Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

நியாயமான கவலைதான். எனக்கும் உண்டு.

 

  • Replies 83
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

சிங்களதில், எந்த தரப்பாவது, விரும்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

 

 

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

பலாலி தரமுயர்த்தல் என்பது இலங்கை இந்தியமயமாதலின் இன்னொரு அங்கம். சீனாவின் புதிய பட்டுபாதை அளவுக்கு முடியாதாகினும், தனது வலுவுக்கு ஏற்ப- இந்தியா வட இலங்கையில் விரித்திருக்கும் பொருளாதார பட்டு வலையின் ஒரு அங்கமே இது.

முன்பே தலைமன்னார்-தூத்துகுடி கப்பல் சேவையை துவக்குவதாக கூறி பின் கிடப்பில் போட்டார்கள். அதையும் இப்போ தூசு தட்டுகிறார்கள்.

உண்மையில் கட்டுநாயக்காவை விட போக்குவரத்து அமைவிடம் பொருந்திய விமான நிலையம் பலாலி.

கட்டுநாயக்காவில் இருந்து, ரயிலில் எங்கு போவதாயினும் ஒரு நாளைக்கு 2 தரம் ஓடும் ரயிலில் கொழும்பு போய்த்தான் போகலாம்.

ஆனால் காங்கேசன் துறையில் இருந்து நாளுக்கு 7 ரயில்கள் கொழும்பு, கல்கிசை வரை போகிறன. சொகுசு பெட்டிகளுடன்.

வியாபார நிமித்தம், படிப்பு, மருத்துவம், சுற்றுலா என அனுராதபுரத்திற்கு மேலே இருந்து இந்தியா போகும் அனைவருக்கும் கட்டுநாயக்காவை விட பொதுப் போக்குவரத்தில் பலாலி போவது இலகு, மலிவு.

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

சொல்லியவரிடம், நீங்கள் சொன்னதையும்  வினாவினேன்.

கொண்டாடப்படும் protocol இல் வித்தியாசங்கள் தலை நகர தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கிடையில் இருக்கிறது என சொன்னார்.

இம்முறையும், துணை தூதரக தலைமைப் பிராதானியில் (consulate general) வேறுபாடு இல்லை.  

தமிழர்களை பொறுத்தவரை ஆட்சிக்கலையில் (statecraft) இருந்து வெகு தூரமாக அந்நியப்பட்டு விட்டோம்.
    
அதனால், எமக்கு இரண்டுமே ஒன்று போலவே விளங்கிக்கொள்கிறோம், மேலும் தோற்றமளிக்கின்றது.  

உதாரணமாக, இப்படி  கொண்டாடப்படும் சுதந்திர தின பதிவை தலை நகர தூதரகம் தனது தலைநகரில் (டெல்லி) இல் பதியும் எனவும், துணைத்தூதரகம் சார்பில் தலை நகர தூதரகம் பதியும் எனவும்.

இம்முறை, டெல்லிக்கு நேரடி பதிவை துணை தூதரகம் செய்திருப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாக சொன்னார்.

படைப் பிரதானிகள் பிரசன்னம், கொடி எவர் ஏற்றுவது, என்று பல விடயங்களில் வேறுபாடுகள் உண்டு  என்று சொன்னார். பிரதனிகளின் சீருடையில் கூட வேறுபாடு உண்டு என்று. அதாவது, படிப்பு பிரதானிகள் துணை தூதரகத்தில் சீருடையுடன் இருப்பதில்லை என்று.    

இதை youtube இல் ஒப்பிட்டு கவனமாக பார்க்கும் போது வேறுபாடுகள் தெரிகிறது.   

இது எமக்கு சிறிய, உப்புச்சப்பற்ற விடயமாக இருக்கலாம். ஆனால், இவை ராஜதந்திர மற்றும் ஆட்சிக்கலை protocol களில் முக்கியமானது என்றும் சொன்னார்.  

முக்கியமாக, இது status சம்பந்தப்பட்டது.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். 

சோழியன் குடுமி சும்மா ஆடாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோழியன் குடுமி சும்மா ஆடாது...

