Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நனையாத மார்பு கச்சைகள்...

Featured Replies

ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது
வேப்பங்கிளையில் தூளி..,

ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில்
கிளைநிரப்பிய கொய்யா..,

யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன
யாழும் குழலும்..,

விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர்
இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி..,

புள்ளதாச்சி குழிகளின் சாபம்
முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி..,

மழைநீரால் ஒளிந்து கொள்ளும்
பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,

சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ
வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ..,

விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர்
முகவரி தொலைத்த விடுமுறைகாலம்..,

மழைநீரை வெறித்தபடி கவலைகளில்
மிதக்கின்றன சில காகிதங்கள்..,

புதுவர்ண பூச்சு அலங்கோலம்
தூரிகை மாயம் சுவற்றில்..,

மதிப்பிழந்த சில்லறை காசுகள்
அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்..,

பால்கடி தட சுகயேக்கம்
நனையாத மார்பு கச்சைகளுக்கு....


~ ராஜன் விஷ்வா

Edited by ராஜன் விஷ்வா

  • Replies 54
  • Views 7.2k
  • Created
  • Last Reply

வித்தியாசமாக ஹைக்கூ பாணியில் கவிதை எழுதியுள்ளீர்கள்.  ஒரு மரத்தில் தனித்து நின்று கூவும் ஒற்றைக் குயிலின் சோகம் போன்று இருக்கின்றது அனைத்து வரிகளையும் வாசிக்கும் போது எழும் மனவுணர்வு.



மழைநீரால் ஒளிந்து கொள்ளும்
பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி..,



 

 

இவ் வரிகள் மட்டும் ஒவ்வாமல் இருக்கின்றன போன்று எனக்கு தோன்றுகின்றது. மழை நீரில் நிரம்பிக் கொள்ளும் பழைய கொள்ளைப்புற நீர்த்தொட்டி பின் எவ்வாறு ஒளிந்து கொள்ளும் என்ற கேள்வி எழுகின்றது. நிரம்பலின் பின் ஒளிவு சாத்தியமில்லையே...?

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்

வித்தியாசமாக ஹைக்கூ பாணியில் கவிதை எழுதியுள்ளீர்கள். ஒரு மரத்தில் தனித்து நின்று கூவும் ஒற்றைக் குயிலின் சோகம் போன்று இருக்கின்றது அனைத்து வரிகளையும் வாசிக்கும் போது எழும் மனவுணர்வு.

இவ் வரிகள் மட்டும் ஒவ்வாமல் இருக்கின்றன போன்று எனக்கு தோன்றுகின்றது. மழை நீரில் நிரம்பிக் கொள்ளும் பழைய கொள்ளைப்புற நீர்த்தொட்டி பின் எவ்வாறு ஒளிந்து கொள்ளும் என்ற கேள்வி எழுகின்றது. நிரம்பலின் பின் ஒளிவு சாத்தியமில்லையே...?

இந்தமுறை நீங்கள் கூறியபடி அதிக இடைவெளிகள் விட்டு எழுதியுள்ளேன்.

சிறிய வயதில் ஒளிந்து விளையாடும் போது ஒளிந்து கொள்ளும் இடங்களில் ஒன்று கொள்ளைபுற தொட்டி.

சிறுவர்கள் இல்லாத வீட்டில் நீர்த்தொட்டி தன்னையே ஒளித்து கொள்கிறது இங்கு.

கருத்து பகிர்விற்க்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகளண்ணா... :)

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

நிற்சயம் நிறைய எழுதுவேன் யாழில். அன்பிற்கு நன்றி கிருபன் அண்ணா :)
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ராசா  :) 

ஆழ்ந்து உணரக் கூடியவாறு நுணுக்கமாக காட்சிகளை வெளிப்படுத்துகின்றது உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.

 

சிறிய வயதில் ஒளிந்து விளையாடும் போது ஒளிந்து கொள்ளும் இடங்களில் ஒன்று கொள்ளைபுற தொட்டி.

சிறுவர்கள் இல்லாத வீட்டில் நீர்த்தொட்டி தன்னையே ஒளித்து கொள்கிறது இங்கு.

