Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Featured Replies

  • தொடங்கியவர்
On ‎3‎/‎17‎/‎2017 at 10:20 AM, ரதி said:

காக்கா இறைச்சி தேடிப் போயிருப்பார்.:unsure:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

On ‎3‎/‎17‎/‎2017 at 11:36 AM, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி மகா ரசிகன் என்று தெரியும் காலம் ஆளை மாத்தியிருக்கும் என்று நினைத்தேன் ஊகூம் கொஞ்சமாவது திருந்தினதா தெரியேல்லை.... இந்தக் கவிதாப் பொண்ணுக்கு சரியாகக் கடிவாளம் போடத் தெரியலை<_<

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

15 hours ago, Thumpalayan said:

ஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா). 

மற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை.

அந்த எயர் கொஸ்டசிண்ட  வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்?

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

13 hours ago, MEERA said:

நிழலி தயவு செய்து மடியில் கனம் இல்லை என்று கூறாதீர்கள். உங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டே பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். சிங்களத்தில் கதைப்பதும் சிறு உதவியே.

 

"Juliana hotel" ஒரு மார்க்கமான இடத்தில் தான் தங்கியிருக்கிறீர்கள். இப்பவும் "அப்படி" நடக்கிறதா? 

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

10 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது...நிழலி!

நானும் பல தடவைகள் போய் வருகின்றேன்! போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன்! ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம்! இப்படியான பிரச்சனைகள் வரவில்லை! ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஆண் உத்தியோகத்தரிடம் போக வேண்டி ஏற்பட்டது! எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது! நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது! மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது! ஒரு கருவாட்டுப் பார்வையுடன் விசாவைக் குத்தித் தந்தார்கள்!

சில வேளைகளில் ..எந்த நாட்டுக் கடவுச் சீட்டு என்று பார்த்து அலுப்புக் குடுக்கிறார்களோ தெரியாது!
அனேகமாக..ஆங்கிலத்தில் தான் உரையாடலை முடித்துக் கொள்வதுண்டு!

சிங்களம் ஓரளவுக்குக் கதைக்கத் தெரியும் எனினும்...எவருடனும்க வலிந்து கதைக்க விரும்புவதில்லை!

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

9 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி இப்போது கொழும்பில் ரைக்சி ஆட்டே பிடிப்பதை விட ஊபர் (UBER) பிடிப்பது லாபம் சேவையும் நன்று என்று கூறுகிறார்கள்.இதன் அனுபவம் ஏதாவது?

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

  • Replies 139
  • Views 20.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

எனக்கும் இவர்களில் ஆண்களையும் பெண்களையும் கஞ்சத்தனமாகவே பிரம்மன் படைத்துவிட்டான் என்றொரு கோவம் ஆதலால் "யெல்லோ வீவர்" இல்லை ஆனால் ஜப்பானுக்கு விதிவிலக்கு குடுக்கவேண்டியதாப் போச்சு.

"கம குக்குல" வேணுமெண்டால் தக்குண பத்த தான் போக வேண்டும். தாமரை இலையில சூதுரு சம்பா சோறு, ஆத்து மீன் அம்புல் தியால், கொட்டுக் கொல சம்பல், பொலொஸ் கறியுடன் தென்னங் கள்ளு. அனுபவிச்சாத் தான் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎/‎03‎/‎2017 at 7:29 PM, நிழலி said:

ரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.
பதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.

மனைவி கவிதா என்னை விட மகா ரசிகை. :10_wink::10_wink:

ஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும்.  என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச்  சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)

அங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.

திரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு

 

 

ஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது.  என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.

 வில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.

 

வழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)

ஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.

இல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.

இலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன்.  என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை.  என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

On ‎21‎/‎03‎/‎2017 at 7:48 PM, கிருபன் said:

எனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்?

அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.

நான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை!

