Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மண்ணின் கோலங்கள்

Featured Replies

சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை 

20150813_104135.jpg

 

  • Replies 53
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கு அனாதைகளாக மக்கள் மட்டுமில்லை ....
 

IMG_7173.jpg

  • தொடங்கியவர்

எமது அழிவுக்கு இயற்கையும் துணை போன கோலம்.

மட்டு, கல்லடி கடற் கரையில் பாதுகாக்கப்பட்ட (அழிவின்) நினைவுச் சின்னம்.

IMG_7183.jpg

  • கருத்துக்கள உறவுகள்

"தாயக மண்ணின் கோலங்களை"  நாமும் அறிய....
படத்தின் கீழ், சிறு குறிப்புடன் பதிவது வரவேற்கக்  கூடியது. தொடருங்கள்... ஜீவன் சிவா.

  • தொடங்கியவர்

வாழ்விழந்தது எமது மீனவர்கள் மட்டுமில்லை
துருப்பிடித்து சிதைந்து போகும் அவர்கள் படகுகளும்தான். 

IMG_8073.jpg

IMG_8074.jpg

IMG_8075.jpg

இது காரைநகர் இறங்குதுறையின் இருபுறமும் அநாதரவாக மீன்பிடி படகுகள்.
இந்த படகுகள் எமதா அல்லது இந்திய மீனவர்களதா என்பது தெரியாது.

4 hours ago, தமிழ் சிறி said:

"தாயக மண்ணின் கோலங்களை"  நாமும் அறிய....
படத்தின் கீழ், சிறு குறிப்புடன் பதிவது வரவேற்கக்  கூடியது. தொடருங்கள்... ஜீவன் சிவா.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாய் இருக்கின்றன ஜீவன்... அத்துடன் இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு வலியும் வந்து போகுது....!

  • தொடங்கியவர்

காங்கேசன்துறை மறுபடியும் எழும்.

விடுதலையின் போது 

mlktuf.jpg

 

இன்று

 

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water

 

Image may contain: tree, plant, outdoor and nature

 

Image may contain: tree, house, plant, sky, outdoor and nature

 

செய்வது யாரென்று தெரியாது - ஆனாலும் வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பாரக்கத் தூண்டும் படங்களை இணைக்கும் ஜீவனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த போராட்டம் ஒன்றில் அந்த சுவரொட்டிகளின் முன்னாடி ஒரு மாடும் போய் நின்றிருக்கிறது..பாவம் வாய் பேசாப் பிராணி.ஜனாதிபதியிடம் முறையிட என்று சுவரொட்களில் எழுதப்பட்டு இருந்தது..முடிந்தால் அந்தப் படத்தையும் இணையுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணின் கோலங்களை நானும் இரு முறை நேரில் சென்று பார்த்தேன். மனதுக்குள் இன்னும் தீராத வலி. படங்கள் இணைப்புக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவன், படங்களை பார்த்தவுடன் ஊருக்கு போகணும் போல இருக்கிறது, 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

சில வருடங்களில் பார்க்க முடியாம போகப்போகும் புகையிலை தோட்டம்.
இந்த வருடம் பரம்பரையாக புகையிலை பயிரிட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கும் அனுமதி கிடைக்காது என்று அறிந்தேன் (உண்மை தெரியாது).

 

IMG_0103.jpg

IMG_0105.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாகனத்தை நிறுத்திருக்காவிட்டால் இந்த புகையிலை புகைப்படம் வந்திராது  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்க பெருமூச்சுத்தான் வருது. தொடருங்கள் ஜீவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.3.2017 at 3:33 PM, ஜீவன் சிவா said:

சில வருடங்களில் பார்க்க முடியாம போகப்போகும் புகையிலை தோட்டம்.
இந்த வருடம் பரம்பரையாக புகையிலை பயிரிட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கும் அனுமதி கிடைக்காது என்று அறிந்தேன் (உண்மை தெரியாது).

 

IMG_0103.jpg

IMG_0105.jpg

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

புகையிலை உடலுக்குக் கேடு அதனால் தடை என்று ஊரில கதைக்கினம். உண்மைக் காரணம் தமிழர் பொருளாதாரத்தை வீழ்த்துவதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புகையிலை உடலுக்குக் கேடு அதனால் தடை என்று ஊரில கதைக்கினம். உண்மைக் காரணம் தமிழர் பொருளாதாரத்தை வீழ்த்துவதுதான்.

இவ்வளவு காலமும் இல்லாத கேடு இப்பவா வருகுது? 

 

On 2017-03-22 at 9:00 PM, குமாரசாமி said:

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை என்று தெரியுமா?

