Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு படிப்பு படிப்பு............ ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதற்காக அமானியோடு நிலாவையும் தூர விரட்டிவிடுவது மனதிற்கு என்னவோபோல் இருக்கிறது. பிறர்வாழத் தன்னுயிர் நீத்த மாவீர்களைக் குகனின் பாத்திரம் நினைவூட்டுகிறது. தொடருக்குப் பாராட்டுகள்!!. :rolleyes:

  • Replies 256
  • Views 22.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் புத்தன் விசு .. தொடர்ந்து  எழுதுவதுமிக்க  மகிழ்ச்சி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா, புத்தன், விசுகு அண்ணா கதையை நன்றாக நகர்த்திவிட்டுள்ளீர்கள் நன்றி.

காதல் மேலுள்ள நம்பிக்கை குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.... காதல் கதை எழுதவும், படிக்கவும் இருந்த ஆர்வம்

கொஞ்சம் குறைந்தமாதிரி ஒரு உணர்வு எனக்குள். :(

இந்தக் கதையை படித்த பாதியில் வைத்திருக்கின்றேன். ஒரு 'Love Mood'  create  பண்ணியாவது.... இதை படிச்சு முடிக்கோணும்! :)

 

தொடரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்..... ! முழுதாக வாசித்து முடித்துவிட்டு என் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்!

நன்றி உறவுகளே! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மேலுள்ள நம்பிக்கை குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.... காதல் கதை எழுதவும், படிக்கவும் இருந்த ஆர்வம்

கொஞ்சம் குறைந்தமாதிரி ஒரு உணர்வு எனக்குள். :(

இந்தக் கதையை படித்த பாதியில் வைத்திருக்கின்றேன். ஒரு 'Love Mood'  create  பண்ணியாவது.... இதை படிச்சு முடிக்கோணும்! :)

 

தொடரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்..... ! முழுதாக வாசித்து முடித்துவிட்டு என் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்!

நன்றி உறவுகளே! :)

 

முற்றிலும் உண்மையான கருத்தைக் சொல்லி இருக்கிறீர்கள் கவிதை..உணர்வுகள் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று,... பொதுவாக யாருக்குமே விருப்பு,வெறுப்புக்கள் எப்போது வரும் போகும் என்று சொல்லி விட முடியாது இல்லயா.....???

அதற்காக இங்கே இந்தப் பதிவுகளை  எழுதுபவர்களை குறை சொல்ல இல்லை.அவர்கள் தங்கள் பணியை நன்றாகவே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.பொறுமையாக மீண்டும் எல்லாவற்றையும் படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா லண்டன் வந்து ரெண்டு வருசமாச்சுது
அங்கினை மதுரனைச் சந்திக்கேல்லையோ :D 
லண்டன் வந்த நிலா மதுரனை நாட்டுக்குக் கூட்டிப் போவாவா?
அல்லது லண்டனிலையே அசைலம் அடிப்பினமோ? :D 
நல்லாத்தான் இருக்குது யாழ்க் காதல்க்கதை
அடுத்தது ஆரப்பு... எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
கருத்தைப் பதியவேண்டிய இடத்தில் பதியத்தவறியமைக்கு மன்னிக்கவும் சுமேரியரே. நேர்படுத்தி விட்டேன்.  :)  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமே கதையை நன்றாக நகர்த்தியுள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நிலாவையும் பத்திரமாய் லன்டனில இறக்கீட்டீங்கள். அத்தோட  அவவின் தூக்கமும் போச்சுது...!

 

பாப்பம் இனி நிலா உறங்கிறாவா , தூங்கிறாவா என்று...! :lol:  :)

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயும்

பஞ்சும்  ஒரு முடிவோட  தான் நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்..

 

ஆனால் அந்த மண்ணின் வசந்தத்தை இனி  சுவைக்கமுடியாது போகலாம்  என்ற கவலை  எனக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பலர் அடிக்கடி எழுதுவார்கள் என்றால் இன்னும் கொஞ்சம் நிலாவை நாட்டில் விட்டுவைத்திருக்கலாம். எழுதுபவர் குறைவாக உள்ள நேரம் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

தொடர்ந்தும் பலர் அடிக்கடி எழுதுவார்கள் என்றால் இன்னும் கொஞ்சம் நிலாவை நாட்டில் விட்டுவைத்திருக்கலாம். எழுதுபவர் குறைவாக உள்ள நேரம் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

