Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 47 பேர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30-train-fire-tn-express.jpg

சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் பெரும் தீ விபத்து: 47 பேர் பலி.

நெல்லூர்: டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது முதலில் தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. ஆனால் எஸ் 11 கோச்சில் 72 பயணிகள் வந்துள்ளனர். இதனால் மற்றவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் மேலும் பலரது கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது

சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்.

செய்தியின் மூலம் தற்ஸ்தமிழ்.

அகாலமரணமடைந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீரஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அகால மரணமடைந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீரஞ்சலிகள்[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயில் பெட்டியின் இரண்டு கதவுகளையும், திறக்க முடியாததால்தான் பலர் உயிரிழப்பு!

நெல்லூர்: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 11 பெட்டியின் இரண்டு கதவுகளையும் திறக்க முடியாத அளவுக்கு அவை ஜாம் ஆகி விட்டதால்தான் பலர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளனர்.

அதிகாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்தலில் தீவிபத்தில் சிக்கியது. இதில் எஸ். 11 பெட்டி முற்றிலும் சிக்கிக் கொண்டது.

அப்போது அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். சிலர் மட்டுமே நெல்லூரில் ரயில் நின்றபோது எழுந்து மீண்டும் படுத்துள்ளனர்.

ரயிலில் முதலில் டாய்டெட் பகுதியில்தான் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. இது மெதுவாக பெட்டியின் இதர பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியது. அப்போது முழித்திருந்த சிலர் இதைப் பார்த்து அலறியுள்ளனர். இதையடுத்து விழித்தெழுந்த பயணிகள் அருகாமையில் உள்ள பெட்டிகளுக்கு ஓடியுள்ளனர்.

ஆனால் அப்பர் பெர்த்தில் இருந்தோரால் உடனடியாக வெளியேற முடியவில்லை. மேலும் தீ வேகமாகப் பரவியதோடு கரும்புகையும் சூழ்ந்து கொண்டது.

இதையடுத்து ரயில் பெட்டியின் கதவுகளைத் திறந்து வெளியே குதிக்க பலர் முயன்றுள்ளனர். ஆனால் பெட்டியின் இரு கதவுகளையும் திறக்க முடியவில்லை. அவை ஜாம் ஆகி விட்டன. ஜன்னல் வழியாகவும் குதிக்க முடியாமல் சிலர் அவசர கால கதவைத் திறந்து குதித்துள்ளனர். ஆனால் அதற்குள் ரயில் பெட்டி முழுக்க தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டது.

தீவிபத்து ஏற்பட்டபோது மெதுவாகத்தான் தீ எரிந்துள்ளது. அப்போது கதவைத் திறக்க முடிந்திருந்தால் பெரும்பாலானோர் உயிர் தப்பியிருக்க முடியும். ஆனால் கதவைத் திறக்க முடியாமல் போனதால் பலர் சிக்கிக் கொண்டு விட்டனர் என்று தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சுதிர் என்ற பயணி தெரிவித்தார்.

-தற்ஸ் தமிழ்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30-train-fire-tn-express-300.jpg

அபாய சங்கிலி வேலை செய்யவில்லை, மீட்புக் குழு உடனே வரவில்லை-பயணிகள் குமுறல்.

சென்னை: தீவிபத்துக்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னைக்கு வந்து சேர்ந்தது. அதில் பயணித்தோர், நடந்த சம்பவம் குறித்து ரயில்வேயை சரமாரியாக குற்றம் சாட்டினர்.

டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நெல்லூர் ரயில் நிலையத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தபோது திடீரென எஸ் 11 பெட்டியில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில உடல்கள் பெட்டியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவை முற்றிலும் கருகிப் போய் ஒட்டிய நிலையில் இருப்பதால் அவற்றை மீட்கும் பணி கஷ்டமாகியுள்ளது.

