Jump to content

காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nice+guy+kdrama+2012+still+%EC%84%B8%EC%

ஊரில் இருந்து இப்ப தான் ஸ்ருடன் என்று லண்டனுக்கு வந்தவள்.. லண்டனில்.. எங்கட ஆக்கள்.. அகதி என்று வந்து வாழுற ஆடம்பர வாழ்க்கையை பார்த்திட்டு.. ஸ்ருடன்ரா இருந்து.. சீரழிவு தான்.. நானும் அகதி ஆவம் என்று.. லோயர் சொல்லிக் கொடுத்த பொய்களோடு அகதி அந்தஸ்துக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் (ஹோம் ஆபிசில்) ஒப்புவித்த பொய்கள் வெற்றி பெறும் என்ற ஒரே நம்பிக்கையில்... பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா.

அப்போது... ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அவசரஅவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு கிண்டி.. ஒருவாறு போனை வெளியே எடுத்தவள்.. வந்திருந்த மெசேச்சை பார்த்ததுமே.. அட இந்த நாயா.. இவன் தொல்லை தாங்க முடியல்லையே.. இவனை எப்படி கட் பண்ணுறது.. ஊரில இருக்கேக்க தான் இவன் தொல்லைன்னா.. இங்க வந்துமா. ஒரே ஹாட் சிமைலியா கலர் கலரா அனுப்புறானே.. இவனுக்கு என்றே தினமும் அப்டேட் செய்து விடுறாங்களோ... வரிசையா அடிக்கிட்டே போறானே... கறுமம் பிடிச்சவன்.. என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே.. தனக்கு உடனவே விசா கிடைப்பது போலவும்... தன் வருங்கால லண்டன் வாலிபன் தன்னை காதலிக்க வருவது போலவும்.... அவர் எப்படி எல்லாம் இருக்கனும் என்றும்.. கனவில் மூழ்கத்தொடங்கினாள்.. ஜீவிதா.

ஜீவிதா.. அழகு என்றாலும்.. சினிமாப் பைத்தியமும் கூட. சினிமா நடிகைகள் போல அலங்கரிப்பதில் அவளுக்கு அலாதிப் பிரியம். அலங்கரிப்பது மட்டுமன்றி.. சினிமா நடிகர்களோடு தன் போட்டோவை இணைத்து வைத்து.. சோடிப் பொருத்தம் பார்ப்பதில் இருந்து அவளுக்கு எல்லாமே சினிமா தான்.

சூரியா.. விஜய் மாதிரி இல்லை என்றாலும்.. சிவகார்த்திகேயன் ரேஞ்சில ஒருத்தன். ஆறடி உயரம்.. சிக்ஸ் பக் வைச்ச சிக்கான உடம்பு.. அப்பப்ப 5 நட்சத்திர விடுதியில்.. தண்ணி அடிக்கிற.. பார்ட்டி. நல்ல கார்.. அழகான வீடு.. என்று கற்பனைக் குதிரையை தாறுமாறாக ஓட்டிக் கொண்டே போனவள்..

மீண்டும் ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அந்த நாயாத்தான் இருக்குமோ... சனியன் தொலைஞ்சு போகுதில்லையே என்று திட்டிக்கொண்டே மெசேச்சை பார்த்தவள்..ஹோம் ஆபிஸ் அவளை அகதி விண்ணப்பம் தொடர்பில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் தேதியை குறிப்பிட்டு அனுப்பி இருந்த மெசேச் என்று கண்டதும்... என்ன இவ்வளவு கெதியா செய்யுறாங்கள்.. விசா உடன தரப்போறாங்களோ.. என்ற எண்ணிக் கொண்டே.. தனது லோயருக்கு விசயத்தை போன் போட்டுச் சொல்லி முடித்தவள்...

மீண்டும்.. போனை எடுத்து அவனுக்கு ஒரு ரெக்ஸ் போட்டாள். இத்தோடு என்னை தொந்தரவு செய்வதை விட்டிடு. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நீ.. ஊரில இருந்து எவளை என்றாலும் மேய். எனக்கு கவலை இல்லை. என்னை விட்டிடு. எனக்கு உன்னில காதலும் இல்லை.. கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லி அவளைப் பொறுத்த வரையில் அவனுக்கான இறுதி மெசேச்சை அனுப்பிய திருப்தியில் போனை கைப்பையில் போட்டாள்.

