Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

 

suren-raghavan-300x200.jpgசிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு, பிரதமர் செயலகத்தில் உள்ள தனி நபர் ஒருவரே அங்கீகாரம் அளித்திருந்தார்.

அதற்கு அவர் சிறிலங்கா அதிபரின் அனுமதியையோ, வேறெந்த அதிகாரிகளின் ஒப்புதலையே பெற்றிருக்கவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்,சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உத்தரவிட முடியாது.

சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய உறுதிமொழிகளை  செயற்படுத்த தவறிவிட்டது என்று கூறும் தரப்பினர், அனைத்துலக நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.

அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்கும் முயற்சிகள்  சாத்தியமற்றது.

ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள்   நாட்டின் சுயாதீனதன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும்.

இதற்கு எந்தத் தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/03/26/news/37077

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரு உங்கட கமே றால வாசிக்கச்சொல்லி எழுதிக்கொடுத்த பத்தியோ ....
அப்படியே கமே றாலவிடம் சொல்லுங்கோ இந்த தேர்தலோடு பொலன்னறுவைக்கு பெட்டியை கட்டவேண்டியது தான் கிம்புள்ள உதல்லவுடன் (முதலை மண்வெட்டியுடன்)

 

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னமே எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே??

கதிர்காமர் நம்பர் 2 !!!!!

உங்களைச் சும்மாவா சிங்களவன் அரியனையில் ஏற்றி அழகு பார்க்கிறான் ? 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரஞ்சித் said:

இது முன்னமே எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே??

கதிர்காமர் நம்பர் 2 !!!!!

உங்களைச் சும்மாவா சிங்களவன் அரியனையில் ஏற்றி அழகு பார்க்கிறான் ? 

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

7 hours ago, விசுகு said:

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

Edited by ஜீவன் சிவா

12 minutes ago, ஜீவன் சிவா said:

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அப்பாடி பொண்டாட்டிட்ட அடி வாங்கினாலும் பழி புலி மேல தான் போல இருக்கு. 

2 minutes ago, நிழலி said:

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புலிகளின் பாணியில் இந்த யாழும் இயங்குகிறதென்றால் - அதை வெளிப்படையாக யாழின் கள விதிமுறைகள் பகுதியில் வெளிப்படையாக எழுதலாமே.

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

நடிப்பு???  🤣🤣🤣

இந்த மிரட்டல் பலிக்காது 

முடிந்தால் என்னையும் தடை செய்யவும் - உங்களுக்கு இது புதிதா 

1 minute ago, ஜீவன் சிவா said:

 

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

 

விடுதலைப் புலிகள் மீதான ஆரோக்கியமான நேர்மையான விமர்சனங்களை தவிர புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு  ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதற்கு மேல் எந்தவித விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

புலிகளின் பாணியில் இந்த யாழும் இயங்குகிறதென்றால் - அதை வெளிப்படையாக யாழின் கள விதிமுறைகள் பகுதியில் வெளிப்படையாக எழுதலாமே.

புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று.

நடிப்பு???  🤣🤣🤣

இந்த மிரட்டல் பலிக்காது 

முடிந்தால் என்னையும் தடை செய்யவும் - உங்களுக்கு இது புதிதா 

சகோ

கருத்துக்களத்தில் சில  விதிகளும்  

அவர்களது இணையத்துக்கென்று  சில  கொள்கைகளும்  இருக்கின்றன

அதில்  வந்து  எழுத  தொடங்குமுன்  அவற்றை  அறிந்திருக்கணும்

அல்லது அனுபவத்தில் தெரிய  வந்திருக்கணும்

மேலே  நிழலி தெளிவாகக்குறிப்பிட்டுள்ளார்

எல்லா  திரிகளிலும்

மற்றும்  யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும்  என்றும்.

