Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்து கொலை- கணவன் கைது! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது!  
[Friday 2017-12-15 08:00]

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.
 

   
பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=195674&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கறுப்பி said:

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்து கொலை- கணவன் கைது! 
[வெள்ளிக்கிழமை 2017-12-15 08:00]

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த பெண் பெண் ஒருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதான ஜெயந்தி சிவர்தனத்தைச் சேர்ந்த ஸ்கார்பாரோ பகுதியை சேர்ந்த பெண் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த பெண் பெண் ஒருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதான ஜெயந்தி சிவர்தனத்தைச் சேர்ந்த ஸ்கார்பாரோ பகுதியை சேர்ந்த பெண் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளது.

   பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் இறந்துவிட்டார் மரண விசாரணின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=195674&category=TamilNews&language=tamil

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

 

ops...

நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

jeyanthy-murder-151217-seithy.jpg

ஜெயந்தி சீவரத்னம் 46

கொலை செய்யப்பட இப் பெண்மணி அருகில் உள்ள பாடசாலையில்  மதிய உணவு வழங்கும் போது மேற்பார்வை செய்கிறவராக இருந்துள்ளார். மிகவும் கனிவான பொறுப்பான பெண்மணி என்று அப் பாடசாலை பிள்ளைகளும், அதிபரும் சொல்லியிருக்கினம். அயலவர்களும் அதே போன்றே மிகவும் கனிவான பெண்மணி என்று கூறியிருக்கினம்.

கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். ஆள் எந்த நேரமும் மதுவுக்குள் மூழ்கி கிடப்பவர் என்றும் சண்டை பிடித்து சத்தம் கேப்பது வழக்கம் என்றும் அயலவர்கள் சொல்லினம். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக  போலீசார் இதுக்கு முதல் பல தடவை வந்து சென்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இரண்டு பிள்ளைகள் இருக்கினம். ஒரு பிள்ளை உயர் கல்வியும் மற்றவர் சிறியவர்.

 

https://toronto.ctvnews.ca/victim-of-malvern-townhouse-murder-was-popular-school-lunchroom-supervisor-1.3721509

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

ஆள் எந்த நேரமும் மதுவுக்குள் மூழ்கி கிடப்பவர் என்றும் சண்டை பிடித்து சத்தம் கேப்பது வழக்கம் என்றும் அயலவர்கள் சொல்லினம். 

 

https://toronto.ctvnews.ca/victim-of-malvern-townhouse-murder-was-popular-school-lunchroom-supervisor-1.3721509

வெளிநாடுகளின் குடிகாரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பல அப்பாவி பெண்களின் நிலை நானும் இங்கு இங்கிலாந்திலும் பார்த்திருக்கின்றேன் இவர்களின் ஒரே நோக்கம் குடி குடி வீட்டில் அடி உதை கொடிய வார்த்தை பிரயோகம் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை பட்ட அப்பாவிகள் ஊருலகத்துக்கு பயந்து கொடுமையை தினம்தினம் அனுபவிக்கின்றார்கள் அதில் சிலர் விவகாரத்துவங்கி வாழ்கின்றார்கள் ..... இந்த பெண் குடிகாரனின் கொலைவெறி தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றார். ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

இரண்டு பிள்ளைகள் இருக்கினம். ஒரு பிள்ளை உயர் கல்வியும் மற்றவர் சிறியவர்.

வெளி நாடு வந்தும் திருந்தாத ஜென்மன்கள்................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழரசு said:

வெளிநாடுகளின் குடிகாரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பல அப்பாவி பெண்களின் நிலை நானும் இங்கு இங்கிலாந்திலும் பார்த்திருக்கின்றேன் இவர்களின் ஒரே நோக்கம் குடி குடி வீட்டில் அடி உதை கொடிய வார்த்தை பிரயோகம் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை பட்ட அப்பாவிகள் ஊருலகத்துக்கு பயந்து கொடுமையை தினம்தினம் அனுபவிக்கின்றார்கள் அதில் சிலர் விவகாரத்துவங்கி வாழ்கின்றார்கள் ..... இந்த பெண் குடிகாரனின் கொலைவெறி தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றார். ஆழ்ந்த அனுதாபங்கள். 

