Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1qq(3).jpg

பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது.

வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். 

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையினையே சிவாஜிலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.

 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/100688-2014-02-19-08-28-31.html

மிகவும் நல்ல விடயம். கொழும்பு மையவாதத்தை உடைக்க உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதொரு முயற்சி.. வெளிநாட்டில் இருந்து போகிறவர்கள் தமிழகம் சென்று, பிறகு அங்கிருந்து யாழ் போகலாம். கொழும்பு நெரிசலை குறைப்பதாக அமையும். :D

மிக நல்லதொரு முயற்சி.. வெளிநாட்டில் இருந்து போகிறவர்கள் தமிழகம் சென்று, பிறகு அங்கிருந்து யாழ் போகலாம். கொழும்பு நெரிசலை குறைப்பதாக அமையும். :D

நாமும் 7 கோடி தமிழ்நாட்டு உறவுகளுடன் தொப்புள்கொடி உறவை வலுபடுத்தி வியாபார, கலாச்சார திட்டங்களை வளர்க்கலாம்.

அடுத்தது கச்சை தீவை தமிழகம் மீள பெற்று ஒரு அவுட்லெட் வியாபாரா, சுற்றுலா மையம் கட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதொரு முயற்சி.. 

 

தொப்புள் கொடிகளுடன் திரண்டு வளர  உதவும்

சிங்களவனுக்கு

சேர்த்து வாழ்கிறாயா?

அல்லது போகட்டுமா  என்பது போலிருக்கவும் உதவும் :icon_idea: 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீர்மானமாக வட மாகாணசபை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றது. அநேகமானவை ஏக மனதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்.

 

சரி, இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனை நடைமுறைக்கு வந்துள்ளன? எத்தனை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன? இவற்றின் இன்றைய நிலை என்ன?

 

வடக்கு மாகாண சபையின் தீர்மானங்கள், திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றி அவர்களின் தளமான http://www.np.gov.lk/ வில் கூட உருப்படியாக எதுவும் இல்லை. கொஞ்சம் படங்களை மட்டும் தரவேற்றியிருக்கினம்.

 

ஐங்கரநேசனின் சில செயற்பாடுகள் மட்டும் தான் தெளிவாக வெளித் தெரிகின்றன. ரவிகரனின் செயல்பாடும் வெளியே தெரிகின்றது.

மிச்சப் பேர் என்ன செய்யினம்? . வெறும் உணர்ச்சி மேலீட்டும் அறிக்கைகள் மட்டும்தானா?

நாளைக்கொரு தீர்மாணம் கொணர்ந்து என்ன சாதனை செய்யப்போறம். இதுகளை திட்டங்களில் சேர்க்கலாம் இதுக்குமா தீர்மானம் தேவை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரின் முக்கிய அடிப்படை உரிமைகளில் இதுவுமொன்று.

நல்லதோர் எண்ணம். தூரம் குறைவு என்பதால் விமான டிக்கட்டும் குறையும்.

அதிகாரமில்லாத சபையால் நடை முறைப்படுத்த முடியாது. மக்களின் விருப்பை காட்டும் தீர்மானங்கள்தாம்.

 

சர்வதேச விசாரணை தீர்மானம் உண்மை அரசியல் அமைப்புடன் முரணுகின்றதா என்றை கோடு இன்னமும் சொல்லவில்லை. தெரிந்து கொண்டுத்தான் பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன.

 

மிக மிக சுவரசியமானது அமெரிக்க பள்ளிகள் கட்ட வருவது. NGOகளை அனுமதியாத அரசிடம் பசிபிக்கட்டளை தலைமை அகத்திடம் NPC கட்ட ஒப்பந்தங்களுக்கு போகிறார்கள். இது NPC கொண்டுவந்த இந்தியாவுக்கே படு சுணையாக இருக்க போகிறது. மத்தியில் நிறையத்தான் விறாண்ட வேண்டியிருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்குச் 'சர்வதேச விமான நிலையம்' ஒன்று வந்தால், 'பண்டாரநாயகே விமான நிலையம்' நட்டத்தில் ஓடும்!

 

மகிந்த சர்வதேச விமான நிலையத்தில் 'மாடு' வளர்க்கலாம்! அல்லது 'தலதாமாளிகாவை' இடம் மாற்றலாம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீர்மானமாக வட மாகாணசபை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றது. அநேகமானவை ஏக மனதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்.

 

சரி, இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனை நடைமுறைக்கு வந்துள்ளன? எத்தனை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன? இவற்றின் இன்றைய நிலை என்ன?

 

வடக்கு மாகாண சபையின் தீர்மானங்கள், திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றி அவர்களின் தளமான http://www.np.gov.lk/ வில் கூட உருப்படியாக எதுவும் இல்லை. கொஞ்சம் படங்களை மட்டும் தரவேற்றியிருக்கினம்.