இவற்றை  கருத்தில்  கொள்ளுங்கள்

நாங்கள் வேறு  பல  விடயங்களில்  ஒன்றாக  பயணிக்க வேண்டிய  தேவை  இருக்கிறது

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 10:25 AM, நிழலி said:

எந்த திரியில் எவர் எதை எழுதினாலும், அதில் வந்து இவ்வாறு புலிகளை இழுத்து காழ்ப்புணர்வுடன் எழுதி திரியினை திசை திருப்புவது என்பது கருத்தாடல் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும். யாழ் களம் புலிகள் மீதான நேர்மையான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் எனபதை நினைவில் கொள்க.

ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எதிரான போக்கு தொடருமாயின் அதை தவிர்க்க எம்மாலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நிழலி,

அவர் படிக்காத தமிழர்களை பெருமளவில் கொண்ட ஒரு அமைப்புக்கும் அதன் முன்னெடுப்பில் ஏற்பட்ட அழிவிற்கும் ஒரு உதாரணத்தை காட்டி இருக்கிறார். அது எவ்வகையில் ஆரோக்கியமற்ற கருத்தாடலாக அமையும்? 

On 3/26/2019 at 3:07 AM, விசுகு said:

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

இது ஒட்டு மொத்தமாக படித்த தமிழர்களை அவதூறு செய்வதாக இல்லையா? 

பல படித்த தமிழர்களுக்கு சுக வாழ்வு எங்கும் கிடைக்கும். அவர்களை அவதூறு செய்தால் அவர்களின் அறிவு எங்கள் மக்களுக்கு என்றும் பயன் தராது.

On 3/26/2019 at 10:12 AM, ஜீவன் சிவா said:

படிக்காத தமிழர்கள் மட்டும் கிழித்தார்களா 

முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் நாசம் பண்ணினார்களே 😡

எனக்கு இந்த கேள்வியும் உதாரணமும் நியாயமானதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் முதலாக....அவரை வணங்கும் வாரிசுகள் ஈறாகத் தூக்கித் திரியிறது....பிட்சா பாத்திரம்!

இருக்கிற திமிருக்கு மட்டும்....ஒரு குறைச்சலும் இல்லை!😚

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நிழலி,

அவர் படிக்காத தமிழர்களை பெருமளவில் கொண்ட ஒரு அமைப்புக்கும் அதன் முன்னெடுப்பில் ஏற்பட்ட அழிவிற்கும் ஒரு உதாரணத்தை காட்டி இருக்கிறார். அது எவ்வகையில் ஆரோக்கியமற்ற கருத்தாடலாக அமையும்? 

இது ஒட்டு மொத்தமாக படித்த தமிழர்களை அவதூறு செய்வதாக இல்லையா? 

பல படித்த தமிழர்களுக்கு சுக வாழ்வு எங்கும் கிடைக்கும். அவர்களை அவதூறு செய்தால் அவர்களின் அறிவு எங்கள் மக்களுக்கு என்றும் பயன் தராது.

எனக்கு இந்த கேள்வியும் உதாரணமும் நியாயமானதாகவே தெரிகிறது.

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். 

அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

 

இங்கே கருத்து அகற்றப்பட்டது இந்த ஒற்றைக் கருத்தினை மட்டுமே வைத்து அல்ல. எக்கருத்தை எவர் எழுதினாலும், அதைத் திசை திருப்பி புலிகள்மீது தனக்கிருக்கும் வக்கிரத்தைக் காட்டுவதற்குப் பயன்படுத்துவதனால்த்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அழுத்தம் கொடுக்குது என்கிறார்கள்....
ஆளுநர் அழுத்தம் கொடுக்க முடியாது என்கிறார்...
இதிலை ஆரப்பா...பெரிசு?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. .

பெருமளவில் பல்கலைக்கழக மட்டத்திலான கல்வி அறிவு கொண்டவர்களால் வழி நடத்தப்படாத போராட்டம் என்ற கருத்திலேயே அவர் எழுதி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது. நீங்கள் “படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம்” என்று ஒரு குறிப்பிட்ட, வசதியான வாழ்வு கொண்ட மக்கள் மீது கோபம் கொண்டு இருப்பதாகவே உங்கள் கருத்து காட்டுகிறது.

