Jump to content

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்


Recommended Posts

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்.

இது எனக்கு நேரடியாக கிடைத்த தகவல், இதை உங்கள் விமர்ச்னத்துக்கான தரவில்லை, எனது மன திருப்திக்கு தருகின்றேன்,

எனக்கு தெரிந்த அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என

கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்புகொண்டு

"நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்" என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிற்ர்,

இதை கேட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் இதை அடிக்கிறேன்,

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

தங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்

எல்லோரும் வரணும்

இறைவனை வேண்டுகின்றேன்

எமக்காக போராட கூப்பிடவில்லை

தங்கள் உயிர் இருக்கிறது என்பது போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மகிழ்வாக் இருக்கிறது............பிரிந்தவர் ..... கூடினால் பேசவும் வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்ததும் சிலரை விடுதலை செய்யக்கூடும். எல்லாம் தேர்தல் முடிவில்தான் தங்கியிருக்கின்றது. பலர் சேமமாக இருக்கின்றார்கள்போலத் தெரிகின்றது. நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. எங்கள் காவல் தெய்வங்கள் உயிருடன் இருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் .....நலமுடன் வருவீர்....தயவு செய்து அவர்கள் வருகையை கொச்சைப்படுத்த வேண்டாம்

Link to comment
Share on other sites

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

உண்மை தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கப்படலாம் என்பது ஒரு புறமிருக்க, அதைத் தக்க வைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறையவே கடினமான பணிகள் உண்டு. இவ்வளவு பலத்தோடு இருந்தபோதும் எம்மால் எதிரியின் படுகோரமான மனிதப்படுகொலைகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகத்தையும் தடுக்க முடியாமல் இருந்தது. மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் என்னும்போது, இதே போன்றதொரு அழிவை அவன் தரமாட்டன் என்பது என்ன நிச்சயம்??

இப்படியான அழிவுகளைத் தடுக்கக் கூடிய வகையில் புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கின்ற சக்தி ஒரு வேளை உதவக் கூடும். எனி வரும் போராட்டம் ஆயுதம் தூக்கித் தான் நடக்க வேண்டும் என்றில்லை. எம் புலம்பெயர் மக்களின் பலத்தாலும் நிச்சயம் முடியும் என்றே நம்புகின்றேன்.

முதலில் உலகத்தை எம் பக்கம் மாற்றுவதற்கு, இளையோர்களாகட்டும், கல்விமான்களாகட்டும், பலம் வாய்ந்த அமைப்புக்களில் வேலை வாய்புத் தேடிச் செல்லுங்கள்.. உங்கள் குழந்தைகளைப் பொறியிலளார் ஆகவும், வைத்தியராகவும் மட்டும் கனவு காணாமல், சட்டத்தினூடும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களோடு பணியாற்ற வழி ஏற்படுத்துங்கள். எந்த ஐநாவோ, அல்லது அது சார்ந்த எந்த அமைப்புக்களோ எம் மக்களின் அழிவுக்கு மௌனித்திருந்தனனவோ, அந்த அமைப்புக்களின் செயற்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவதே பலமாக அமையும்.

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

நன்றி தூயவன் பலகாலத்துக்குபின் தங்கள் கருத்துக்கு...

தமிழரின் போராட்டம் தொடரும்

வேறு வழி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.நீண்ட நாட்களின் பின் தூயவன் ஆக்கபூர்வமான கருத்தோடு மீண்டும் வந்ததற்கு நன்றி.

இன்னுமொரு ஆயதப் போராட்டம் தவிர்க்க முடியாததே.நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நடந்தால்தான் தமிழினம் ஒற்றுமையாக இருக்கும் என்பதை கடந்த சில மாத சம்பவங்களே சாட்சி.எதிரியை எதிர்க்க மட்டுமல்ல தமிழரை ஒற்றுமைப் படுத்தவும் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மீண்டும் முன்னெடுக்கப் படலாம்.அரசியல் போராட்டத்தை சர்வதேச அளவில் வலிமையாகச் செய்வோமானால் ஆயதப் போராட்டம் இன்றியே நாம் எமது உரிமைகளைப் பெறலாம்.ஏனெனில் இது வரை நடந்த ஆயுதப்போராட்டமானது தனது உச்சப் பங்களிப்பைச் செய்து விட்டு மௌனித்திருக்கிறது.அதாவது எமது பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொய்ய விடாமல் நாம் அரசியல் போராட்டத்தை சர்வதேச சமுகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.எல்லாவற்றுக்கும் எமக்குத் தேவை ஒற்றுமை.அது நாடு கடந்த தமிழீழமாய் இருந்தால் என்ன வட்டுக்கோட்டைத் தீர்மானமாக இருந்தால் என்ன.எல்லோரும் ஒன்றுபடுவோம்.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Link to comment
Share on other sites

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விளக்கமாக எழுதி வருகின்றவர்களையும்

வரவிடாமல் பண்ணாதீர்கள்!!

வாழ்த்துக்கள்

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

Link to comment
Share on other sites

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :lol:

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய துயவனுக்கு 11 பச்சைபுள்ளி

நல்ல கருத்து என்று சொன்ன விசுகண்ணைக்கு சிவப்பு புள்ளி

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமாகி போய்விட்டது............. என்ன எழுதுகிறார்கள் என்பதெல்லாம் யார் பார்த்தார்?

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

சாத்தியம் இல்லை என்றால்?

1972ல் தான் அதற்கான சாத்தியங்கள் இல்லாமலே இருந்தது என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

Link to comment
Share on other sites

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :lol::D

Link to comment
Share on other sites

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :rolleyes::lol:

தாடிக்கு பக்கத்தில் வாற கூலிப்படை கீழே கண்ணி வெடி இருக்கோ என்று இப்போதும் தேடுவது ஆச்சரியாமக இல்லை ??? :lol: ஏதோ ஒரு செய்தி சொல்கிரமாதிரி இருக்கல்லோ அண்ணை. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.