 நானும் ஒரு தடவை அவசரத்திற்கு கொஞ்சம் மாத்தி இருக்கன்....ஆனால் எனக்கு மாத்த முதலே தெரியும் எப்படியும் குறைச்சுத் தான் கிடைக்கும் என்று:rolleyes:

On 20/03/2017 at 10:39 PM, நிழலி said:

எப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார்

நான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன்

ஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர்

'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை'

என் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்'  என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி. எனக்கு சென்னை பரிட்சயமான இடம். ஆனால் எக்காலத்திலும் கொழும்புக்கு நான் சென்றதில்லை. என்னுமொரு பதிவில் புத்தன் எழுதியதும் சரி இதில் நடக்கும் சிறு விசாரணையும் சரி கொழும்பு ஊடாக பயணம் செய்யும் நோக்கத்தையே சிதைக்கின்றது. ஒருவிதமான மனத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பல இடங்களில்  அன்றாடம் நெருக்கடிகளைள சந்திக்கின்றோம் ஆனால் சிங்களவர்கள் இந்திய அதிகாரவர்க்கம் கொடுக்கும் உளவியல் நெருக்கடிகளை மனம் சகிப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 15.3.2017 at 3:18 AM, நிழலி said:

ஒரு விருந்தாளியின் பார்வை -1

மனம் முழுசும் மகிழ்வும் நெகிழ்வும் குடி கொண்டு இருந்தன.

அக்காவை பெற்ற தம்பிகளுக்குத்தான் தெரியும் அக்கா என்பது இன்னொரு அம்மா மட்டுமல்ல நல்ல தோழி என்றும். அதே போன்று அக்காவின் கணவர் எனும் உறவு நட்புக்கும் சகோதரருக்கு இடைப்பட்ட மிக உன்னதமான உறவு. அத்தான்மார்களால் வாழ்வு பெற்ற பலர் எம் சமூகத்தில் இருக்கினம்.----

 

நிழலி.... உங்கள் அக்காவின் மேல் வைத்திருக்கும் பாசம்... எம்மை, மெய்சிலிர்க்க  வைக்கின்றது.
முதல் பிறந்தவர்களுக்கு.... பொறுப்பு அதிகம். 
எனக்கு.... அக்கா, அண்ணா.. இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதும் உண்டு.

  • தொடங்கியவர்

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

நான் இலங்கைக்கு செல்ல விரும்பியதற்கு / செல்ல வேண்டியதுக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் EPF / ETF காசை இன்னும் எடுத்து இருக்கவில்லை. அது தொடர்பாக வேலை பார்க்க.

அடுத்தது பல ஆண்டுகளாக சந்திக்க முடியாமல் போன நெருங்கிய உறவுகளை சந்திப்பதற்கு.

இந்த 9 ஆண்டு கால இடைவெளியில் நெருங்கிய மூன்று உறவுகளை இழந்து இருக்கின்றேன். பலர் 70 இற்கு அருகிலும் அதைக் கடந்தும் செல்லத் தொடங்கி விட்டனர். எனக்கும் 40 + ஆகிவிட்டது. விரைவாக எல்லாரையும் சந்தி என்று மனம் சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் போன அன்றே இரவு இதயத்தில் அறுவை சிகிச்சை (Open heart surgery) செய்த மாமியையும், அவர் மகனையும், ஒன்று விட்ட தங்கையையும் அவரது சின்னஞ் சிறு குழந்தையையும் சந்தித்தேன்.

மூன்றாவது நல்லா இலங்கை சாப்பாடு சாப்பிட.

இரவு இரண்டு மச்சான் மாருடன் sapphire hotel லில் தலை சுற்றும் அளவுக்கு நல்ல தண்ணி அடி. கன நாளைக்கு பிறகு Extra special Arrack அடித்தேன்

xp4v95.jpg

அடுத்த நாள் காலையில் வெள்ளவத்தைக்கு சென்று மைசூர் கபே யில் இரண்டு போண்டா சாப்பிட்டு விட்டு எனக்குப் பிடிச்ச Light tea  வாங்கிக் குடிச்சேன். வெள்ளவத்தையில் இருக்கும் உணவு விடுதிகளில் எனக்கு எப்பவும் பிடிச்சது சந்தைக்கு முன் இருக்கும் மைசூர் கபே தான். இன்னு  அதே சுவை.. அதே interior

72rfiu.jpg

(Light Tea)

புதனும் வியாழனும் கொழும்பில் சொந்த வேலைகளை பார்க்க நேரம் போனது.