2 hours ago, ரஞ்சித் said:

. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். .

அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனால் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில்    தோல்விக்கான காரணங்களை உணர்ச்சிவசப்படாமல்   ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் வேறு விதமாக செய்யப் பட்டு இருக்கலாம் என்று அவர்களே சொல்லக்கூடும். அதில் தேவையான துறைகளில் கல்வி அறிவு கொண்டவர்களை போதிய அளவில் உள்வாங்கி அவர்களின் கருத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத்தும் ஓன்றாக அமையும். சிறிலங்கா போர்க்காலத்தில்  கல்வி அறிவு கொண்டவர்களை பெருமளவில் இணைத்து செயல் பட்டது. கதிர்காமரும் அவர்களில் ஒருவர்.  

2 hours ago, ரஞ்சித் said:

. அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்..

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எழுதியது குறிப்பிட்ட ஒரு சிலரை தான் ஆனால் இவர் எழுதியது எல்லாரையும் தான்..

என்னமா நடிக்கிறாங்கப்பா.....

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

அவர் எழுதியது குறிப்பிட்ட ஒரு சிலரை தான் ஆனால் இவர் எழுதியது எல்லாரையும் தான்..

என்னமா நடிக்கிறாங்கப்பா.....

 

படித்த தமிழருள் நீங்கள் அடங்க மாட்டீர்கள் இல்லையா? அப்படித்தான் உங்கள் கருத்து சொல்கிறது. நானும் இல்லை என்று சொல்லவில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

படிக்காத தமிழர்கள் என்று ஒரு விடுதலை அமைப்பை விமர்சித்தது தன்னிச்சையானதல்ல. இது படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம். தாம் மட்டுமே படித்தவர்கள் என்கிற அகம்பாவத்தில் வெளிவரும் செருக்கு. ஆனால், புலிகளியக்கம் முட்டாள்களில்லை என்பது உங்களுக்கும் தெரியும். 

அவ்வாறே, குகன் மேற்கோள் காட்டிய படித்த தமிழர்கள் என்பது எல்லோரையும் அல்ல, மாறாக தமது அறிவுத்திறமையை சிங்களவர்களுக்குச் சேவை செய்ய மட்டுமே பாவிக்கும் கதிர்காமர் சுரேன் போன்றவர்களைத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

 

இங்கே கருத்து அகற்றப்பட்டது இந்த ஒற்றைக் கருத்தினை மட்டுமே வைத்து அல்ல. எக்கருத்தை எவர் எழுதினாலும், அதைத் திசை திருப்பி புலிகள்மீது தனக்கிருக்கும் வக்கிரத்தைக் காட்டுவதற்குப் பயன்படுத்துவதனால்த்தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

ரஞ்சித், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஒருவர் கொஞ்சம் அறிவார்த்தமாகவும் எழுதக்கூடியவர். மற்றவர் சுத்தம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக பல தமிழர்கள்( படித்த /படிக்காத) உழைத்துள்ளார்கள் தொடர்ந்தும் உழைத்து கொண்டிருக்கிறார்கள்....சேர் .பொன் ராமநாதன் முதல் சுமத்திரன் வரை (படித்த) சில முன்னாள்  ஆயுதக்குழுக்கள் (படிக்காத).....சிங்களகட்சிகள் இவ‌ர்களின் உழைப்பை கண்டு கொள்ளவில்லை இனியும் கண்டு கொள்ளப்போவதுமில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியில் பொது வெளியில் சுட்டிக்காட்டுவதால்  ஆகப்போவது ஒன்றுமில்லை , செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றது 

 

ஆமாம் படித்தவர் என்பதற்கு எதாவது வரைவிலக்கணம் இருக்கிறதா  ( அறிவாளியைப் பற்றி இங்கே சொல்ல வரவில்லை )

