Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்குள் இரவில் புக முயன்ற சிப்பாய் மீது சரமாரியாக கத்திக் குத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளம் -10 வீட்டுத் தொகுதியில் உள்ள தமிழர் வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் பிரவேசிக்க முயன்ற சிங்கள இரணுவ சிப்பாய் ஒருவர் சரமாரியாகக் கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.இவரை சக இராணுவத்தினர் இன்று காலை உழவு இயந்திரம் ஒன்றில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றனர். இச்சம்பவத்தால் அக்கிராமம் முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவுகின்றது.அவ்வீட்டில் திருமணம் ஆகாத இளம்யுவதிகள் மூவர் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடன் வசிக்கின்றார்கள் என்றும் சிப்பாய் தவறான நோக்கத்துடனேயே வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருக்கின்றார் என்றும் அக்குடும்பத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்திருப்பவை வருமாறு:-"அப்போது அவ்வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆளரவம் கேட்டு யுவதிகளின் தகப்பன் நித்திரை கலைந்து எழுந்து விட்டார் . வீட்டுக்குள் யாரோ பிரவேசிக்க முயல்கின்றமையை அறிந்து கொண்டார். அவர் சமயோசிதமாக செயற்பட்டார்.அவர் கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டார். பெரிதாக சத்தம் போட்டபடி அம்மர்மநபரை துரத்திச் சென்றார்.மர்மநபர் பின்வாங்கி ஓடினார். பாறாங்கல் ஒன்றுக்கு பின்னால் ஒளிந்து நின்று யுவதிகளின் தகப்பனைத் தாக்கினார்.ஆனால் யுவதிகளின் தகப்பன் சுதாகரித்துக் கொண்டார். சரமாரியாக அம்மர்மநபரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார். சமாளிக்க முடியாத மர்மநபர் தப்பியோட முயன்றார். ஆனால் அம்மர்மநபரின் சப்பாத்துக்களில் ஒன்று கம்பி வேலி ஒன்றில் மாட்டுப்பட்டது.ஆயினும் மர்மநபர் அச்சப்பாத்தை விட்டுவிட்டு ஓடி மறைந்தார். வீட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த மர்மநபர் ஒரு இராணுவ சிப்பாய் என்பதை அச்சப்பாத்து காட்டிக் கொடுத்தது. அசமாத்தத்தை அறிந்து அப்பகுதியில் திரண்ட இராணுவத்தினர் சப்பாத்தை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றவர் இராணுவ சிப்பாய் ஒருவர்தான் என்பதை ஒப்புக்கொண்டனர். இவ்வாறான சம்பவங்கள் இனி மேல் இடம்பெற்றால் அவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிச் சென்றனர்."http://www.tharavu.com/2010/09/blog-post_8799.html

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா ராணுவத்திற்கும் இந்திய கூட்டமைப்பு ராணுவத்தினை போல "பாலியல் வல்லுறவு பயிற்சி" தனியாக அளிப்பார்கள் போல தெரிகிறது..."காளை மாட்டுக்கு அடிப்பது "போல அடித்து குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யவேண்டும்.. :lol: இதெல்லாம் ஈழத்தோழர்கள் அங்கு காளை மாட்டுக்கு செய்வது வழக்கம் தானே? :lol:

சொறிலங்கா ராணுவத்திற்கும் இந்திய கூட்டமைப்பு ராணுவத்தினை போல "பாலியல் வல்லுறவு பயிற்சி" தனியாக அளிப்பார்கள் போல தெரிகிறது..."காளை மாட்டுக்கு அடிப்பது "போல அடித்து குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யவேண்டும்.. :lol: இதெல்லாம் ஈழத்தோழர்கள் அங்கு காளை மாட்டுக்கு செய்வது வழக்கம் தானே? :lol:

யாழில் "பாலியல் வல்லுறவு " என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அவ் வார்த்தயை தானாகவே "பாலியல் வல்லுறவு" என்று திருத்தி அமைக்கும் செயல்முறை (Settings ) யாழில் இருப்பினும் "" இற்குள் போட்டால் மாறாது.

