Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்!

Featured Replies

வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்!

 

வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்!

 

வடக்கில் அண்மைக் காலத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் இவை வடக்கு மக்களின் வாழ்வியலை அழிக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறதா என்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய கலாநிதி யஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, வாள்வெட்டு, குழுச் சண்டை, போதைப் பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் விதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அனைவரும்ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடர்பில் யாழ் ஆயர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஆயர் இது தொடர்பில் விரைந்து செயற்படவேண்டும் என்றும் சமூகத்தில் உள்ள புத்தஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள்,கல்வியலாளர்கள், வல்லுனர்கள்அனைவரும் உரிய தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றச்செயல்களை தடுப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்வில் தங்கியுள்ளதாகவும் அக்கம் பக்கத்தில் நடைபெறும் இந்த குற்றச் செயல்களை வெறுமனே பார்த்திருக்காது அதற்கு எதிர்ப்பு வெளியிடவேண்டும் என்றும் யாழ் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியில் எமது சமூகம் கீழ்நோக்கிச் செல்ல சமூகச் சீரழிவே காரணம் என்றும் இதனால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவுதாகவும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131896/language/ta-IN/article.aspx

  • Replies 63
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆயராக இருப்பதால் தமிழர்களின் பிரச்சனை தெரிகிறது. ஐயராக இருந்திருந்தால் தமிழர்களின் தட்சனை மட்டும்தான் தெரியும். :(

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:

நீங்கள் ஆயராக இருப்பதால் தமிழர்களின் பிரச்சனை தெரிகிறது. ஐயராக இருந்திருந்தால் தமிழர்களின் தட்சனை மட்டும்தான் தெரியும். :(

பாஞ்சின் கருத்துக்கு பச்சை போட ஆசை,ஆனால் யாழ் நிர்வாகமோ மொபைல் போன் கம்பனி போல் பச்சை தீர்ந்து விட்டதாக சொல்கிறது.முதல் நாள்,அதற்கு முதல் நாள் நான் பயன் படுத்தாத பச்சையை நிர்வாகம் தொடர்ந்து. என் கையிருப்பில் விடவேண்டும்.மொபைல் போன் கம்பனி மாசத்துக்கு ஒரு தடவை செய்யும் அராஜகத்தை ,நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்வதை ஏற்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நந்தன் said:

பாஞ்சின் கருத்துக்கு பச்சை போட ஆசை,ஆனால் யாழ் நிர்வாகமோ மொபைல் போன் கம்பனி போல் பச்சை தீர்ந்து விட்டதாக சொல்கிறது.முதல் நாள்,அதற்கு முதல் நாள் நான் பயன் படுத்தாத பச்சையை நிர்வாகம் தொடர்ந்து. என் கையிருப்பில் விடவேண்டும்.மொபைல் போன் கம்பனி மாசத்துக்கு ஒரு தடவை செய்யும் அராஜகத்தை ,நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்வதை ஏற்கமுடியாது.

சரிசரி புலம்பாதையுங்கோ.உங்கள் சார்பாக ஒன்டு போட்டிருக்கு :)

2 hours ago, நந்தன் said:

பாஞ்சின் கருத்துக்கு பச்சை போட ஆசை,ஆனால் யாழ் நிர்வாகமோ மொபைல் போன் கம்பனி போல் பச்சை தீர்ந்து விட்டதாக சொல்கிறது.முதல் நாள்,அதற்கு முதல் நாள் நான் பயன் படுத்தாத பச்சையை நிர்வாகம் தொடர்ந்து. என் கையிருப்பில் விடவேண்டும்.மொபைல் போன் கம்பனி மாசத்துக்கு ஒரு தடவை செய்யும் அராஜகத்தை ,நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்வதை ஏற்கமுடியாது.

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

சரிசரி புலம்பாதையுங்கோ.உங்கள் சார்பாக ஒன்டு போட்டிருக்கு :)

சரிசரி புலம்பாதையுங்கோ.உங்கள் சார்பாக இன்னும் ஒண்டு போட்டிருக்கு

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நந்தன் said:

பாஞ்சின் கருத்துக்கு பச்சை போட ஆசை,ஆனால் யாழ் நிர்வாகமோ மொபைல் போன் கம்பனி போல் பச்சை தீர்ந்து விட்டதாக சொல்கிறது.முதல் நாள்,அதற்கு முதல் நாள் நான் பயன் படுத்தாத பச்சையை நிர்வாகம் தொடர்ந்து. என் கையிருப்பில் விடவேண்டும்.மொபைல் போன் கம்பனி மாசத்துக்கு ஒரு தடவை செய்யும் அராஜகத்தை ,நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்வதை ஏற்கமுடியாது.