 

 

விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடிகின்றது.  கொல்லைப்புற காட்சிகளில் இருந்து ரொம்பத்தூரம் தள்ளிப்போய்விட்டோம்.

 

அழகான . அருமையான கவிதை..... வாழ்த்துக்கள்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு.. :huh: என்ன மீனிங்கு?? :D

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

விளங்காட்டி ஒரு பச்சையை குத்திவிடுங்கோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விளங்காட்டி ஒரு பச்சையை குத்திவிடுங்கோ . :icon_mrgreen:

இதுவும் ஒரு விளையாட்டு ம்..ம்                  மற்றபடிகவிதை நன்றாயுள்ளது வாழ்த்துக்கள் ரா.விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

 

220px-A_writing_stick_%28%E0%AE%95%E0%AE

 

பலப்பம் என்பது, சிலேட்டில்... எழுத பாவிக்கப் படும் பென்சில்.

  • தொடங்கியவர்

வித்தியாசமான கவிதைதான். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ராசா :)

நன்றி ராசா :D

ஆழ்ந்து உணரக் கூடியவாறு நுணுக்கமாக காட்சிகளை வெளிப்படுத்துகின்றது உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்.

விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடிகின்றது. கொல்லைப்புற காட்சிகளில் இருந்து ரொம்பத்தூரம் தள்ளிப்போய்விட்டோம்.

வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா :)

என்ன செய்வது பழமைகள் எல்லாம் தொலைத்து கொண்டிருக்கிறோமே :(

அழகான . அருமையான கவிதை..... வாழ்த்துக்கள்..... :)

நன்றிகளக்கா :)

நல்லாயிருக்கு.. :huh: என்ன மீனிங்கு?? :D

குரு எனக்கு தெரியும்... சிஷ்யபிள்ளையின் அறிவை பரிசோதித்து பார்க்கிறீர் என்று..., :D

பிள்ளையில்லா வீட்டின் வெறுமைகளே பாடுபொருள் :)

  • தொடங்கியவர்

சில சொற்கள் எனக்கு விளங்கவே இல்லை. ஆராவரமற்று , பலப்பத்தில் இந்த இரண்டையும் விளக்கமாச் சொல்லுங்கோ.

ஆராவரம் பிள்ளைகள் கூடும் போது எழும் கூச்சல், உற்சாகம். பலப்ப்ம் சிலேட்டு குச்சி :) வழக்கு சொற்கள் இங்கு...

இதுவும் ஒரு விளையாட்டு ம்..ம் மற்றபடிகவிதை நன்றாயுள்ளது வாழ்த்துக்கள் ரா.விஷ்வா

நன்றியண்ணா :)

220px-A_writing_stick_%28%E0%AE%95%E0%AE

பலப்பம் என்பது, சிலேட்டில்... எழுத பாவிக்கப் படும் பென்சில்.

இதே தான். சிறுவயதில் கனக்கா இதை தின்ன அனுபவமுண்டு. இணைப்பிற்கு நன்றிகள் சிறியண்ணா :)
  • கருத்துக்கள உறவுகள்

இதே தான். சிறுவயதில் கனக்கா இதை தின்ன அனுபவமுண்டு. இணைப்பிற்கு நன்றிகள் சிறியண்ணா :)

 

விஷ்வா.... நீங்கள் பலப்பத்தை தான் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்கள்,

நாங்க, சிலேட்டையே.... சாப்பிட்டு இருக்கிறம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விளங்கினது...பச்சை குத்தியுள்ளேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

பால்கடி தட சுகயேக்கம்

நனையாத மார்பு கச்சைகளுக்கு....

 

 

இந்தக் கவிதைக்கு.. அதிக ஆக்கள் ஆஆஆஆ என்று கொண்டு வர..வர காரணம்.. இது தான். அதாவது தலைப்பும்.. இந்தப் பகுதியும்.

 

நமக்கு இது புரியவே இல்ல...???!

 

பொழிப்புரை தாருங்கள் கவிஞரே..!!!

 

அப்பதான் யோசிக்கலாம்.. பச்சை போடுறதா இல்லையான்னு..??! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம நிலைதான் பலபேருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாபா பெரிய ரோதனையாய்க் கீது...! 

