Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கும் வேண்டாம் இந்த வலி

Featured Replies

இடிவிழுந்த மனதோடு

இயங்குகிறேன் _இங்கு

தடியிளந்த கொடியென

தளம்புகிறேன் ....

வெப்பமூச்சு வெடித்தெழும்ப

தேடுகிறேன் _இங்கு

எப்பவாச்சும் ஒருகண் மூடி

எப்படியோ தூங்குகிறேன் ..........

தப்பாச்சோ நான் வந்தவழி _இன்னும்

முப்பாச்சல் போடுது பட்டகடன் !

கஞ்சியோடு கந்தல்துணியோடு

கவலையற்றிருந்தவன் _அடுத்த கணத்துக்கே

அஞ்சி வாழ்கிறேன் வண்ணமாக .........

இல்லையென்றால் அசிங்கமென்று

நெஞ்சிலுதைக்குது ௬ட்டம் !

முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம்

சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல்

பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க .

தொந்தரவென்று புலம்புகினம் ........

எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு

ஏங்கவேண்டுமா என்னால் ?

ஒற்றை வார்த்தையில் முடிகிறது

ஒன்றாயிருப்பவர்களின் பேச்சுக்கள்

குற்றமில்லை அவர்களில்,

சுற்றிசூழ இதுதானே நிலை !

அவனுக்கென்ன என்றாயிம் கதை

அங்குமட்டுமல்ல இங்கும்தான் .......

சிவனுக்கே சிக்கல் சுடலைவரையிழுக்க

இவனுக்கு மட்டுமா ?

மெத்தையில படுத்தும்

சுத்தமாய் சுகமில்லை

மொத்தமாய் மனங்கனக்க .................

சத்தியமாய் சொல்கிறேன்

சாவுமேல் ..........

உங்களுக்கும் சொல்கிறேன்

தயவுசெய்து .....................

காதலித்து விடாதீர்கள் !!!

post-8109-0-07324800-1328667387_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையென்பது, பூக்களினாலான மலர்ப்படுக்கையல்ல, தாசன்!

சில வேளைகளில் 'மந்த மாருதமாக' வீசும்!

பல வேளைகளில் புயலாகவும் மாறும்!

எதிர்நீச்சல் போடுங்கள்!

வாழ்க்கை பழகிவிடும்!

நல்லதோர் கவிதைக்கு, நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

காதலிப்பது தப்பல்ல

காதல் இல்லையெனில்

சாதல்தான் தப்பு

புகையிரத்தில் போகின்றோம்

இடையில் பழுது என்றால்

இறங்கி மாறுவது இல்லையா?

கவிதைக்கு நன்றி

< முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம்

சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல்

பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க .

தொந்தரவென்று புலம்புகினம் ........

எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு

ஏங்கவேண்டுமா என்னால் ?

ஒற்றை வார்த்தையில் முடிகிறது

ஒன்றாயிருப்பவர்களின் பேச்சுக்கள்

குற்றமில்லை அவர்களில்,

சுற்றிசூழ இதுதானே நிலை ! >

புலம் பெயர் வாழ்வின் வலிகளை சுவைக்கின்றீர்கள் என நினைக்கின்றேன் . மழலைக்கு நாளை என்பது எவ்வளவு கடினமோ , அவ்வாறே புலம் பெயர் வாழ்வும் . மேலும் , காதலை வாழ்வின் ஒரு அங்கமாகப் பார்த்தால் , அதன் வலி தூசி ........... தொடருங்கள் உங்கள் உள்ளக் கிளர் கவிதைகளை :):):) 2 .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு புலம் பெயர்ந்தவனும் அனுபவித்தவை. பலர் சொல்வதில்லை.

சிலர் மனம் விட்டு சொல்கிறார்கள் . மனப்பாரம் சற்று குறைவதற்காக ........காலமொரு நாள் மாறும்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் காதலித்து தோத்த பிறகு தான் இந்த காதலே வேண்டாம் என சொல்கிறார்கள்...காதலிக்கு முன் அறிவு எங்கே போயிடிச்சு...கவிதையருமை...தொடர்ந்து எழுதுங்கள்

நேற்கொழுதாசன்!

