Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால்

Featured Replies

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

 

வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன்.

 

அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது.

 

தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. 
 
ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்தர்பமும் இல்லை. எங்கள் வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். 
 
நடுக்கடலிலேயே பரா வெளிச்ச குண்டுகளுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது, மிதவை கவிழ்ந்து போக முதுகிலே முப்பது கிலோ பொருட்களுடன் இரண்டுகைகளிலும் துப்பாக்கிகளுடன் அந்த கடலின் கரையை அடையவே அரைமணித்தியாலம் போய்விட்டது. சேற்றினுள் வைத்த வெறும் காலை கூட வெளியே எடுக்கமுடியாத முதுகுபாரம்.
 
கடுமையாக மோதினோம். எந்த பின்புல ஆதரவும் இல்லாமல், எந்த உணர்வுகளுமே இல்லாமல், சாவை மட்டுமே எதிர் கொண்டு கடுமையாக மோதினோம். என் தோழர்கள் ஒவ்வொன்றாக வீழும்போதும் எங்கள் சூட்டின் வேகம் தணியவில்லை. இதோ எனது ஆயுத வெடிபொருட்கள் எல்லாம் முடிந்து , நேற்று இரவு கடித்த அந்த பிஞ்சு மாங்காய் இற்கான பலம் எல்லாம் முடிந்து அந்த சேற்று மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
 
எனக்கும் மரணத்துக்கும் இன்னும் சில நிமிட தூரங்களே இருக்கின்றன. கடந்த மாவீர தினத்துக்கு தான் அவசரமாக அளவெடுத்து தைத்த சீருடையின் பைக்குள்ளே இருந்த சண்டை வரைபடத்தையும் குறியீட்டு தாளையும் எடுத்து வாயிலே சப்புகிறேன்.
 
அது தந்த கொஞ்ச தெம்பில் , என் மரணத்தை பற்றி கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைத்தது. நான் சாகப்போகிறேன். இதை யாருக்காவது சொல்ல வேண்டும் போல இருந்தது.  
 
என் நெஞ்சிலே செருகி இருந்த செய்மதி தொலைபேசியில் புலம்பெயர் நாட்டில் இருந்த அண்ணாவுக்கு அடித்தேன். எங்கோ ஒரு வீதியை மறித்து போராடி கொண்டிருந்த அண்ணாவுக்கு, சண்டை வெடி சத்தங்களுக்கு நடுவே  நான் சொல்லுவது தெளிவாக கேட்கவில்லை. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொன்ன ஒரு திருப்தி எனக்கு கிடைத்தது.
 
அம்மாவையும் தங்கச்சியையும் கவனமாக பார்த்து கொள், அம்மாவுக்கு நான் இல்லை என்று சொல்லிவிடாதே, அவவின் காலம் முழுக்க நான் இருப்பேன் என்று தேடட்டும். அது தான் நான் அவவுக்கு கடைசியாக கொடுக்க கூடிய ஒரே சந்தோசம். நன்றி. வணக்கம். 
 
அதன் சிம் காட்டையும் வாயிலே சப்பி விழுங்கினேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் மரணத்துக்கு.
 
நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன். 
 
சிங்கள குரல்கள் எனக்கு மிக அருகில் கேட்க தொடங்கிவிட்டது. எனக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது சாக. குப்பியா, வெடிமருந்து சக்கை உடையா என்றபோது வெடிமருந்து சக்கை உடையை தெரிந்து எடுத்தவன். 
 
சாவுக்கு என்றுமே அஞ்சியதில்லை என்றாலும் செத்து அனுபவமில்லை. இப்போ முதன்முதலாக சாகப்போகிறேன்.
 
சரி சாவதுக்கு முதலில் ஆசையை பூச்சியம் ஆக்கவேண்டும் என்று நினைத்து கொண்டேன். எல்லா ஆசைகளையும் இனிமேலே என் வாழ்வில் நிறைவேறுவதற்கான வழி எதுவுமே இல்லை  என்ற ஒற்றை நினைப்பை மூளையுள் திணித்து நடுநிலையாக்கினேன்.
 
