Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

  • Replies 139
  • Views 20.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

நானும் மகனும் நிதானமாக இறங்கி விமான நிலைய குடிவரவு பகுதிக்கு செல்லும் போது மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. நேரம் அதிகாலை 1 மணி இருக்கும். வேறு இரு  விமானங்கள் தாமதமாக வந்தமையால் ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிறங்கியதாகவும் அதனால் தான் பெரிய வரிசை என்றும் ஒரு சில பணியாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. சென்னை விமான நிலையம் பற்றிய செய்திகள் கேள்விப்பட்டு இருந்தமையாலும் அதிகாரிகள் மிகவும் அசமந்தமாக நடப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருந்தமையாலும் வரிசை மிக மெதுவாக நகரும் என நினைத்து சலிப்படைய ஆரம்பித்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக வரிசை வேகமாக நகரத் தொடங்கி என் முறை வந்தது.

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது. அந்த உற்சாகத்தில் duty free shop இற்கு சென்று இரண்டு Glenfiddich Whisky வாங்கிக் கொண்டு (அதற்கு மேல் வாங்க முடியாதாம்) பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு (அவையும் விரைவாக வந்து விட்டன) வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.

அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன். 7 வயதில் பார்த்த அக்காவின குட்டி மகன்16 வயது நெடு நெடுவென 6 அடிக்கு வளர்ந்து இருக்கும் பெரிய பெடியனாக காணுகின்றேன். அத்தான் இந்த 9 வருடத்தில் இலங்கையை சேர்ந்த கப்பல் போக்குவரத்து கம்பெனியில் regional manager ஆக தன் தொழில் துறையில் வளர்ர்சி அடைந்து நிற்கின்றார் (சென்னையில் தான் அதன் அலுவலகம்).

ஒன்றரை வயதுக்கு பின Skype இன் மூலமாக மட்டுமே பரிச்சயமாக இருந்த அக்காவின் குடும்பத்தினை என் மகன் காணுகின்றான். எப்படியான உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் என் கைகளை இறுக்கிப் பிடிச்சு கொண்டு ஆள் நிற்கின்றான். முற்றிலும் மாறான ஒரு தேசத்தில் தனக்கு பழக்கமில்லாத ஒரு குடும்பத்துடன் எந்தளவுக்கு ஒன்றிப் போவான் என்பது எனக்குள் ஒரு கேள்வியாக எழுந்தது. என் பயணத்திட்டத்தின் படி மூன்றாம் நாள் நான் அவனை சென்னையில் விட்டுவிட்டு இலங்கைக்கு செல்ல வேண்டும். இலங்கையில் எனக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருந்தமையால் அவனை கூட்டிக் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இலங்கைக்கு கூட்டிச் செல்ல நினைக்கவில்லை.

சாமம் மூன்று மணிக்கு அக்காவின் apartment வந்த பின் 4 மணிக்கு படுக்க போய் நல்லா அயர்ந்து நித்திரை கொள்ளும் போது சரியாக 6: 30 இற்கு பெரும் சத்தத்துடன் ஏதோ தொம் என்று விழுகின்றது. என்னவென பார்த்தால் அந்த கட்டிடத்தின் தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் குழாய் உடைந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியிருந்தது.....அதாவது அபார்ட்மென்டுக்கான தண்ணீர் அதை திருத்தும் வரை கிடைக்காது.

நான் வந்த அதிஷ்டத்தினை தண்ணீரை நிறுத்தி அபார்ட்மென் கொண்டாடத் தொடங்கியது

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

...

 

சென்னை அனுபவ குறிப்புகளுக்கு நன்றி நிழலி..!