உண்மைதான்...  தேர்தல் முடிந்த பின், இந்த அறிவிப்புகளை...
ஒரு நாளில்... மாற்றி விடக் கூடிய, வல்லமை படைத்தவர்கள் தான். சிங்களவர்கள்.

அவங்கள்  சொல்லாட்டியும்...  முஸ்லீம்  இனம்....
அரபு எழுத்திலும்... எழுத வேண்டும் என்று, குடைச்சல்  குடுத்து,
தமிழை... அப்புறப் படுத்தி விடும்.

5 hours ago, nunavilan said:

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

ஏற்கனவே ரனில் சொன்னது  புலம்பெயர் தமிழர்களின் வருகையால் அந்நியசெலவாணி பில்லியனில் வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் வடக்கில் சர்வதேச விமானநிலையம் வருவது மேலும் அந்நிய செலவாணியை கொடுக்கும்.அது நாட்டுக்கு நல்லது தானே. மந்தலவில் மகிந்த குடும்பம் இலையான் கலைத்ததால் வந்த ஆற்றமையால் இனவாதத்தை கக்குகிறார் நாமல்.

தமிழில் முதல் முறையாக எழுத்துப்பிழை இல்லாமல் முதலில் தமிழை போட்டு தமிழ் மக்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்கள். அரசியல் நிச்சயமாக உண்டு. எத்தனையோ போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ள வேளையில் தமிழில் பெயர்ப்பலகையை  திடீரென போடுவது சந்தேகத்தை  கிளப்புகிறது. நீண்ட காலப்போக்கில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

_72780162_bus_sign.jpg

இதெல்லாம் சொறிலங்காவின் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலக அமைச்சர் மனோகணேசனுக்கு தெரிந்த தமிழாம்!

13 hours ago, goshan_che said:

பெருமளவு வட இலங்கை தமிழர்கள் தென்னிந்தியா போவது வருவதும். கட்டுநாயக்கவில் இருந்து 7 மணி தொலைவில் யாழ் இருப்பதும், இங்கே ஏலெவே இருந்த விமானநிலையமே தரமுயர்தப்படுகிறது என்பதும் நாமல் பேபிக்கு தெரியும்.

இதை அத்துவானக் காட்டில், கட்டுநாயக்கவில் இருந்து 4 மணத்தியால தூரத்தில், புதிதாக பெரும் எடுப்பில் தாம் கட்டிய விமான நிலையத்தோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதும் தெரியும்.

ஆனால் அரசியல் செய்ய, இனவாதத்தை கையில் எடுத்து, தமிழனுக்கு ஏர்போர்ட் எதுக்குன்னு கூவினாத்தான் போணியாகும்.

இவ்வளவும் தெரிந்த நாமல் பேபிக்கு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு விமானங்கள் போய் வந்ததும் தெரிந்திருக்கும். 😀

அவரது கேள்வி இலங்கைக்கு ஒரு சர்வதேச விமான நிலையம் போதும், இன்னொன்று தேவையில்லை என கூறியவர்கள் இப்பொழுது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து தேர்தலுக்கு முன் அதை விளம்பரப்படுத்துவது பற்றி.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இப்டித்தான் ரோட்டுப் போடும் போதும் கோச்சி ஓடும் போதும் னம் குத்தி முறிஞ்சது.மற்றும் படி சிங்களவன் எதையும் தனக்கு லாபம் இல்லாமல் செய்ய மாட்டான் என்பது சின்னப்பிள்ளைக்கும் தெரியும்.கிடைக்கிற ரைக்கும் லாபம் என்பது தான் எமது நிலை.

16 hours ago, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

இதுதான் நடக்கும்.நடக்கவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

 

இதுதான் நடக்கும்.நடக்கவும் வேண்டும்.

உங்களது எதிர்   கூறல்  இந்த யென்மத்தில்  நடந்துவிடக்கூடாது என்று  இறைஞ்சுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இந்திய துணைத்தூதரகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதே? இந்த முறையும் கொழும்பில்தான் உயர்ஸ்தானிகர் கொண்டாடினார். யாழில் வழமை போல உதவி ஸ்தானிகரே கொண்டாடினார்?

