Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு…

  2. வரலாற்றில் இன்று : நவம்பர் 03 1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதல் தடவையாகக் கண்டார். 1903:அமெரிக்காவின் தூண்டுதலோடு கொலம்பியாவிலிருந்து பனாமா தனிநாடாகப் பிரிந்தது. 1913: அமெரிக்காவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 1918: ரஷ்யாவிலிருந்து போலந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது. 1957 : ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைகா எனும் நாயை சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது. 1978:பிரிட்டனிடமிருந்து டொமினிக்கா சுதந்திரம் பெற்றது. 1982:ஆப்கானிஸ்தான் சுரங்க தீவிபத்தில் 2000 பேர் பலி. 1988 : மாலைதீவில் ஜனாதிபதி அப்துல் கையூமின் அரசாங்கத்தைக் கவிழ்க்க இலங்கை தமிழ் …

    • 552 replies
    • 46.6k views
  3. “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும். அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல் பிரியமுடன் அற்புதன் (19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது -தொடரின் ஆரம்பம் 1970கள…

  4. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்…

  5. உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது... ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று.. உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும். விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் -…

  6. இந்துத்துவத்தையும், இந்திய தேசத்தின் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் கருத்தியல் தளத்தில் தன் பூரண ஆதரவு கொடுத்து வரும் ஜெயமோகனின் கேள்வி இது பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்? அனுபவம், எதிர்வினைகள், சமூகம் May 162012 அன்புள்ள ஜெ, நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன் சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் …

    • 174 replies
    • 23.9k views
  7. பழைய யாழ்க்களத்தில் இருந்த சில தலைப்புக்களை மீண்டும் இங்கே இணைகிறேன் புதிதாக வந்தவர்களுக்காக. எமது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமானால் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால் தான் அது எங்கணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.இங்கே ஒருவர் வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே திரிப்பதற்காக சில விசமத் தனமான சொல்லாடல்களை திராவிட அரசியல் சம்பந்தமாகச் செருகி வருகின்றார்.மேலும் இங்கு இது சம்பந்தமாக அறிய பலர் ஆவலாக இருப்பதாகப் புலப்படுகிறது. பெரியார்! http://www.yarl.com/forum/viewtopic.php?t=10028 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -**…

    • 1 reply
    • 23k views
  8. தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.

    • 129 replies
    • 20.5k views
  9. ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன. குறித்த உரையைத் தொடர்…

  10. இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து காஷ்மிரியர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஆனால், உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்ட ஓர் இனமான தமிழ் இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அமர்ந்திருக்கும் தலைமைகள், ஒரு புறமும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொல்வோர்; மறுபுறமுமாக, காஷ்மிர் தொடர்பில், வாய் பொத்தி மௌனம் காக்கிறார்கள். இந்த மௌனம் சொல்லும் செய்தி கனமானது. …

  11. 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம். அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள். அன்று காலை யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தி…

  12. உலகத் தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன்.சுரேந்திரனுடனான பேட்டி.

  13. அது சரி எங்கடை ஊடகங்கள் ஏன் அரச தரப்பை குறுக்கு விசாரணை செய்து மடக்கி முகத்திரை கிழிக்க முயற்சிப்பது இல்லை?

  14. கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&k=83615

    • 91 replies
    • 14.8k views
  15. சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்…

  16. இந்தியாவில் மிக அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட போராளி நானாகத்தான் இருப்பேன். 200 தடவைக்கு மேல் சிறை சென்று இருப்பேன். வீட்டுச் சிறை வைத்தவை எல்லாம் தனிக் கணக்கு. கைதுகளின்போதான சித்ரவதையில் என் இடது காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. ஆக்ரா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு வருடம் இருந்தேன். இந்தியாவிலேயே மோசமான சிறைச்சாலை, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சிறைத் தண்டனையும் வீட்டுக் காவல் தண்டனையும் ஒன்றுதான் என்ற உளவியல்ரீதியான புரிதலுக்கு என் மனம் பழகிவிட்டது!'' என்கிற யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர். காஷ்மீர் இளைஞர்களைக் கவர்ந்த போராளி. 'மதச்சார்பற்ற காஷ்மீரம்’ என்ற கோஷத்தை இன்று வரை முன்வைக்கும் ஒரே தலைவர். 1994-ல் ஆயுத…