சிறிது நேரத்தில் போன் வைபர்.. சிணுங்கத் தொடங்கியது. யார்.. அவனாத்தான் இருக்கும். எடுத்துக் குடுக்கிற குடுவையில.. எனி இஞ்சால பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டான்.. என்று போனை.. பையில் இருந்து ஆத்திரத்தோடு வெளியே இழுத்து எடுத்தவள்.. வைபரின் பொத்தானை அழுத்தி.. ஹலோ என்றதும்..

என்னடி.. லண்டனுக்கு போனதும்.. உனக்கு பெரிய மகாராணி என்ற நினைப்போ. இங்க ஊருக்க இருக்கேக்க.. நீதானேடி வந்து ஐ லவ் யு சொல்லி.. என் வாழ்க்கையே நாசம் பண்ணினனீ. இப்ப என்னடி பெரிய பத்தினி வேசம் வேண்டிக் கிடக்கு உனக்கு. கடைசியும் முதலுமா ஒன்று சொல்லுறன் கேள்.. உனக்கு காதல்.. கலியாணம்.. இதெல்லாம் பொழுதுபோக்காக இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன். ஏன் இந்த உலகத்தில..மரம் செடி கொடியை காதலிக்கிறவன் இல்லையா. அப்படி உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன். ஆனால்.. அதுக்காக.. ஏதோ உனக்குப் பின்னாடி வழிஞ்சு கொண்டு வருவன் என்று மட்டும் நினைக்காதே. நீயும் உன்ர லண்டனும்..அழகும்.. திமிரும் உன்னோட. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்ல. நான் ஊரேட இருந்தாலும்.. நானா வந்து உன்னைக் காதலிக்கல்ல. நீயா வந்தா... நீயா போறா. அதுக்குள்ள என்னடி.. ரெக்ஸ்.. வேண்டிக் கிடக்கு ரெக்ஸு. லண்டனுக்கு போனதும்.. ஊரில இருந்தது மறந்து போச்சோ. உனக்கொரு காலம் வந்தா.. எனக்கும் ஒரு காலம் வரும்டி. அப்ப தெரியும்.. என்று அவளை பேசவிடாமலே முழங்கித் தள்ளியவன்.. தானே வைபரை கட் பண்ணியும் கொண்டான்.

அட.. இதைத்தானே நானும் எதிர்பார்த்தான். போடா நாயே. யாருக்கு வேணும் எனி உன்ர காதலும்.. கத்தரிக்காயும்... என்று அவன் மீதான வெறுப்பை இன்னும் வளர்த்துக் கொண்டு அவனை விட்டு மனதளவில்... தூர விலகி இருக்க முனைந்தாள் ஜீவிதா.

இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்...

ஜீவிதா.. ஜி பி இடம்.. மருத்துவ அறிக்கைக்காக வந்திருந்தாள். ஜி பி மருத்துவ அறிக்கையை கையளிக்க அவளை உள்ள கூப்பிட்டிட்டு.. நீங்கள் இப்ப 3 மாத கர்ப்பிணியா இருக்கிறீங்க... ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமானதா எங்கட பதிவில இல்லை. இதைப் பற்றி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா என்றார்...?! ஜி பியும் தமிழ் என்பதால் அவள் மீது கூடுதல் அக்கறை காட்டி விசயத்தை அக்கறையோடு அணுகினார்.

அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப.

இதைக் கேட்டு ஜி பி அவளைத் தேற்றியபடி.. இப்ப இந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி தான் நீங்கள் யோசிக்கனும். எனி கருவை கலைக்க எல்லாம் முடியாது. அது றிஸ்க். நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறதால உங்களை ஊருக்கு பிடிச்சும் அனுப்ப ஏலாது... அந்த விசயத்தில நீங்கள் லக்கி.