மேலே சொல்லிய தலை நகர தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் இந்திய அரசு  சுந்தந்திர தின நிகழ்வுகளை 2018 இல், மற்றும் 2019 இல் நேரடியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்களை, yarl களத்தில் இருப்பவர்கள் தெரிந்திருப்பின், பார்த்தவர்கள் எதாவது வெளிபடையான வித்தியாசங்களை (2018 இல், மற்றும் 2019 ) அவதானிக்க முடிந்ததா என்பதை அறியத்தந்தால் நன்று. 

துணை தூதரகங்களில் (consulate), சுதந்திர தினம் நினைவு கூரப்படுவதே  வழமையானா protocol என்றும், கொண்டாடப் படுவதே  வடமாகாணத்திற்கு தற்போதைய நிலையில் சிங்களத்துடன் கறார் பட்டு   கிந்தியா வழங்கி இருக்கும் தனித்துவமான, பிறிம்பான அந்தஸ்து என்றும் அறிந்தேன்.

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor and nature

படத்தை பார்க்க... பகீர்  என்று இருக்கு.

இந்த ஏர்போர்ட்ல வந்து இறங்கிறதால, புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுவரும் அன்பளிப்புப் பொருட்களை பத்திரமா ஏத்தி கொண்டுவர இரவிரவா கண்முழிச்சு கட்டுநாயக்காவுக்கு வான்ல போய் / வரேக்க கம்பங்களோடையும், மரங்களோடையும், எதிர வார வாகனங்களோடையும்,மோதி பலியாகும் எம்மவர் எண்ணிக்கை குறையும் என்ட ஒரு நன்மையை நினைக்க சந்தோசம் தான்.

ஆனால் இந்தியா தான் இப்போதைக்கு இணைக்கப்படும் போல தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா consulate ஏ யாழில் வழங்கி இருக்கிறது. இது உபநிலையில், முழுமையான ராஜதந்திர, மற்றும் ஆட்சிக்கலை பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் ஆகும்.

இதுவே, தற்போதையா நிலையில் வடமாகாணத்தை  தனித்துவமும், பிறிம்பான status இருக்கும் ஓர் territorial நிர்வாக பகுதியாக இருப்பதை கிந்தியா   ஏற்றுக்கொள்வதும், அங்கீகரிப்பதும்.

us, சீனா விலேயே கிந்தியா cosnsulate  பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் செய்கிறது. UK இல் கூட இது இல்லை, uk இல் ஆங்காங்கு இருப்பது consular service.

கிந்தியா மீது எத்தகைய பகையோ, வெறுப்போ இருப்பினும் இதுவே யதார்த்தம்.

இந்த யாழில் உள்ள கன்சுலேட் இல், தற்போது முழுமையான, முதன்மையான தூதரகம் அளவில் கிந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது.

இதனால், கிந்தியா எம்மீதான பார்வையை மாற்றிவிட்டது என்பது அர்த்தமல்ல. படிப்படியான status வளர்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கிந்தியா consulate ஏ யாழில் வழங்கி இருக்கிறது. இது உபநிலையில், முழுமையான ராஜதந்திர, மற்றும் ஆட்சிக்கலை பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் ஆகும்.

இதுவே, தற்போதையா நிலையில் வடமாகாணத்தை  தனித்துவமும், பிறிம்பான status இருக்கும் ஓர் territorial நிர்வாக பகுதியாக இருப்பதை கிந்தியா   ஏற்றுக்கொள்வதும், அங்கீகரிப்பதும்.

us, சீனா விலேயே கிந்தியா cosnsulate  பிரசன்னமும், பிரதிநிதித்துவமும் செய்கிறது. UK இல் கூட இது இல்லை, uk இல் ஆங்காங்கு இருப்பது consular service.

கிந்தியா மீது எத்தகைய பகையோ, வெறுப்போ இருப்பினும் இதுவே யதார்த்தம்.

இந்த யாழில் உள்ள கன்சுலேட் இல், தற்போது முழுமையான, முதன்மையான தூதரகம் அளவில் கிந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்பதே நான் அறிந்தது.

