Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஏமாற்றிவிட்டது - சம்பந்தன்

Featured Replies

இந்தியா ஏமாற்றிவிட்டது - அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி –

சம்பந்தன்:-

sambandhan11_CI.jpg


இந்தியா ஏமாற்றிவிட்டது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன்மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும். அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க வேண்டும் எனவும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சற்றுமுன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்;:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104837/language/ta-IN/article.aspx

இந்தியா அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் துனைத் தூதரகத்தை மூடுவது தான் மிகச் சரியான காரியமாக இருக்கும்.
 
ஹோலி கொண்டாடியது போதும் இடத்தைக் காலி பண்ணுங்கள்.
இப்போது தான் தெரிந்ததா சம்பந்தன் ஐயா? 
இது தெரியாமல் ஒரு முது பெரும் தமிழ் அரசியல் வாதியா நீங்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

அவர் நேரம் பார்த்து குத்து விட்டிருக்கிறார் என நினைக்கிறேன். காங்கிரஸ்காரர்களுக்கு இனிமேல் நண்பர்களாக இருக்கவேண்டிய தேவை இல்லைதானே..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

தமிழகத்தில் இருக்கு  மீதி.......

ஏற்கனவே கடந்த பல மாதங்களாக த.தே.கூ அமைப்பு இந்தியாவை விட்டு விலகத் தொடங்கி இருந்தது. இன்று சம்பந்தன் அதனை அறிக்கை மூலம் நிரந்தரமாக்குகின்றார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழுமாயின் மீண்டும் நெருங்குவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் எப்போதும் ஏமாத்ததது போல எல்லோ சம்பந்தன் ஐயா சொல்கிறார், இந்தியா ஏமாத்தாது இருந்தால்தான் ஆச்சரியம் ..      

எல்லாம் நன்மைக்கே.

  • தொடங்கியவர்

நேற்று

இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய இந்திய செய்தி .

இன்று

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று

இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய இந்திய செய்தி .

இன்று

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை .

 

காங்கிரஸ்ஐ விடவும்  கெட்டவன்கள் யாரோ இருந்துதான் காங்கிரஸ்ஐ வழி நடத்துகிறார்கள் போல இருக்கு ...------ ...

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

நேற்று

இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய இந்திய செய்தி .

இன்று

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை .

 

இல்லை, அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது 'மனித உரிமை மீறல்கள்' பற்றி என்று முழுமையான விசாரணை என்றே. போர்க் குற்றம் என்றோ சர்வதேச விசாரணை என்றோ குறிப்பிடப்படவில்லை. இந்தியா இம் முறை ஆதவளிக்காமைக்கு முக்கிய காரணமே சர்வதேச விசாரணை என்று இலேசாகக் குறிப்பிட்டு இருப்பதால்.

தமிழகத்தை ஒரு கணக்கா அவர்கள் எடுப்பதில்லை என்று தெரிகிறது.

 

சிரிலங்காவும், வடஇந்தியாவின் கொள்கையும் ஒன்று போல் தான் உள்ளது.

 

ஈழத்தமிழனுக்கு இங்க மதிப்பு இல்லை

இந்திய தமிழனுக்கு அங்க மதிப்பில்லை

 

சிங்கப்பூர் காரனும்  சிறிலங்காவுக்க்கு ஆதராவாதான் இருக்கான்.   அங்கயும் தமிழன் ,  எல்லா இடமும் இதே  கெதிதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தியா ஏமாற்றிவிட்டது

 

 

தமிழர் தரப்பிற்கு நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

//இந்தியா ஏமாற்றிவிட்டது - சம்பந்தன்//

 

ப்பூ.... இந்தியாவை ந‌ம்பிய‌ இவ‌ரெல்லாம்... ஒரு க‌ட்சித் த‌லைவ‌ர்.

கோ சன் என்பவர் எங்கே?

கடைசியில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் முன் வைத்த சர்வதேச சுயாதின விசாரணை என்னும் கோரிக்கையே கூட்டமைக்கு, தமிழர்களுக்கு கை கொடுத்துள்ளது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் இன்றும் நாளையும் இந்தியா தமிழர் விடயத்தில் துரோகத்தனமாகவே இருந்திருக்கிறது இருக்கிறது இருக்கும். மாற்றமே இல்லாததது. தமிழகத்து தமிழர்களாகட்டும்  தங்களைக் காத்துக் கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏமாற்றி விட்டது- சம்மந்தன்......