யாழில் "பாலியல் வல்லுறவு " என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அவ் வார்த்தயை தானாகவே "பாலியல் வல்லுறவு" என்று திருத்தி அமைக்கும் செயல்முறை (Settings ) யாழில் இருப்பினும் "" இற்குள் போட்டால் மாறாது.

நகைப்பிற்கிடமாக இருக்கிறது! .... "கற்பளிப்பு", "பாலியல் வல்லுறவு"???????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை திருத்த வந்த பெரியோர்களே....

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.... என்று வரவிலக்கிணம் சொல்லாமல்........

குறிப்பிட்ட செய்தி வாசகர்களை சென்றடைகின்றாதா.... என்று பாருங்கள்.

வெளிக்கிட்டாங்கள்... பாலியல் வல்லுறவு, பாலியல் வல்லுறவு என்று சொல்லிக் கொண்டு.

நடந்தது இரண்டும் ஒண்டு தான்..... முட்டையில் மயிர் புடுங்காதீர்கள்.

இவ்வாறான சம்பவங்கள் இனி மேல் இடம்பெற்றால் அவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிச் சென்றனர்.

கத்தியாலயெல்லாம் குத்தக்கூடாதென்று சொல்லாமச் சொல்லிப்போட்டு போயிருக்கினம்

தமிழை திருத்த வந்த பெரியோர்களே....

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.... என்று வரவிலக்கிணம் சொல்லாமல்........

குறிப்பிட்ட செய்தி வாசகர்களை சென்றடைகின்றாதா.... என்று பாருங்கள்.

வெளிக்கிட்டாங்கள்... பாலியல் வல்லுறவு, பாலியல் வல்லுறவு என்று சொல்லிக் கொண்டு.

நடந்தது இரண்டும் ஒண்டு தான்..... முட்டையில் மயிர் புடுங்காதீர்கள்.

இங்கு யாரும் முட்டையில் மயிர் புடுங்கவில்லை. ஏற்கனவே யாழில் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றி விவாதித்து இருக்கின்றோம். இளைஞனும் இது தொடர்பாக குறிப்பிட்டும் உள்ளார், தேடித் பார்த்து வாசிக்கவும்

சாராம்சமாக கூறுவதனால், பாலியல் வல்லுறவு என்பது மிக மிக பிற்போக்கான சொல். பெண் தன விருப்புக்கு எதிராக வல்லுறவு கொள்ளப் படுவதால் 'கற்பு' என்ற சமூகம் எதிர்பார்கின்ற ஒன்றை இழக்கின்றாள் என்றும் அதனால் ஒன்றை 'இழந்தவள்; என்றும் ஆகின்றது. பாலியல் வல்லுறவு (அல்லது பாலியல் பலாத்காரம்) என்பது பெண் மீதான வன்முறையை, அவள் விருப்புக்கு எதிரான கரும் கொடூரத்தை மட்டுமே குறித்து நிற்கின்றது.

புலிகள் எக்காலத்திலும் தம் செய்திகளிலோ அல்லது வெளியிடுகளிலோ "பாலியல் வல்லுறவு" என்ற வார்த்தையினை எக்காலத்திலும் பயன்படுத்தியது இல்லை. மாறாக "பாலியல் வல்லுறவு / பாலியல் வன்புணர்வு என்ற சொற்களை தான் பயன் படுத்தினர்

அடுத்தது, எழுதும் போது கொஞ்சம் நாகரீகத்தினை கடைப் பிடித்தால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு என்று எழுதாமல், பாலியல் வல்லுறவு என்று சொன்னால் ........

யாழில் ஒண்டுமே நடக்காதா? சும்மா சின்னப் புள்ளைத்தனமா இருக்கே......