நாமும் பகிடியாக குடியை புகழ்ந்து இங்கே எழுதுவது உண்டு 
ஒன்றுக்கு அடிமை ஆகுவது என்பது எப்போது எந்த இடத்தில் 
தொடங்குகிறது ? என்பது அறியப்படாத விடையாக இருக்கிறது.

ஓரளவு குடிக்கு அடிமை ஆக தொடங்கியபின் 
மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை இழந்துகொண்டே போகும். 
பின்பு ஒரு கட்டிடத்தில் குடித்தான் வாழ்க்கை என்று ஆகிவிடும்.

ஆரம்பத்திலேயே நிறுத்தி விட வேண்டும்.  

12 hours ago, பெருமாள் said:

வெளி நாடு வந்தும் திருந்தாத ஜென்மன்கள்................

என்னை கேட்டால் 
தமிழனாக பிறந்தும் ..... சைவர்களாக எமது முன்னையோர் இருந்தும் 
இப்படி சீரழிந்து போனார்கள் என்றுதான் யோசிப்பேன்! 

பலவற்றில் நல்லது கெட்டது கலந்துதான் 
இருக்கிறது அதில் கெட்டதை விட்டு நல்லதை எடுக்கலாம் 
பாழாய்ப்போன இந்து மதம் என்ற சாக்கடையில் 
நல்லது என்று எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது ?
ஒரு மனிதனுக்கு எந்த அறிவு வளர்ச்சியையும் கொடுக்காத 
ஒரு மதத்தை ஏன் தொடர்கிறோம் என்பதுதான் முதன்மை கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்

 பாவம் அந்த பெண் மணி ...கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..தாயற்ற   பிள்ளைகள் ..குடிகார  தந்தை ...இன்னும் மோசமான நிலை....

22 hours ago, Maruthankerny said:

நாமும் பகிடியாக குடியை புகழ்ந்து இங்கே எழுதுவது உண்டு 
ஒன்றுக்கு அடிமை ஆகுவது என்பது எப்போது எந்த இடத்தில் 
தொடங்குகிறது ? என்பது அறியப்படாத விடையாக இருக்கிறது.

ஓரளவு குடிக்கு அடிமை ஆக தொடங்கியபின் 
மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை இழந்துகொண்டே போகும். 
பின்பு ஒரு கட்டிடத்தில் குடித்தான் வாழ்க்கை என்று ஆகிவிடும்.

ஆரம்பத்திலேயே நிறுத்தி விட வேண்டும்.  

என்னை கேட்டால் 
தமிழனாக பிறந்தும் ..... சைவர்களாக எமது முன்னையோர் இருந்தும் 
இப்படி சீரழிந்து போனார்கள் என்றுதான் யோசிப்பேன்! 

பலவற்றில் நல்லது கெட்டது கலந்துதான் 
இருக்கிறது அதில் கெட்டதை விட்டு நல்லதை எடுக்கலாம் 
பாழாய்ப்போன இந்து மதம் என்ற சாக்கடையில் 
நல்லது என்று எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது ?
ஒரு மனிதனுக்கு எந்த அறிவு வளர்ச்சியையும் கொடுக்காத 
ஒரு மதத்தை ஏன் தொடர்கிறோம் என்பதுதான் முதன்மை கேள்வி. 

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

5 hours ago, நிலாமதி said:

..கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..

