Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானென்பது யாதென்பேன்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி..
 
 
 
நானென்பது யாதென்பேன்..?
-------------------------------------------
 
நானென்பது யாதெனப் 
புரியவில்லை...
 
தேடித் தேடிக் களைத்து
முதிர்ந்த மனக்காலத்தின்
ஒரு மூலையில்
பெருங்கேள்விக்குறியுடன்
விழித்துக் கிடக்கிறது அறிவு...
 
நானென்பது யாதென்பேன்..?
 
எனை வனைந்த அனுபவங்களா..?
மூளைத்திரட்சிகள் எங்கும்
நீந்திக்கொண்டிருக்கும்
நினைவுகளின் தொகுப்புகளா..?
படித்து முடித்த புத்தகங்களா..?
நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
ஜீன்களின் வழி புகுந்த
காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
மூதாதைகளின் கனவுகளா..?
 
சொல்லற்று நிற்கிறேன்...
 
விளங்க முடியாப் புதிராக
வெளியிலிருந்து பார்க்கையில்
வியப்பாய் விரிகிறது
"நான்"...
 
ஆயினும்..
 
விலக்கமுடியாமல்
வழமைபோல்
ஆயிரம் கேள்விகளாய்
மனக்கடலை நிறைக்கின்ற
இன்னுமொரு நாள் துவங்குகிறது..
 
மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...
 
தேடித்தேடி திரிகிறேன்..
 
பெருவெளியில்
கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
காலத்தைப்போலவே
புரிகின்றனவே இல்லை
நள்ளிரவில்
எனை எழுப்பும் கேள்விகள்..
 
அழகின் வடிவம் 
ஒளிரும் இரவே
சொல்...
 
நானென்பது யாதென்பேன்..?

 

Edited by சுபேஸ்

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...
தேடித்தேடி திரிகிறேன்.. /////
 
தேடல்கள் இருந்தாலே " நான் " இல்லாது போகும் .ஆத்மவிசாரணைக் கவிதைக்குப் பாராட்டுக்கள் சுபேஸ் :)  :)   .
  • கருத்துக்கள உறவுகள்

பெடி கொஞ்சம் கனக்கத்தான் யோசிக்கிறான்...... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
நானென்பது என் அம்மாவும்,அப்பாவும் :) என்று சொல்வர் சிலர் ஆணவத்தின் குறியீடு என்பேன் நான் :lol:
 
சுபேஸ் அள்வோடு தேடுங்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.இன்று உங்கள் பிறந்த நாளா :unsure:  :unsure: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D
  • கருத்துக்கள உறவுகள்

 
நானென்பது யாதென்பேன்..?
-------------------------------------------
 

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...
 
தேடித்தேடி திரிகிறேன்..
 

நான் என்பது இப்படித்தான் சொல்லீட்டீங்களே பிறகேன் தேடல் ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு வாழ்க்கையிலை இன்னமும் கனக்க அனுபவிக்க இருக்கு அதுக்கிடையிலை சன்னியாசம் போயிடாதையப்பு

அழகின் வடிவம் 

ஒளிரும் இரவே
சொல்...
 
நானென்பது யாதென்பேன்..?

 

 

பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்.

அழகின் வடிவாய் ஒளிரும் இரவில் வெறுமை நீங்க இன்ப நினைவுகளை நுகருங்கள். கவிதை கணக்கிறது :)

ஆண் மகன் அழகிய திருமகன் :D

  • கருத்துக்கள உறவுகள்

C,H,O,N,P,S,Na,K,Cl,Mg,Ca & Fe இவ்வளவும் சேர்ந்து செய்த கலவை. இந்த இரசாயனங்களின் பெரிய சுற்றுவட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான் நான்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ் நாள் அனைத்தும் தேடினாலும் கிடைக்காத ஒன்றைத் தம்பி சுபேஸ் தேடுகின்றார்
அமைதி ஒன்றே அதற்கான விடையாக இருக்கலாம்
அந்த அமைதியும் அமைதியாக எப்போதும் இருப்பதில்லை

தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஜேசு நாதர் ஆனால் ...

கிடைப்பதும் கிடைக்காததும் அவரவர் மனதைப் பொறுத்தது.

போதும் என்று சொன்னால் சிலவேளைகளில் அமைதி கிடைக்கும்

நான் என்பது யாதென விளங்கும் அதுவும் எல்லோருக்கும் விளங்காது

சிலருக்கு மட்டும் விளங்கும் அவர்களுக்கு அமைதி என்றால்

யாதென முதலிலேயே விளங்கியிருக்கும்
 

அப்பாடா நான் என்றால் என்னப்பா விளங்கியவர்கள் கூறுங்கள்   :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா. :)

 

புதிதாகச் சொல்ல ஏதும் இல்லை கவிதை அருமை.