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் மன்னிக்குக... தமிழர் நாட்டு பேச்சு வழக்கு வந்துவிட்டது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் முட்டையில் மயிர் புடுங்கவில்லை. ஏற்கனவே யாழில் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றி விவாதித்து இருக்கின்றோம். இளைஞனும் இது தொடர்பாக குறிப்பிட்டும் உள்ளார், தேடித் பார்த்து வாசிக்கவும்

சாராம்சமாக கூறுவதனால், பாலியல் வல்லுறவு என்பது மிக மிக பிற்போக்கான சொல். பெண் தன விருப்புக்கு எதிராக வல்லுறவு கொள்ளப் படுவதால் 'கற்பு' என்ற சமூகம் எதிர்பார்கின்ற ஒன்றை இழக்கின்றாள் என்றும் அதனால் ஒன்றை 'இழந்தவள்; என்றும் ஆகின்றது. பாலியல் வல்லுறவு (அல்லது பாலியல் பலாத்காரம்) என்பது பெண் மீதான வன்முறையை, அவள் விருப்புக்கு எதிரான கரும் கொடூரத்தை மட்டுமே குறித்து நிற்கின்றது.

புலிகள் எக்காலத்திலும் தம் செய்திகளிலோ அல்லது வெளியிடுகளிலோ "பாலியல் வல்லுறவு" என்ற வார்த்தையினை எக்காலத்திலும் பயன்படுத்தியது இல்லை. மாறாக "பாலியல் வல்லுறவு / பாலியல் வன்புணர்வு என்ற சொற்களை தான் பயன் படுத்தினர்

அடுத்தது, எழுதும் போது கொஞ்சம் நாகரீகத்தினை கடைப் பிடித்தால் நல்லது

எழுதுவதில் நாகரீகம்.....?

உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலைமையில் நான் இல்லை.

.

.

பாலியல் வல்லுறவு என்று எழுதாமல், பாலியல் வல்லுறவு என்று சொன்னால் ........

யாழில் ஒண்டுமே நடக்காதா? சும்மா சின்னப் புள்ளைத்தனமா இருக்கே......

சிங்கள வெறியர்களால் வல்லுறவுக்குள்ளான பெண்ணை "நீ கற்பிழந்தவள்" என்று குறிப்பிடுவது, அவளை இன்னும் ஆயிரம் தடவை வல்லுறவு செய்ததிற்கு சமம். எம் ஊர் சமூகம் முழுதுமே எதிரியின் துப்பாக்கி முனைக்கும். எம் ஊர் பெண்கள் எல்லாருமே இராணுவ வெறியர்களின் ஆண் குறிக்கு முன்னுக்கும் இருக்கும் இன்றைய நிலையில் இன்னும் இன்னும் இப்படித்தான் அழைக்கப் போகின்றோமா ?

என்று அகலும் இந்தத் தமிழர் அவலம்?

தமிழர் பகுதிகளிலெல்லாம் இளம் சிங்கள ராணுவவீரர்கள். அந்த ராணுவ வீரர்கள் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கலாம்.

எந்த நேரமும் தமிழ்ப் பெண்ணுக்கு ஆபத்து.யாரும் தடுக்க முடியாது. என்ன கொடுமை இது!

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வெறியர்களால் வல்லுறவுக்குள்ளான பெண்ணை "நீ கற்பிழந்தவள்" என்று குறிப்பிடுவது, அவளை இன்னும் ஆயிரம் தடவை வல்லுறவு செய்ததிற்கு சமம். எம் ஊர் சமூகம் முழுதுமே எதிரியின் துப்பாக்கி முனைக்கும். எம் ஊர் பெண்கள் எல்லாருமே இராணுவ வெறியர்களின் ஆண் குறிக்கு முன்னுக்கும் இருக்கும் இன்றைய நிலையில் இன்னும் இன்னும் இப்படித்தான் அழைக்கப் போகின்றோமா ?