இல்லை டொக்டர். விசா நிராகரிக்கப்பட்டிருந்தாலும்.... என்ர லோயர் அப்பீல் பண்ணி இருக்கிறார். கேஸ் கோட்டுக்கு வரப் போகுது. அதுக்கு சப்போட்டா இந்த மருத்துவ அறிக்கை உதவும் என்று தான் எடுக்க வந்தனான். லோயரைட்டும் விசயத்தைச் சொல்லி இருக்கிறன். அவர் விசா அலுவலை முதல்ல பார்ப்பம். பிறகு மற்றதைக் கவனிப்பம் என்று சொல்லி இருக்கிறார். என்ர அவசரத்தால சொந்தக்காரரும் என்னோட அவ்வளவு நல்லமில்லை. இருந்தாலும்.. அப்பா அம்மாவுக்காக சமாளிக்கினம்... என்று தன் மனப்பாரத்தை டொக்டரிடம் கொட்டித் தீர்த்தவள்.. கண்களால் வழிந்த கண்ணீரைத் துடைத்தப்படி.. ஜிபியிடம் இருந்து விடைபெற்றாள்.

அப்போது.. நீண்ட காலத்தின் பின்.. வைபர் ஒலித்தது. ஆச்சரியத்துடன் அதன் பொத்தானை அழுத்தி காதில் வைத்த போது.. அவன்.. தான் ஊரில் இருந்து லண்டனுக்கு வந்திருப்பதை ஜீவிதாவிடம் சொன்னான். வசதி என்றால் வந்து நேரே சந்திச்சு கதைப்பதாகவும் சொன்னான். ஜீவிதா மறுமுனையில் மெளனமாக.. பேச்சின்றி.. ம் ம்.. ங்களால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவள்.. ஒரு கட்டத்தில்.. கதறி அழுதாள்.

அவளின் அழுகுரல் கேட்டவன்.. என்னாச்சு ஜீவிதா. என்ன பிரச்சனை. ஏன் அழுகிறீங்க. நீங்க போட்ட ரெக்ஸில கோபத்தில தான் அப்ப திட்டிட்டு போயிட்டன். பிறகு யோசிச்சு பார்த்தனான். நான் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சு கொண்டன். சும்மா ரெக்ஸில வைபரில் சொறி சொல்லி சரிவராது. உங்களுக்கு அதிர்ச்சி தர லண்டனுக்கே வந்து.. நேரில சந்திச்சு.. விசயத்தை கதைக்கனும்.. என்று முயற்சி செய்து தான் இப்ப அதில வெற்றி பெற்றிருக்கிறன். இப்ப போய் ஏன் அழுகிறீங்க என்றான்.. கவலை தோய்ந்த குரலில்.

அதுக்கு ஜீவிதா.. எல்லாம் முடிஞ்சி போச்சு வசந்த். நான் இப்ப முன்னைய ஜீவிதாவா இல்ல. நீங்க காதலிச்ச ஜீவிதாவாவும் இல்லை. என்னை மறந்திடுங்க.. என்று விம்பி விம்பி அழுதுகொண்டே சொல்லி முடித்து.... போனை கட் பண்ணினாள் ஜீவிதா.

(எம்மவர் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றைத் தழுவிய கற்பனைப் பாத்திரங்கள் நிறைந்த கதை.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கலாச்சாரம் அழியுதே..... :D பாதுகாக்க ஒடிவாங்கோ.....நெடுக்ஸ் நீங்கள் அவனில்லை தானே :D

Link to comment
Share on other sites

அதெப்படி? "காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)" ...! வயித்திலை குட்டி வந்தால் காதலுக்கு மரியாதையில்லாமல் போய்விடும் என்று குட்டிக்கதைதான் எழுதமுடியும்!. பெரியகதை எழுதமுடியாது!. "நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன்." என்ற வசந்த் போன்ற உண்மைக் காதலர்களின் காதலுக்குக் காதலே மரியாதைசெய்யும்.  "உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன்" என்பவன், அவள் வயிற்றில் குழந்தை என்று அறிந்தாலும் வாழ்வுகொடுக்கத் தயங்கமாட்டான். நம்பலாம்.  :wub:  :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கலாச்சாரம் அழியுதே..... :D பாதுகாக்க ஒடிவாங்கோ.....நெடுக்ஸ் நீங்கள் அவனில்லை தானே :D

 

கலா (சாரம்) கட்டுவதை கிணற்றடியில் இருந்து பாத்ரூமுக்கு குளிக்க இடம்பெயர்ந்ததோடு கைவிட்டாச்சு..! :lol:

