியாது என்று மறுத்து வந்தவரை இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கிய திருடா திருடி படத்தில் நடுத்தர வயதுடைய அப்பாவாக அறிமுகப்படுத்தினார். அவர் நடிகராக அறிமுகமான முதல் படம் தமிழ் சினிமாவில் வணிகரீதியாகப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வெற்றிப்படமானது.

அதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன், வா, குவாட்டர் கட்டிங், யுத்தம் செய், பேரழகன், திமிரு, கிரி, கள்வனின் காதலி, பலே பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பல பாடல்களைப் பாடி, துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/entertainment/2021/12/27/14/singer-manicka-vinayakam-passes-away

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த் இரங்கல்கள்
யுத்தம் செய் மிஸ்கினின் திரில்லர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் வெளியிட்ட பல  இசை தட்டுகளில் ஐயாவின் பாடல்கள் பல உள்ளன.
இந்த மண் உங்களுக்கு விடை கொடுக்கின்றது,  ஆத்மா சாந்தி அடையட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.