எல்லாரும் குறிப்பிடுவது போன்று விலைவாசி மிக மோசமாக ஏறி இருக்கு. சில பொருட்களை கனடிய டொலரில் மதிப்பிட்டு பின் என் வருமானத்தையும் கனடிய டொலரில் மதிப்பிட்டு, இங்குள்ளவர்களின் சராசரி வருமானத்தையும் சேர்த்து ஒப்பிடும் போது கொழும்பில் / இலங்கையில் பொருட்களின் விலை அதிகமாகவே தோன்றுகின்றது.  இதற்கு வெறுமனே யுத்தம் மட்டும் காரணமல்ல. மகிந்த அரசு வாங்கிய பல ஆயிரம் கோடி கடன்களும், இப்ப இருக்கும் அரசின் VAT வரியும் (15% ?), மோசமான நிதி மேலான்மையும் காரணங்கள் என்று ஓரளவுக்கு பொருளாதாரம் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

காலி வீதி கொழும்பை அண்மிக்கும் பகுதிகளில் இருந்து one way ஆக்கி இருந்தார்கள். இது தெரியாமல் ஒரு 10 நிமிடங்களுக்கும் மேல் பம்பலபிட்டியில் இருந்து வெள்ளவத்தைக்கு போக காலி வீதியில் bus இற்காக காத்து இருந்து ஏமாந்து போனேன்.

நான் சென்ற EPF / ETF  ஆகிய அரச அலுவலகங்களில் கொஞ்சம் மந்தமாக வேலைகள் நடப்பினும், நட்பாக பழகுகின்றனர். தமிழர் என்ற காரணத்துக்காக என்னை அலைக்கழிக்க வைக்கவில்லை. தமிழ் உத்தியோகத்தவர்களை காண்பது அரிதாக இருக்கு. ஆனால் நிறைய முஸ்லிம் அலுவலர்களை காண முடிந்தது.

Fashion விடயத்தில் அதிக முன்னேற்றத்தினை காண முடிகின்றது. அழகான பெண்கள், அழகான ஆடைகள், கவர்ச்சியான சிங்கள யுவதிகள்.

கணணி தொழில்நுட்ப விடயத்தில் முன்னேற்றம் நிறைய வந்திருக்கு . மென்பொருள் வர்த்தகத்தில் விரைவில் மேலும் பல மடங்கு முன்னேறுவார்கள்.

தனியார் துறையில் படித்த தமிழ் இளைஞர்களை காண முடிகின்றது. இலங்கைக்கான Oracle கிளையில் என் நண்பன் தான் மேலதிகாரியாக இருக்கின்றான். வங்கிகளிலும் பல உயர் மட்டங்களில் தமிழர்களை காண முடிகின்றது. JKCS இலும் தமிழர்கள் நல்ல நிலையில் வேலை செய்கின்றனர்.

வெள்ளவத்தை தமிழர்களின் கட்டிடக் காடாக காட்சியளிக்கின்றது. தடுக்கி விழுந்தால் ஒரு அபார்ட்மென்ட். இதில் deeds இனை வாங்கியவருக்கு கொடுக்காமல், அதை வைச்சு வங்கியில் இன்னும் கடன் வாங்கி சுத்து மாத்து செய்து கட்டிடம் கட்டும் நிறுவனங்களும் உள்ளன.

ஆசையாக சாப்பிடப் போன ரொலக்ஸ் ஹோட்டலின் உணவை இப்ப நினைச்சாலும் குமட்டுகின்றது.

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

பழைய ரயில்கள் புதிய ரயில்கள் என கதம்பமாக ரயில்கள் ஓடுகின்றன.

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

இரவு விடுதிகள் அருமையாக உள்ளன.

பல வருடங்களாக வாழ்ந்த கொழும்பு நகரம் வந்திறங்கிய அந்த நொடிப் பொழுதில் இருந்து மீண்டும் மனசுக்குள் நெருக்கமாக வந்து குடி கொள்கின்றது

வெள்ளி இரவு யாழ்ப்பாணத்துக்கு புறப்படுகின்றேன்.

(மிச்சம் பிறகு)

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.

