Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!

Featured Replies

யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!

வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எவ்வாறு உங்களால் இவ்வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கமுடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

எந்த நாடுகளிலும் தற்போது பொருத்து வீடுகளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருட்செலவு, ஆட்செலவு என்பன குறைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்கலாம். ஆனால், நான் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளேன். மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரமணைமடுத் திட்டத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள், பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள் 30 வருடமாக மக்கள் கஷ்ரப்பட்டுள்ளார்கள். இனியும் அவர்கள் கஷ்ரப்படவேண்டுமா?

எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும். எப்படியிருப்பினும் விரைவில் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=49294

7 minutes ago, Athavan CH said:

எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும்.

சென்ற கிழமை அடித்த மழையில் மல்லாகத்தில் உள்ள இடம் பெயந்தவர்களின் முகாம் கூரைத் தகடுகள் காணாமல் போய் விட்டனவாம். அந்த மக்களின் கதி? அடுத்த மழை காலத்துக்கு முன்பாகவாவது அவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள். வீட்டில் உள்ள ஒழுக்குக்கே ஐயோ ஒழுகுது என்று கத்துபவர்களுக்கு - கூரையே இல்லாமல் இருப்பவர்களின் கதி புரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் கோவிலில் விகாரை கட்டினால் என்ன என்று கேட்கிற ஐய்ய இவர்...இதையும் சொல்வார்..இதுக்கு மேலையும் சொல்வார்...

42 minutes ago, alvayan said:

பிள்ளையார் கோவிலில் விகாரை கட்டினால் என்ன என்று கேட்கிற ஐய்ய இவர்...இதையும் சொல்வார்..இதுக்கு மேலையும் சொல்வார்...

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

எங்களுக்கு இப்ப அதுவே முக்கியம்.சிரங்கு இருந்தால் தானே சொறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது,

இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள்

அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

 

22 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு இப்ப அதுவே முக்கியம்.சிரங்கு இருந்தால் தானே சொறியலாம்.

இதனை மறுப்பவர்கள் தமிழர் தலைவர்களும் பிரதிநிதிகளுமாக இருக்கிறார்கள்

அவ்வாறாயின் ஏன்?

எதற்காக?

யாருக்காக??? இதனை மறுக்கிறார்கள்?

அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?

1 minute ago, விசுகு said:

யாருக்காக??? இதனை மறுக்கிறார்கள்?

அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?

மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் ?

ஏன் மறுக்கிறார்கள் என்றே தெரியாத போது

மாற்றவழி என்னவென்று சொல்வது??

2 minutes ago, விசுகு said:

ஏன் மறுக்கிறார்கள் என்றே தெரியாத போது

மாற்றவழி என்னவென்று சொல்வது??

எனக்கும் தெரியவில்லை.

இந்த பாதிக்கப்பட்ட மக்களை அரசியல்வாதிகள் பகடை காய்களாக பயன் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கும் தெரியவில்லை.

இந்த பாதிக்கப்பட்ட மக்களை அரசியல்வாதிகள் பகடை காய்களாக பயன் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. 

எந்த துரும்பையும் பிடித்தபடி

அந்த மக்கள் வெளியில் வரணும் என்று தான் தலைவர்கள் இருக்கணும்

தமிழருக்கு மட்டும்???

இதிலே மேலும் வேதனை என்னவென்றால் செய்ய முயல்பவரும் தமிழர்.

6 minutes ago, விசுகு said:

எந்த துரும்பையும் பிடித்தபடி

அந்த மக்கள் வெளியில் வரணும் என்று தான் தலைவர்கள் இருக்கணும்

இல்லை விசுகு இங்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கு.

அதாவது கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியேற்றினால், மறுபடியும் அந்த மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமலே போகலாம் என்பது. இதனால் சில முகாம்களில் மக்களை அரசியல்வாதிகள் வைத்திருக்க முயல்வதில் சில நியாயங்கள் இருக்கு. ஆனால் காணியாற்ற வீடற்ற மக்களை முகாம்களில் வைத்திருக்க விரும்புவதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை விசுகு இங்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கு.

அதாவது கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியேற்றினால், மறுபடியும் அந்த மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமலே போகலாம் என்பது. இதனால் சில முகாம்களில் மக்களை அரசியல்வாதிகள் வைத்திருக்க முயல்வதில் சில நியாயங்கள் இருக்கு. ஆனால் காணியாற்ற வீடற்ற மக்களை முகாம்களில் வைத்திருக்க விரும்புவதுதான் புரியவில்லை.

அதை மக்களே முடிவு செய்ய அனுமதிக்கலாம் அல்லவா??

7 minutes ago, விசுகு said:

அதை மக்களே முடிவு செய்ய அனுமதிக்கலாம் அல்லவா??