தல! ரெஞ்சனாகாதீங்க.....என்னட்டை ஒரு சொல்லு சொல்லியிருந்தால் கடனா ஒரு பச்சை தந்திருக்கமாட்டன்...ஆ....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

செளத்தர்நாயகம் போட்டாரே. இருந்திருந்தால்.. இப்பவும் சிங்கள..இராணுவத்தைக் கூப்பிட்டு இராப்போசனம் கொடுத்து வன்முறைகளுக்கு வாழ்த்துச் சொல்லி இருப்பார். போராளிகளை ஒரு வாங்கு வாக்கி இருப்பார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

நீங்கள் ஆயராக இருப்பதால் தமிழர்களின் பிரச்சனை தெரிகிறது. ஐயராக இருந்திருந்தால் தமிழர்களின் தட்சனை மட்டும்தான் தெரியும். :(

சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த....
பாஞ்சின்..... சூப்பர் பஞ்ச்  இது. SmileySmiley

ஐயர்மார் எங்களுக்கு ஒரு இளக்காரம் கிறிஸ்தவ பாதிரிகள் என்றால் பயமும் மரியாதையும் .

வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த பின்பும் சுந்ததிரம் என்றால் என்வென்று தெரியாது வெள்ளை என்றால் காலில் விழம் நிலைமையில் தான்  இன்றும் பல தமிழர்கள் .

புலம்பெயர்ந்த தமிழர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல .இங்கு எமது விழாக்களுக்கு வெள்ளைகளை அழைத்துவிட்டு எசமானுக்கு பின்னால் அலையும் நாய்கள் போல பின்னால் அலைவார்கள் .தமிழர்களை பற்றி வெள்ளைகளுக்கு நன்கு தெரியும் அசல் அடிமை புத்தி அவர்களுக்கு என்று . சிங்களர்களும் முஸ்லிம்களும் அப்படியல்ல  .

எமது ஆயுத போராட்ட காலத்திலும் பலருக்கு பாதிரிகள் என்றால் பயம் ,ஐயர் மார்கள் பலரை வெடி வைத்ததும் நடந்தது .

சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் சுதந்திரத்திற்காக போராடும் இனம் தமிழ் இனம் .

28 minutes ago, arjun said:

ஐயர்மார் எங்களுக்கு ஒரு இளக்காரம் கிறிஸ்தவ பாதிரிகள் என்றால் பயமும் மரியாதையும் .

ஐயர் என்பது பிறப்பால் கிடைக்கும் ஒரு உரிமை. எவர் வேண்டுமெண்டாலும் ஐயராகிவிட முடியாது. அடுத்ததாக ஐயர் என்பவர்கள் கிறிஸ்துவ மதகுருமார்களைப் போலவோ அல்லது பிக்குகளைப் போலவோ ஸ்தாபனப் படுத்தப் பட்டவர்கள் இல்லை. இவர்கள் வெறும் தனி மனிதர்களே. இவர்களது பலம், ஆளுமை சமுதாயத்தில் மிகவும் குறைவானது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

ஐயர் என்பது பிறப்பால் கிடைக்கும் ஒரு உரிமை. எவர் வேண்டுமெண்டாலும் ஐயராகிவிட முடியாது. அடுத்ததாக ஐயர் என்பவர்கள் கிறிஸ்துவ மதகுருமார்களைப் போலவோ அல்லது பிக்குகளைப் போலவோ ஸ்தாபனப் படுத்தப் பட்டவர்கள் இல்லை. இவர்கள் வெறும் தனி மனிதர்களே. இவர்களது பலம், ஆளுமை சமுதாயத்தில் மிகவும் குறைவானது.

அதேதான்  ???

8 minutes ago, ஜீவன் சிவா said:

ஐயர் என்பது பிறப்பால் கிடைக்கும் ஒரு உரிமை. எவர் வேண்டுமெண்டாலும் ஐயராகிவிட முடியாது. அடுத்ததாக ஐயர் என்பவர்கள் கிறிஸ்துவ மதகுருமார்களைப் போலவோ அல்லது பிக்குகளைப் போலவோ ஸ்தாபனப் படுத்தப் பட்டவர்கள் இல்லை. இவர்கள் வெறும் தனி மனிதர்களே. இவர்களது பலம், ஆளுமை சமுதாயத்தில் மிகவும் குறைவானது.

 

அது அந்த அந்த சமயங்களின் வழிமுறைகள் .

இங்கு பேசப்படும் விடயம் அதுவல்ல ,

அப்ப பாதிரி என்ன செய்தாலும் சரியோ ?

ஸ்தாபன படுத்தபட்ட ஆழுமை பட்ட பாதிரிகள் எமது போராட்டத்தில் எதையாவது செய்ய முடிந்ததா ?

மடுமாதாவையே தூக்கிக்கொண்டு போனார்கள் ?

5 minutes ago, arjun said:

அப்ப பாதிரி என்ன செய்தாலும் சரியோ ?