எல்லாருக்கும் வயசு போனதுக்கு பிறகு தான் உண்மைகளை ஒத்துக்கொள்ள மனசு வரும் போல

இது தெரிந்து தான் தலைவர் இந்தியாவை நம்பவே இல்லை கடைசி வரை....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஓரணியில். நல்ல விசயம். எட்டி நிற்பதே நலம்.

இந்தியா வாக்களிக்காமல் விட்டால் என்ன, எதிராக வாக்களித்து இருந்தால் என்ன தீர்மானம் நிறைவேறி இருக்கும்.. இந்தியாவின் தயவில்லாமல் (தொலைந்தது சனியன் போ) இனி அமெரிக்காவிற்கு வருங்காலங்களில் பல விடையங்களை நகர்த்த முடியும்.. தானே தன் மதிப்பை இழந்துள்ளது..எல்லாம் நன்மைக்கே.. உலகம் நரிகள், ஓ நாய்கள், பிணம் திண்ணி கழுகள் கூட்டுக்களை அடையாளம் கண்டுள்ளது.. சம்பந்தர் ஐயாவிற்கு எப்போதும் பகிடிதான்.. கூட்டாளிகளை ஏமாற்றிவிட்டார்கள் என்று குறை சொல்லகூடாது.

  • தொடங்கியவர்

நானோ விடுதலைப்புலிகள் அமைப்போ சமாதானத்திற்கும் அரசியல் தீர்விற்கும் தடையில்லை. நானும் புலிகள் அமைப்பும் அழிந்து போனாலும் கூட இந்தியா தமிழர் விடுதலைக்கு என்றைக்கும் முட்டுக்கட்டையாகவே இருக்கும் இதுதான் உண்மை. இதை காலம் உங்களுக்கு உணர்த்தும். எனவே நாம் போராடியே எமது விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

#தலைவர்_பிரபாகரன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொரு நாளில், இந்திய தேசத்தைப் பற்றி நான் 'யாழில்' இணைத்த கவிதை ஒன்று!

 

காலம் கடந்தும் வாழ்கிறது! :o

 

விந்திய மலைத்தொடரில்

அந்த அகத்தியமுனிவன் 

அடிபதித்த நாள் முதலாய்,

இந்திய தேசம்

எங்கள் தேசத்தைத் 

தங்கள் தேசத்துடன்

இணைத்துக் கொண்டது!

 

சோழ வள நாட்டின்

சோறுடைத்த வயல்களும்,

சேரநாட்டு யானைகளின்

செழிப்பான தந்தங்களும், 

பாண்டிய நாட்டின்

பசுமை மிக்க இலக்கியமும்,

இந்திய தேசத்தின் 

சொத்துக்களாகின. 

 

அரை குறையாய் வளர்ந்த

ஆரியமொழி, 

எங்கள் தமிழிடம்

கடன் வாங்கித் தன்னை

வளர்த்துக் கொள்ள, 

விலை போகாத வேதங்களும்

வேள்விகளும்,சாதிகளும்

எங்கள் சொந்தங்களாகின.

 

புறமுதுகு காட்டாத

புறநானுற்றுத் தமிழன்

இராமாயணத்தின் 

குரங்காக மாற,

கடாரம் வரை 

கப்பலோட்டியவன்

பிடாரிக்குக் கோவில் கட்டிக்

கும்பிடுகிறான்.

 

இந்தியாவின் கரங்கள்

இலங்கை வரை நீண்டு .

நந்திக் கடல் வரைக்கும்

எங்களைத் துரத்தின.

எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே

இரத்த வெறி கொண்டு

இராமாயணத்தின்

சுக்கிரீவன்களாகின.  

 

இந்திய தேசமே!

இறுதிச் சந்தர்ப்பம்.

துப்பவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

தொண்டைக் குழியில் நீ!.

ஆணையிட எங்களிடம்

ஆயுதங்கள் இல்லை.

 

எங்கள் தலை விதியை 

எங்களிடம் விட்டு விடு!.