இந்த கேள்வி தானக்கா என்னையும் குடைகின்றது

குடும்பத்துக்குள் மனைவியையோ பிள்ளைகளையோ அடிக்கும் அல்லது அடிக்க முயற்சிக்கும் கணவனுடன் தொடர்ந்து வாழ முயச்சிக்க கூடாது. எம்மவர்கள் குடும்பங்கள் பிரிவது என்பதுக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் தெரிந்தவன் சொந்தக்காரன் அயலவன் என்ன சொல்வானோ என்று பிறருக்காக வாழும் நிலையே அதிகம். இதனால் விழைவுகள் ஏராளம். பொதுவாக ஒருவர் என்னுமொரு உடலையோ மனதையோ துன்புறுத்துவதற்கு உரிமை இல்லை அந்த உரிமையை எடுப்பதும் அனுமதிப்பதும் மிக மோசமான நிலை. கனடாவில் சிறிலங்கனாக வாழுவதற்கு நிறைய விலைகொடுக்க வேண்டும் . அடிக்கிற கைதான் அணைக்கும் என்று பழக்கப்பட்ட பண்பாட்டை  காப்பாற்றுவதானாலும் சரி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சகிப்புத்தன்மையை காப்பாற்றுவதானாலும் சரி நிறை விலை கொடுக்க வேண்டும். கடந்த இருபத்தைந்து வருடத்தில் எவ்வளவோ மாறிவிட்டது.. இக்காலத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டால். கோபப்ட்டால் ஊரில் சாப்பிட்டதுபோல் சாப்பிட்டால் , தேத்தண்ணிக்கு சீனி தூக்கலாக போட்டால் இரத்த அழுத்தம் சலரோகம் மூட்டுவலி தலைமுடிகொட்டுவது முதல் உடல் பருமன் வரை நோயாளியாகிவிடுவோம். இதை அடுத்தவனுக்கு திணித்தாலும் அடுத்தவனும் நோயாளியாகிவிடுவான். தின்பது குடிப்பது முதல் எதையும் இயல்பாக செய்வதில் இருந்து அவதானமாக கவனமாக செய்யும் நிலைக்கு காலம் நகர்த்திவிட்ட நிலையில் மனைவிக்கு அடிப்பது என்பதை என்னவென்று சொல்வது !! 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

இந்த கேள்வி தானக்கா என்னையும் குடைகின்றது

இதுக்கும் சைவ மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எமக்கும் சைவர்களுக்கும் நிறைய சம்மந்தம் இருந்தது 
இப்போது இல்லாமல் போய்விட்டது  என்பதைத்தான் சொன்னேன்.

சைவர்கள் 
பெண்களை ஆணுக்கு சமமாகவே பார்த்திருக்கிறார்கள் 
சக்தியும் சிவனும் பாதி பாதி எனும் கோட்ப்பாடு கொண்டவர்கள் 
தவிர பல விசேஷங்கள் விழாக்கள் என 
பெண்களை நேசித்தும் முன்னிலை ப்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

நீங்கள் நம்புவீர்களோ தெரியவில்லை ....
ஆதாரம் என்று ஒரு ஆய்வாளரின் யூடுப் வீடியோ ஒன்றுதான் 
என்னால் இணைக்க கூடியதாக இருக்கின்றது .... (இங்கிலாந்தை சேர்ந்தவர்)
அது ராஜ சோழன் பற்றிய டாக்குமெண்டரி 
வெள்ளைக்காரர்கள் குளிப்பது என்பதை முதன் முதலில் இந்தியா வந்துதான் 
கண்டிருக்கிறார்கள். சைவர்களின் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான 
புத்தகங்களே குளித்து கோவிலுக்கு செல்வது பற்றி சொல்லிவருகிறது.


நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் .......
கீழ் இருந்து மேல் போவது என்பது வேறு 
நாம் மேல் இருந்து கீழ் இறங்கினோம் என்பதுதான் 
வருத்தம் ஆனது!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த நண்பர். கணக்காளர்....

அழகியமனைவி, இரு பெண்பிள்ளைகள்.. 

குடி.... குடி.... குடி...

வேலையில்.... பிளாஸ்கில் கொண்டு போய் குடித்து, மாட்டி.... வேலை போனது...

ஈரல் மாத்தப் பட்டது... அதற்கு அரசு செலவு £1 மில்லியன். (அதே வைத்தியசாலையில், அதே வருத்தத்துக்கு வந்த, அரபி செல்வந்தரின் மகனுக்கு அந்த கட்டணம் அறவிடப் பட்டது)

இரண்டு மாதம் இருந்தார் அமைதியாக...

மீண்டும் ஆரம்பித்தார்... 

சரியாக இரண்டு மாதத்தில் போய் சேர்ந்தார்.....

ஏன்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நிழலி said:

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

இதெல்லாம் சர்வசாதாரணமப்பா என்ற உங்கள் சமன்பாடு எனக்கு மிகவும்  பிடித்திருக்கின்றது. 

அந்த தாய்க்கு அனுதாபங்கள் தெரிவிப்பதை விட......அவர் விட்டுச்சென்ற அந்த பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை நினைக்கும் போதுதான் வேதனை அதிகமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

எனக்குத் தெரிந்த நண்பர். கணக்காளர்....