சும்மா கிடக்கிரற சங்கை.... ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

இந்த நிலைமையிலிருக்குது தமிழ் சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவு என்பது அர்த்தமுள்ள பதப்பிரயோகமாக இருந்தாலும் மக்களிடம் அது அவ்வளவாக செய்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. குறிப்பாக இந்தியா மலேசியா சிங்கப்பூர் என்று வாழும் தமிழர்கள் இன்னும் கற்பழிப்பை தான் தீவிரமாக பார்க்கின்றனர். பாலியல் வல்லுறவை அவ்வளவாக விளங்கிக் கொள்வதில்லை. இதனால் செய்திகளின் தாக்கமும் குறைகிறது. இருந்தாலும் தொடர்ந்து பாலியல் வல்லுறவு என்ற பதத்தை பாவித்து வருவதும் மக்களின் உணர்வுகளில் அதற்கும் பாலியல் வல்லுறவு என்ற பதத்திற்கு ஈடான தாக்கத்தை உணர வைப்பதும் அவசியம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

..ஆளரவம் கேட்டு யுவதிகளின் தகப்பன் நித்திரை கலைந்து எழுந்து விட்டார் . வீட்டுக்குள் யாரோ பிரவேசிக்க முயல்கின்றமையை அறிந்து கொண்டார். அவர் சமயோசிதமாக செயற்பட்டார்.அவர் கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டார். பெரிதாக சத்தம் போட்டபடி அம்மர்மநபரை துரத்திச் சென்றார்.மர்மநபர் பின்வாங்கி ஓடினார். பாறாங்கல் ஒன்றுக்கு பின்னால் ஒளிந்து நின்று யுவதிகளின் தகப்பனைத் தாக்கினார்.ஆனால் யுவதிகளின் தகப்பன் சுதாகரித்துக் கொண்டார். சரமாரியாக அம்மர்மநபரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார்...

கழுகிடமிருந்து தன் பிஞ்சுகளைக் காக்க துரத்திப் போராடிய கடமையும், பாசமுமுள்ள அத்தந்தை நிச்சயம் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப் போலவே ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் தைரியசாலியாக இருந்திட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள மக்களின் நிலமை முள்ளில் விழுந்த சேலை மாதிரி.எப்படி அதில இருந்து மீழலாம் என்று யோசிக்க வேன்டிய காலம் இது.அது வரைக்குமாவது எங்களுக்க பிடுங்குப்படாமல் இருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் வல்லுறவு என்று எழுதாமல், பாலியல் வல்லுறவு என்று சொன்னால் ........

யாழில் ஒண்டுமே நடக்காதா? சும்மா சின்னப் புள்ளைத்தனமா இருக்கே......

ஏதோ ஒரு இழவு விடுங்கப்பா :lol:

பாலியல் வல்லுறவு... கற்பளிப்பு... இரண்டும் ஒண்டல்ல...

செக்ஸுஅல் அப்யூஸ்... ரேப்... இரண்டும் ஒண்டல்ல...

மிக மிக தூய தமிழ் சொல்களை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்த புலிகள்.. ''தமிழீழம்'' ''தமிழ்'' என்பதை உலக மொழியான ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்பதி ஆர்வமோ அறிவோ கொண்டிருக்கவில்லை என்பது வேதனக்குரியது மட்டுமல்ல கண்டணத்துக்குரியதும் கூட...

நுனுங்கிய விடயங்களி அதிகமாக கவனம் செலுத்திவிட்டு மிக பெரிய விடயத்தில் கோட்டை விடுவது தமிழரின் இனச்சொத்தாக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

. ஏற்கனவே யாழில் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றி விவாதித்து இருக்கின்றோம். இளைஞனும் இது தொடர்பாக குறிப்பிட்டும் உள்ளார், தேடித் பார்த்து வாசிக்கவும்

சாராம்சமாக கூறுவதனால், பாலியல் வல்லுறவு என்பது மிக மிக பிற்போக்கான சொல். பெண் தன விருப்புக்கு எதிராக வல்லுறவு கொள்ளப் படுவதால் 'கற்பு' என்ற சமூகம் எதிர்பார்கின்ற ஒன்றை இழக்கின்றாள் என்றும் அதனால் ஒன்றை 'இழந்தவள்; என்றும் ஆகின்றது.