இல்லை 

5 minutes ago, arjun said:

ஸ்தாபன படுத்தபட்ட ஆழுமை பட்ட பாதிரிகள் எமது போராட்டத்தில் எதையாவது செய்ய முடிந்ததா ?

பெரிதாக ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் பல சமயங்களில் எமது மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்கள். 

47 minutes ago, arjun said:

ஐயர்மார் எங்களுக்கு ஒரு இளக்காரம் கிறிஸ்தவ பாதிரிகள் என்றால் பயமும் மரியாதையும் .

எனது பதில்  இந்த கூற்றிற்கான விளக்கம் மட்டுமே. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் சொல்வதில் உண்மை இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி போன்றவர்களின் சமுக பொறுப்புணர்வும் பங்களிப்பும் எந்த கிறிஸ்தவ அமைப்புகளின் பங்களிப்புடனும் ஒப்பிட முடியாத அளவு மிக உயர்வான பங்களிப்பாக அமைந்து இன்றும் மக்களுக்கு உதவி வருகின்றன. இவர்கள் ஐயர்கள் அல்ல. ஆனால் சைவ சமயத்தவர் மத்தியில் மத பின்னணியில் சமுக சேவை செய்யும் அமைப்புக்களாக இவை இருக்கின்றன. சைவ சமய கலாச்சாரத்தில் மத கிரியைகள் செய்பவர்கள் சமுக சேவை செய்யும் வகையான கட்டமைப்பு இல்லை - அப்படி இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தாய்மொழியே தெரியாத கடவுள்களை விழுந்து விழுந்து வணங்கும் ஒரு இனம்..... சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒன்றும் புதுமையல்ல. இதனை மாற்ற முயன்ற தலைவனை அழித்துவிட உதவியவர்கள் இன்று ஊளையிடுவதும் புதினமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க நிலையில் பல ஐயர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்!

சிவஸ்ரீ.  கைலாசநாதக்குருக்கள் எமது ஊரின் கலட்டிப் பிள்ளையார் கோவில், கண்ணகையம்மன் கோவில் போன்ற திருவிழாக்களை நடத்தி வைக்க ஒவ்வொரு வருடமும் வருவார்!

அருச்சுனைக்கு வெட்டப்படும் இளநிகளின் கோம்பைகளை வெளியில் வைப்பார்கள்! சிறுவர்களாக இருந்த நாங்கள் அந்த இளனிக்கோம்பைகளின் வழுகல்களை எடுத்துக் கொள்வதுண்டு! அப்போது குருக்கள் சிலவேளைகளில் வாழைப்பழம், மோதகம் போன்றவற்றையும் எங்களுக்குத் தருவதுமுண்டு!

அவருடன்.. சிறுபிள்ளைத்தனமாக பல தடவைகள் இந்து மதத்தைப் பற்றி..விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன்! ஒவ்வொன்றுக்கும், கோபிக்காமல் விளக்கம் சொல்லுவார்!

பிற்காலத்தில் பல ஐயர்மார்கlள்  ..பொருள் ஆசையினால் தங்கள் தரத்தைத் தாங்களாகவே தாழ்த்திக்கொண்டார்கள் என்றே சொல்வேன்!

இதே போலத் தான் பிக்குகளிலும் பலர் உள்ளார்கள்!

ஆசையைத் துறந்தவன்...என்றுமே தாழ்ந்ததில்லை என்பதே எனது கருத்து!

சில ஐயர் மாரைக்கண்டால்...பஸ்ஸில் எங்களையறியாமலே எழுந்து சீட் கொடுப்பதும் உண்டு!

அதே வேளை சிலரைக் கண்டால்....எழும்பவே மனம் வராது! 

கிறிஸ்துவ மதகுருமார்களுக்கும் அவரது தனிப்பட்ட நடத்தைகளுக்கேற்ப ..அவர்களுக்கான மதிப்பு அமையும் என்று நினைக்கிறேன்! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, arjun said:

அது அந்த அந்த சமயங்களின் வழிமுறைகள் .

இங்கு பேசப்படும் விடயம் அதுவல்ல ,

அப்ப பாதிரி என்ன செய்தாலும் சரியோ ?

ஸ்தாபன படுத்தபட்ட ஆழுமை பட்ட பாதிரிகள் எமது போராட்டத்தில் எதையாவது செய்ய முடிந்ததா ?

மடுமாதாவையே தூக்கிக்கொண்டு போனார்கள் ?

 அர்யூன்! வணக்கம்.

அப்பப்ப நீங்கள் எழுதும் கருத்துக்கள் குதர்க்கமாகவும், குழப்பவாதியாகவும், காழ்ப்புணர்வாகவும், போராட்ட வாழ்வில் அந்நியப்பட்டவராகவும் உங்களை அடையாளப்படுத்துகின்றது.