அழகியமனைவி, இரு பெண்பிள்ளைகள்.. 

குடி.... குடி.... குடி...

வேலையில்.... பிளாஸ்கில் கொண்டு போய் குடித்து, மாட்டி.... வேலை போனது...

ஈரல் மாத்தப் பட்டது... அதற்கு அரசு செலவு £1 மில்லியன். (அதே வைத்தியசாலையில், அதே வருத்தத்துக்கு வந்த, அரபி செல்வந்தரின் மகனுக்கு அந்த கட்டணம் அறவிடப் பட்டது)

இரண்டு மாதம் இருந்தார் அமைதியாக...

மீண்டும் ஆரம்பித்தார்... 

சரியாக இரண்டு மாதத்தில் போய் சேர்ந்தார்.....

ஏன்???

ஜேர்மனியில் குடியால் சீரழிந்த தமிழ்க்குடும்பங்கள் அளவிற்க்கதிகம்.

இருந்தும் அந்த தாய்கள்.....


அவர்கள் கணவனை விவாகரத்து செய்யாமல்....பொலிஸ்..கோர்ட்டு என்று அலைந்து திரியாமல் இருப்பதற்கு காரணம்....

பிள்ளைகளுக்கு தகப்பன் வேண்டும். பாடசாலை பள்ளிக்கூடம் சம்பந்தமாக அப்பா ஸ்தானத்திற்கு ஒருவர் அவசியம்.....

பாடசாலைகளில் நடக்கும் ஒருசில விடயங்களுக்கு அப்பா இல்லையென்றால் அதன் தாக்கம் பிள்ளைகளளுக்கு ஒரு சிலகணம் பல சங்கடங்களை கொண்டுவந்து விடும்.


என்னதான் இருந்தாலும் வீட்டுக்கு ஒரு ஆண் தலைமை இருக்க வேண்டும் விரும்பியிருப்பார்கள்.

கணவனை இழந்த பெண்கள் படும் பாட்டை ஒருகணம் சிந்தித்திருப்பார்கள்.

குடிகாரனாக இருந்தாலும்....பூவும் போட்டோடும் வாழ்ந்தாலே சந்தோசம் என்று பல பெண்கள் வாழும் உலகை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களில் பொதுவாகவே ஊறி விட்ட ஒரு குணம் பெண் பிள்ளைகளை நீ முத்த பிள்ளை அந்தப் பிள்ளை.இந்தப் பிள்ளை என்று சொல்லி சொல்லியே பயந்தாங் கொள்ளிளாக வளர்ப்பது..சிறு வயது முதல் அப்படியே வளர்ந்து பளக்கப் பட்டதனால் இயல்பிலயே தங்களது பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயங்குவார்கள்...
அனேகமான குடும்பங்களில் அன்றாடம் இது தான்நடக்கிறது...அப்படியான குடும்ப சூழலில் வளர்ந்த பெண் பிள்ளை தான் இவரும் என அறிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக பிரசனையோடு வாழும் பிள்ளையை  கதைக்காமல் பேசாமல் தள்ளி வைப்பது இன்று இப்படியான உறவகள் தான் அதிகம்...இவருக்கு முதல் ஆண் 18 வயது நிரம்பியவர் எனவும் மற்றயவர் பெண் 16 வயதுடையவர் எனவும்: பெண் பிள்ளையை பார்க்கும் போது தான் மிகுந்த கவலையாக இருப்பதாக அறிந்து கொண்டேன்...வேற்று இனத்து மக்களோடு பாடாசாலையோடு எல்லாம் தொடா;பிலிருந்தும் இந்தப் பெண் எதற்காக இவ்வளவு பிரச்சனைகள் வரும் வரை காத்திருந்தார் என்று தெரியவில்லை..அந்த சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for domestic violence

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

Image result for domestic violence

நாதம்,

எமது சமுதாயத்தின் சூழ்நிலையில் வளர்ந்தவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் கடினமானது!

எனினும்...எமது அடுத்த தலைமுறைகளில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு!

எமது சமூகத்தில் மட்டுமல்ல....கிழக்காசிய மத்திய கிழக்கு நாடுகளில்..இது மிகப் பெரிய பிரச்சனை!

