Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS

(கு.சுரேன்)

cf1(1).jpg

அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார்.

இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

cf2(1).jpg

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/52521-2012-11-11-16-38-36.html

cf3(1).jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]வாழ்த்துக்கள் செந்தூரன்[/size]

[size=4]இனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் !![/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

செந்தூரனுக்கு வாழ்த்துக்கள்!

சாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் செந்தூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து(க்)கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள் செந்தூரன்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரா..

இன்னும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து வீரன் செந்தூரனுக்கு நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் & வாழ்த்துகளும் செந்தூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செந்தூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் செந்தூரன்.. :)

வாழ்த்துக்கள் செந்தூரன்.

இனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்....[/size]

3487_425922280794268_1478497304_n.jpg

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை

அதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் சர்வதேச ரீதியாக சாதனை புரிந்த மாணவர்களான இ.செந்தூரன், அ.அபிநந்தன், இ.இளங்கீதன் ஆகியோருக்கு ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு பின் பான்ட் வாத்தியங்கள் இசைக்க கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவ முதல்வர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சகிதம் கே.கே.எஸ் வீதி வழியாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதனை தொடர்ந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வந்த ஆசிரியர் குழாம் அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து தமிழரின் பெருமையை உலகறிய வைத்த செந்தூரன் அவர்களை சந்தித்து தமது பாராட்டுக்களையும் நினைவுப் பரிசிலையும் வழங்கி கௌரவித்தமை எமது கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாகும். இதன் பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதன் முதல் நிகழ்வாக கல்லூரி அதிபரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இவ் உரையில் அதிபர் சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தியதுடன் இது போன்று எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களும் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து சாதனையாளர்கள் மூவரும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், எமது கல்லூரியின் யாழ் பழைய மாணவர் சங்கத்தினால் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டது. இதன் பின் எமது கல்லூரியின் பழைய மாணவரும், தற்போதைய யாழ் வலய உதவி உடற்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.சண்.தயாளன் அவர்களினால் சிறிய கருத்துரை ஒன்று வழங்கப்பட்டதுடன் அவரினால் செந்தூரன் அவர்களுக்கு நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டது. அதனை அடுத்து செந்தூரனின் வகுப்பு மாணவர்கள் சார்பாக அவருடைய வகுப்பாசிரியர் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதன் பிற்பாடு சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காரணமாக இருந்த இம் மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள் திரு.க.சுவாமிநாதன், திரு.சொ. ஹரிசங்கர், மற்றும் பயிற்றுநர் திரு.செ.றமணன் ஆகியோரும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இதன் பின்னர் சாதனை மாணவர்களது உரை இடம் பெற்றது. இவ் உரைகளில் தாம் பெற்ற சவால்கள், அனுபவங்கள் போன்றவற்றை இங்கு குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சமயம் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் மண்டபத்திலே திரையிப்பட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் யாழ் பழைய மாணவர் சங்க விளையாட்டுக் குழு சார்பாக திரு.தர்மகுலசிங்கம் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. இதன் பின் இறுதி நிகழ்வாக பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.

சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.