இங்கு  ஆயர் ஒரு தனி மனிதனாக தனது மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதை ஏன் மதமாகப் பார்க்கிறீர்கள்?

சமயம் என்பது ஒரு நெறி.    ஒவ்வொரு  மனிதனும் தனது விருப்பின்படி, அழைக்கும், வழிபடும் முறைகள். சில குழப்பவாதிகள் அதைக் கூறுபோட்டு பிளவு படுத்துகின்றானே தவிர எல்லா மதமும் நல்லவற்றை கூறி மனிதனை வழிப்படுத்தும் மார்க்கம். ஒவ்வொருவரும் அழைக்கும்பெயர், வழிபடும் முறை வேறாக இருக்கலாம் ஆனால் மதம் ஒன்றுதான்.

உங்களை விட பாதிரிகள் போராட்டத்தில் செய்த பங்களிப்புகள் அளப்பரியவை. ஆனால் அவர்கள் உங்களைப்போல் தம்பட்டம் அடிப்பதில்லை. அதனாலோ என்னவோ உங்களுக்கு அவை கேட்கவில்லை. பாதிரியார் பஸ்டியன் உண்மைக்காய் குரல் கொடுத்தபடியால் மன்னார் மாவட்டத்தில் இரவோடிரவாக இராணுவத்தால் சுடப்பட்டு எரிக்கப்பட்டார்.  சிங்கராயர், சின்னராசா சிறையில் சித்திரவதைபட்டார்கள். டேவிட் ஐயாவின் புத்தகத்தைப்படித்து அறிந்து கொள்ளுங்கள். பாதிரியார் ஜிம் பிறவுண் மிக இள வயதில் நடந்த உண்மையை, கொல்லப்படுவேன் என்று நன்றாக தெரிந்தும் கூறியபடியால் உடலைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.  போரின் போது வன்னியில் இருந்த பாதிரிமாரை வெளியில் அழைத்து வர ஆமி எவ்வளவோ வசதிகள் செய்து கொடுத்தான். மக்களை தனியாக விட்டு வெளியே வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்து கண்ணிவெடி, மற்றும் மக்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் மாரடைப்பாலும் இறந்த பாதிரிமார், காணாமற்போன பாதிரியார் பிரான்சிஸ் இப்படி  தங்கள்  உயிர்களை துறந்த பாதிரிமார் எத்தனையோ பேர் உண்டு.

அது மட்டுமல்ல பெற்றோரால் கைவிடப்பட்ட, பறிகொடுத்த பிள்ளைகள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட, பறிகொடுத்த பெற்றோர்களையும் பராமரிக்கிறார்கள் இதுவெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

அடுத்து என்ன பதிவீர்கள் என்பதை என்னால் யூகிக்க முடியும். அதற்கான பதில் அவர்கள் யாரையும் வற்புறுத்தி மதம் மாற்றுவதில்லை, மதம் மாற வேண்டுமென்று எதிர்பார்த்து செய்வதுமில்லை. அவர்கள் அப்படி நினைத்தால் இன்று அதிகமான தமிழ்  மக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டிருப்பார்கள். தயவு செய்து மனிதாபிமானத்துக்கு மதவெறி சாயம் பூசி நீதிக்கான குரல்வளையை நசுக்காதீர்கள். எங்கும், எதிலும் புலியைப் பார்க்காதீர்கள்.

நன்றி. வணக்கம்.

வவுனியா ஏழைப்பெண்ணுக்கு மன்னார் ஆயரினால் ஏற்பட்ட கொடூரம்:அதிர்ச்சியூட்டும் தகவல்(photos)

on: மே 08, 2016

வவுனியா மன்னார் வீதி 5ம் கட்டையில் அமைந்துள்ளது அன்னை திரேசா அன்பகம் இது முதியோர்களை பராமரிக்கும் நிலையமாக செயற்பட்டு வருகின்றது

ஆனால் இவ் அமைவிடமானது 1957.06.20 காலப்பகுதியில் அரசாங்கத்தால் வளங்கப்பட்ட R5220 5ஏக்கர் சுற்றளவு கொண்ட காணியாகும் இக்காணியின் உரிமையாளர் திரு.தைரஸ் எதிர்நாயகம் லூயிஸ் என்பவர் இறந்துவிடவே இக்காணி அவருடைய மணைவி திருமதி.லின்டா மனோன்மணி என்பவருக்கு உரித்தானது

இவர்கள் இருவருக்கும் வாரிசுகள் இல்லாதவிடத்து 3மாத குழந்தையான பெண் குழந்தை ஒன்றை 1972ல் தத்தெடுத்ததுடன் அப்பிள்ளைக்கு ரொசான் நிர்மலா லூயிஸ் என்றும் பெயர் சூட்டினர்