மாதவி மீது மையல் கொண்ட கோவலனை...அவனால் நடக்க முடியாத கட்டத்திலும்...கூடை ஒன்றினுள் வைத்துக் கண்ணகி தலை மீது சுமந்து கொண்டு மாதவியின் வீடு நோக்கிப் போகின்றாள் என ஒரு கதை உண்டு!

வள்ளுவன் அலுவல் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரும் வரை...சமைத்து விட்டுக் காவளிருக்கிறாள் மனைவி வாசுகி!

அந்தச சூழ்நிலையில் வளர்ந்த நானும் ஒரு காலத்தில் இப்படி ஒரு மனைவி கிடைத்தால் எப்படியிருக்கும் என்று ஏங்கியதும் உண்டு!

ஒரு காலத்தின் பரிணாம வளர்ச்சி என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி.....அல்லது புங்கை ஒரு பேய்க்குஞ்சு என்று நினைத்தாலும் சரி...எனக்குக் கவலையில்லை!

சனம் பச்சை மட்டும் போட்டு விட்டு....நகர்ந்து போகாமல் ...நல்லதோ கெட்டதோ தங்கள் கருத்தையும் எழுதி விட்டுப் போவார்கள் எனில் நிச்சயம்....கண்டதும் கேட்டதும் என்று ஒரு திரி திறந்து எழுதலாம் என நினைக்கிறேன்! மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைக் கொஞ்சம் எடிட் பண்ணின மாதிரி இருக்கும்! முழுவதையு ம் எழுத நான் ஒன்றும் மகாத்மா அல்லவே.

அது சரி பின்வரும் வீடியோவைப் பாருங்கள்!

எங்கே...இந்தப் பிரச்சனை தொடங்குகின்றது என்று தெரியும்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"கண்டதும் கேட்டதும்" எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்.....! tw_blush:

 --- கூடையில் கணவனை தூக்கி கொண்டு போனது நளாயினி என்று நினைக்கிறேன்.....!

--- வள்ளுவன் வாசுகி தம்பதியர் உடுத்தும் ஆடைகளில் கூட ஆசைகளை துறந்து வாழ்ந்தவர்கள். சமைத்து விட்டு காத்திருப்பது யாருடைய நிர்பந்தத்தினாலும் அல்ல. அது அவர்களது அன்பின் மேன்மை. எங்கள் வீடுகளிலும் இது சாதாரணமாய் நடக்கும் ஒன்றுதான். பஞ்சபூதங்களும் அவர்களுக்கு கட்டுபட்டதாக இருந்தது. இன்றும் திருமணங்களில் "வள்ளுவன் வாசுகி" போல் என்று வாழ்த்துகின்றோம் என்றால் .... அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்.....!  tw_blush: 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

"கண்டதும் கேட்டதும்" எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்.....! tw_blush:

 --- கூடையில் கணவனை தூக்கி கொண்டு போனது நளாயினி என்று நினைக்கிறேன்.....!

--- வள்ளுவன் வாசுகி தம்பதியர் உடுத்தும் ஆடைகளில் கூட ஆசைகளை துறந்து வாழ்ந்தவர்கள். சமைத்து விட்டு காத்திருப்பது யாருடைய நிர்பந்தத்தினாலும் அல்ல. அது அவர்களது அன்பின் மேன்மை. எங்கள் வீடுகளிலும் இது சாதாரணமாய் நடக்கும் ஒன்றுதான். பஞ்சபூதங்களும் அவர்களுக்கு கட்டுபட்டதாக இருந்தது. இன்றும் திருமணங்களில் "வள்ளுவன் வாசுகி" போல் என்று வாழ்த்துகின்றோம் என்றால் .... அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்.....!  tw_blush: 

 

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...சுவியர்!

எழுதும் போதே....தவறு என்று ஓரளவுக்குத் தெரிந்திருந்தது! கோவலன் நொண்டி இல்லை என்றும் தெரியும்! இருந்தாலும் ...எழுதி விட்டேன்!

56 minutes ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

கொழும்பான்,
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டில். ஆணோ பெண்ணோ ஒருவரோடு வாழ இயலாத பட்சத்தில் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்க வேறு வழிகள் உள்ளன. ஒருவரை வெத்து வேட்டு என்று இன்னொருவரிடம் கூறும் அளவுவுக்கு அப்பாவியாக இதுவரை அப்பெண்ணுடன் வாழ்ந்தது அவரின் தவறு.

கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும். துன்பத்தையே இன்பமாக மாற்றி வாழ்வதுதான் எமது கலாச்சாரம் என்று நீங்களும் சொல்ல வராதீர்கள். இங்கே துன்பத்தை இன்பமாக மாற்ற முடியாத அளவுக்கு மனைவி இறந்து விட்டாள். மனைவியில் ஆயிரம் குறை இருந்தாலும் கொல்வதற்குக் கணவனுக்கு உரிமை இல்லை. மனைவியைக் கௌரவக் கொலை செய்துகொண்டிருந்த முஸ்லிம் நாடுகளிலேயே அதற்கெதிராகச் சட்டங்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதைவிடக் கேவலமாக எமது கலாச்சாரத்தைத் தரப்படுத்த வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

அதிலென்ன தவறு கொழும்பான்?

அப்படி நாலு கிளியல் விழுவதால் தான், உழைக்காமல் சோம்பிக்கிடவாது, ஆம்பிளை எழும்பி ஓடுகிறான். இல்லாவிடில் பிரித்தானியா போன்ற நாடுகளில், அரசு தரும் பிச்சை காசை வாங்கிக் கொண்டு, விஜய் டிவி உடன், பீர் கானுடன் மடங்கி விடுவார்கள்.

உத்தியோகம் புருஷ லட்ச்சணம்.

  • கருத்துக்கள உறவுகள்

முழுநேர குடியும், குடும்பத்தையே கவனிக்காத தன்மையும், வீட்டுப்பக்கமே வாரக்கணக்காக போகாமலும், அளவுக்குமீறிய கடன்படலும் என்று வாழும் பல குடும்ப தலைவர்களிடம் சிக்கிகொண்டு அடி,உதை,கண்ணீர் என்று அனைத்தையும் தாங்கிகொண்டு  வீட்டுக்குள்ளும் மனசுக்குள்ளும் தமது துயரங்களை சுமந்து வாழும் எமது பெண்கள் ஏராளம்!

விவாகரத்து, பிரிந்து வாழுதல், வேறு துணை தேடுதல் என்று பல ஆலோசனைகள் சொல்லும் இந்த சமூகம், அதன்படியே வாழ தலைப்படும் பெண்களுக்கு முதலில் கொடுக்கும் பட்டம், அவள் ஓடி போயிட்டாளாம், முதலே வேற யாரோடையோ லிங்க்’காம், இவ இப்படி இருந்ததாலதான் அவன் முழு குடிகாரன் ஆனானாம் என்பது!

மரணம்வரை பல பெண்கள்  தமக்கு ஏற்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு, அவர்களின் வீட்டு ஆண்கள் மட்டும் காரணமல்ல, விஷயம் அறிந்தமாதிரி தமது பொழுதுபோக்கு ருசிக்கு பெண்களின் துயரங்களை,அவர்களின் நடத்தமீதான கண்ணோட்டத்துடன் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் வெளியில் இருக்கும் ஆண்கள் சமூகமும் பிரதான காரணம்!

அதுவே வெளியுலகத்துக்கு அஞ்சி துன்பங்களை தாங்கிவாழ்ந்து முடிவில் ஒருநாள் ரோட்டோரமாய் அனைத்தையும் இழந்து அந்த ஆத்மாக்கள் பூமியைவிட்டு கிளம்பி சென்றுவிடுகின்றன!

On 12/16/2017 at 5:33 PM, நிலாமதி said:

 பாவம் அந்த பெண் மணி ...கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..தாயற்ற   பிள்ளைகள் ..குடிகார  தந்தை ...இன்னும் மோசமான நிலை....

இப்படியான நிலமையில் உள்ள பெண்களுக்கு உள்ள பொதுவான பிரச்சனை பிள்ளைகளுக்காக குடித்துவிட்டு பிரச்சனை பண்ணும் கணவனுடன் குடும்பம் நடத்தவேண்டிய தேவை. பிள்ளைகள் இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பிள்ளைகள் உள்ள தாய்மார் பிரிந்துவாழ்வது இடர்மிகுந்த பயணம். திருமணம் செய்யமுன்னமே ஆளை நல்லாய் அறிந்துசெய்யவேண்டும் இல்லாவிட்டால் கஸ்டம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.