 

 

நீங்களே எழுதி  முடியுங்கோ மேரியம்மா!!!  :)

  • கருத்துக்கள உறவுகள்
நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்தது !... விசுகு, சுவி, புத்தன், யாயினி, கோமகன், புங்கையூரன். இவர்களைத்தவிர வேறு யாருக்குமே பிடிக்கவில்லை !!. என்ன காரணமோ... ???  :(  :o   
 
  • கருத்துக்கள உறவுகள்

 

நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்தது !... விசுகு, சுவி, புத்தன், யாயினி, கோமகன், புங்கையூரன். இவர்களைத்தவிர வேறு யாருக்குமே பிடிக்கவில்லை !!. என்ன காரணமோ... ???  :(  :o   

 

பக்கத்திலிருக்கிற கொழும்புக்கே, பொம்பிளைப்பிள்ளை ஒண்டை அனுப்பிறதுக்கு, அப்பாவும் கூடப் போற காலத்தில, நிலா அப்படியே லண்டனுக்குச் 'சிம்பிளா' வந்து இறங்கீட்டாள் என்பது எனக்கு முதலாவது அதிர்ச்சி!

 

எவ்வளவு கஸ்டப்பட்டு, மதுரனை லண்டனுக்குக் கொண்டு வந்து சேர்த்தம்! இப்ப நிலா, சட்டுப்புட்டென்று வந்திறங்கின படியால, சுமே கதையை, ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வந்து விட்டிட்டா என்பது இரண்டாவது அதிர்ச்சி!

 

என்னவோ தெரிஞ்சோ, தெரியாமலோ வயசுக்கோளாறில ஒரு பெடியன், உரலுக்குள்ள தவறி விழுந்திட்டான்! அவனுக்குத் தப்ப வழியே இல்லாதமாதிரி, உலக்கையைக் கொண்டுவந்து, மேல போட்டமாதிரிக் கதை தொங்கிப்போய் நிற்கிறது மூன்றாவது அதிர்ச்சி!

 

எல்லாத்துக்குள்ளையும் ஒரு சின்ன ஆறுதல்...!

 

பஞ்சர் வந்து, ஒரு மாதிரி 'மதுரனை' நிலாவுக்குக் காட்டிவிட்டது என நினைக்கிறேன்!

 

யாராவது வந்து, நிலா கண்டது மதுரனில்லை, எண்டு கதையை மாத்தி விட்டால்......நாலாவது அதிர்ச்சி....! :o

 

துணிஞ்சு ஒரு முடிவெடுத்ததுக்கு வாழ்த்துக்கள், பாஞ்ச்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி அதிர்ச்சி எண்டுவிட்டு தானே நிலாவை மதுரனோட கதைக்க வச்சு அஞ்சாவது அதிர்ச்சியையும் தந்திட்டார். என் பிளானிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் புங்கை.

ம்ம்.... கதை நல்லாய் தான் போகுது ஆனா நிலாவையும் மதுரனையும் சேர்த்து வைக்காதீர்கள்!! :D  புங்கையை அழவைக்கணும்  :lol:

ஒருத்தரும் கை வைக்கின்றார்கள் என்று இரவிரவாய் இருந்து எழுதிவிட்டு காலை  சிறு திருத்தங்களுடன் பதிவம் என்றால் புங்கை முந்திவிட்டார் .

ஏறக்குறைய புங்கையின் போக்கில் தான் நானும் எழுதியிருந்தேன் .பார்ப்பம் முடிந்தால் திசையை திருப்பிபார்ப்பம் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். டூடிங் என்றதும் நானே நிலாவாகிப் போன உணர்வு. ஆனால் அத்தனை சீக்கிரம் கதையை முடிக்க விட மாட்டன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். டூடிங் என்றதும் நானே நிலாவாகிப் போன உணர்வு. ஆனால் அத்தனை சீக்கிரம் கதையை முடிக்க விட மாட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்
(பாவமப்பா, இரண்டும்....சின்னஞ்சிறுசுகள்.... சேர்த்து வையுங்கப்பா.. போற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும்!)
:Dபுங்கை கதையை நன்றாக நகர்த்தியுள்ளீர்கள்......ஆனால் அவ்வளவு இலகுவில் சின்னஞ்சிறுசுகளை இணையவிடமாட்டமல்ல :D
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் கை வைக்கின்றார்கள் என்று இரவிரவாய் இருந்து எழுதிவிட்டு காலை  சிறு திருத்தங்களுடன் பதிவம் என்றால் புங்கை முந்திவிட்டார் .