 

நல்லாக் கேட்டுக்கோ...!!

 

அந்தா அந்த வேப்ப மரத்தில ஒரு ஏணை சும்மா கிடக்கு.

அங்கின யாருமில்லை நைனா !

 

கொய்யா மரத்தில எம்மாம் பழங்கள் கீது.

ஒரு குருவிங் காட்டியும் துன்ன வரேல்ல..!

 

நம்ம சரசுவதி கையில கிடக்குமே அந்த உலக்கையும் ,

கிட்டினன் ஊதுற குழலும் தேமென்னு கிடக்கு...!

 

பெரிய பெரிய சாமிங்கல்லாம் குறட்டை வுடுது,

அய்யரு தம்பாட்டுக்கு கத்திக்கினூ இருக்கார்.

 

இங்கின புளியங்கொட்டைங்க பாண்டி பலகைக்கு பக்கமா

பப்பரக்கான்னு கிடக்கு..!

புள்ளத்தாச்சிங்க பாண்டி ஆடக்கூடாது ,ஆங் சொல்லிப்புட்டன்.

 

கொல்லைக்குள்ளாற வாட்டர் டாங்கு உந்தச் சின்னபுள்ளைங்க

தொந்தரவில்லாமல் ஹாயாய் கிடக்கு .  யாரும் பாக்கேல்ல..!

 

நம்ம சிறிப்பய  சிலேட்டுக் குச்சிய பாதியை கடிச்சுத்துன்னுட்டு

அதால  அ னா , இ னா ன்டு ஏதொ கிறுக்கிறாப்பல...!

 

இந்தாபாரு ஒரு லீவு லட்டர் அட்ரச தொலைச்சுட்டு அம்போன்னு கிடக்கு..!

வேணுன்னா நீ எடுத்துக்கோ...!

 

மானம் பொத்துக்கிட்டு கொட்டுது , இந்த பேப்பருங்க எல்லாம்

வெள்ளத்தில இஸ்த்துக்கினு நவுருது..!

 

சுவத்தில புச்சு புச்சா பெயின்ட்டு பூசி

பீலா உடுறாங்க டோய்...!

 

அங்கின செல்லாக் காசுங்க செதறிக் கிடக்கு,

ஒரு குவாட்டருக்கு பிரயோசனமில்லை...!

 

நம்ப கடோசிக்கு மூனுவயசாகுது, அதுக்குப் பிறகு

நம்ம சிவப்பி வயத்தில ஒரு பூச்சி புழு இல்ல,

மாருல பாலும் வத்திட்டுது, அதுதான் உட்சட்டையை

கொடில போட்டிருக்கு, உந்தப் பொடி எங்கன நின்னு

பாத்துதோ தெரியாது, பார்திபன் மாதிரி

கவிதை எழுதிப் போட்டுது...!  :D :D

 

 

எதோ நம்ம அறிவுக்கு  விளங்கினது...!! :lol::D

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. இப்ப மறுபடியும் வாசித்துப் பார்த்தேன்.. அருமையாகப் புனையப்பட்டுள்ளது.. இல்லையில்லை.. வனையப்பட்டுள்ளது கவிதை.. :D விளக்கத்திற்கு நன்றி சிஷ்யா.. :huh::D

சுவியண்ணா.. உங்கட பொழிப்புரையும் அபாரம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொண்ணூறாம் ஆண்டீல் ஒருமாதகாலம் எங்களுடைய ஊருக்குள் புகுந்த இராணுவம் ஒருமாதத்தின் பின் மண்டைதீவுக்கு சென்று முகாமிட்டனர். அந்த வேளையில் நான் என் உறவுகளுடன் ஊருக்குள் போய் வீட்டை பார்க்கவும் ஏதாவது பொருட்கள் இருந்தால் பொறுக்கி வரவும் சென்றேன். ஓரு ஜந்து நிமிடந்தான் அங்கு நிற்கக்கூடியதாக இருந்தது. விஸ்வாவின் இக்கவிதையை வாசிக்கும் பொழுது என் மனதில் நான் அன்று பார்த்த அக் காட்சி நிழற்படமாக ஓடியது. நல்லதொரு கவிதை. சில எழுத்துப் பிழைகள்தான் வாசிப்பவர்களுக்கு விளக்கமின்மையைக் கொடுத்திருக்கிறது. உதாரணமாக முதல் வரியில் ஆளரவமற்ற என்று வரும் என நினைக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நைனா :D
 கவிதையும் சுவி அண்ணாவின் :D பொழிப்புரையும் மிக்க நன்று

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளும் மிளிர்கின்றன கவிஞ்ஞா ...