உதவி வேண்டாம்

ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!.

உனது மௌனமே 

எங்கள் தேசத்தின்

விடி விளக்காய் இருக்கட்டும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழும் எட்டுக்கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் உணர்வை மதிக்காது நடந்திருக்கின்றது ........  இதன் விளைவாக .... இந்தியாவின் இறையாண்மைக்கு பாதகம் வரப்போகின்றது  என்பதினை உறுதியாக நம்பலாம்.

ஹிந்திய தேசம் எப்போதும் எமக்கு எதிரியே . நாம் அடுத்த கட்டமாக ஐநா மேற்பார்வையில் வடக்கு கிளைக்கிட்கு ஒரு இடைக்காலச் சபையை அமைக்க முழு மூச்சுடன் முயற்சி செய்யவேண்டும் அதற்கு அனைத்து தமிழ் பேசும் தரப்பினரும் இயங்க வேண்டும் . இம்முறை எமக்கு எதிரா வாக்களித்த நாடுகளுக்கு பாகிஸ்தான் ,மாலை தீவு போன்ற நாடுகளுக்கு தமிழ் நாட்டு இஸ்லாம் அமைப்புகள் ஊடாக எமக்கு ஆதரவு திரட்ட வேண்டும், கியூபா ,ரசியா போன்ற கம்யுனிச நாடுகளுடன் இந்திய ,தமிழ் நாட்டு கம்யுனிச , மார்க்சிச கட்ச்சிகள் ஊடாக எமக்கு ஆதரவு திரட்ட வேண்டும் இவை இந்த ஆண்டு செய்து முடிக்க வேண்டிய வேலைகள் . இன்னும் நாம் நித்திரை கொண்டா எமது இனத்தை எந்த கடவுளாலும் காப்பாற்ற  முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏமாற்றிவிட்டது என்று சொல்லும் சம்பந்தர் ,இந்தியா உதவி தேவை இல்லை அல்லது இனி இந்தியா போகமாட்டன் என்று சொல்லுவாரா ?

 

அமெரிக்கா கொண்டுவரும் பிரேணையை ஆதரிக்க போவதாக தமிழர் தரப்பிற்கு இந்தியா வாக்கு வேறு கொடுத்திருந்தது .பிரேரணையில் செய்யபட்ட மாற்றம் ,அதில் இருக்கும் இலங்கைக்கு எதிராக இருக்கும்  கடும்போக்கு இந்தியாவிற்கு பிடிக்கவில்லை .போர் குற்றத்தை விட இலங்கையில் தனது நலன் பற்றித்தான் இந்தியாவின் அக்கறை .இலங்கை அரசை வெருட்ட தான் இந்தியா நினைக்கின்றது தண்டிக்க அல்ல .

தன்னை விட்டு மேற்கு நாடுகள் பிரச்சனையை கையில் எடுப்பது இந்தியாவிற்கு விருப்பம் இல்லை எனவே தனது நிலையை மாற்றிவிட்டது .

இது சர்வதேச அரசியலின் தமது பிராந்தியத்தில் தமது பலம் பற்றி நிரூபிக்கும் பல பரீட்சை .இந்தியா இப்படித்தான் நடக்கும் தன்னை மீறி சர்வதேசம் இலங்கையில் எதுவும் செய்ய முடியாத நிலைமையையும் உருவாக்கும் .பொறுத்திருந்து பாருங்கள் .

 

இந்தியா அன்றில் இருந்து இன்று வரை எம்மை ஏமாற்றுகின்றது என்று கத்துவது அரசியல் கத்துகுட்டித்தனம் . இந்தியா எமக்கு உதவுவதும் உதவாமல் விடுவதும் அதன் தேவையை பொறுத்துத்துதான்.

அரசியல் தலைவர் தொட்டு இயக்க தலைவர் வரை சிங்களவன் அடிக்க ஓடிப்போனது இந்தியாவிற்குத்தான் , இது தான் எமது அரசியல் யதார்த்தம். இது இந்தியாவிற்கு நூறு வீதம் தெரியும் .

 

(வங்கம் தந்த பாடம் எழுதி முப்பது வருடங்களுக்கு மேல் மக்களே இன்னமும் அரிச்சுவடியில் நிற்காதீர் )

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.