இதனால், கிந்தியா எம்மீதான பார்வையை மாற்றிவிட்டது என்பது அர்த்தமல்ல. படிப்படியான status வளர்ச்சி.

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor and nature

படத்தை பார்க்க... பகீர்  என்று இருக்கு.

உது இப்ப சும்மா அவசரத்துக்கு நட்டு வைச்சிருக்கினம்.விசயம் எல்லாம் முடிய பெரிய கொட்டை எழுத்திலை பென்னாம் பெரிசாய் பெரீய போர்ட் நிரந்தரமாய் வைப்பினம் கண்டியளோ 😄

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர்  இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யழபபணம-சரவதச-வமன-நலயம-17-ஆம-தகத-தறபப/175-240016

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

 

எனக்கும் சில சொற்கள் புரியவில்லை ஜஸ்டின் (அல்லது யாரும்) தெரிந்தால் விளக்கவும்.

Embassy

Consulate

High Commission

Honorary Consulate

Attache...

என்பவற்றின் வேறுபாடுகள் என்ன? பிரித்தானிய உயர் ஸ்தனிகர் என்று கூறுகிறோம். அதேவேளை அமெரிக்க தூதர‌கம் என்று அழைக்கின்றோம். சமீபத்தில் நான் இலங்கைக்கான ஓர் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தை தேடியபோது எனக்கு கிடைத்தது.  Honorary Consulate தான் உள்ளார் என கிடைத்தது? யார் இவர்கள்? எவ்வாறு நியமிக்க படுகின்றார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

 

எனக்கும் சில சொற்கள் புரியவில்லை ஜஸ்டின் (அல்லது யாரும்) தெரிந்தால் விளக்கவும்.

Embassy

Consulate

High Commission

Honorary Consulate

Attache...

என்பவற்றின் வேறுபாடுகள் என்ன? பிரித்தானிய உயர் ஸ்தனிகர் என்று கூறுகிறோம். அதேவேளை அமெரிக்க தூதர‌கம் என்று அழைக்கின்றோம். சமீபத்தில் நான் இலங்கைக்கான ஓர் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தை தேடியபோது எனக்கு கிடைத்தது.  Honorary Consulate தான் உள்ளார் என கிடைத்தது? யார் இவர்கள்? எவ்வாறு நியமிக்க படுகின்றார்கள்? 

தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு!

கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன்.

கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள்.

attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு!

கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன்.

கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள்.

attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!

எனக்குத் தெரிந்த மட்டில்,

1. ஹை கொமிசனுக்கும், எம்பசிக்குமான வித்தியாசம் அமெரிக்க, பிரித்தானிய வேறு பாட்டால் வந்தது அல்ல. பழைய காலத்தில் ஒரு ராஜ்ஜியத்தில் இருந்து இன்னொரு ராஜ்ஜியத்தில் போய் தூதுவராக இருப்பவரை அம்பாசடர் என்றார்கள். இப்போதும் லண்டனில் இருக்கும் பிரெஞ்சு தூதரகம் எம்பசிதான். தூதுவர் French ambassador to the UK. அமெரிக்கா நாடாவதற்கு முன்பே அம்பாசடர், எம்பசி எனும் சொற்கள் பழக்கத்தில் வந்து விட்டன.

2. பிரித்தானிய சாம்ராஜ்யதுக்கு கீழ் வந்த நாடுகளில் மன்னரின் பிரதிநிதிகள்  3 வகை பட்டனர். கவர்னர்-ஜெனரல் (இந்தியாவில் வைஸ்ரோய்). இவர்கள் பிரித்தானிய நேரடி ஆளுகை/டொமினியன் தேசங்களை ஆண்டனர் ( பிரிடிஸ் இந்தியா). கவர்னர் - ராஜாக்களின் கீழ் வந்த சமஸ்தானக்களில் பிரித்தானியாவின் பிரதிநிதி. ஹைகொமிசனர் - பிரித்தானிய முடியின் நேரடி ஆளுகைக்குள் வராத ஆனால் பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த தேசங்களில் பிரித்தானிய முடியின் பிரதிநிதி.