அனுபவம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2017 at 1:52 PM, நிழலி said:

இடைச் செருகல்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும்  Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்

இது 46 ஆவது முறை. Sri Lankan airlines  இல்

அந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத

வெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.

ஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்

ஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது

இடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்

 

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.

Quote

இங்க தான் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கின்றோம்....83 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பட்ட அழிவுகளின் பின்பும் வெள்ளைவத்தை வெள்ளவத்தையாக ............

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பைப் பற்றி பல உருப்படியான தகவல்களை அறிய முடிந்தது ! 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

தொடருஙகோ நிழலி !

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

மீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

கொழும்பில் முதல் மூன்று நாட்கள்

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது

ஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி  லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.

(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)

"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.

************************************************* *************************************************

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 11:58 PM, ரதி said:

சீக்tw_astonished:(நீர்க் காக்கா? அப்படி ஒரு பறவை இருக்கா? உண்மையிலேயே தெரியவில்லை):unsure:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

4 hours ago, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

  • தொடங்கியவர்
On 2017-03-29 at 2:49 AM, MEERA said:

அனுபவம்?

சுய தணிக்க tw_blush:

 

On 2017-03-29 at 4:29 AM, putthan said:

இந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ?:10_wink:உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்

எந்த  பரதேசம் போனாலும் எங்க பெடிச்சியளைக் கண்டால் ஒரு இனம்புரியாத கவர்ச்சி ஏற்படத்தான் செய்யுது. வருகைக்கு நன்றி புத்ஸ்

On 2017-03-29 at 5:11 AM, புங்கையூரன் said:

 

இரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா? இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா?

இந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது! அது தான் கேட்டேன்!

 

 

கொழும்பில் இரவு விடுதிகள் நிறைய இருக்கு புங்கை. அநேகமானவை லைசென்ஸ் பெற்று நடத்தப்படுவை. அரசியல்வாதிகள் தான் அதிகமானவற்றுக்கு உரிமையாளர்கள்.  இவை ஒவ்வொரு genre / type இல் இருக்கு. மேலைதேய நாடுகள் போல நிர்வாண நடனம் போன்றவை அங்கு இல்லை என்றாலும் ஆடிப்பாடி குதூகலிக்கவும் நண்பர்களுடன் அமர்ந்து லயிச்சு அனுபவிக்கவும் முடியும். கனடிய /அமெரிக்க இரவு விடுதிகளுடன் ஒப்பிடும் போது வன்முறை / ஆட்களை சுடுவது என்பன மிக மிக குறைவு (மகிந்தவின் புதல்வர்கள் முன்னர் அட்டகாசம் செய்தவர்கள் இங்கு)

அழகிய மேட்டுக்குடியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களையும் இளம் யுவதிகளையும் Pickup பண்ணும் இடங்களும் இவைதான். ஆனால் நான் அச்சா பிள்ளை என்பதால் இவை பற்றி அனுபவம் இல்லை.

On 2017-03-29 at 5:17 AM, suvy said:

தொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....! tw_blush:

நன்றி அண்ணா

On 2017-03-29 at 10:55 AM, ஈழப்பிரியன் said:

கொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ?

எனக்கு இது பற்றி தெரியவில்லை ஈழப்பிரியன். அத்துடன் Uber நிறுவனம் பற்றி எனக்கு நல்ல எண்ணம் இல்லை என்பதால் இங்கு கனடாவிலும் அதை ஆதரிப்பது இல்லை.

On 2017-03-29 at 8:48 AM, குமாரசாமி said:

xp4v95.jpg

உதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....tw_astonished:

கு.சா,

உத இங்க குளிர் நாட்டில் அடிச்சால்..'சப்' என்று இருக்கும். ஆனால் அங்க போய் இதை 'கங்கூன்' கீரையை taste ஆக சாப்பிட்டுக் கொண்டு அடிக்க அந்த மாதிரி இருக்கும். ஒருக்கா மாமா வரும் போது இதை கனடாவுக்கு கொண்டு வரச் சொல்லி அடிக்க, வெறுப்பாக இருந்தது. ஆனால் அங்கு அமிர்தம்!

On 2017-03-29 at 11:46 AM, தமிழ் சிறி said:

தமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.

