Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன்.

யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவிட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் நான் நடந்து கடைக்குச் செல்ல எதிரே மீண்டும் அந்த (உறவு). இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன். ஏன் இவர் தெரியாததுபோல் போகிறார் என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நீயும் எதுவும் கூறாமல் தானே கடந்து போகிறாய் என்று என் மனச்சாட்சி கேட்க எதுவும் மேற்கொண்டு எண்ணாமல் கடைக்குச் செல்கிறேன்.

கடந்த வாரம் தமிழ்ப் பள்ளிக்காக சிலஉணவுப் பொருட்களை வாங்க உணவகம் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்னும் இருவருடன் கதைத்துக்கொண்டு அதே ஆள். இம்முறை பேசாமல் போக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு வணக்கம் என்கிறேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டுப் பார்க்க என்ன தெரியாதாமாதிரி நிக்கிறியள் என்கிறேன். எனக்கு உங்களைத் தெரியவில்லை என்கிறார் அவர். நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

  • Replies 83
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

அது அவருக்குப் புரியவில்லையே.

 

8 minutes ago, கிருபன் said:

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

எனக்கு வேற வேலையில்லையாக்கும்.😃

தெரியாத ஆட்களைப் பற்றியா நான் இப்ப கதைக்கிறேன் ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயா இருக்குமோ??  🤣

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

நல்ல கெட்டிக்காரன் தான் நீங்கள்😁

5 hours ago, nunavilan said:

பனங்காயா இருக்குமோ??  🤣

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் நுணா.

9 hours ago, suvy said:

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

ஐயோ ஐயோ😁😁

9 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

பாவம் ந்ந்தன்

1 hour ago, ஏராளன் said:

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

இருக்கும். நான் அந்தப்பக்கமா யோசிக்கேல்லையே😄

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

21 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

 

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 9:45 AM, ஜெகதா துரை said:

அவருக்கு என்ன பிரச்சனையோ?

அப்படி எண்ணித் தான் முதல் இரு தடவைகளும் நானும் எண்ணியது. ஒரு தெரிந்த மனிதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்வது ஒரு பெரிய வேலையா என்ன ???

11 hours ago, வல்வை சகாறா said:

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

 

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

 

லண்டனில் பெரும்பாலான எங்கடை சனங்கள் விசித்திரமான சனங்களாய்த்தான் இருக்கிறார்கள் சகாரா. பலரும் குனிந்த தலை நிமிர்த்தாமல் தொலைத்த எதையோ தேடுவதுபோல் அல்லது திருடனுக்குத் தேள் கொட்டியவர்கள் போலத்தான் பார்ப்பது.

23 hours ago, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

ஏன் ரதி மற்றவர்கள் கடைகளுக்கே போவதில்லையா ???
அதுசரி பெருமாளுக்குத் தமிழ்க் கடைகளோடு நல்ல பரிச்சயம் என்று நன்கு தெரிந்தவர்போல் சொல்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/30/2019 at 9:16 PM, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 

அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

10 hours ago, குமாரசாமி said:

அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன்

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

அந்தாள் வலையில் வீழ்ந்து கனகாலம் கண்டியளோ😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

சீ சீ அப்படியெல்லாம் அவர் கேட்கமாட்டார். எதற்கும் ஆக்கத்தை இன்னொருமுறை ஆறுதலாக வாசித்துப் பாருங்கள் சாமியாரே.!

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

 

அப்பிடியா! நெடுக்கரையும்,மனிசியையும் வீட்டை கூப்பிட்டு சாப்பாடு கொடுக்கத் தான் இருக்கு 😎
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

 

 

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.😀

 

6 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.