நிச்சயமாக

மாவிட்டபுரத்தில் இராணுவத்தால் நிமாணிக்கப்பட்ட வீடுகள் மிகவும் தரமானது. செலவு குறைவு - காரணம் இராணுவத்துக்கு கூலி தேவை இல்லை. சும்மாதானே இஞ்ச இருக்குறானுங்க வேலை செய்யலாம்தானே. இவை காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலியை சேர்ந்த காணியற்றோருக்கு வழங்கப்பட்டது. மக்களும் சந்தோசமாக அங்கு குடியேறி இருக்கிறார்கள். சில வேளைகளில் அவர்களது வாழ்வாதாரம் கடலாக முன்பு இருந்திருந்தால் தவறுதான்.

ஆனால் கடல்வளம் மறுக்கப்பட்ட நிலையில் பலர் வேறு விதமான தொழில் திறமைசாலிகளாகி விட்டனர்.

முடிவு மக்களே எடுக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. 

  • தொடங்கியவர்

 

 

பொருத்தமற்ற பொருத்து வீடுகள் (காணொலி ஆய்வு)

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட இருக்கின்ற  பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பலர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பொருத்து வீடுகள் தொடர்பாக  காணொலி ஆய்வு:

10 minutes ago, Athavan CH said:

பொருத்தமற்ற பொருத்து வீடுகள் (காணொலி ஆய்வு)

இந்த வீட்டில் எனக்கும் நூறு சதவீதம் உடன்பாடில்லைத்தான். ஆனால் அதற்கான மாற்று திட்டத்தை ஏன் யாருமே முன் வைக்கிறார்கள் இல்லை. இப்போதைய மழைக்கு அவர்கள் படும்பாடு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின்ட வீட்டு திட்டம் என்னமாதிரி வெறுமனே வார்த்தை தானா

பொருத்து வீடு என்பது வீடு என்ற போர்வைக்கு சரிவரும் 

ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு ஒத்து வராது இந் த பொருத்து வீடுகள் 

 

 

பொருத்து வீடு என்றால் என்ன? மற்ற வீடுகளில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இதற்கான அங்கிலப்பதம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, முனிவர் ஜீ said:

இந்தியாவின்ட வீட்டு திட்டம் என்னமாதிரி வெறுமனே வார்த்தை தானா

பொருத்து வீடு என்பது வீடு என்ற போர்வைக்கு சரிவரும் 

ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு ஒத்து வராது இந் த பொருத்து வீடுகள் 

இதைத்தான் நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.
பொருத்து வீடு இலங்கை காலநிலைக்கும், நிலத்தின் வலிமைக்கும் ஒரு காலமும் ஒத்துவராது. 

 எது எப்படியோ சோ காட்டி பிரச்சனையை முடிக்க நினைக்கிறார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

பொதுப் பணத்தை மக்கள ஏமாற்றும் திட்டம் ...மக்களை மட்டுமன்றி இனத்தையும் ஏமாற்றி செயலாற்ரூ ௹ஈ௶௶ஆ 22இலட்சத்திற்கு நம்முரில் வாழ்க்கூடிய சுநாத்தியமான வீட்டை அமைக்க முடியும்....இந்திய கழிவுப் பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் பொருத்துவீடு இனத்தையும் அழிக்ககூடியது...வீட்டுத்திட்டம் என்று சொல்லி கிடைப்பதையும் தட்டிப் பறிப்ப்வர்தான் இந்த சுவாமினாதான்..மிச்சத்தை யோசித்து  பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பொருத்து வீடு என்றால் என்ன? மற்ற வீடுகளில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இதற்கான அங்கிலப்பதம் என்ன?

நிழலி... Prefabricated Homes in India  என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப்பாருங்கள்!

 

உலக அளவில் இரும்பில் விலை திடீரெனக் குறைந்ததால்..ஏற்கனவே வைத்திருக்கும் இரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் ...திகைத்த இந்தியாவுக்கு இப்படி ஒரு ஐடியா வந்ததில் ஆச்சரியம் இல்லை!

ஒரு வீட்டுக்காக எவ்வளவு பணம் இந்தியாவுக்குக் கொடுக்கப்படப் போகின்றது என்பது தான் இங்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி!

அத்துடன் எமது பாரம்பரிய வீடுகளுடன் பழக்கப் பட்ட எமக்கு...இந்தப் பொறுத்து வீடுகள் சரி வராது என்பது எனது தனிப்பட்ட கருத்து! அநேகமான இந்தியர்களும் இந்த வீடுகளை, விலை மலிவாகவிருந்தும்.. விரும்புவது இல்லை!

தமிழனது தலை தான் இருக்கிறதே...எல்லோருக்கும் மிளகாய் அரைப்பதற்கு..!

பின்வரும் காணொளியையும் ஒரு முறை பாருங்கள்!

 

தகவலுக்கும் விளக்கமான காணொளிக்கும் மிகவும் நன்றி புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா "சென்றல் எயர்கொண்டிசன் "போட்டு கொடுக்குதாம் எல்லாவீட்டுக்கும்......மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லையாம்......