காலம் கடந்தது பிள்ளையும் வளர்ந்தது திருமணமும் முடிந்தது பின்பு 1990 களில் ஏற்பட்ட யுத்தத்தினால் அப்பெண் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்தார் மூன்று ஆண்டுகள் கழித்து வந்த போது அவ்விடத்தில் இரானுவ முகாம் இருந்தை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் அவர் தற்காலிகமாக இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார்

மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்காக சென்று நாடு திரும்பிய வேளையில் தான் அவருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி

ஆம் அவர் தனது இடத்திற்கு வந்த பொழுது அங்கு அன்னை திரேசாவின் முதியோர் இல்லம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று அவர்களிடம் வினாவியபோது “இது மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் கீழ் நடாத்தப்படுகிறது நீங்கள் அங்கு செல்லுங்கள் “என்று கூறவும் அவரும் அங்கு செல்லவே அவருக்கு அங்கும் அதிரச்சி காணப்பட்டுள்ளது ஆயரினால் ஒரு கடிதம் அப்பெண்ணுக்கு காட்டப்பட்டுள்ளது அதில் அக்காணியை இவரது வளர்ப்பு தாயாரால் விற்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது ஆனால் இதில் முக்கிய விடயம் என்னவெனில் தாயார் இறந்த திகதிக்கு பின்னரே அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதில் ஒப்பம் தனது தாயாரது இல்லை என்றும் அப்பெண் வாதிடவே “உன்னால் முடிந்ததை செய்யென்று” ஆயரவர்கள் கூறி வலுக்கட்டாயமாக களைத்து விட்டுள்ளனர் அப்பெண்ணை

பின்பு அப்பெண் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு இட்டும் எந்த பலனும் கிடைக்காத விடத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் 2011ம் ஆண்டளவில் முறைப்பாடு செய்துள்ளார் அப்போதிருந்த பிரதேச செயளாலரினால் விசாரனை மேற்கொண்டு இரு பகுதியிரையும் இனக்கப்பாட்டிற்கு கொண்டுவந்ததுடன் அக்காணியில் சமூக சேவை ஒன்று இடம்பெருவதை கருத்தில் கொண்டு அக்காணியை இரண்டாகப் பிரித்து கொடுக்கப்பட்டது இதில் பிரதான மன்னார் வீதியில் அண்மித்து(lot4 படத்தில் காணப்படுகிறது) 4பரப்பு காணியும் பிரதான வீதியில் வாயில் அமைத்து 1.1/2 ஏக்கர் காணியும் அப்பெண்ணிற்கு பிரித்து கொடுக்கப்பட்டதுடன் அவருடைய இல்லத்திற்கு பதிலாக வீடொன்றும் கட்டிகொடுப்பதாக ஆயர் தரப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது அத்துடன் அக்காணியை இரண்டாக பிரித்து எல்லை கல்லும் போடப்பட்டு வேலியும் அமைக்கப்பட்டது

சற்று ஆறுதல் அடைந்த அந்த ஏழை பெண் அக்காணியில் தற்காலிகமாக ஒரு கொட்டிலை அமைத்து வாழந்து வந்துள்ளார் இவ்வாறு இருக்கையில் தனது மகளிற்கு வரன் கூடி வரவே பிரதான வீதியினருகே இவருக்கு வழங்கப்பட்ட அக்காணியை தனது மகளிற்கு சீதனமாக வழங்கி அம்மகளின் திருமணத்துக்காக வெளியூர் சென்று 6மாத காலத்தின் பின் தனது இருப்பிடத்திற்கு வந்த பொழுது காத்திருந்தது அதிர்ச்சி

மகளுக்கு சீதனமாக வளங்கிய அக்காணியை சுற்றி முற்றிலும் மதில் கட்டப்பட்டு ஆயரினால் அபகரிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக பிரதேச செயளாலரிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை மேலும் பிரதேச சபையை நாடிய போது அவர்கள் உடனடியாக மதில் கட்டுவது தவறு எனவும் பிரதேச சபை அங்கிகாரம் இல்லாமல் மதில் கட்டுவது குற்றமென்றும் கடிதம் அனுப்பியுள்ளனர் ஆனாலும் ஆயர் அதை கருத்தில் கொள்ளாது மதிலை கட்டியுள்ளார் என்று கூறியுள்ளனர்

இவ்வாறு இப்பெண் அங்குமிங்குமாக அலைந்து இறுதியில் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டதுடன் தனது மகளுடைய வாழ்வும் நாசமானதாக எமது செய்தியாளரிடம் கூறினார் அத்துடன் இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்கும் கடிதம் அனுப்பியும் அரச அதிபர் தலையிட்டும் இராயப்பு யோசப் ஆண்டகையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்று புலம்பினார்