பாலியல் வல்லுறவு (அல்லது பாலியல் பலாத்காரம்) என்பது பெண் மீதான வன்முறையை, அவள் விருப்புக்கு எதிரான கரும் கொடூரத்தை மட்டுமே குறித்து நிற்கின்றது. புலிகள் எக்காலத்திலும் தம் செய்திகளிலோ அல்லது வெளியிடுகளிலோ "பாலியல் வல்லுறவு" என்ற வார்த்தையினை எக்காலத்திலும் பயன்படுத்தியது இல்லை. மாறாக "பாலியல் வல்லுறவு / பாலியல் வன்புணர்வு என்ற சொற்களை தான் பயன் படுத்தினர்

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுவதில் நாகரீகம்.....?

உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலைமையில் நான் இல்லை.

.

.

நல்லது. நிழலியிடம் கற்கவேண்டிய அவசியமில்லை.

எனினும் "பாலியல் வல்லுறவு" என்ற பதத்திற்கும் "பாலியல் வல்லுறவு / வன்புணர்வு" என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனத்தில் கொண்டால் நல்லது. இரண்டும் "ஒன்றுக்குள் இன்னொன்றை செலுத்துவது" என்று பொருள் கொள்வது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக தூய தமிழ் சொல்களை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்த புலிகள்.. ''தமிழீழம்'' ''தமிழ்'' என்பதை உலக மொழியான ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்பதி ஆர்வமோ அறிவோ கொண்டிருக்கவில்லை என்பது வேதனக்குரியது மட்டுமல்ல கண்டணத்துக்குரியதும் கூட...

தமிழ் தமிழீழம் என்பதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலியான ழகரம் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்க முடியாது.ஆங்கிலத்தில் உச்சரிப்பதற்கு வசதியாக எமது தாய்மொழியினதோ தாய்நாட்டினதோ பெயரை மாற்ற முடியாது.

தமிழ் தமிழீழம் என்பதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலியான ழகரம் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்க முடியாது.ஆங்கிலத்தில் உச்சரிப்பதற்கு வசதியாக எமது தாய்மொழியினதோ தாய்நாட்டினதோ பெயரை மாற்ற முடியாது.

இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு புடிச்சதை விட முஸுப்பாத்தியா இருக்குதுங்கோ..

தமிழர் மட்டுமே விளங்கிக்கொள்ளகூடிய.. (குறிப்பாக பிந்தங்கியவர்கள்/ நாட்டுக்கட்டைகள்) TAMIZ.. TAMIZH.. என்பதை, ஆங்கிலம் பேசுபவர்கள்.. குறிப்பாக ஆங்கிலேயர் அல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்..?

உச்சரிப்பை மாத்தமுடியாது எண்டுவிட்டு பெயர் சொல்லையே மாத்திறீங்களே..

fart.gif

Edited by Panangkai

எழுதுவதில் நாகரீகம்.....?

உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலைமையில் நான் இல்லை.

.

.

உங்களை பற்றிய விபரங்களும் தேடிப்பார்க்க பட்டு யாழின் திண்ணையிலோ இல்லை வேறை இடங்களிலோ விவாதிக்கவோ இல்லை புறணி கதைக்க வைக்கவோ ஆசைப்படுகிறீயள் போல கிடக்கு...?? :):D :D

சிலர் எப்பவும் நாகரீகம் பற்றி மற்றவைக்கு அறிவுரை சொல்லுவினம்... ஆனால் நாகரீகம் எண்டால் என்ன எண்டது அவர்களிடம் அறவே கிடைக்காது...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் வல்லுறவு என்னும் பதத்தை புலிகள் கடுமையாக அமுல்படுத்தியவர்கள். தாயகத்தில் இருந்த போது ஈழநாதம், உதயன் என எந்த பத்திரிகையிலும் அப் பதமே பாவிக்கப்பட்டது. எனவே அது நன்கு பரீட்சயமாகிவிட்டது. சரி புலிகளின் கொள்கைகளையே காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.......... அந்த ஒரு சொல் தானா பிரச்சனை? இப்போதெல்லாம் புலிகள் செய்ததெல்லாம் பிழை எண்டு சொல்லி புலிகளுக்கு முன் இருந்த காலத்தை நோக்கிப் போவது தானே modern trend. நல்லா நடக்கட்டும்.

Edited by காட்டாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.