 

அவனா இருக்காமல்.. தப்பிட்டமில்ல. நாங்க சுழியன்கள். :lol::icon_idea:

 

அதெப்படி? "காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)" ...! வயித்திலை குட்டி வந்தால் காதலுக்கு மரியாதையில்லாமல் போய்விடும் என்று குட்டிக்கதைதான் எழுதமுடியும்!. பெரியகதை எழுதமுடியாது!. "நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன்." என்ற வசந்த் போன்ற உண்மைக் காதலர்களின் காதலுக்குக் காதலே மரியாதைசெய்யும்.  "உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன்" என்பவன், அவள் வயிற்றில் குழந்தை என்று அறிந்தாலும் வாழ்வுகொடுக்கத் தயங்கமாட்டான். நம்பலாம்.  :wub:  :rolleyes:

 

 

யாரோ.. பார்த்துப் பார்த்து..தோட்டம் வைக்க.. எவனோ.. நாற்று நடுறது.... இன்னொருவன்.. அறுவடை செய்யுறது.. என்ற கதையாக் கிடக்கு.. காதலுக்கு காதல் செய்யும் மரியாதை..!!!

 

அதிலும் காதலுக்கு மரியாதை இல்லை என்பது மேல்.. பாஞ்ச் அண்ணா. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரோவின் கதாப்பாத்திரம் நெடுக்கை மாதிரிக் கதைக்குதே................ அது நெடுக்கர் இல்லைத்தானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இது நானும் அறிஞ்ச கதைதான். நல்லாருக்கு நெடுக்ஸ் எழுதினவிதம். ஆனைக்கொருகாலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமெண்டு ஊரிலை சொல்லுவாங்கள். முடிவை சொல்லாமல் சட்டுபுட்டெண்டு முடிச்சதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :D அப்புறம் ஜீவிதாவுக்கு என்னாச்சுப்பா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அரைச்சதையே திரும்ப,திரும்ப அரைச்சுக் கொண்டு:D...ஏமாத்தினவளை இன்னொருத்தன் ஏமாத்துவான்...கமான் மான் மூவோன்:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரோவின் கதாப்பாத்திரம் நெடுக்கை மாதிரிக் கதைக்குதே................ அது நெடுக்கர் இல்லைத்தானே :lol:

 

இதில் இருந்து தெரிவது என்ன.. நெடுக்கு எங்கட சமூகத்தில நடக்கிறதை தான் கதைக்கிறார்.. என்பது. :):lol:

 

அட இது நானும் அறிஞ்ச கதைதான். நல்லாருக்கு நெடுக்ஸ் எழுதினவிதம். ஆனைக்கொருகாலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமெண்டு ஊரிலை சொல்லுவாங்கள். முடிவை சொல்லாமல் சட்டுபுட்டெண்டு முடிச்சதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :D அப்புறம் ஜீவிதாவுக்கு என்னாச்சுப்பா? :D

 

காதலுக்கு மரியாதை இல்லை எனும் வரை கதையைச் சொல்லிட்டமில்ல. எனி ஜீவிதா எக்கேடு கெட்டாலும்.. அவனுக்கு என்ன..??! கதையைச் சொன்ன நமக்குத்தான் என்ன. :lol:

இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அரைச்சதையே திரும்ப,திரும்ப அரைச்சுக் கொண்டு :D...ஏமாத்தினவளை இன்னொருத்தன் ஏமாத்துவான்...கமான் மான் மூவோன் :D:lol:

 

காலம் காலமாக மா என்னவோ.. கோதுமையில இருந்து தான் வருகுது. அதுவே.. கலவையில வித்தியாசமாகி.. இப்போ.. வெவேறு திண்படங்கள் ஆகல்ல. அதுபோல.. நிகழ்கால அம்சங்களை கலந்து வரும் புதிய இளைய சமூகத்தின் நடப்பை பிரதிபலிச்சிருக்குது.. குட்டிக்கதை. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்க் என்றால் என்ன நெடுக்ஸ் ?

 

Gang ?

 

அதே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் சந்தேகம் ..... சீச்சீ நெடுக்கா இருக்கவே முடியாது :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின்ர வயசுக்கு இறங்கிக் கதையைப் படிச்சுப் பார்த்தேன்!