ஏறக்குறைய புங்கையின் போக்கில் தான் நானும் எழுதியிருந்தேன் .பார்ப்பம் முடிந்தால் திசையை திருப்பிபார்ப்பம் . :icon_mrgreen:

இரவிரவாய் எழுதிறதைக் காலமையில திரும்பப் படிச்சுப்பார்க்கிறது மிகவும் நல்ல பழக்கம், அர்ஜுன்!

 

ஏனெனில், உங்களுக்கு இரவாக இருக்கிற நேரம், எங்களுக்குப் பகல்! :D

 

ஆசீர்வாதத்தில தான் நான் ஒரு கண் வைச்சபடி இருந்தனான்! அதுவும் விலைப்பட்டுப் போச்சு போல கிடக்கு! :o

 

அதுக்கிள்ள நிலாவையும் கொண்டு வந்து, சனம் லண்டனில இறக்கி விட்டிட்டுது....!

 

ஒருத்தரும் எழுதிறதாக் காணவுமில்லை....அது தான்.....! :D

 

நீங்கள் எழுதுங்கோ.... காத்திருக்கிறோம்...!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு கதையை முடிக்க மாட்டீங்கள்போல... ஒழுங்கா எழுதி முடிச்சுப்போட்டு சரியான முறையில கிளியராக்கிப் போட்டு நீங்கள் எப்போது பதிவிடுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்....

waiting_at_desk_anim_md_wm.gif

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனது எழுத்து, யாழ்ப்பாணத்துக் கிராமிய வாழ்க்கையை, அப்படியே சித்தரிக்கின்றது!

 

புத்தன், மிகவும் அழகாகக் கதையை நகர்த்தியுள்ளீர்கள்! :D

 

தமிழன் ஒருவனது வாழ்வின், 'யதார்த்தம்' உங்கள் எழுத்து முழுவதும் சிதறிக்கிடக்கின்றது!

 

அது சரி.... கதையை என்ன செய்யிற பிளான்?

 

நிலாவையும், மதுரனையும் ஒரு பக்கத்தில தள்ளிவிட்டுப் போட்டுக் கதை நகர்கிறது!

 

ஒண்டு செய்வம்....நிலாவை, சுமேரியரோட விட்டுப்போட்டு, நாங்கள் ஊருக்குள்ள கதையைக் கொண்டு நகரத்துவம்!

 

எப்படி ஐடியா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனது எழுத்து, யாழ்ப்பாணத்துக் கிராமிய வாழ்க்கையை, அப்படியே சித்தரிக்கின்றது!

 

புத்தன், மிகவும் அழகாகக் கதையை நகர்த்தியுள்ளீர்கள்! :D

 

தமிழன் ஒருவனது வாழ்வின், 'யதார்த்தம்' உங்கள் எழுத்து முழுவதும் சிதறிக்கிடக்கின்றது!

 

அது சரி.... கதையை என்ன செய்யிற பிளான்?

 

நிலாவையும், மதுரனையும் ஒரு பக்கத்தில தள்ளிவிட்டுப் போட்டுக் கதை நகர்கிறது!

 

ஒண்டு செய்வம்....நிலாவை, சுமேரியரோட விட்டுப்போட்டு, நாங்கள் ஊருக்குள்ள கதையைக் கொண்டு நகரத்துவம்!

 

எப்படி ஐடியா? :icon_idea:

 

நல்ல ஐடியா....மற்ற ஆட்களையும்[சுரேஸ்,கண்ணன் பொன்னம்மா} புலம் பெயர்த்துவோம் ....வாசகர்களின் எண்ணிக்கையும்,பச்சை குத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைகிறது...தொடர்கதை வாசிக்கும் ஆர்வம் இப்ப பலருக்கு இல்லை போல.... :D

Edited by putthan

சுமோவின் அலுவல்கள் எல்லாம் வீட்டுக்கு பெயின்ட் அடித்த மாதிரிதான் . :icon_mrgreen: 

தொடக்கிவிட்டு ஆள் கட் பண்ணி படம் பார்க்க போய்விடுவார் :icon_idea: 

பாவம் மதுரனும் நிலாவும் ,இனி நடுரோட்டில தான் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.