 

ஆனால் இப்படியெல்லாம் கனக்க யோசிக்க வேண்டிய வயதில்லை தங்களுக்கு, "காலத்தே பயிர் செய்"

அந்தந்த வயதுக்குரியவற்றைச் செய்வது தான் உண்மையான தேடலாக இருக்கும், ஆடி முடித்துக் களைத்து முதுமையின் பிடியில் இருந்து கொண்டு இதை எல்லாம் அசை போட்டால் ஒரு வேளை உண்மை புரியலாம், இப்போதே இதற்கான தேட்தல்  தேவையா என்ற கேள்வியையே என் மனம் எழுப்புகிறது? என்னைப் போல், அல்லது எனக்கு ஏற்படும் உணர்வுகள்,புரிதல்கள் போல் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லைத் தானே. இருந்தாலும் ஏதோ எனக்குத் தோன்றியது. :rolleyes::icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

காலமெனும் குயவன்,

கடைந்தெடுத்த அற்புதமான,

மண்பானை நீ என்பேன்!

 

தண்ணீர் தேடி அலைபவர்கள்,

தாகம் தீர்க்கும் பானையாகலாம்,

 

தரிசு நிலத்துப் பயிர் விளைக்கும்,

தண்ணீர் தாங்கும் பானையாகலாம்,

 

பசியென்று அழுபவர் வீட்டில்,

உலை ஏற்றும் பானையாகலாம்,

 

கோவில் திருவிழாக்களில்,

கரகமாடும் பானையாகலாம்!

 

மோர் கடைந்து நெய் வடிக்கும்,

மணி வண்ணன் பானையுமாகலாம்!

 

செந்தணலில் கொள்ளி வைக்கும்,

அந்திமப் பானையுமாகலாம்!

 

கரும்பனை மீது தொங்கும்,

கள்ளுப்பானை கூட ஆகலாம்!

 

எந்தப் பானை நீ ஆவதென்பது,

உந்தன் பண்பு நிலை சார்ந்ததென்பேன்! :D

 

 

Edited by புங்கையூரன்

 

ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி..
 
 
 
நானென்பது யாதென்பேன்..?
-------------------------------------------
 
நானென்பது யாரெனப் 
புரியவில்லை...
 
தேடித் தேடிக் களைத்து
முதிர்ந்த மனக்காலத்தின்
ஒரு மூலையில்
பெருங்கேள்விக்குறியுடன்
விழித்துக் கிடக்கிறது அறிவு...
 
நானென்பது யாதென்பேன்..?
 
எனை வனைந்த அனுபவங்களா..?
மூளைத்திரட்சிகள் எங்கும்
நீந்திக்கொண்டிருக்கும்
நினைவுகளின் தொகுப்புகளா..?
படித்து முடித்த புத்தகங்களா..?
நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
ஜீன்களின் வழி புகுந்த
காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
மூதாதைகளின் கனவுகளா..?
 
சொல்லற்று நிற்கிறேன்...
 
விளங்க முடியாப் புதிராக
வெளியிலிருந்து பார்க்கையில்
வியப்பாய் விரிகிறது
"நான்"...
 
ஆயினும்..
 
விலக்கமுடியாமல்
வழமைபோல்
ஆயிரம் கேள்விகளாய்
மனக்கடலை நிறைக்கின்ற
இன்னுமொரு நாள் துவங்குகிறது..
 
மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...
 
தேடித்தேடி திரிகிறேன்..
 
பெருவெளியில்
கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
காலத்தைப்போலவே
புரிகின்றனவே இல்லை
நள்ளிரவில்
எனை எழுப்பும் கேள்விகள்..
 
அழகின் வடிவம் 
ஒளிரும் இரவே
சொல்...
 
நானென்பது யாதென்பேன்..?

 

உனை நீ உணர்... அழகான தேடல்...நன்று. இங்கும் ஒருவர் "நான்" க்கு பதில் கண்டுள்ளார்... :)

 

http://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g&gl=SG&hl=en-GB

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...
தேடித்தேடி திரிகிறேன்.. /////
 
தேடல்கள் இருந்தாலே " நான் " இல்லாது போகும் .ஆத்மவிசாரணைக் கவிதைக்குப் பாராட்டுக்கள் சுபேஸ் :)  :)   .

 

 

உண்மைதான் அண்ணா..தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வின் மீது பசி இருக்கும்..
 
என்னக்கொரு பாரதிதாசன் கவிதை நினைவுக்கு வருகிறது அண்ணா..
 
எத்தனை பெரிய வானம்
எண்ணிப்பார் உன்னையும் நீயே
இத்தரை கொய்யாப்பிஞ்சு
நீ அதில் சிறெறும்பே..
 