  • மத்தியக் கிழக்கு நாடுகளின் விமான நிலையத்தில் ஆசிய நாட்டவர் யாராயினும், வாயையும், வாலையும் சுருட்டிக்கொண்டு ஐம்புலன்களையும் அடக்கிகொண்டு விமானமேறும் இவர்கள், தங்கள் நாட்டின் தரையை தொட்டதும் தங்கள் புத்தியை காட்டத்தொடங்கிவிடுவர்..
  • தரையிறங்கும்போது விமான பணிப்பெண் வந்து சொல்லும்போதுதான் இருக்கையின் சாய்வை சரிசெய்வார்கள், விமானத்தின் அறிவிப்புகளை துளியும் சட்டை செய்வதில்லை..
  • ஓடுதளத்தில் தரையிறங்கியதுமே கைப்பேசியை இயக்கத் தொடங்கிவிடுவர்..
  • விமானம் தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்த அடுத்த நொடியே முண்டியடித்து அனைவரும் எழுந்து தலைக்குமேல் இருக்கும் பொதிகளை அடுத்தவர்களின் தலையை பதம் பார்க்கும்வண்ணம் இறக்கி பொதிகளோடு வெளியேறும் கதவுகள் திறக்கும்வரை  கால்கடுக்க நிற்பார்கள்..
  • அதுமட்டுமா, வெளியேறும் வரிசை நகருகையில் ஓரமாக நின்று பேசி முடிக்காமல் உப்புச்சப்பற்ற விசயத்தை கைத்தொலைப்பேசியில் சத்தம்போட்டு பேசிகொண்டே வழியடைத்துக்கொண்டு செல்வதை பார்க்கலாம்..
  • குடியகல்வு சோதனைக்கு முண்டியடித்து நிற்பதும், குடும்பம், பெண்கள் செல்லும் வரிசையில் ஆண்கள் மட்டும் போய் நிற்பதும் இங்கே வழக்கம்..
  • எங்கும் வரிசையை மதிப்பதில்லை..

இன்னும் சின்னச் சின்ன எரிச்சல்கள் இருக்கின்றன.. ஆனால் இவைகளெல்லாம் வெளியே நமக்காக ஆவலோடு காத்திருக்கும் சொந்தங்களை கண்டவுடன் நொடியில் கரைந்துவிடும்..!

 

4 hours ago, நிழலி said:

.. நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார்..

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை தண்ணீர் தெளித்து வரவேற்று விட்டது....!

இன்றைய நாளில் பிள்ளைகள் எமது உறவுகள் தெரியாமல் இருந்தாலும் இலகுவாக சேர்ந்து கொள்கின்றார்கள் . அதுக்கு இந்த நவீன தொழில் நுட்பங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்......! 

நல்லகாலம் மனைவியுடன் வந்திருந்தால் அவளது புன்னகையை கவனிக்க உங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்காது. காட் இஸ் கிரேட்...!

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் .புங்கை பாவம் பிள்ளை குட்டிக்காறர்tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.3.2017 at 5:01 AM, Maruthankerny said:

எனக்கு எல்லாம் ஓகே ஆகத்தான் போனது 
நடை தூரம் கொஞ்சம் அதிகம் அதோடு அந்த முன் 
கேட் (வாசல்) செக்கிங்கில் நிற்கும் ஆட்களின் முகம் சுளிப்புகளும் 
எடுப்புகளும்தான் பிடிக்காதது.

என்னை போன்ற ஏர் லைன்ஸ் பயணிகளுக்கு தூரம் கூடினால் 
சிரமம் ..... நாம் டிக்கெட் வாங்கி வருவதில்லை 
எதில்  சீட் இருக்கிறதோ அதில் புக் பண்ணி சென்றுவிடுவோம்.
ஒரே ஏர்லைன்ஸ் என்றால் பரவாயில்லை ....
ஏர்லைன்ஸ் மாறினால் .... வெளியில் வந்து டிக்கெட் கவுண்டரில்தான் 
எம்மை கொன்பெர்ம் பண்ண வேண்டும் 
அப்போ ஒன்று இரண்டு தடவை வெளியில் வந்து போக நேரும் 
அதோடு ஏர்லைன்ஸ் மாறும்போது டெர்மினலும் மாறும் 
கொஞ்சம் கிட்ட கிட்ட இருந்தால் நல்லம்.

கீத்திரோ அது இதை விட கொடுமை .....
ரெயின் சுத்தி சுத்தி ஓடும் ..... ரயிலில் ஏறி இறங்கி 
கேட்டுக்கு போக ஒரு மணித்தியாலம் வேண்டும். 

அதைவிட ஏர்போர்ட் டாக்ஸ் (வரி) அதிகம் $180. 

(Frankfurt $49)  

மலிஞ்ச விலையிலை எல்லாம் வேணும்....அதுக்குள்ளை எல்லா வசதியும் இருக்கோணுமெண்டால்.......:grin:

  • தொடங்கியவர்
On 2017-03-03 at 1:31 AM, Maruthankerny said:

மிக கேவலமான ஏர்போர்ட் என்றால் எனக்கு துபாய்தான் (கஸ்ட்மர் சர்விஸ் ஸிரோ) 

 

அப்படித்தான் பல தென்னாசியர்கள் சொல்கின்றனர், ஆனால் என்னால் அப்படிச் சொல்ல மனம் இடம்கொடுக்குது இல்லை. எனக்கு 5 வருடங்கள் சோறும் வாழ்வும் வளமும் தந்த விமான சேவையை தன்னகத்தே கொண்ட விமான சேவை என்பதால் ஒரு நன்றிக் கடன்.