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் காணொளியில்.... 
இந்தப் பொருத்து வீடுகளுக்கு, இரும்பு பாவிப்பது, எமது ஊருக்கு  பொருத்தமில்லை.
எமது காலநிலையின் படி... இரும்பு பொருட்கள் விரைவில் கறள் பிடிக்கும் தன்மை  உள்ளது. 
செய்வதை... ஒழுங்காக செய்யாமல், சுவாமிநாதன்  நாண்டு கொண்டு நிற்பது சரியல்ல.

கூட்­ட­மைப்பு ஒன்­றையும் செய்­வ­து­மில்லை செய்­கின்­ற­வர்­களை விடு­வ­து­மில்லை

IMG-6644-cdb73a1de7c55cdba696cf66a39a864345a2059a.jpg

 

பொருத்து வீட்டுத் திட்­டமே பொருத்­த­மா­னது என்­கிறார் சுவா­மி­நாதன் 
(எம்.ஆர்.எம்.வஸீம்)

வட­மா­கா­ணத்தில் பொருத்து வீடுகள் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சியல் நோக்­கத்­திலா அல்­லது வேறு ஏதா­வது

கார­ணத்­திலா எதிர்க்­கின்­ற­தென தெரி­ய­வில்லை. ஆனால் உலக நிலை­மையை அவ­தா­னிக்­கும்­போது தற்­போ­தைய நிலையில்  பொருத்த வீட்­டுத்­திட்­டமே உகந்­த­தாகும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். 

கொழும்பில் அமைந்­துள்ள அவ­ரது அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளி்த்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

எனது தனிப்­பட்ட நோக்­கத்தில் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை நான் ஆரம்­பிக்­க­வில்லை. இந்த வேலைத்­திட்­டத்தை இடை நிறுத்­து­மாறு ஜனா­தி­பதி தெரி­விக்­கவும் இல்லை. அத்­துடன் வட­மா­கா­ணத்தில் சாதா­ரண வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு மணல் இல்லை. அதற்கு மக்­க­ளுக்கு போது­மான நேரம் இல்லை. 20ஆயிரம் ரூபா­வாக இருந்த ஒரு டிபர் மணல் தற்­போது 40ஆயி­ர­மாக உயர்ந்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் உல­க­ரீ­தியில் பார்க்­கும்­போது பொருத்த வீட்­டுத்­திட்­டம்தான் உகந்­த­தாகும். இந்த பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை எந்த கம்­பனி மேற்­கொண்­டாலும் எங்­க­ளுக்கு பிரச்­சி­னை­யில்லை. அந்த மக்­க­ளுக்கு வீடு­தேவை. அதுதான் எனது நோக்கம். அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 2வரு­டங்கள் கடந்தும் ஒரு வீட்­டை­யேனும் சரி­யா­ன­மு­றையில் கட்­டி­மு­டிக்­க­வில்லை..

அத்­துடன் சர்­வ­தேச நாடு­களை பார்க்­கும்­போது, குறிப்­பாக அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் பொருத்த வீடு­கள்தான் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இந்த வீட்­டுத்­திட்டம் மூலம் மக்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளையும் செய்­து­கொ­டுத்­துள்ளோம். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இதனை அர­சியல் நேக்­கத்­துக்­காக எதிர்க்­கின்­றார்­களா அல்­லது வேறு நோக்­கத்­துக்­காக எதிர்க்­கின்­றார்­களா என்று எனக்கு விளங்­க­வில்லை.

மேலும் எந்த வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்­டாலும் அதனை எதிர்க்­கக்­கூ­டி­ய­வர்கள் எதிர்த்­துக்­கொண்­டுதான் இருப்­பார்கள்.

அதற்­காக மக்­க­ளுக்கு செய்­யக்­கூ­டிய வேலைத்­திட்­டங்­களை நிறுத்த முடி­யாது. அந்த மக்கள் 30வருட யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அந்த பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும்.

அத்துடன் 3இலட்சத்தி 50ஆயிரம் ரூபாவுக்கு வீடுகட்டலாம் என்பது சிறு சிறு வீடுகளுக்கு பொருந்தும். எமது வீட்டுத்திட்டத்துக்கு பொருந்தாது. முடியுமானவர்கள் செய்துகொடுக்கட்டும். நான் யாரையும் தடுக்கவில்லை. இவர்கள் ஒன்றும் செய்வதும் இல்லை செய்ய விடுவதும் இல்லை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-25#page-1

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இரும்பு பொறுக்கி விற்று ஒரு வேளைதானும் உணவு உண்ணும் வறிய குடும்பங்கள் வரும்காலத்தில் நலமடையப் பொருத்து வீடுகள் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இரும்புச் சூட்டிலும் மக்கள் அவிந்து நோயாளி ஆவார்கள். வைத்தியர்களுக்கும் வரும்படி அதிகமாகும்.   

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.