நன்றி அண்ணா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெடி கொஞ்சம் கனக்கத்தான் யோசிக்கிறான்...... :unsure:

எல்லாத்திலையும் இறங்கி அலசி ஆராய்ந்திடணும் அக்கா... ஒண்டையும் தொடலை எண்ட குறை இருக்க கூடா.. fun ஆக இருக்கிற இடத்தில் fun ஆகவும் சீரியசாய் இருக்கிற இடத்தில சீரியசாயும் இருப்பதுபோலதான் வாழ்வியல் பத்திய உண்மைகளை தெரிஞ்சுகொள்வதும் வாழ்க்கையில் எல்லாரையும் போல நோர்மலாக வாழுறதும் எண்டு நினைக்கிறன்.. அதாலைதான் இந்த ஆராய்ச்சி அக்கா.. :)

 

 

நன்றி அக்கா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நானென்பது என் அம்மாவும்,அப்பாவும் :) என்று சொல்வர் சிலர் ஆணவத்தின் குறியீடு என்பேன் நான் :lol:
 

 

 

உடி ஆலன் என்பவர் இப்படி சொல்கிறார் அக்கா...
 
எல்லாமே மாயை;எதுவுமே நிலையில்லை என்றால், நான்
நிச்சயம் என் கார்பெட்டுக்கு அதிக விலை கொடுத்துவிட்டேன்.. :D

 

 

 

 
 
சுபேஸ் அள்வோடு தேடுங்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

 

 

கண்டிப்பாய் லெளகீக வாழ்க்கையை எல்லாம் விட்டு போகமாட்டன் அக்கா.. டொன்ற் வொரி... அனுபவிக்க வேண்டியது கனக்க இருக்கு.. :D

 

 

 

இன்று உங்கள் பிறந்த நாளா  :unsure:   :unsure: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  :D

 

 

வெறும் வாழ்த்து சொன்னால் போதுமா..? எங்க பிறந்த நாள் பரிசு..? அடுத்தவரிடமும் இப்படி பேய்க்காட்டாமல் என் பிறந்த நாள் பரிசை மெயிலில் அனுப்பிவிடவும் அக்கா.. :D
 
 
நன்றி அக்கா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்பது இப்படித்தான் சொல்லீட்டீங்களே பிறகேன் தேடல் ?

 

அக்கா..ரொம்ப குழப்பிவிட்டுப்போறியல் போல இருக்கு... உங்கள் பதிலில் இருக்கும் சூட்சுமத்தை என்னால் விளங்க முடியவில்ல.. இதுபோலத்தான் "நானு"மோ..? :)
 
இரண்டு வார்த்தைக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. இறப்பதற்குள் இந்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மனிதன் போடும் வேசங்களுடன் சம்பந்தப்பட்டு பொருந்தக்கூடிய இருவரிக்கதை ஒன்றை வாசித்தேன்.. கச்சிதமாய் இருக்கும் என்று நினைக்கிறேன் இந்தக்கவிதை இடத்தில்.. ஸ்டான்லி புபியன் என்பவர் எழுதியது..
 
*கரடி வேசம் போட்டவனின் வாழ்வில் ஒரு நாள்...
 
     'அய்யோ.. சுட்டுடாதே!'
 
 
நன்றி அக்கா...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு வாழ்க்கையிலை இன்னமும் கனக்க அனுபவிக்க இருக்கு அதுக்கிடையிலை சன்னியாசம் போயிடாதையப்பு

கிகிகி... போகமாட்டன் போகமாட்டன்... நீங்க அனுபவிச்சதை வாழ்க்கையை நாங்க அனுபவிக்காமா..??
 
எல்லாம் இருந்தும் எதற்குமே திருப்தி படாமல் எப்பவும் கவலைப்படும் மனித வாழ்வு பற்றி அந்தவாழ்வினூடே நுழைந்து சிக்கென சொல்லிவிட்டு போகும் படித்த கவிதை ஒன்று..
 
தனிவீடு ரொக்கம் நகை புதுவண்டி
துணிமணி பாத்திரம் குடம் தோண்டி
அழகான மனைவி
இருந்தாலும் நினைவில்
கனிமூன் கவலையில் பாண்டி..
 
:D
 
நன்றி அண்ணா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்.

அழகின் வடிவாய் ஒளிரும் இரவில் வெறுமை நீங்க இன்ப நினைவுகளை நுகருங்கள். கவிதை கணக்கிறது :)

நன்றி அன்பு அண்ணா வாழ்த்துக்கு...
 
"வாழ்க்கை சுருக்கமானது,பிடிவாதத்துக்கோ சண்டைபோடவோ நேரமில்லை நண்பனே" என்று லென்னின் சொன்னது ஞாபகம் இருகிறது அண்ணா..  :)

ஆண் மகன் அழகிய திருமகன் :D

அகராதி புடிச்சதுவள்... :D  நன்றி அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே

தலையில் அடித்து  அடித்து சொன்னனான்

காலத்தே  பயிர் செய்க என்று.......