On 2017-03-03 at 2:38 AM, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக தொடருவேன்

On 2017-03-04 at 6:27 AM, யாயினி said:

அனேகமாக யேர்மன் ஊடாக பயணிப்பவர்கள் வெயிற்றிங் ரைம் குறைவு என்று சொல்வார்கள்..எதனால் 5 மணி நேர தாமதம்..? 
ஏன் எனில் சிறுவர்களோடு பயணிக்கும் போது நீண்ட நேர காத்திருப்புக்கள் வேணுமா....

நான் பயண திட்டம் போடும் போது ஆகக் குறைந்தது 3 மணி நேர காத்திருப்புமிக்க transit இனைத்தான் நாடுவது அதிகம். காரணம், விமானம்  ஒரு சில மணித்தியாலம் தாமதித்தாலும் transit இல் விமானத்தினை தவற விட சந்தர்ப்பம் குறைவு. அவசர அவசரமாக இறங்கி விழுந்தடித்துக் கொண்டு பரபரக்கத் தேவை இல்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதை என் இரண்டாம் பயணமே சான்று

 

On 2017-03-04 at 4:28 PM, ஈழப்பிரியன் said:

நிழலி இனி எந்த விமானநிலையம் போனாலும் நான்தான் யாழ் கள பொறுப்பாளர் என்று சொல்லுங்கள்.விஐபி மரியாதை.

பின்னூட்டத்துக்கும் நக்கலுக்கும் நன்றி

On 2017-03-05 at 0:44 AM, முனிவர் ஜீ said:

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

பின்னூட்டத்துக்கு நன்றி

 

On 2017-03-05 at 11:02 PM, ராசவன்னியன் said:

 

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

  • தொடங்கியவர்
On 2017-03-06 at 3:14 PM, ரதி said:

தொடருங்கள்...

நன்றி ரதி. ஒரு பதிவை பதிந்தபின் ஒரு சிலரது பின்னூட்டங்களையும் விமர்சனத்தினையும் எதிர்பார்ப்பேன். அதில் உங்களது பின்னூட்டமும் ஒன்று

On 2017-03-07 at 0:25 AM, யாயினி said:

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

 

கடந்த பதிவை போடும் போது பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. முன்னர் அலுவலகத்தில் இருந்து எழுத முடிந்தது; ஆனால் இப்ப முடியாது என்பதால் எழுதக் கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. அதனால் தான் கேள்விகளுக்கு பதில் எழுத தாமதம் ஆனது

On 2017-03-07 at 1:57 AM, suvy said:
On 2017-03-07 at 2:09 PM, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் .புங்கை பாவம் பிள்ளை குட்டிக்காறர்tw_blush:

 

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

கண்டிப்பாக தொடருவேன். வெள்ளி அல்லது வார இறுதியில் அதிகமாக படங்களுடன் எழுதுகின்றேன்.

  • தொடங்கியவர்

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

ஒன்ரை மணியளவில், அடுப்பில் இருந்த நண்டுக் கறியின் வாசனை மூக்கைத் துளைக்க, மாட்டு இறைச்சி டெவிலும், கோழிக் கால் பொரியலும், Sausages  அக்கா சமைச்சுத் தர எங்கள் முதல் பார்ட்டி கோலாகலமாக ஆரம்பமானது.

(மிச்சம் பிறகு)

  • கருத்துக்கள உறவுகள்
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு------

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது.

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

awbzi8.jpg

 

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

(மிச்சம் பிறகு)

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

தொடர் நல்லாயிருக்குது..!

இந்தியாவில நீங்கள் ரவுண்ட் எபவுட்டை சுத்திப் போகத் தேவையில்லை! நேரடியாகவே எக்சிட் எடுக்கலாம் என்று கூறுவார்கள்! போலீஸ்காரர் ஏதாவது கேட்டால் ஒரு பீடிக்கட்டோடு அலுவலை முடிக்கலாம் என்று சொல்லுவார்கள்!

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

  • கருத்துக்கள உறவுகள்
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன்.