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பெருமளவில் பல்கலைக்கழக மட்டத்திலான கல்வி அறிவு கொண்டவர்களால் வழி நடத்தப்படாத போராட்டம் என்ற கருத்திலேயே அவர் எழுதி இருப்பதாகவே எனக்கு தெரிகிறது. நீங்கள் “படித்த மேற்தட்டு வர்க்கத்தின் ஆணவம்” என்று ஒரு குறிப்பிட்ட, வசதியான வாழ்வு கொண்ட மக்கள் மீது கோபம் கொண்டு இருப்பதாகவே உங்கள் கருத்து காட்டுகிறது.

அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஆனால் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில்    தோல்விக்கான காரணங்களை உணர்ச்சிவசப்படாமல்   ஆராய்ந்து பார்த்தால் பல விடயங்கள் வேறு விதமாக செய்யப் பட்டு இருக்கலாம் என்று அவர்களே சொல்லக்கூடும். அதில் தேவையான துறைகளில் கல்வி அறிவு கொண்டவர்களை போதிய அளவில் உள்வாங்கி அவர்களின் கருத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத்தும் ஓன்றாக அமையும். சிறிலங்கா போர்க்காலத்தில்  கல்வி அறிவு கொண்டவர்களை பெருமளவில் இணைத்து செயல் பட்டது. கதிர்காமரும் அவர்களில் ஒருவர்.  

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

ஜூட்,

பெருமளவு பல்கலைக்கழக பட்டதாரிகளால் எமது போராட்டம் வழிநடத்தப்படவில்லையாயினும், பல பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்காற்றியிருந்தனர். ஆனால், “படிக்காதவர்கள்” என்று மேற்கோள் காட்டப்பட்டது விசமத்தனமாக தலைவர் பிரபாகரனைத்தான் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. முழுக்க முழுக்க புலிகளின் தலைவரைக் கிண்டலடிக்கும் நோக்கம் மட்டுமே அங்கிருந்தது.

அடுத்ததாக, படித்த மேல்த்தர வர்க்கம் என்று நான் குறிப்பிட்டது மொத்த குழுமத்தையும் அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு அரசியல்க் கட்சியில் சட்டத்தரணிகளாக இருக்கும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு போராட்டம் மீதும் புலிகள் மீதும் கல்விதொடர்பாக இருக்கும் ஏளனத்தைத்தான்.

குகனது மேற்கோள், கதிர்காமரின் இன்றைய  வடிவம்தான் சுரேன் என்னும் எனது ஒப்பீட்டின் தொடர்ச்சியே. அதாவது, கதிர்காமர், சுரேன் போன்ற படித்தவர்களின் செயற்ப்பாட்டை மட்டுமேயன்றி, எல்லா படித்தவர்களையும் நோக்கி அல்ல. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் படிக்காத தமிழர்கள் என்று யாராவது இருக்கிறார்களா....எனக்கு தெரிந்து இப்ப அப்படி யாரும் இல்லை..... குறைந்தபட்சம் பத்திரிகைகள் படிக்கிற அளவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்து போடக்கூடியவர்களாகவும்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.........!  🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இலங்கையில் படிக்காத தமிழர்கள் என்று யாராவது இருக்கிறார்களா....எனக்கு தெரிந்து இப்ப அப்படி யாரும் இல்லை..... குறைந்தபட்சம் பத்திரிகைகள் படிக்கிற அளவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்து போடக்கூடியவர்களாகவும்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.........!  🙂

இங்கிலிஸில் பந்தி பந்தியா வாசித்து பந்தி பந்தியா எழுதவேணும்.....
மொட்டைகடிதம் ....எழுதினால் படிக்காதவன்
பெட்டிசன் போட்டால் ...படிச்சவன்..😀

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடமிருந்து  இக்கருத்தை எதிர்பார்க்கவில்லை

