Jump to content

பள்ளிக்கூடப் பேருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்



எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை  வீதி செல்கிறது. அப்பாதையில்  தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை.

இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச்
செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு.
எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தானே.

எமது ஊரில் பேருந்து வந்து நிற்கும்போது எல்லா இருக்கைகளும் நிறைந்துபோய்
இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்லும்போது ஒருநாள்க் கூட இருந்து
சென்றதில்லை. அனால் பள்ளி முடிந்து வரும் வேளை, ஆகச் சுண்டுக்குளிப்
பெண்களும் கொன்வென்ற் பெண்களும் குறைந்தளவானவர்களே இருப்பதனால் அதிக இருக்கைகள் வெற்றிடமாக இருக்கும். ஆனாலும் வேம்படியில் அதிகமானவர்கள் ஏறுவதால் முண்டியடித்துக் கொண்டு ஏறினால் விரும்பிய இருக்கையில் இருக்கலாம். அல்லது நிக்க வேண்டியதுதான்.

எனக்கு பேருந்தின் பின்பக்கம் உள்ள உயரமான இருக்கைதான் பிடித்தமானது. அதில் இருப்பதற்காக எப்படியாவது இடித்துப்பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். எனக்குப் போட்டியாக நான்கு பேர் இருந்தார்கள் தான். நாங்கள் நான்கு பேரும் பக்கத்தில்
பக்கத்தில் பேருந்து வரும் நேரம், தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக
நிற்பதுபோல் நிற்போம்.  எனது அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொருமுறையும் நானே வெற்றிக்கொடி நாட்டுபவளாக அந்த உயரமான இருக்கையைப் பிடித்திருப்பேன்.

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

ஒருநாள் எனக்கொரு விபரீத ஆசை ஏற்பட்டுவிட்டது. இன்று கடைசியாக் நின்று பேருந்தில் ஏறினால் என்ன என்று. நண்பிகளிடமும் கூறினேன். அவர்களும் சரிஎன,  எல்லோரும் ஏறும் வரை நாங்கள் காத்திருந்தோம். இன்னும் ஏற இனது ஆறு பேர்தான் பேருந்து நகரத் தொடங்கியது.

 

எல்லோரும் பயந்துபோய் தள்ளிக் கொண்டு ஏற முயல  நான் தான் கடைசி ஆள். பேருந்து வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. கடைசிப் படிவரை என் நண்பிகள் நிற்கிறார்கள். நான் கால் வைக்க இடமே இல்லை. எறடி எறடி என்கிறார்களே தவிர நான் ஏற இடம் விட எண்ணவில்லை. அவர்களுக்கும் பதட்டம். நான் கொஞ்சநேரம் கைபிடியைப் பிடித்தபடி ஓடினேன் இடம் கிடைக்குமென்று. அதன்பின் தொங்கிக் கொண்டு வரும் பழக்கம் இல்லாததால் கையை விட்டுவிட்டேன்.

பேருந்து தன்பாட்டில் போய்க்கொண்டு இருக்கு. எனக்கோ அவமானம் ஒருபுறம் ஏமாற்றம் ஒருபுறம். இனி என்ன செய்வது. யாழ் தரிப்புவரை தனியே  நடந்ததை 
இன்றுவரை மறக்க முடியவில்லை. ஆனாலும் மனதுக்கு ஆறுதல் தந்த விடயம், நான் யாழ் தரிப்பிடத்தை அடைந்தபோது, எனக்காக நண்பிகள் நால்வரும் பேருந்தை விட்டு இறங்கி, எனக்காகக் காத்திருந்ததுதான்.

இப்படி எத்தனையோ நினைவுகள் மீட்டிப் பார்க்கும் போது இன்பத்தையும் துன்பத்தையும் 
தருவன எம்முள்ளே உள்ளன.

 

Link to comment
Share on other sites

ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245


பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.



ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

 


மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:
 

Link to comment
Share on other sites

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245

பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.

 

மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:

 

 

 

காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:

வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

Link to comment
Share on other sites

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

 

அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D

 

Link to comment
Share on other sites

பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

வேம்படி மாணவிகள் தமது யாழ் இந்து மகளிர் நண்பிகளுக்கு சீட் பிடித்துக்கொண்டுவர அதே தரிப்பிடத்தில் ஏறிய யாழ் இந்துமாணவர்கள் வேம்படி மாணவிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்தால் இரண்டு தனி தனி பஸ்கள் விடவேண்டிவந்தது என கேள்விப்பட்டேன் .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

Link to comment
Share on other sites

சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொழும்பு கோட்டடையில் கோனர் சீற் பிடிக்க ஓடுப்பட்ட ஞாபகம் தான் வந்ததது.நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றி.



காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:



வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

 


அதுக்கும் ஒரு துணிவு வேணும் அலை.சும்மா வாய்தான். :lol:



அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D
 

 


நீங்கள் சின்னப் பெடியள். உங்களுக்கெல்லாம் சொல்ல ஏலாது மயூரன். :D



பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

 .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

 


இப்பிடி ஒரு கதை நான் கேள்விப் பட்டதே இல்லை.



சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

 



மொக்கை எண்டால் என்ன?? எனக்கு விளக்கம் வேணும். ரதியும் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்கிறவர்.

Link to comment
Share on other sites

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் களிச்சுப் பாத்தா என்னையும் என் அனுபவக் கதையையும் மொக்கு என்று சொல்வதில் கனபேர் சந்தோசப்படுறியள் போல கிடக்கு.சரி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கோ எனக்கொன்றுமில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு சுமோ.
நான்... சின்னனாக இருக்கும் போது... ஊரில் இரட்டைதட்டு பஸ், பலாலி வீதியால் ஒடும்.
தம்பி, தங்கச்சி, எல்லாரும்... பான்ஞ்சு விழுந்து, மேல் தட்டில் முன்பக்கம் போயிருப்போம்.
இனிமையான.... இளமைக் காலங்கள், மீண்டும் வராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.
எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)
இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.
நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,


நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.

எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)

இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.

நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

 

நான் லண்டன் வந்து ஒரே ஒருமுறை தான் பஸ்சின் மேல் மாடியில் போய் இருந்திருக்கிறேன். நன்றி சிறி.

 

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,

நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

பள்ளிக்கூட நினைவுகள் மகிழ்வும், வேதனையும் கொள்ள வைக்கும் நினைவுகள்.நன்றி  நவீனன்.

 

Link to comment
Share on other sites

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

Link to comment
Share on other sites

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

 

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

Link to comment
Share on other sites

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

 

அது கவிதை இல்லை புதுக் கவிதை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

Link to comment
Share on other sites

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

நீங்கள் சாவச்சேரி சந்தைக்கு  போன தேங்காய்களோடு  பயணம் செய்திருக்கிறீங்கள். எண்டு தெரியிது. ஆனா  கத்தரிக்காய்தான்  பாவம்  நசிஞ்சிருக்கும்.

:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

குமாரசாமி அண்ணா,

உங்கள் எழுத்தை பாத்தாலே உங்கட குழப்படியள்  விளங்கும் எ ங்களுக்கு.நீங்கள் மிச்சம் சொல்லாட்டியும் நாங்கள் கெஸ்பண்ணுவம் :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.