 

 கதை நல்லாயிருக்கு ! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப.

 

 
ஆடுமாடு கோழி நாய்பூனை எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டே கொஞ்சநேரம் சிற்றின்பத்திலை இருக்குதுகள்?   :icon_idea:
 
அதுமாதிரி ஜீவிதாவை அனுபவித்தவனும் நெடுக்கரை மாதிரி பேய்காய்... :D
 
 ஜீவிதாவை மாதிரி ஆயிரம் ஃபிருகள் வரும் போகும்..... அப்பப்ப அனுபவிக்கணும்...அப்பிடியே...அடுத்த ஃபிகரை செட்டப்பண்ணணும். :lol:
அதுக்கு...அந்த விசயத்துக்கும் போய் கலியாணம் கட்டுவாங்களா என்ன????  :icon_idea:

கதை நல்லாக இருக்கின்றது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவிதா வெள்ளையா கருப்பா ஸார்?

Link to comment
Share on other sites

ஜீவிதா இனிமேல் குழந்தை வளர்ப்பு நிதி (child care) என்று அப்பாக்காதலனிடம் வாங்கி லண்டனில் வாழலாம்.. :unsure: எல்லாம் திட்டப்படிதான் நடந்திருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...


மற்றவனையும் ஏமாற்றவில்லை, நல்லபிள்ளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் சந்தேகம் ..... சீச்சீ நெடுக்கா இருக்கவே முடியாது :lol: :lol:

 

நாங்க எல்லாம் ஆழம் அறிஞ்சு காலை விடுற காளைங்க. இப்படி சீப்பான கேஸிட்ட எல்லாம் மாட்டமில்ல. :lol::icon_idea:

நெடுக்கரின்ர வயசுக்கு இறங்கிக் கதையைப் படிச்சுப் பார்த்தேன்!

 

 கதை நல்லாயிருக்கு ! :lol:

 

ரைம் மிசினில போயா புங்கையண்ணா.. இறங்கினனீங்க. :lol:

 

நன்றி அண்ணா.

 

 

 
 
ஆடுமாடு கோழி நாய்பூனை எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டே கொஞ்சநேரம் சிற்றின்பத்திலை இருக்குதுகள்?  
 
அதுமாதிரி ஜீவிதாவை அனுபவித்தவனும் நெடுக்கரை மாதிரி பேய்காய்... :D
 
 ஜீவிதாவை மாதிரி ஆயிரம் ஃபிருகள் வரும் போகும்..... அப்பப்ப அனுபவிக்கணும்...அப்பிடியே...அடுத்த ஃபிகரை செட்டப்பண்ணணும்.
அதுக்கு...அந்த விசயத்துக்கும் போய் கலியாணம் கட்டுவாங்களா என்ன????  :icon_idea:

கதை நல்லாக இருக்கின்றது.  :)

 

 

பார்ரா.. கலாய்க்கிறாராமில்ல. :)

 

நன்றி கு.சாண்ணே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவிதா வெள்ளையா கருப்பா ஸார்?

 

இரண்டும் கலந்த கலவை ஸார். நீங்க நிறத்தில தான் குறியா இருக்கீங்க. :lol:

ஜீவிதா இனிமேல் குழந்தை வளர்ப்பு நிதி (child care) என்று அப்பாக்காதலனிடம் வாங்கி லண்டனில் வாழலாம்.. :unsure: எல்லாம் திட்டப்படிதான் நடந்திருக்கு.. :lol:

 

அதுமட்டுமில்ல..

 

சிங்கிள் மதர் என்றாலும் நல்லா காசு கொடுப்பாங்க.

 

பிள்ளை லண்டனில பிறந்திட்டா.. அசைலம் பெயிலானாலும்.. லேசில திருப்பி அனுப்ப மாட்டாங்க.

 

அதுக்கு மேல பிள்ளை வளர்ப்பு அரச உதவி திட்டம் சும்மா வந்து சேரும்.

 

இதில ஜீவிதா போட்ட கணக்குப் பெரிசு. இடையில பகடைக்காய் ஆனது இரண்டு ஆண்கள்..!! அதில இரண்டாமவன்.. ஆள் சுழியன். குறைஞ்ச பட்சம் சந்தர்ப்பத்தை சரியா பாவிச்சிட்டான். லண்டன் பையனில்ல...சும்மாவா. :lol::icon_idea:

தொடருங்கள்...