தெரியவில்லை தமிழ்சிறி. எனக்கும் இந்த கேள்வி மனசுக்குள் எழுந்ததாயினும், அவரிடம் கேட்கவில்லை

On 2017-03-29 at 1:44 PM, முனிவர் ஜீ said:

22fb6f7a1e79b361c0e6a4508d76aae6.jpg

செம ரேஸ்ட் 

பல வெளிநாட்டு பயணிகள் வருவது சில  இறைச்சி வகைகளை உண்ணத்தான்     

இலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு 

 

தொடரட்டும் நிழலி  

நன்றி முனி... நீர்க்காக்காவை கடந்த இரு முறையும் காணக் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்

கொழும்பு - யாழ்ப்பாண பேருந்து எனும் ‘வெருட்டல்’ சேவை.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ‘யாழ் – கொழும்பு’ தனியார் சொகுசு (?) பேரூந்தில் செல்கின்றவர்கள் பலருக்கு பல விரும்பத்தகாத அனுபவங்கள் கிடைத்ததை அறிந்து இருந்தமையால்  அதை தவிர்த்து ரயிலில் செல்ல முதல் முடிவு செய்து இருந்தேன்.

ஆயினும் தனியப் போவது பம்பலாக இருக்காது என்பதால் மச்சானையும் இறுதி நேரத்தில் வரச் சொல்லிக் கேக்க, அவன் தனியாக வராமல் தன் மனைவியையும் இரு குட்டி வாண்டுகளையும் கூட்டிக் கொண்டு வர முடிவெடுக்க, ரயிலில் இனி இருக்கைகள முன்பதிவு செய்ய நேரம் போதாமையால் இறுதியில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம்.

யாழ் – கொழும்பு தனியார் சொகுசு (?) பஸ்களை சேவையில் ஈடுபடுகின்ற அநேக கம்பெனிகள் தமிழர்களின் கம்பெனிகள் தான். ஆனால் சாரதிகளாக சிங்களவர்களை தான் அதிகம் வைத்து உள்ளனர். இதன் காரணம் தமிழர்கள் சாரதிகளாக வர விரும்பான்மை அல்ல, வரும் பயணிகளிடம் சிங்களத்தில் கதைத்து தமிழ் பயணிகளை ‘வெருட்ட’. சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

யாழ் கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பேருந்து சேவையில் ‘PPT’ எனும் பேரூந்து சேவை ஒரு மோசமான உதாரணம் எனக் கேள்விப்பட்டு இருந்தேன். பேரூந்து சில கிலோ மீற்றர் கடந்து நகரப் பகுதிகளை தாண்டியபின் Air condition னை நிப்பாட்டி விடுவார்கள் என்றும், யன்னல்கள் திறக்க முடியாத அந்த பஸ்ஸில் வேர்த்து களைச்சு தான் ஊர் போய்ச் சேர்வார்கள் என்றும் அறிந்து இருந்தேன்.  எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிங்களத்தில் முரட்டுத்தனமாக கதைச்சு  வெருட்டி  பயணிகளை கேவலமாக நடத்துவர் என்றும் கேள்விப்பட்டு இருந்தமையால் எக்காரணம் கொண்டும் அந்த பஸ்ஸில் இருக்கைகளை முன் பதிவு செய்யாதே என்று மச்சானுக்கு சொல்லி இருந்தேன்.

இரவு 7:30 இற்கு வெள்ளவத்தை இராமகிருஸ்ணன் வீதிக்கருகில் வரிசையாக பேரூந்துகள் யாழ் செல்ல நிற்கின்றன. நல்ல உயரமான சொகுசு பேரூந்துகளாக தெரிகின்றன.

மச்சான் ஒவ்வொரு பேரூந்தாக கடந்து இறுதியாக இதில் ஏறு எனச் சொல்லி ஒரு பேரூந்தைக் காட்டுகின்றான்.

அதன் பெயர்பலகையை பார்க்கின்றேன்.

அழகான எழுத்துகளுடன் ‘PPT’ என எழுதப்பட்டு இருக்கின்றது.