மேலும் எமது செய்தியாளர் ஏன் நீங்கள் வழக்கு தாக்கல் பண்ணவில்லை என்றதற்கு தன்னிடம் வசதிவாய்ப்பு இல்லை என்றும் தன் கணவரும் யுத்த காலத்தில் பிரிந்து விட்டதாகவும் தான் தனி மரமாக நிற்பதாகவும் கண்ணீர் மல்க கூறியதும் எமது செய்தியாளர்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்ததை காணக்கூடியதாக இருந்தது அத்துடன் தனக்கு ஒரு தீர்வை பெற்றுத்தருமாறும் எம் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்

இவ்வாறான பெரும் புள்ளிகள் உயர் பதவிகளில் இருந்து கொண்டு ஏழை மக்களை நசுக்கும் இந்த கலாச்சாரம் எப்போது தான் ஓயப்போகின்றது??? இதிலே குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அப்பெண்ணும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதாகும்

30 வருட போராட்டத்தில் இன்னுமொரு இனம் எம்மை ஆழக்கூடாது என்று போராடிய எம் இனத்துக்குள்ளேயே இவ்வாறான கொடூரங்கள் இடம்பெருவது மனவேதனைக்குறிய விடயமாகும்

image

image

image

image

image

இதற்கு பெயர் தான் சாத்தான் வேதம் ஓதுதல் .

சாத்தானின் பல பந்திகளில் வேதம் ஓதியிருகின்றீர்கள் ,

மதங்களை பற்றி இந்த திரியில் பேச வேண்டிவந்ததிற்கு ஒரே காரணம் முதலில் வந்த பின்னோட்டம் தான் .

இங்கு மதமோ அல்லது அதை பின்பற்றுபவர்கள் பற்றியோ இல்லை பிரச்சனை .எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கின்றார்கள் .அதை முதலில் விளங்கிகொள்வதுதான் முக்கியம் .

 

"அரத்தம் உள்ள இந்து மதம் என்ன சொன்னது. அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது. ஆசை வந்து வேதியரை ஆட்டி வைத்தது. அது அள்ளி இடர் நெருப்பை இங்கு மூட்டி விட்டது." 

ஐயர்மார்களில் 90 வீதமானோர் மத அறநெறிகளை பரப்புவதை விடுத்து இந்து மதத்தை பணம் பண்ணுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த சுயநலத்தினாலேயே அறிவு கெட்ட மூடப்பழக்களை சமுதாயத்தில் திணித்து வருகிறார்கள். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஐயர்மாரின் பச்சை சுயநலத்தை விளக்க எங்கோ நடந்த ஒற்றை சம்பவத்தை ஆதாரமாக காட்டவேண்டிய அவசியம் இங்கு இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி இங்கு தேவையில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள்பற்றி எனக்கு அதிகம் தெரியாது அறிந்து கொள்ளவேண்டிய அக்கறையும் இருந்ததில்லை. இன்று ஆயர் அவர்கள் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததையும், அன்னை திரேசாவின் முதியோர் இல்லத்தை நிறுவி உதவிவந்ததையும் அறியத்தந்த அர்ச்சுன் அவர்களுக்கு நன்றிகள் பல.:)

7 hours ago, trinco said:

"அரத்தம் உள்ள இந்து மதம் என்ன சொன்னது. அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது. ஆசை வந்து வேதியரை ஆட்டி வைத்தது. அது அள்ளி இடர் நெருப்பை இங்கு மூட்டி விட்டது." 

ஐயர்மார்களில் 90 வீதமானோர் மத அறநெறிகளை பரப்புவதை விடுத்து இந்து மதத்தை பணம் பண்ணுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த சுயநலத்தினாலேயே அறிவு கெட்ட மூடப்பழக்களை சமுதாயத்தில் திணித்து வருகிறார்கள். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஐயர்மாரின் பச்சை சுயநலத்தை விளக்க எங்கோ நடந்த ஒற்றை சம்பவத்தை ஆதாரமாக காட்டவேண்டிய அவசியம் இங்கு இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி இங்கு தேவையில்லை. 

 

ரிங்கோ,

நீங்கள் சொல்வதில் நிறைய உடன்பாடு இருப்பினும் சில ஒவ்வாமைகளும் இருக்கு.

கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு ஏதும் தீங்கு நடப்பின் ஆகக் குறைந்தது அதை ஓரளவுக்கேனும் கேள்வி கேட்க சர்வதேச அமைப்புகள் உள்ளன. அது கொடுக்கும் தற்துணிவும் ஏராளம். ஆனால் எம்மவர்களுக்கு யார் இருக்கின்றார்கள்? அருகிலேயே இந்துத்துவம் நிரம்பிய 2 நாடுகள் இருப்பினும் ஒரு கேள்வி எழுவதுண்டா? 2005 அளவில் கைதடியில் உண்மைகளை உரத்துச் சொன்ன ஒரு இளம் அர்ச்சகர் வெற்று எலும்புக்கூடாக குழியொன்றில் மீட்கப்பட்ட சம்பவம் கூட ஒரு நாள் செய்தியாக ஓரத்தில் வந்து இருந்ததுதான் நிதர்சனம்.