 

ஐங்கரநேசனின் சில செயற்பாடுகள் மட்டும் தான் தெளிவாக வெளித் தெரிகின்றன. ரவிகரனின் செயல்பாடும் வெளியே தெரிகின்றது.

மிச்சப் பேர் என்ன செய்யினம்? . வெறும் உணர்ச்சி மேலீட்டும் அறிக்கைகள் மட்டும்தானா?

நீங்க வேறை இதுக்கும் ஏதாவது காரணம் வைச்சிருக்குங்கள் நாலு பந்திக்கு விளக்கம் கிடைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நிழலி :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனரே இந்த வடமாகாணசபை இணையத்தை இயக்குகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

பல கோணங்களில் யோசிக்க இது நல்ல தீர்மானம் தான் ஆனாலும் இது ஒரு மத்திய அரசியல் சார்ந்த விடயம் என்று தோன்றுகின்றது... பார்ப்போம் நடந்தால் நல்லது... நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

நன்மைகளாக நான் நினைப்பது .. ஆனாலும் இவை ஒன்றொன்றும் தீமையானதாகக்கூட அலசலாம்.

  • வர்தக வளர்ச்சி.
  • வேலை வாய்ப்புகள்.
  • உள்ளூர் அபிவிருத்தி பெருகும் சாத்தியம்.
  • தொப்புல் கொடி உறவுகளுடனான இறுக்கமான பிணைப்பு.
  • தமிழ் கலை கலாச்சார மேம்பாடு.
  • இலகு பயணம், குறைந்த செலவு, துரித நேரம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம், மதுரை  - பலாலி, யாழ்ப்பாணம் விமான சேவை,

பாரம்பரிய தமிழ் நகரங்களுக்கான இணைப்பு உடன் தேவை. :lol:


கேட்கவே இனிமையா கீதுபா! :)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீர்மானமாக வட மாகாணசபை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றது. அநேகமானவை ஏக மனதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்.

சரி, இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனை நடைமுறைக்கு வந்துள்ளன? எத்தனை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன? இவற்றின் இன்றைய நிலை என்ன?

வடக்கு மாகாண சபையின் தீர்மானங்கள், திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற்றம் பற்றி அவர்களின் தளமான http://www.np.gov.lk/ வில் கூட உருப்படியாக எதுவும் இல்லை. கொஞ்சம் படங்களை மட்டும் தரவேற்றியிருக்கினம்.

ஐங்கரநேசனின் சில செயற்பாடுகள் மட்டும் தான் தெளிவாக வெளித் தெரிகின்றன. ரவிகரனின் செயல்பாடும் வெளியே தெரிகின்றது.

மிச்சப் பேர் என்ன செய்யினம்? . வெறும் உணர்ச்சி மேலீட்டும் அறிக்கைகள் மட்டும்தானா?

அண்ணா, உங்களுக்கு கரு நாக்கு :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136349#entry986839

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தீர்மானம்.

தமிழ் நாடு சட்ட சபையும் தீர்மானங்களை இயற்றுது, இப்ப வட மாகாண சபை தீர்மானங்களை இயற்றி அடுக்குது. ஆனால் மத்திய அரசுகள் கண்டு கொள்வதில்லை. எமக்கு ஒரு முழு அதிகாரம் உள்ள அரசு தேவை, அப்பத்தான் எமது திட்டங்கள் நடைமுறை படுத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
வட மாகாணத்தில் எங்கும் அலரி மரம் நிறைந்திருப்பதால் ......
அலரி  மரத்தில் இருந்து ஆப்பிள் புடுங்க வட மாகாணசபையில் தீர்மானம் கொண்டுவரபட்டது.
சாணக்கியன் சமந்தன் ஐயா அவர்கள் அதை முன்மொழிய ...
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அதை நிறைவேற்றினார்.
 
அநேகமாக வார மாத செய்தியாக இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் அது தொடர்பான நிகழ்வுகளாக இப்போது போய்க் கொண்டிருப்பதால் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்காவிடினும் எதிர்காலத்தில் தமிழீழம் என்பது அபிவிருத்தியையும் கொண்டிருக்க வேண்டும். இலக்கு நோக்கிப் பயணத்தின் எல்லை என்பது 200 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் பாதை என்பது செப்பனிட வேண்டும். இப்படியே எம் மக்கள் இருந்துவிடக்கூடாது. பொருளாதாரரீதியாக முன்னேறினால் எந்த நாயும் எம் மக்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

நிறையக் காணிகள் இருப்பதால் பெரும்தோட்டப்பயிர்களாகவும், அது சார்ந்த தொழில்நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.  நீண்ட பெருந்தெருக்களை செம்மணி, நீர்வேலித்தரவை, அப்படியே அமைப்பதற்கும், மெட்டோ போன்ற சேவைகளையும் அதனுாடாக அமைப்பது பற்றியும் சிந்திக்கலாம்...