மற்றவனையும் ஏமாற்றவில்லை, நல்லபிள்ளை

 

இப்படி அப்பாவியா இருந்து தான் நாங்களும் ஒரு காலத்தில நம்பிக் கெட்டது (பெண்ணுருவில் உள்ளதுங்க எல்லாமே நல்லதுங்கன்னு தான் நம்பினது.)... நீங்களுமா..?!

 

மற்றவனையும் ஏமாற்றல்லைன்னு சொல்ல முடியாது. சரியா பாவிச்சிட்டாங்க... எனி அவன் கூட இருந்தால் என்ன விட்டால் என்ன..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது. எனக்கு தெரிந்த பெண்னும் இவ்வாறு விசாவிற்காக திருமணம் செய்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது. எனக்கு தெரிந்த பெண்னும் இவ்வாறு விசாவிற்காக திருமணம் செய்தவர்

 

ஒத்திசைவுக்கு நன்றி கொழும்ஸ். :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.... இது லண்டனில இப்ப பரவலா நடக்கிற சம்பவம். காதலிக்க முன் ஒரு லட்சம் தடவைகூட யோசிக்கலாம். ஆனால் காதலிச்சா பிறகு ஒரு தடவை கூட" நாம் தெரிவு செய்தது சரியா தவறா?" என யோசிக்கக் கூடாது. ஆனால் பெண்களின் அல்லாடும்  மனது அப்படித்தானே யோசிக்குது.  என்ன பண்ணுறது??? சிலருக்கு காலம் கடந்துதான் புரிகிறது.

 

கிட்டத்தட்ட....நான் எழுதிய "விற்றுத்தீர்ந்த காதல் கதை"யின் முடிவினை உங்கள் கதையில் சொல்லிவிட்டீர்கள்.

 

நன்றி நெடுக்ஸ்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு நடப்பை.. சரியாச் சொன்னீங்க கவிதையார். நன்றி உங்கள் வரவுக்கு. :)

Link to comment
Share on other sites

நாட்டு நடப்பை.. சரியாச் சொன்னீங்க கவிதையார். நன்றி உங்கள் வரவுக்கு. :)

 

நாட்டு நடப்பை மாற்றும் சக்தி எழுத்திற்கும், ஊடகத்திற்கும் கூட இருப்பதாகச் சொல்கிறார்களே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு நடப்பை மாற்றும் சக்தி எழுத்திற்கும், ஊடகத்திற்கும் கூட இருப்பதாகச் சொல்கிறார்களே...!

 

எம்மவர்களின் கடந்த 40 வருட நாடோடி வாழ்க்கை பல அரிய மனித இயல்புகளை எம்மவர்கள் மறக்கவும்.. இழக்கவும்.. சுயநலத்தை.. சுகபோகத்தை எப்படியாவது அடையனும் என்று குறுகிய.. இலகுவான வழிமுறையில்.. சிந்திக்கும்.. மனநிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

 

அண்மையில் எமக்காக போராடப் போனதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு போராளிக் குடும்பத்தை சந்தித்து கதைக்கிடைத்த போது.. அங்கும்.. இதே தான்.. நிலவுகிறது.

 

ஒரு தலைவனால் மட்டும் தான் இந்தளவாவது எமது இனதுக்காகச் செய்ய முடிந்துள்ளது என்பதைத் தவிர.. வேறெதும் இப்ப தோணுதில்ல.

 

இப்படியே.. இந்தச் சமூகம் திக்கற்று போய் எங்க போய் சேரப் போகுதோ...?????! :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு..

அது இவ்வாறு ஓடி ஆடி 

அடிபட்டு வதைபட்டுத்தான் சரியான வழிக்கு வருகிறது....

 

யாரிலும் தப்பு இருப்பதாக தெரியவில்லை

சந்தர்ப்ப சூழ்நிலைக்கைதிகளை  நாம் வெறுப்பதா?

அதற்கான சூழலை நம் சமூகம் தந்திருப்பதை வெறுப்பதா...?

 

எப்படியோ

நல்லதொரு அனுபவக்கதை..

தொடருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.