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Quote

 

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

தொடருங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2017 at 1:44 AM, குமாரசாமி said:

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

 

  • தொடங்கியவர்
On 2017-03-10 at 2:19 PM, தமிழ் சிறி said:

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

 

ஆற அமர்ந்து வாசிச்சு கருத்தெழுதியமைக்கு நன்றி தமிழ்சிறி. தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்கள் மீதான என் பார்வை வேறு

On 2017-03-10 at 2:39 PM, தமிழ் சிறி said:

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

சுலோச்சனா என்ற பெயரை கேட்டவுடனேயே மனசில் அந்தப் பெயர் பச்சக் என்று ஒட்டிவிட்டது. அத்துடன் அவரிடம் என் அக்கா அடிக்கடி மீன் வாங்குவதால் மிகவும் ஈடுபாட்டுடன் உரையாடியதும் பிடிச்சு இருந்தது. அவருக்கு ஒரு 50 வயது இருக்கும் என நினைக்கின்றேன். முகம் முழுதும் மகிழ்வுடன் இருந்தார். சுலோச்சனாவின் படமும் என்னிடம் உள்ளது.அவரது அனுமதி இன்றி பிரசுரிப்பது தவறு என்பதால் அதை இங்கு இணைக்கவில்லை,

On 2017-03-10 at 3:17 PM, ஈழப்பிரியன் said:

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

 

On 2017-03-10 at 3:28 PM, புங்கையூரன் said:

 

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

ஹிஹி இந்தக் குடல் இதுவரைக்கும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கு. மற்றது, இவற்றில் சில ஒரு வாரத்துக்கு என்று வாங்கியவை (நண்டைத் தவிர)

  • தொடங்கியவர்
On 2017-03-10 at 3:38 PM, ரதி said:

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும். அத்துடன் இதுகள் எல்லாம் போய் வயிற்றை ஒரு வழி பண்ணாமல் இருக்கத்தான் விஸ்கி அடிப்பது.

சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று சொல்லியமைக்கு இது மட்டும் காரணம் அல்ல. வேறு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றன. இறுதியாக நடந்தமைக்கு ஒரு வேளை வேறு காரணம் இருப்பினும் மிச்ச இரண்டும் அப்படி அல்ல. அவை மூன்றையும் தொடரில் எழுதுவேன்.

On 2017-03-10 at 4:23 PM, nochchi said:

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

 

நானும் சிறு வயதில் இதயம் பேசுகின்றது எனும் சஞ்சிகையில் வந்த மணியனின் ஒன்று இரண்டு பயணக் கட்டுரைகளை வாசித்து இருக்கின்றேன். அதில் ஒன்று சிறிமாவோ வை இலங்கை வந்து சந்தித்தது.

தொடர்ந்து வாசித்து கருத்துகளை எழுதுங்கள். பின்னூட்டங்கள் தான் எழுத உத்வேகத்தினை கொடுப்பவை

On 2017-03-10 at 7:44 PM, குமாரசாமி said:

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

On 2017-03-13 at 3:00 PM, kkaran said:

தொடருங்கள் 

 

வருகைக்கு நன்றி. அடிக்கடி உங்களை இங்கு காண முடியுது இல்லை. தொடர்ந்து வாசித்து கருத்து எழுதுங்கள் கரன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அலட்டலை விட்டிட்டு  கதையை தொடருங்கோ 

 

12 minutes ago, நிழலி said:

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும்.

என்ர மனுசியும் , இது என்ன சாரப்பாம்பின்ர  குடலோ எண்டு தான் கேக்கிறாரா (அது பிறப்பில வந்தது . நான் என்ன செய்ய  எத போட்டாலும் செமிக்குது )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, நிழலி said:

 

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

எதற்கும் நீங்கள் இந்த திரியில் எழுதியவற்றை திரும்ப வாசித்து பாருங்கள்.

எங்கோ ஒரு இடத்தில் நான் எழுதியதின் தொடர்பு இருக்கும்.tw_blush:

அது சரி தொடர்பில்லாத பின்னோட்டங்களுக்கு எதற்காக நன்றி:)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

... தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

இது உண்மைதான்..

தமிழகத்திலுள்ள அனைத்து வணிக,கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் இருக்கவேண்டுமென அரசு உத்தரவு பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.. தமிழுக்கு முக்கியத்துவம் கட்டாயம், அடுத்து ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும்,விரும்பினால் பிற மொழிகளில் அடுத்ததாகவும் இருக்கவேண்டுமென விதி நடைமுறையில் இன்றும் உள்ளது.. சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விதியை கடைப்பிடிக்க தவறிய நிகழ்வுகளும் உண்டு..

இது பற்றிய செய்தி இங்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.