  • தொடங்கியவர்

விஷ்வா.... நீங்கள் பலப்பத்தை தான் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்கள்,

நாங்க, சிலேட்டையே.... சாப்பிட்டு இருக்கிறம். :D:lol:

கரும்பலகையை சாப்பிட்ட நந்தண்ணணே அமைதியாக இருக்கிறார். :D
  • கருத்துக்கள உறவுகள்

இன்னாபா பெரிய ரோதனையாய்க் கீது...! 

 

நல்லாக் கேட்டுக்கோ...!!

 

அந்தா அந்த வேப்ப மரத்தில ஒரு ஏணை சும்மா கிடக்கு.

அங்கின யாருமில்லை நைனா !

 

கொய்யா மரத்தில எம்மாம் பழங்கள் கீது.

ஒரு குருவிங் காட்டியும் துன்ன வரேல்ல..!

 

நம்ம சரசுவதி கையில கிடக்குமே அந்த உலக்கையும் ,

கிட்டினன் ஊதுற குழலும் தேமென்னு கிடக்கு...!

 

பெரிய பெரிய சாமிங்கல்லாம் குறட்டை வுடுது,

அய்யரு தம்பாட்டுக்கு கத்திக்கினூ இருக்கார்.

 

இங்கின புளியங்கொட்டைங்க பாண்டி பலகைக்கு பக்கமா

பப்பரக்கான்னு கிடக்கு..!

புள்ளத்தாச்சிங்க பாண்டி ஆடக்கூடாது ,ஆங் சொல்லிப்புட்டன்.

 

கொல்லைக்குள்ளாற வாட்டர் டாங்கு உந்தச் சின்னபுள்ளைங்க

தொந்தரவில்லாமல் ஹாயாய் கிடக்கு .  யாரும் பாக்கேல்ல..!

 

நம்ம சிறிப்பய  சிலேட்டுக் குச்சிய பாதியை கடிச்சுத்துன்னுட்டு

அதால  அ னா , இ னா ன்டு ஏதொ கிறுக்கிறாப்பல...!

 

இந்தாபாரு ஒரு லீவு லட்டர் அட்ரச தொலைச்சுட்டு அம்போன்னு கிடக்கு..!

வேணுன்னா நீ எடுத்துக்கோ...!

 

மானம் பொத்துக்கிட்டு கொட்டுது , இந்த பேப்பருங்க எல்லாம்

வெள்ளத்தில இஸ்த்துக்கினு நவுருது..!

 

சுவத்தில புச்சு புச்சா பெயின்ட்டு பூசி

பீலா உடுறாங்க டோய்...!

 

அங்கின செல்லாக் காசுங்க செதறிக் கிடக்கு,

ஒரு குவாட்டருக்கு பிரயோசனமில்லை...!

 

நம்ப கடோசிக்கு மூனுவயசாகுது, அதுக்குப் பிறகு

நம்ம சிவப்பி வயத்தில ஒரு பூச்சி புழு இல்ல,

மாருல பாலும் வத்திட்டுது, அதுதான் உட்சட்டையை

கொடில போட்டிருக்கு, உந்தப் பொடி எங்கன நின்னு

பாத்துதோ தெரியாது, பார்திபன் மாதிரி

கவிதை எழுதிப் போட்டுது...!  :D :D

 

 

எதோ நம்ம அறிவுக்கு  விளங்கினது...!! :lol::D

 

இப்ப தான்.... கவிதை விளங்கினது.

சுவி, நீங்கள் சென்னையில் வசித்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

சென்னைப் பாசையில், எழுதிய  பொழிப்புரை... சூப்பரு நைனா. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.