Jump to content

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரியிடம் நாடு இருக்கும் வரை கடும் அதிர்ச்சியைதான் இந்தியர்கள் காட்ட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்" இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

devyani-khobragade1_CI.jpg

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதைக் கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்கள் எப்போதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் இந்தியா  கை வைத்துள்ளது. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமே இதைச் செய்துள்ளது. அவை அத்தனையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது. தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து  அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர் - இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

 01:49

விசா மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்வதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இந்திய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது.

தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.

தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர். 1999ம் ஆண்டு முதல் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்பு சிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.

இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர். ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100469/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

Link to comment
Share on other sites

இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 

 

 

குண்டை கொண்டு வந்து போட்டு விடுமோ என பயமாக உள்ளது. சில வேளை 3ம் உலக யுத்தம் கூட உருவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவில் மன்மோகன் சிங் என்னத்தை செய்கிறாரோ அதுபோல தான் இந்தியாவின் கடுமையான நடவடிக்கையாக இருக்கும்  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

 

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள். 

 

Link to comment
Share on other sites

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள்.

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு காங்கிரஸ் பெரும்புள்ளியின் கையாளாகத்தான் இந்தப் பெண்மணி இந்தப் பதவியைப் பெற்றிருக்க வேண்டும்.  செய்த பிழையை விசாரிக்க வேண்டியது அமெரிக்கப் பொலீஸாரின் கடமை.  சும்மா முகத்துக்கு அஞ்சி இதையெல்லாம் விடமுடியாது. உவவை பெரிய பதவியில் வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பியது காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறு. அதற்காக அமெரிக்காவுடன் ராஜதந்திர இழுபறிகளில் காங்கிரஸார் ஈடுபடுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

 

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..
Link to comment
Share on other sites

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..

அந்தக் கொடுமையைத் தாங்கின ஏட்டய்யாவுக்கு நிவாரணம் குடுப்பினமா?? :blink::D

Link to comment
Share on other sites

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

ஆமாம் நானும் கொஞ்சம் கெட்டு போய்க்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பீலிங் .............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

 

 

நீங்கள் சொன்னது சரி. அவர் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் ஒருவரை அமெரிக்காவுக்குள் கொண்டுவந்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதற்காகத்தான். மாறாக இந்தியர் என்பதற்காக அல்ல. 

 

அதுமட்டுமல்லாமல், இந்த அதிகாரியின் மேல் இந்தியாவிலேயே சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துச் சேர்த்ததற்காக வழக்கொன்றும் பதியப்பட்டிருக்கிறது. தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாயன்படுத்தி இவ்விரு குற்றங்களையும் இவர் புரிந்திருக்கிறார் என்று இந்தியச் செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

 

 

 

இவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில், தவறான வேலைவிசா ஒன்றின்மூலம் ஒருவரை வேலைக்குக் கொண்டுவந்து, அவருக்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 4 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்கி வேலை வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் இந்தியாவில் பெயர் பெற்ற பெண் உரிமை வாதியாம் !!! இது எப்படியிருக்கு???

Link to comment
Share on other sites

சர்வதேச குற்ற்வாளிகளான விஜய் நம்பியார், கமேஸ் சர்மா, சிவசங்கர் மேனன் போன்றவர்களை கொண்ட நாடு, தேவயானியை கொண்டிருப்பதில் எந்த வெக்ககேடும் இல்லை. இவர்கள் பிரபாகனை ஏமாற்றியது மாதிரி எல்லோரையும் ஏமாற்றிவிட்டத்தாக நினைத்தால் அவர்கள் பார்த்து வைத்திருப்பார்கள் என்றதை புரிந்து கொள்ள வேண்டும். காவாட்டில் துப்பல் வங்கிய படி பயணம் செய்த சுப்பிரமணிய சுவாமியால் மகிந்தா கொடுக்கும் பணத்துக்கு மகிந்தாவை காப்பாற்ற முடியும். இந்த தேவயானி தானும் யாருக்காவது பணம் கொடுத்து பார்க்க வேண்டியதுதானே.

எத்தனைதரம் இந்திய ராஸ்ரபதி அபுதுல் கலாமை சோதனை செய்தார்கள். அப்போது எதுவும் செய்யாமல் தட்டிகழித்த்தால்தான் இது வந்தது. 