சில ஆசைகள் மறைய மறுத்தன. வலிந்து எண்ணங்களை திணித்து பூச்சியம் ஆக்கினேன்.
 
இப்போ நான் தயார்.
 
மிக அருகில் வரட்டும் என்று காத்திருந்தேன். சக்கையை வெடிக்க வைப்பதற்கான இழுவையை இறுகப்பற்றினேன்.
 
சேறு நிரம்பிய சப்பாத்தால் என்னை அவன் பிரட்டியபோது, எனது விரல்கள் தங்களின் முழுப்பலத்தையும் கொண்டு வெடிமருந்து சக்கை அங்கியின் இழுவையை இழுத்துவிட்டன.
 

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே கனதியாக உள்ள பதிவு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வெடியோசையும் கடைசியாக அவனது ஆசைகளின் புதைவும் கண்ணுகள் தெறிக்கிறது காட்சிப்பதிவாக.....இப்படி எத்தனைபேரை எத்தனை உயிர்களை இழந்தோம்.....அத்தனை இழப்பின் ஒட்டுமொத்த வடிவாக இந்தக்கதையின் முடிவும் அவனும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடங்கள் போனாலும் மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

முதலாமவர் வெடித்து ஒளி பிழம்பாகியதை கண்ணால் பார்த்தவன்.

இவர்களுக்குள் இருக்கும் உறுதியில் ஒரு விகிதம் என்னிடம் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தே பறி கொடுத்தம் புலம்பெயர்கோழையானேன் நானும் .

  • கருத்துக்கள உறவுகள்

மனுநீதிச் சோழன் கதைபடித்த அறிவுடன், தன் தசையைத் தானே அறுக்கும் ஒருவனின் உள உரத்தைப் பார்க்கிறேன், பற்றை மறைவில் பதுங்கியிருந்து. சிறு முள் குத்திய வேதனை தாங்கமுடியாது!. நானும் தமிழனா...???? 

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு, களத்துக்கு 'அபிராம்' வந்திருக்கிறார் எண்டு ஓடிவந்து வாசிச்சால், அபிராம் மனத்தை ஒரேயடியாக உருக்கிப் போட்டார்!

 

எத்தனை சொல்லப்படாத, சொல்ல முடியாத 'அனுபவங்களை' தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக, எமது இனம் அனுபவித்துத் தொலைத்திருக்கின்றது!

 

அதை விடத் துயரம் என்னவெனில், இதற்கொரு விடிவோ அல்லது முடிவோ தெரியாமல் இன்னும் தொடர்ந்து எமது இனம் பயணிப்பது தான்! :o

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொவது என்றே தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு இழப்புக்கள்...மிகவும் கனதியான பதிவு....அபிராம்....

  • கருத்துக்கள உறவுகள்

ம் .......!

 

அபிராம் ! மனம் கனக்கிறது !

  • கருத்துக்கள உறவுகள்

மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

 

காலத்தால் அலையாத  நினைவுகள்.

  • தொடங்கியவர்

கருத்திட்ட இசைக்கலைஞன், சாந்தி, அகஸ்தியன், விவசாயி விக், பெருமாள், பாஞ், புன்கையூரான், சுமேரியர், புத்தன் ,சுவி, நிலாமதி  அவர்களுக்கும் விருப்பமளித்த கவிதை அவர்களுக்கும் இந்த கதையை தொடரும் கோமகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.   

  • 3 weeks later...

நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன்.  ///

 

கதைக்கு மிக்க நன்றி அபிராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் 5 அவ்ருடங்கள் ஆகப்போகிறது.....

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கருத்திட்ட கோமகன் மற்றும் கந்தப்புவுக்கு நன்றிகள்.

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

  • கருத்துக்கள உறவுகள்

 

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

காலமெல்லாம் தொடர்வது நினைவுகள் மட்டுமே. அவை காலத்தை வெல்லும் சாதனைகளைப் படைக்கும் வல்லமை மிக்கவைவும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி அபிராம், மிகவும் கனதியான பதிவு

  • தொடங்கியவர்

நன்றிகள் சாந்தி மற்றும் உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.