இரண்டு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். ஒன்று புகையிலை நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சக் கூடியது. யாழ்ப்பாணம் போன்ற நிலத்தடி நீர்  அருகி ஆபத்தான நிலைக்கு செல்லும் இடங்களில் புகையிலைச் செடி பயிர்செய்கையை தவிர்க்கச் சொல்கின்றனர். இரண்டாவது காரணம், புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

 

புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

,

அறிவியல் ரீதியாக இருக்கும் கரணியங்களைவிடப் பொருளாதார ரீதியான கரணியமாகவே இருக்கக்கூடும். புகையிலை பயிரிட்டு இலைகளை வெட்டியபின்னர் அடித்தண்டிலிருந்து முளைக்கும் கெட்டுகளைச் சிறிது வளரவிட்டு அதனையும் முறித்தெடுத்துப் பதப்படுத்திப் பயன்படுத்துவது உண்டு. அடிக்கட்டை காய்ந்ததும் அவற்றை நீக்கிவிட்டு உழுது மீண்டும் வேறுபயிர்களை நடுவதுண்டு. வெளிநாட்டுப் பணங்களுக்குமுன் பெரும் பொருண்மிய ஆதாரமாக விளங்கியதொரு பணப்பயிராகும்.

புகையிலையைத் தடைசெய்வதனூடாக வெண்சுடருட்டு விற்பனையை அதிகரிக்கச் செய்து அன்னியப் பல்தேசியத் தொழிற்றுறைக்கு வாய்ப்பளிக்க வகைசெய்ய  அரசுகள் இதுபோன்ற கதைகளையும் கூறக்கூடும். நில நீர் வள அறிவியலாளர்கள் ஆய்வுரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டும். 

இது கரோலினாவில் செய்யப்படும் உற்பத்தி( நன்றி: யூரூப்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நிழலி said:

 

இரண்டு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். ஒன்று புகையிலை நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சக் கூடியது. யாழ்ப்பாணம் போன்ற நிலத்தடி நீர்  அருகி ஆபத்தான நிலைக்கு செல்லும் இடங்களில் புகையிலைச் செடி பயிர்செய்கையை தவிர்க்கச் சொல்கின்றனர். இரண்டாவது காரணம், புகையிலை பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் வேறு பயிர்களை பல காலத்துக்கு நட முடியாது என்றும் இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்டுகின்றது என்றும் சொல்கின்றனர். யாழ் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளது என கேள்விப்பட்டேன்.

புங்கைக்கு இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன்.

முதற்கண் தேடிவந்து பதில் தந்ததிற்கு நன்றி.

நான் வேளாண்மை குடும்பத்தை சேர்ந்தவன். இளந்தாரியாக நெஞ்சைக்குடுத்து யாழ்மாவட்டத்தில் விளையும் அத்தனை பயிர்களையும் விளைச்சல் செய்தவன். 
நீங்கள் கேள்விப்பட்ட முதலாவது காரணம் உண்மையானால் இன்றைக்கு யாழ்மாவட்டத்தில் ஏராளமான புகையிலை பயிரிட்ட நிலங்கள் பாலைவனமாகியிருக்க வேண்டும்.
நீங்கள் கேள்விப்பட்ட இரண்டாவது காரணம் முற்றிலும் பொய். போக பயிர் என்பதால் உடனடியாக அந்த இடத்தில் வேறு பயிர்கள் பயிரமுடியாதே தவிர அடுத்த போகத்தில் மிளகாய்க்கன்றோ அல்லது வேறு பயிர்களையோ தாராளமாக பயிரிடலாம்.

இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்கவேண்டும்....அது சரி தோட்டம் செய்யிறதையே கேவலமாய் கேணைத்தனமாய் பார்க்கிற  சனத்துக்கு என்ன கோதாரிக்கு விண்ணான உணர்ச்சி tw_angry:

  • தொடங்கியவர்

நாங்கள் கோண்டாவிலில் இருந்த காலத்தில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடன் பாடசாலை விடுமுறைகளில் சுத்துவதுண்டு. அவ்வாறு சுத்துவதில் புகையிலை கொட்டிலும் ஒன்று. அங்கு ஒரு பத்து பதினைந்து பேர் இருந்து சுருட்டு சுத்துவார்கள். அனால் ஒருவர் மட்டும் நடுநாயகமாக வீற்றிருப்பார். அவர் பக்கத்தில் சகல பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவர் சுருட்டு சுத்தமாட்டார் - ஆனால் பத்திரிக்கைகளை உரக்கமா படிப்பார். மற்றவர்களும் அதனை கேட்டபடி இருந்தாலும் மிசின்மாதிரி கைகள் வேலை செய்யும்.

பத்திரிகைகள் வாசிப்பவரும் வீரகேசரி என்று தொடங்கி இது நியூஸ் பேப்பர் லிமிடடினால் பிரசுரிக்கப்பட்டது வரை வாசிப்பார். அவருக்கு சம்பளமாக சுருட்டு சுத்துபவர்கள் தாம் சுத்திய சுருட்டுகளில் ஒரு பங்கை கொடுப்பார்கள்.

நாங்களும் விளையாட்டு + சினிமா பகுதி வரும்போது பக்கத்தில் குந்தி இருப்போம் + கேட்போம்.

இழந்த சந்தோசங்கள் ஆயிரம் / எல்லாவற்றிற்கும் தொழில் நுட்பத்தை சாட்ட முடியாது.

 

ஒரு படமாவது எடுக்க முடியாதா என்று இன்றும் நான் தேடும் ஒரு இடம்.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.