Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் நா. முத்துக்குமார் மறைவு

Featured Replies

கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே...! ஆழ்ந்த இரங்கல்கள்....!

என்ன நடந்தது பகலவன் ....!

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

13912392_1059005054167585_44224141431584

முதன் முறை 
என் வாழ்வில்
மரணத்தைப்பார்க்கிறேன்
கனவுடன் சூதாடி 
கடைசியில் தோற்கிறேன் 
-நா. முத்துக்குமார்

 

ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

மழை மட்டுமா அழகு மரணம் கூட தான் அழகு  என்று சொல்லாமல் சொல்லிவிட்டு  சென்று விட்டார் கவிஞர் முத்துகுமார் அவர்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

13906589_933185493457003_586769741979067

  • கருத்துக்கள உறவுகள்

“நா” முத்து
“பா”க்களின் சொத்து..!!
------------------------------------

நீ வாழ்வதற்கும்
உன்னை வாழ்த்துவதற்கும்
“பூமாலை”யல்லவா
தோள் மீது வீழ்ந்தது

இன்று
உலகைவிட்டு
உன்னை பிரிக்க
“மஞ்சள் காமாலை”யல்லவா
உயிர் மீது வீழ்ந்து சாய்த்தது..!

நீ
இயற்கையின் அழகினை
வடித்திடும் கவியே கற்கண்டு

இன்று
இயற்கை எய்திய செய்திகேட்டு
இயற்கையே வடிக்கின்றது
உதிரத்தின் சொற்கொண்டு..!

வாழும் நாளிருக்க
இன்னும் எழுதவே
இளமையிருக்க….
வழமை ஏனோ
சனியனின கால்களில்
உன் சரித்திரத்தை
சறுக்கி வீழ்த்தியது..?

உலகின் அழுக்குகளையும்
உலகின் அழுகைகளையும்
“அழகு” வரிகளிலேயே
சுத்தப்படுத்தியவன்

இன்று உன்னை
கால(ம்)ன் அசுத்தப்படுத்திவிட்டது..!

பாரதம் என்றும்
மௌனித்ததில்லை
இன்று பாரே
மரணித்துவிட்டது
உன் உயிர்பிரிந்த செய்தி
உயிரைப் பிழிந்து
உணர்வுக்குள் உதிரம்
கொதித்து எழுவதனால்…!

உனக்கு
மரணம் கிடையாது
இப்போது நீ
உறங்கிக்கொண்டிரு
நாங்கள் உன்னை
சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம்..!

நீ
பெற்றது இரண்டு
தேசிய விருதுகள் அல்ல
ஈழத்தமிழர்களின்
தேசிய விருதோடு மூன்று..!!

நா.முத்து
“பா”க்களின் சொத்து
நீ அழிந்திடும் ஓவியமல்ல
காலத்தால் என்றும்
அழியாத காவியம்..!!

திரையுலகின்
திரண்ட பே(மூ)ச்சோடு
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

------------------
கலைஞர்.ஏ.ஓ.அனல்
2016.08.14.

 
  • கருத்துக்கள உறவுகள்

 

 
மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு கடந்த 2015...

மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு புதியதலைமுறை சார்பில் இலக்கியத்திற்கான சாதனை தமிழன் விருது வழங்கப்பட்டதன் வீடியோ காட்சி

Posted by புதிய தலைமுறை on Sonntag, 14. August 2016

 

  • கருத்துக்கள உறவுகள்

14azhagey-azhagey1.jpg

ஆனந்த யாழை நீ மீட்டிய வேளை

அண்ணாந்து பார்த்தது மனம்

உள்ளப் பூட்டுகள் உடைத்துன உயிரைக்கரைத்தன

காலத்தால் ஆழியாத உன் பாட்டுகள்

தமிழ் உன்னை நயந்ததும்

தமிழாய் நீ நயந்ததும்

இனி கிடைக்காதென்றான பின்னால்

இன்னும் ஏற்க மறுக்கிறது இதயம்

கூற்றுவனுக்கென்ன கூட்டிச் சென்றுவிட்டான்.

காதினிக்க உன் மொழியைக் கேட்டவர்கள் நாங்களல்லவா

உன் எண்ணம் கொண்டு - இன்னும்

எழுதக் காத்திருக்கிறது தமிழ்  …

ஏமாற்றிப் போகிறது விதி

ஆனந்த யாழே ,

உன் ஆன்மா சாந்தி பெறட்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்த செய்தி வாசித்தேன். எழுத வார்த்தைகள் இல்லை. தமிழுக்காக போராடி வாழ்ந்த கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

13902676_10208278750980930_5729422932502

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரும் தமிழ் உணர்வாளருமான நா முத்துக்குமாரின் மறைவுக்கு எனது அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

என்னவொரு அருமைஞான கவிஞன், கனவிலும் கூட அவனின் பாடல் வரிகளை மனம் மீட்டிக்கொண்டே இருக்கும்....தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் பேரிழப்பு...... 

 

சிறந்ததொரு பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரும் தமிழ் உணர்வாளருமான நா முத்துக்குமாரின் மறைவுக்கு எனது அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

RIP

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அவரது இறப்புக்கு பின்னர் தான் நான் விரும்பின பெரும்பாலான பாடல்கள் இவர் தான் எழுதினார் எனத் தெரிந்து கொண்டேன்...இவரின் இழப்பின் துயரில் இருந்து அவரது உற்றார்,உறவினர்,நண்பர்கள்,சகோதரங்கள்,குழந்தைகள் மீண்டாலும்,அவரது மனைவிக்கு மட்டும் மீள முடியாத் துயராய் அமையும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.