ஒரு அர்ச்சகர் கொல்லப்படும் போது அவர் மூலம் கடவுளுக்கு அர்ச்சனை செய்த நாமே மெளனம் கொள்கின்றோம்.

அத்துடன் ஒருவர் பாதிரியாராக தன்னை மாற்ற நினைக்கும் போதே தன்னளவில் நிறைய விடயங்களை தியாகம் செய்ய தயாராகி வருகின்றார் (அப்படி அவர் உண்மையில் செய்தாரா என்பதை அவர் பின்னான வாழ்வு சொல்லும்). ஆனால் சாதியத்தின் அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராக வரும் போது அவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?

மற்றப்படி

ஒரு பாதிரியார் ஒருவர் செய்த பாவங்களுக்கான மன்னிப்பை இயேசுவிடம் சமர்பித்தால் விமோசனம் / பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று சொல்லும் படு அபத்தினை விட அர்ச்சகர்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள் ஒன்றும் பெரிது இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

ஸ்தாபன படுத்தபட்ட ஆழுமை பட்ட பாதிரிகள் எமது போராட்டத்தில் எதையாவது செய்ய முடிந்ததா ?

எனது பதில் இதற்கானது.

 

3 hours ago, நிழலி said:

ஒரு பாதிரியார் ஒருவர் செய்த பாவங்களுக்கான மன்னிப்பை இயேசுவிடம் சமர்பித்தால் விமோசனம் / பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று சொல்லும்

முழுவதுமாக தெரியாமல், சில அரைகுறை கொடுக்கும் 
 வியாக்கியானம் இது என நினைக்கிறேன்.

4 hours ago, நிழலி said:

ரிங்கோ,

நீங்கள் சொல்வதில் நிறைய உடன்பாடு இருப்பினும் சில ஒவ்வாமைகளும் இருக்கு.

கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு ஏதும் தீங்கு நடப்பின் ஆகக் குறைந்தது அதை ஓரளவுக்கேனும் கேள்வி கேட்க சர்வதேச அமைப்புகள் உள்ளன. அது கொடுக்கும் தற்துணிவும் ஏராளம். ஆனால் எம்மவர்களுக்கு யார் இருக்கின்றார்கள்? அருகிலேயே இந்துத்துவம் நிரம்பிய 2 நாடுகள் இருப்பினும் ஒரு கேள்வி எழுவதுண்டா? 2005 அளவில் கைதடியில் உண்மைகளை உரத்துச் சொன்ன ஒரு இளம் அர்ச்சகர் வெற்று எலும்புக்கூடாக குழியொன்றில் மீட்கப்பட்ட சம்பவம் கூட ஒரு நாள் செய்தியாக ஓரத்தில் வந்து இருந்ததுதான் நிதர்சனம்.

ஒரு அர்ச்சகர் கொல்லப்படும் போது அவர் மூலம் கடவுளுக்கு அர்ச்சனை செய்த நாமே மெளனம் கொள்கின்றோம்.

அத்துடன் ஒருவர் பாதிரியாராக தன்னை மாற்ற நினைக்கும் போதே தன்னளவில் நிறைய விடயங்களை தியாகம் செய்ய தயாராகி வருகின்றார் (அப்படி அவர் உண்மையில் செய்தாரா என்பதை அவர் பின்னான வாழ்வு சொல்லும்). ஆனால் சாதியத்தின் அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராக வரும் போது அவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?

மற்றப்படி

ஒரு பாதிரியார் ஒருவர் செய்த பாவங்களுக்கான மன்னிப்பை இயேசுவிடம் சமர்பித்தால் விமோசனம் / பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று சொல்லும் படு அபத்தினை விட அர்ச்சகர்கள் சொல்லும் மூட நம்பிக்கைகள் ஒன்றும் பெரிது இல்லை.