தவிர வெளிநாட்டுப் பயணிகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் இடங்களை உருவாக்குதல். துபாயே மேலைத்தேயரின் பணத்தைக் குறி வைத்து இப்படி நடக்கும்போது பசுமை தரையும், ஆளமற்ற கடற்பகுதிகளையும் கொண்ட எங்களால் முடியாதா என்ன?  தீவு மாதிரியான இடங்கள்  வெளிநாட்டவரை நன்கு கவரக்கூடியாவை. இது யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அல்ல. எல்லா இடங்களுக்கும் பொருந்தும்...பொருளாதாரமே எனி எங்களின் முதன்மை ஆயுதமாக மாற வேண்டும்.

இப்படி ஏதும் செய்துவிடும் என அஞ்சிச் சிங்கள அரசு பணங்களை மத்திய வங்கி ஊடாகவே பெற முடியும் என்று சட்டம் இயற்றி உள்ளது.
 

வரவேற்கதக்க மகிழ்ச்சியான விடையம் !
தொப்புள்கொடி உறவுகளுக்கு இடையில் இந்தவிமான சேவையின் ஊடாக நிறைய நன்மைகள் கிட்டும் என்று நம்புகின்றேன்.

கெஹலிய ரம்புக்வெலக்கு ஏதும் தெரியாது! சர்வேஸ்வரன் சீற்றம்!!

கடந்த 18 ம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் ஆறாவது அமர்வில் மக்களின் போக்குவரத்து வசதிகள் கருதியும் வர்த்தக மற்றும் வாழ்வாதார வசதிகள் கருதியும் பலாலி விமானத்தளத்தை  80களுக்கு முன்னரைப் போன்று சர்வதேச விமானப்போக்குவரத்துக்கான தளமாக செயற்படுத்தவும், இதே போன்று தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தினை மீள ஆரம்பிக்கவும் மத்திய அரசை கோரி திரு.கே.சிவாஜிலிங்கம் ஓர் பிரேரணையை கொண்டு வந்தார்.

இதே பொருளாதார காரணங்களுக்காகக் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு ஓர் வர்த்தகத் துறைமுகமாக மத்திய அரசால் செயற்படுத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தை கலாநிதி.கந்தையா சர்வேஸ்வரன் கொண்டுவந்திருந்தார். இவ்விரண்டு தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. 38 உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு மாகாண சபையின் ஏகமனதான இத் தீர்மானத்தை மக்கள் ஆணையை மதிக்கின்ற ஜனநாயக அரசு என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டியது அதன் கடமையாகும். மேலும் இவ் மூன்று விடயங்களுமே நடைமுறையில் இருந்து யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டவையாகும்.இவ்விரு தீர்மானங்களுமே மத்திய அரசை நோக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும். ஜனநாயக செயன்முறையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த பிதிநிதிகள் சபையும் அந்ந நாட்டின்  அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனது நிலைப்பாட்டினை  வெளிப்படுத்தும் உரிமையுண்டு.,து அடிப்படை ஜனநாயக உரிமை மட்டுமன்றி ஜனநாயகக் கடமையுமாகும்.

ஆனால் இத்தீர்மானங்கள் பற்றி மத்திய அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது வடமாகாணசபைக்கு விமானசேவை மற்றும் கப்பல் சேவை தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் கிடையாதெனவும், அது அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல என்றும் எனவே வடமாகாணசபைக்கு அந்த விடயம் தொடர்பாக எதனையும் கோரும் உரிமை கிடையாதெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  13 வது திருத்தத்தின் படி விமானசேவை மற்றும் துறைமுகங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்துக்கே உரியன என்றும் பதிலளித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தில்  மாகாண அரசுக்குரிய விடயங்கள் எனக் கூறப்பட்டுள்ளவை தவிர வேறெந்த விடயங்களினையும் மாகாணசபையில் பேச முடியாது அல்லது பேசக்கூடாது என்ற சாரப்பட அமைச்சர் பதிலளித்திருப்பது  ஜனநாயகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகின்றது. மேலும் இவ்விடயங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்குட்பட்டதென்றும் எனவே வடக்குமாகாண சபை எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்திருப்பதானது, மத்திய அரசை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அவர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. அனைத்துக்கும் மேலாக இம்மூன்று விடயங்களுமே ஏற்கனவே நடைமுறையில் இருந்து மீள ஆரம்பிக்கக்கோரும் தீர்மானங்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

விடயஞானம் உள்ள பொறுப்புள்ள அமைச்சராக இருந்தால் வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களை மத்திய அரசு கவனத்திலெடுக்குமென்றோ அல்லது செயற்படுத்துமென்றோ பதிலளித்திருப்பார். மாறாக இலங்கையின் அண்மைக்கால வரலாறோ அல்லது ஜனநாயகம் பற்றிய அடிப்படைகளோ  மாகாணசபைகளின் உரிமைகள்,கடமைகளையோ புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். இத்தகயவர்கள் மத்திய ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பது துர்அதிஸ்ரவசமானதென கலாநிதி.கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.pathivu.com/news/29774/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.