பெரும் சிரமத்திற்கு மத்தியில் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய ரயிலின் இதர பெட்டிகள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகள் நடந்த சம்பவம் குறித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் காணப்பட்டனர். பலர் பேசவே முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட எஸ் 11 பெட்டியில் பயணித்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய 12 பேர் இந்த ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள்.

முன்னதாக காயமடைந்தோர் விபத்து குறித்துக் கூறுகையில், நாங்கள் பயணித்த பெட்டியில் அதிகாலையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் ஜன்னல் வழியாக கடும் சிரமப்பட்டு கீழே குதித்தனர். ரயில் பெட்டியின் இரு கதவுகளையும் எங்களால் திறக்க முடியவில்லை. அதைத் திறக்க முடிந்திருந்தால் மேலும் பலர் உயிர் தப்பியிருக்க முடியும். கதவு ஏன் மூடிக் கொண்டது என்று தெரியவில்லை.

எங்களது பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலிகளை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றோம். ஆனால் அபாயச் சங்கிலி சரிவர வேலை செய்யவில்லை. இதனால் பக்கத்துப் பெட்டிகளில் இருந்தோர் அபாயச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த உதவினர். மேலும் எங்களது பெட்டியில் இருந்த சிலரை அவர்கள் தங்களது பெட்டிக்குள் இழுத்துக் காப்பாற்றினர்.

உதவி கோரி நாங்கள் நீண்ட நேரம் குரல் எழுப்பியும் கூட யாரும் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே மீட்புக் குழுவினர் வந்தனர். இதனாலும் உயிரிப்பு அதிகரித்து விட்டது.

காயமடைந்தவர்களில் 10 பேரை நெல்லூரில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீக்காயம் கடுமையாக உள்ளதால் அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றனர்.

-தற்ஸ் தமிழ்-

விபத்தில் மரணமடைந்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

அகால மரணமடைந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ....இவர்கள் பிரிவால் துயருறும் இவர்கள் உறவுகளுக்கு

அமைதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

அகால மரணமடைந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீரஞ்சலிகள்[size=4] [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் மீண்டும் தமிழர்களா?ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

இவர்கள் பிரிவால் துயருறும் இவர்கள் உறவுகளுக்கு

அமைதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]விபத்தில் மரணமடைந்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

[size=4] கொல்லப்பட்ட தமிழக உறவுகளின் ஆத்மா சாந்தியடையட்டும்.[/size]

[size=4]இப்படியான அநியாய சாவுகளை தமிழக அரசு குறைக்க கடுமையான சட்டங்களை அமுல்படுத்தவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்தவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்!

இறந்த தமிழக உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள். மலசலகூட தீ என்பதால் அதை விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். அபாய சங்கிலி தொழில் படாததிற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

பரிதாபம் !!

உயிரிழந்தவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சமும் ஊழலும் மலிந்து ஒரு தேசத்தில் இப்பிடியான சாவுகள் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் எப்பொழுது தான் நிறுத்த பட போகின்றதோ தெரியவில்லை....

இந்திய ரயில்வே எப்பொழுது தான் திருந்த போதோ.....

ஆழ்ந்த அனுதாபங்கள்

அநியாயமாக உயிர் இழந்த அனைத்து தமிழக சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தீக் காயங்களுடன் அல்லல் படும் அனைத்து உறவுகளும் விரைவில் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

மிகவும் துயரமான செய்தி...

இந்தச் செய்திக்கு சர்வதேச செய்தி நிறுவனங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழர்களின் சாவு பற்றிய செய்தியை விட வட இந்தியாவில் வடக்கர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதைத் தான் முக்கியத்துவப் படுத்தி போட்டுள்ளார்கள்.

இந்திய ரயில்வே ஒரு பெரிய கழிப்பறை என்று ஒரு அமைச்சர் சொல்லி ஒரு சில நாட்களில் அந்தக் கழிப்பறையே பெரும் பலிபீடமாகிப் போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

பரிதாபகரமாக இறந்த தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இத்தகைய விபத்துக்கள் நிகழாமல் செயலலிதா அரசு ஆவன செய்ய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.