    • 89 replies
    • 12.9k views
  17. சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத…

  18. எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன? உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது. யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது. இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன? யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது. அதற்கு நாம் என்ன…

  19. வியூகம் இதழில் வந்த தேசியவாதம் தொடர்பான நீண்ட கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: கட்டுரை இணையத்தில் காணப்படவில்லை. தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்.... தேசபக்தன். இந்த குறிப்பானது நாவலன் அவர்கள் ~இனியொரு| என்ற இணையத்தளத்தில் எழுதிய "ஈழத் தமிழ் பேசும் மக்கள் தனித்தேசிய இனம்?" என்ற கட்டுரை குறித்தே எழுதப்படுகிறது. இந்த கட்டுரையானது உலகமயமாதல, தேசங்களின் தோற்றம், தேசங்களை வரையறை செய்வது தொடர்பான பிரச்சனைகள், ஈழத் தமிழர் தொடர்பான சிக்கல்கள் ...... இப்படி பல விடயங்களைப் பேசிச் செல்கிறது. எனது அபிப்பிராயத்தில இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் முறையாக, கோர்க்கப்பட்டு ஒரு முழுமையான வாதத்தை முன்வைக்கத் தவற…

  20. ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள் அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது. இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு. "துப்பாக்கி முனையில் அம்மணமா…

  21. இனம் என்பதை உலகம் இப்படி பொதுவாக வரையறுக்கிறது: ஒரு தனித்துவமான மொழியை பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட, தனித்துவமான ஒரு மக்கள் கூட்டத்தை "இனம்" என்று சொல்கின்றது. குறிப்பிட்ட இனம் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியமான நிலப் பரப்பையும் கொண்டிருந்தால், அது ஒரு தேசிய இனம் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகமைகளை கொண்டிருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசாது, பல மொழிகளைப் பேசுகின்ற தேசியங்களும் உலகில் இருக்கின்றன. இவர்களை ஒரே விதமான பிரச்சனையும், ஒன்றாய் கூடியதன் பயனாய் உருவாகும் தனித்துவம் மிக்க பண்பாடும் ஓரே தேசியமாக மிளிரச் செய்யும். உ-ம்: அமெரிக்க தேசியம்.

  22. அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்! Jan 21, 2025 ப.திருமாவேலன் கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது. ‘தமிழர்கள்'( திராவிடர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள். 11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த …

  23. மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன். காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்.. எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன். எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌ…

    • 60 replies
    • 10.6k views
  24. தொடரும் ஒரு தமிழ் பலவீனம் குறித்து… யதீந்திரா செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள். 1 சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் செல்ஹேய்ம், யுத்தத்தின் தீர்மானகரமான இறுதிக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட முயற்சியொன்று குறித்து பகிரங்கமாக பேசியிருந்தார். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாகப்பட்ட பின்புலத்தில் ஆங்காங்கே கசிந்த சில தகவல்கள் இப்போது சந்தேகத்திற்கிடமற்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செல்ஹெய்ம் அப்படியென்ன புதிய தகவல்க…

    • 3 replies
    • 10.3k views
  25. இன்று தாயகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏதேனும் ஒரு வழியிலேனும் போராடாமல் தாயகத்தில் உள்ளவர்களால் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை. இன்று இருக்கும் அவல நிலையில் இது உடனடி சாத்தியமில்லை எனிலும், வரும் சந்ததி தனக்கு உகந்த ஒரு போராட்ட முறையை கையில் எடுத்து போராடும் என்று நம்புகின்றேன். (நிச்சயம் அது ஆயுத போராட்டமாக இருக்க கூடாது என்றும் விரும்புகின்றேன்) அப்படி போராட முற்படும் ஒரு சந்ததி யாரை தன் முன்னோடியாகக் கொள்ளும்? இறுதி வரைக்கும் தன்னாலான அனைத்து முறைகளிலும் போராடின புலிகளையா அல்லது சிங்கள இராணுவம் கூட செய்யத் தயங்கிய கொடூரங்களை தம் மக்களுக்கு செய்த மாற்று இயக்கங்களையா? இந்தக் கே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.