படித்த  தமிழர்கள்

பிழைப்புக்காக எம்மை  விற்பது

வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....😥😥😥

 

படித்த  தமிழர்களை  அவர்களது  படிப்புக்காகவே  நம்பினோம்

பின்  சென்றோம்

அதே  படிப்பை  (அறிவை)

வைத்து  எம்மை  ஏமாற்றிய  வரலாற்றைத்தான்  குறிப்பிட்டேன்

அது   வரலாற்றில்  எம்மை  ஏமாற்றியவர்களை  மட்டுமே  குறிக்கும்  என்பது 

உங்களுக்கு  புரியாதது அல்ல

இருந்தாலும்........????

அடுத்தது  

படிக்காதவர்களின்  பின்னால்  சென்றதற்கு

அவர்கள்  படிக்கவில்லை  என்பது  காரணமல்ல

அவர்களது செயல்களே  காரணம்...

4 hours ago, Jude said:

 

அவர் பொதுவாக எல்லா படித்த தமிழரையும் பற்றி எழுதியதாகவே எனக்கு பட்டது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

ஜூட்,

பெருமளவு பல்கலைக்கழக பட்டதாரிகளால் எமது போராட்டம் வழிநடத்தப்படவில்லையாயினும், பல பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்காற்றியிருந்தனர். ஆனால், “படிக்காதவர்கள்” என்று மேற்கோள் காட்டப்பட்டது விசமத்தனமாக தலைவர் பிரபாகரனைத்தான் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. முழுக்க முழுக்க புலிகளின் தலைவரைக் கிண்டலடிக்கும் நோக்கம் மட்டுமே அங்கிருந்தது.

அடுத்ததாக, படித்த மேல்த்தர வர்க்கம் என்று நான் குறிப்பிட்டது மொத்த குழுமத்தையும் அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு அரசியல்க் கட்சியில் சட்டத்தரணிகளாக இருக்கும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு போராட்டம் மீதும் புலிகள் மீதும் கல்விதொடர்பாக இருக்கும் ஏளனத்தைத்தான்.

குகனது மேற்கோள், கதிர்காமரின் இன்றைய  வடிவம்தான் சுரேன் என்னும் எனது ஒப்பீட்டின் தொடர்ச்சியே. அதாவது, கதிர்காமர், சுரேன் போன்ற படித்தவர்களின் செயற்ப்பாட்டை மட்டுமேயன்றி, எல்லா படித்தவர்களையும் நோக்கி அல்ல. 

 

 

உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி. மைக்கிரோ சொவ்ற் நிறுவனர் பில்.   கேற்ஸ், விஞ்ஞானி அயன்ஸ்ரைன்  போன்ற பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடிக்காதோர் வரிசையில்  விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும்  தான்  தேர்ந்து  கொண்ட துறையில்  நிகரில்லாத அறிஞர்  என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை.  

14 hours ago, விசுகு said:

 

அடுத்தது  

படிக்காதவர்களின்  பின்னால்  சென்றதற்கு

அவர்கள்  படிக்கவில்லை  என்பது  காரணமல்ல

அவர்களது செயல்களே  காரணம்...

 

டக்ளஸ்,  கருணா,  பிள்ளையான்  பின்னால்  போனவர்களை பற்றி தானே  எழதுகிறீர்கள்?   இல்லையா?

14 hours ago, விசுகு said:

படித்த  தமிழர்களை  அவர்களது  படிப்புக்காகவே  நம்பினோம்

பின்  சென்றோம்

அதே  படிப்பை  (அறிவை)

வைத்து  எம்மை  ஏமாற்றிய  வரலாற்றைத்தான்  குறிப்பிட்டேன்

அது   வரலாற்றில்  எம்மை  ஏமாற்றியவர்களை  மட்டுமே  குறிக்கும்  என்பது 

 

 

படிக்காத கருணா உங்களை  ஏமாற்றவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.