 

அமெரிக்க ரேடியோ செய்திகளின் படி இந்தியா அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளுக்கு ஜெனிவா மகாநாட்டின் கடமைகளை மறுத்துவிட்டத்தாக குற்றம் சாட்டப்படுகிறது. குற்றவாளியை தண்டித்தற்காக குற்றம் இழைக்காத அதிகாரிகளை இந்தியா தண்டிக்கிறது. இது இஹ்தியாவில் முசோலினியின் ஆட்சி நடைபெறுவதாலாகும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

Link to comment
Share on other sites

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

 

என்னத்தை… விட்டு… என்னத்தை… பிடிச்சு…!!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

இந்தியாவில் பெண்களை  ரொம்ப நன்றாக நடாத்துவது  போல்........... :(  :(

Link to comment
Share on other sites

இந்தியா இப்படி துள்ளுவது ஒரு விதத்தில் நல்லது...அப்போது தான் இந்த பிரச்னை இன்னும் பெரிதாக எல்லாராலும் பார்க்கப்படும்...பின்

எல்லா நாடும் அங்கு உள்ள இந்திய தூதரகங்களை கவனித்தால் அவர்கள் செய்யும் தில்லு முள்ளு எல்லாம் வெளியில் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவாக, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதி முறைகளுக்குள் அடங்கும் என நினைக்கிறேன்!

 

பொதுவாகப் புதிதாக ஒருவரை, மற்றவர்கள் இருக்கும் சிறைக்குள் அனுமதிக்கும் போது, ஏதாவது போதை வஸ்துக்கள், மற்றும் தடுக்கப்பட்ட பொருட்களை, உள்ளே எடுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக, (In the body cavity) பெண் காவலர்களாலேயே செய்யப்படும் சோதனையாகும்! 

 

இதில் 'இந்தியர்' என்பதற்காக, ஏன் விதிவிலக்குக் கொடுக்கப்படவேண்டும் எனத் தெரியவில்லை! :o

 

இந்தியர்கள் பொதுவாக, உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளுவது வழமை தானே!

 

லட்சுமியின் படத்தில் 'நீச்சலுடை'  அணிந்ததற்காக. சிட்னியில் அண்மையில் துள்ளினார்கள்! :wub:

 

267625-india-australia-fashion-protest.j

 

நான் இலட்சுமியை அவமதித்து சரியென்று சொல்ல வரவில்லை!

 

இந்தியாவில் சாராயத் தவறணையில், கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் 'லட்சுமி' படம் இருக்கிறது தானே?

 

அங்கு ஏன் இந்தியக்கொடியை இவர்கள் எரிப்பதில்லை? :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய போன்ற நாடுகளில் சிறைகளில் அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமிமார்கள் இருப்பதால் அவர்களோடு இவர் போன்ற குற்றவாளிகளை அடைக்கலாம். என்ன செய்வது அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களே பெரும்பான்மையாகக் குற்றவாளிகளாக உள்ளனர் போலுள்ளது. அதனால் தான் அவர்களோடு அடைக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

டெல்கி பாலியல் வழக்கை PBS ல் ஒருதடவை ஆராய்ந்தார்கள். இந்தியாவில் பாலியல் கடுப்பு நோய் தலைவிரித்து ஆடுவதாக முடிவுக்கு வந்தார்கள். தமிழ் படங்களை பற்றி பிரஸ்தாபித்தார்கள். அங்கு Rape காட்சி படங்கள் சக்கை போடு போடுமென்றார்கள். இந்துச் சாமிகள் தம்பாடு அதே நேரம் இந்த இந்திய சாமிகளும் தம் பாடு.

 

இந்தியாவை மதிக்க  வேண்டிய நாடுகளான சீனா, பாகிஸ்த்தான்,  இந்தியாவால் இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை காண்கிறார்கள். இதனால் எல்லையில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் இந்தியாவுக்காக புலிகளை அழிக்க உதவிவிட்டு இந்தியாவால் இந்து சமுத்திரத்தில் ஏதாவது செய்ய முடியுமா எனக் காத்திருந்தார்கள். இந்தியாவால் சீனாவுடன் இந்து சமுத்திரத்தில் வாலாட்ட முடியவில்லை.

 

இனி அவர்கள் இந்து சமுத்திரத்தில் தாம் காலூண்ற இலங்கையை நேராக கையாள முயல்வார்கள். அது தமிழருக்கு இழப்பாகவும் இருக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையை மேற்கு நேரடியாக கையாளாமல் இருக்க, இந்தியாவுக்கு இலங்கைத்தீவில் இப்போது ஒரு "பிரச்சினை" தேவைப்படுகிறது. ஒரேயடியாக மௌனிக்கப்பட்ட காரணம் இப்போது தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.