 

தனியே  இருப்பதால் வரும்  நோயிது

காலம் தாழ்த்தாது

தாவுக

தாழ்ப்பாள் போடுக

இல்லாது விடின்

தலையில் இருக்கும்

மீதியும்................. :lol:  :D

 

வாழ்த்துக்கள்  கவிதைக்கும் பிறந்தநாளுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

C,H,O,N,P,S,Na,K,Cl,Mg,Ca & Fe இவ்வளவும் சேர்ந்து செய்த கலவை. இந்த இரசாயனங்களின் பெரிய சுற்றுவட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான் நான்...! :lol:

கனகாலத்துக்கு பிறகு மூலகங்களின் குறியீடுகளை பார்க்க ஆவர்த்தன அட்டவணை பாடமாக்கவில்லை என்று மணியம் சேர் காதைப்பொத்தி அடித்தது இப்பவும் காதுக்கை கூகூகூ எண்டுறமாதிரி இருக்கு நெடுக்ஸ் அண்ணா.. :D

 

 

பிரபஞ்சத்தில் அணுக்களுக்கு அழிவில்லை என்ற பில் பிரைசனின் கருத்தையும் "ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று.." என்ற நம்மாழ்வாரின் கூற்றையும் ஏதோ ஒருபுள்ளி இணைக்கிறதென்றால்.... ஒன்றும் இல்லையில் இருந்து எல்லாம் உண்டு என்கிற மாறுதல்கள் நிகழ்ந்தன என்றால்... விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றன...நான் என்பதன் தோற்றமும் முடிவும் இப்படித்தான் இருக்குமோ..?

 

நன்றி நெடுக்ஸ் அண்ணா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ் நாள் அனைத்தும் தேடினாலும் கிடைக்காத ஒன்றைத் தம்பி சுபேஸ் தேடுகின்றார்

அமைதி ஒன்றே அதற்கான விடையாக இருக்கலாம்

அந்த அமைதியும் அமைதியாக எப்போதும் இருப்பதில்லை

தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஜேசு நாதர் ஆனால் ...

கிடைப்பதும் கிடைக்காததும் அவரவர் மனதைப் பொறுத்தது.

போதும் என்று சொன்னால் சிலவேளைகளில் அமைதி கிடைக்கும்

நான் என்பது யாதென விளங்கும் அதுவும் எல்லோருக்கும் விளங்காது

சிலருக்கு மட்டும் விளங்கும் அவர்களுக்கு அமைதி என்றால்

யாதென முதலிலேயே விளங்கியிருக்கும்

 

அப்பாடா நான் என்றால் என்னப்பா விளங்கியவர்கள் கூறுங்கள்   :)

 

வாத்தியார் அண்ணா... தெளிவாகக் குழப்பிபோட்டியள்.. :)
 
பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைபோலத்தான் இப்பெல்லாம் வழ்க்கையும்...
 
ஒருதரம் காதல்
என்னை மீட்டுதந்தது
ஒருதரம்
புல்லாங்குழல்
என்னை மீட்டுத்தந்தது
ஒரு வண்ணாத்திப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
"நான்" தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்...!
 
 
நன்றி அண்ணா..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா. :)

 

 

 

நன்றி நண்பா வாழ்த்துக்கும் அன்பிற்கும்..

 

 

 

ஆனால் இப்படியெல்லாம் கனக்க யோசிக்க வேண்டிய வயதில்லை தங்களுக்கு, "காலத்தே பயிர் செய்"

அந்தந்த வயதுக்குரியவற்றைச் செய்வது தான் உண்மையான தேடலாக இருக்கும், ஆடி முடித்துக் களைத்து முதுமையின் பிடியில் இருந்து கொண்டு இதை எல்லாம் அசை போட்டால் ஒரு வேளை உண்மை புரியலாம், இப்போதே இதற்கான தேட்தல்  தேவையா என்ற கேள்வியையே என் மனம் எழுப்புகிறது? என்னைப் போல், அல்லது எனக்கு ஏற்படும் உணர்வுகள்,புரிதல்கள் போல் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லைத் தானே. இருந்தாலும் ஏதோ எனக்குத் தோன்றியது.  :rolleyes:  :icon_idea:

 

எதற்குள்ளும் மூழ்கிப்போகாதவரை நல்லதுதான் நண்பா.. எல்லாவற்றையும் பலன்ஸ் பண்ணி வாழதெரியும்.. அதனால் கவலை இல்லை நண்பா..
 
நன்றி நண்பா..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நுணா அண்ணா.. அக்கா மேல அளவுகடந்த அன்புதான் போல :) .. நல்ல கருத்தான் பாடல் ஒன்று..
 
நன்றி அண்ணா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.