இதை ஏன் முன் பதிவு செய்தாய் என்று கேட்க, தான் அடிக்கடி பயணிப்பதாகவும் இது வரைக்கும் ஒரு நாள் கூட பிரச்சனை வரவில்லை என்றும் சொல்கின்றான் மச்சான் ("எல்லாம் இந்த மூதேவி வந்த ராசி" என அவன் மைன்ட் வொய்ஸ் சொல்லுவது கேட்கின்றது)
பேரூந்து புறப்படுகின்றது.

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்.

கொஞ்ச தூரம் தான் தாண்டி இருக்கும்…. A/C நின்று விட்டது. நான் மச்சானின் முகத்தை பார்க்கின்றேன். அவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

சாரதியும் கிளீனரும் என்னவோ எல்லாம் செய்து பார்த்தும் A/C சரி வரவில்லை. பின் இன்னொரு பேரூந்தைக் கொண்டு வந்து எம்மை ஏற்றி இரவு 9 மணியளவில் யாழ் செல்ல  மீண்டும் தொடங்குகின்றனர்.

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

***************************************************************

சரியாக அதிகாலை 4:00 இற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள கச்சேரி அருகே எம்மை இறக்கி விடுகின்றனர்.

என் 73 வயது மாமா (அம்மாவின் அண்ணா) எமக்காக அந்த சாமத்திலும் தன் வெள்ளை நிற பழைய waxwagan car (beetle) இல் வந்து மாமியுடன் காத்து நிற்கின்றார்

நான் யாழ் சென்றடைந்தது September 24, 2016 சனிக்கிழமை.

‘எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் நிகழும் அதே நாள்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

-----

கும்மிருட்டில் பேரூந்து விரைகின்றது.

ஓமந்தையை தாண்டி செல்கின்றது.

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.

ஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.

விம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.

இந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.

நிழலி....  அந்நேரம் இருந்த, உங்கள் உணர்வுகளை...  எழுத்தில் வாசித்த போது,
எமக்கும் கண்கள் கலங்கி... பெருமூச்சுதான் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட  A9 சாலையில் பேரூந்து விரைகின்றது

பெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு

நன்றி...நிழலி..!

எம்மில் பலரது உணர்வுகளை...உங்கள் எழுத்துக்களே பிரதி பலிக்கின்றன!

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் ஓமந்தை புளியங்குளத்தை நினைக்கையில் நெஞ்சு அடைக்குது....!

தொடருங்கள் நிழலி.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்

அந்த நேரம் உங்களின் ஜக்கற்றையாவது களற்றி கொடுக்க வேண்டும் போல இருந்திருக்குமே?உறவினர்கள் இருந்தது தடையாக போய்விட்டதோ?

8 hours ago, நிழலி said:

புளியங்குளத்தை தாண்டுகின்றது

இதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.

பீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

கண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.

இப்ப கூட அந்த இடங்களை தவழ்ந்து போக சொன்னால் கூட மனதுக்கு கஸ்டமாக இருக்காது.

ஆனால் ஒரு தோற்றுப் போன இனமாக போகும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தை புளியங்குளம் சுகமான சுமை  வரிசை செக்கிங்  உற்றுப்பார்த்தல் கறுப்பு என்றால்  முறைத்துப்பார்த்தல் :unsure:

ஆனால் அதை தாண்டி செல்லும் போது தான் நானும் நினைத்தேன் இது அந்த இடம் தானா என்று:104_point_left:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நிழலி said:

சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

சிங்கள பகுதிகளில் வேலைசெய்யும் நம்மவர்கள் 77களின் பின் தலைமயிரை கட்டையாக வெட்டிம் மீசையை வழித்தும் உருவமாற்று தந்திரங்களை செய்து வாழ்ந்தார்கள்.அதே தந்திரம் இப்போது சனத்தை வெருட்ட பயன்படுத்துகின்றார்கள்.:grin:

சுவாரசியமான பயணக்கட்டுரை தொடரட்டும்.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

முடியுங்க ராசா

முழுவதுமாக வாசித்துவிட்டு கருத்து எழுதலாம்  என்று இருக்கிறேன்.

அடியேனை மன்னியுங்கள்

நேரம் ரொம்ப ரொம்ப இறுக்கமாக இருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.