 

நிழலி எந்தவொரு மதததினதும் அடிப்படை தத்துவங்களை விமர்சிக்கும் தளமாக இதை நான் கருதவில்லை. அதற்கு நிறைய விடயங்களை அலசி ஆராயவேண்டும். ஒரு தனிப்பட்ட ஐயரையும் நான் குறை கூற வரவில்லை. இந்து மத்ததின் அடிப்படை தத்துவங்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் அவ்வாறான மதஸ்தாபனங்கள் உருவாகுவதையும் இந்து மத குமார்களாக தம்மை தாமே ஆக்கிக்கொண்ட ஐயர்மாரே விரும்பவில்லை.  இந்திய உபகண்டத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு பலமாக உள்ள ஐயர்மாரகள் அந்த பலத்தை இந்து மத த்ததுவங்களை பரப்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மனித வாழ்வில் நடைபெறும் சாதாரண விடயங்களில் கூட மக்களை அசௌகரியப்படுத்தும் அளவுக்கு மூடபழக்கங்களை கிருமிபோல் விதைத்து விட்டிருப்பதை நீங்களே அறிவீர்கள். சாதீயம் தொடக்கம் அனைத்து விடயங்களையும் கூறுகிறேன் எமது முட்டாள் மக்களும் எந்த கேள்வியும் கேட்காமல் காலம் காலமாக அதற்குள் கிடந்து உழல்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் இவர்களின் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. அவர்களையும் ஏழை ஐயர்மார்கள் என்று கூறப்போகின்றீர்களோ? இந்து மத்ததின் அடிப்படைத்தத்துவங்களை மதிக்கும் இந்துவாகவே நான் என்றும் இருக்க விரும்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2016 at 9:15 PM, arjun said:

ஐயர்மார் எங்களுக்கு ஒரு இளக்காரம் கிறிஸ்தவ பாதிரிகள் என்றால் பயமும் மரியாதையும் .

வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த பின்பும் சுந்ததிரம் என்றால் என்வென்று தெரியாது வெள்ளை என்றால் காலில் விழம் நிலைமையில் தான்  இன்றும் பல தமிழர்கள் .

புலம்பெயர்ந்த தமிழர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல .இங்கு எமது விழாக்களுக்கு வெள்ளைகளை அழைத்துவிட்டு எசமானுக்கு பின்னால் அலையும் நாய்கள் போல பின்னால் அலைவார்கள் .தமிழர்களை பற்றி வெள்ளைகளுக்கு நன்கு தெரியும் அசல் அடிமை புத்தி அவர்களுக்கு என்று . சிங்களர்களும் முஸ்லிம்களும் அப்படியல்ல  .

எமது ஆயுத போராட்ட காலத்திலும் பலருக்கு பாதிரிகள் என்றால் பயம் ,ஐயர் மார்கள் பலரை வெடி வைத்ததும் நடந்தது .

சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் சுதந்திரத்திற்காக போராடும் இனம் தமிழ் இனம் .

ஓமோம் ...எங்களுக்கு வெள்ளையை பிடிக்காது ... ஆனால் அவனின்ட நாடு பிடிக்கும் . ஊரில எலி விரட்டிச்சு, புலி விரட்டிச்சு என்று கதை விட்டு வெள்ளையிண்ட காலில விழுந்து அசைலம் அடிக்க பிடிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டின் இன்றைய நிலை தொடர்பில்... அண்மையில்.. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு அவர்கள் மீது அண்மையில் அதிகரித்திருக்கும்.. வன்முறைகள் தொடர்பில்.. நல்லை ஆதீன முதல்வர்.. கிறிஸ்தவ மதகுரு.. முஸ்லீம் மதகுரு.. உட்பட பலர் ஆதவன் தொலைக்காட்சியில் தோன்றி கருத்துச் சொன்னார்களே... அப்ப ஏன் இங்கு ஐயர் மார் பாவம் என்று அழும் கூட்டம் அங்க வந்து பாராட்டவில்லை.

காரணம்.. ஆதின முதல்வர் சொன்னார்..

இங்கு போர் நடைபெற்ற காலத்தில்.. நள்ளிரவிலும் பெண்கள் நடமாடும் சுதந்திரம் இருந்தது என்று...

அது சிலருக்கு இப்பவும் பிடிக்காது. அதுதான் அந்தப் பக்கம் தலைவைக்கவே இல்லை. இவர்களுக்கு உண்மையில்.. சமூக அக்கறையில்லை. புலியை எந்த வகையிலாவது திட்டினால் தான் அந்த நாள் முழுத் திருப்தியாக அமையும். அப்படி வாழ்ந்து பழகிவிட்டார்கள்.. கட்டைக்குப் போகும் வரை அந்தக் குணம் அகலாது. இந்தத் திரிகளின் நீட்சிக்கு அந்த புலி வாந்தி மனோவியாதி தான் முக்கிய காரணமே அன்றி சமூக அக்கறை மத சம அந்தஸ்து அல்ல. புலிகள் அதனை எத்தனையோ சந்தர்ப்பங்களில் வழங்கி வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். ஒரே மேடையில்.. ஆதீன முதல்வரையும்.. யாழ் மன்னார் ஆயர்களையும்.. முஸ்லிம் மத குருக்களையும் உட்கார வைச்சு நிகழ்வுகளை புலிகள் நடத்தி இருக்கிறார்கள். அது சமூக அக்கறையில்.. ! இங்கு இன்று நடப்பது... சமூக விரோத நோக்கில். tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.