தங்களின் வரிகளில் பலதை உணர்ந்தேன்..!

காதல்:

அது... அனுபவத்திற்கும் அனுபவம் கொடுக்கக்கூடிய அற்புதம்.

காதலிக்க முன், காதலித்த பின் என்ற கா.மு, கா.பி கதைகளெல்லாம் அவற்றிற்கு விளங்காது. இன்னும் ஆயிரம் கோடி வருடங்கள் கடந்தாலும் காதல்... அதன் இயல்பு மாறாமல் அதே காதலாகத்தான் இருக்கும்.

மாறுகின்ற உலகத்தில் மாற்றங்கள் என்பது இயல்பு மாறாத காதலையும் தொட்டுச் செல்லும்போது... நாம் மாறிவிடுகின்றோம்.

இதே கவிதைப் பகுதியில் 'ஒரு கவிதை அழுது...' எழுதியிருந்த வார்த்தைகள் உண்மையிலும் உண்மை! ஆனால்....... உண்மையான காதல் என்பது தேடி வந்து தழுவும் நண்பா.

உன்னை அதிக நேரம் அழவைக்காது!

அதுதான் நான் அறிந்த பாடம் இந்தக் காதலில்...!

காதலிக்க வேண்டும்!!!

காதலித்தால்தான் ...... காதலின் அருமை தெரியும்,

அது எம்மளவில் தோற்கும்போது கூட!

முடிவாய் முடிவென்று தெரிந்தாலும்...

இப்போது வலியாய் வலிப்பவை,

நாளை... உனக்காய் காத்திருக்கும்...

எதிர்காலம் என்ற சந்தோசங்களோடு!

வாழ்த்துக்கள் நண்பனே! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது ஆழமான சமுத்திரம்

அதை நீந்திக்கடக்கப் பல ஆண்டுகள் செல்லும்

இதுவரை நீங்கள் கடந்தது சில தூரமே

இதையும் கடந்து வெற்றி கொள்வீர்கள்

கவிதைக்கு நன்றி நேற்கொழு தாசன்

வலியற்ற வாழ்க்கை ஓர் வரம்.

வலிகளே வாழ்க்கையாகும் போது சாதல் முடிவல்ல. அதனையே வலிமையாக்கி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

காதலுக்கு அப்பாலும் ஓர் வாழ்க்கை உண்டு என்பது நிஜம். சொல்வது எளிது செயல்ப்படுத்துவது கடினம் தான் . முயன்று தான் பாருங்களேன்.

நல்லதொரு கவிதைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெத்தையில படுத்தும்

சுத்தமாய் சுகமில்லை

மொத்தமாய் மனங்கனக்க .................

சத்தியமாய் சொல்கிறேன்

சாவுமேல் ..........

உங்களுக்கும் சொல்கிறேன்

தயவுசெய்து .....................

காதலித்து விடாதீர்கள்... கவிதை அருமை வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

...

சிவனுக்கே சிக்கல் சுடலைவரையிழுக்க

இவனுக்கு மட்டுமா ?

நேற்கொழுதாசன்..வழமை போல பின்னீட்டீங்க..கவிதை அருமை..காதலை விட புலம்பெயர் வாழ்வின் முகிழ்நிலைக் காலங்களில் எதிர்கொள்ளும் போராட்டங்களை அனுபவித்து எழுதிய விதம் அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசன்

போராட்டம் இல்லாத வாழ்க்கை உண்டா?

அல்லல்கள் சூழ்வது அனுபவமுதிர்ச்சிக்குத்தானே...

:lol:

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றிகள்

கருத்துக்களுக்கு விளக்கம் சொல்லும் தகுதி எனக்கில்லை .

விக்கிரமாதித்தன் கவிதைகள் வாசித்தேன் ............

அந்த முரண் பிடித்திருந்தது ......

அதனால் அப்படி வரைந்து பார்க்கலாம் என நினைத்தேன் ................

நன்றிகள் அனைவருக்கும் ......

:wub:

:wub:

:wub:

:wub:

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருந்தாலும் உங்கள் வழமையான செதுக்கல் கவிதையில் இல்லை கலங்காதீர் வாழ்வு இதுபோன்றதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முரணாக முடித்தவிதம் பிடித்திருந்தது.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.