3. பொதுநலவாயம் அமைந்த போது, பெரும்பாலான நாடுகள் குடியரசாக இல்லாமல் - நாட்டின் தலைவியாக ராணியை கொண்டிருந்தன (கனடா, அவுஸ், நீயூசிலாந்து இப்போதும்). எனவே இந்த நாடுகளிடையேயான தூதர்கள், ஒரே ராணியின் தூதர்களே. அவர்களை அம்பாசடர் என அழைக்க முடியாதல்லவா? எனவே ஹைகொமிசனர் என்றார்கள்.

4. காலப்போக்கில் இந்தியா, இலங்கை என பலநாடுகள் குடியரசாகிய போதும், பொதுநலவாயத்தில் தொடர்வதால் - ஹைகொமிசனர் எனும் பதம் தொடர்கிறது.

5. முன்னைய குடியேற்ற நாடுகள் ஆனால் பொதுநலவாயத்தில் இல்லாத நாடுகளும் (அமெரிக்கா, அயர்லாந்து), ஒரு போதும் பிரிடிஸ் சாம்ராஜ்யத்யில் வராத நாடுகளும் ( பிரான்ஸ், சுவீடன், தாய்லாந்து, ஜப்பான்) தொடர்ந்தும் அம்பாசடர்/எம்பசி என அழைக்கப்படுகிறன.

7 hours ago, Justin said:

இந்த சுதந்திர தின அவதானிப்பை நீங்கள் கொஞ்சம் மிகையாக வியாக்கியானம் செய்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் கடஞ்சா.

இங்கே சொற்களை வைத்துக் கொண்டு அதிகம் அலட்ட நான் விரும்பவில்லை! ஆனால். எம்பசி (தூதரகம்) என்பது எப்போதும் தலைநகரில் அமைந்திருக்கும் நிரந்தரமான தூதுவர் இருக்கும் இடமாகவும், கொன்சலேற் (துணைத்தூதரகம்) தலைநகர் தவிர்ந்த முக்கிய நகரங்களில் மக்களின் குடிவரவுத் தேவைகளுக்காக இருக்கும் அலுவலகமாகவும் இருக்கின்றன. கொன்சலேற் அமைந்திருக்கும் இடத்தின் status ஐப் பிரதிபலிப்பதை விட பயனர்களின் வசதி சம்பந்தப்பட்ட ஏற்பாடு என்று தான் நான் அறிந்த வரையில் எனக்கு விளங்குகிறது! இந்திய துணைத்தூதரகம் இந்த பயனர்களின் வசதி கருதியும் வடமாகாணத்தில் ஒரு கண் வைத்திருக்கும் நோக்கோடும் அமைக்கப் பட்டது.   

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 

யாழில் இருப்பதை ஒத்த ஒரு துணைத் தூதரகம் கண்டியிலும் உண்டு. 

Downgrading/upgrading status of embassies - நாடுகள் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் - ஆனால் இது இந்தியாவால் இலங்கையில் செய்யப்படுகிறதா? என்பது கேள்விக் குறியே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஓர் இனம் பேசும் மொழி பல ஆண்டுகள் பழமையான மொழி இன்றுதான் முதன் மொழியாக விமான நிலையத்தில் முதன் முதலில் எழுந்து நிற்கிறது என்றால் நாமெல்லாம் மொழியை இழந்து தோற்று விட்ட கதைதான் இதை இப்ப தூக்கி திரிஞ்சு கொண்டு இருக்கிறம் 

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார் 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் ஓர் இனம் பேசும் மொழி பல ஆண்டுகள் பழமையான மொழி இன்றுதான் முதன் மொழியாக விமான நிலையத்தில் முதன் முதலில் எழுந்து நிற்கிறது என்றால் நாமெல்லாம் மொழியை இழந்து தோற்று விட்ட கதைதான் இதை இப்ப தூக்கி திரிஞ்சு கொண்டு இருக்கிறம் 

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார் 

 

ஒரு முறை யாழ் பஸ்நிலையத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் தமிழில் பேச அவர் கொச்சை தமிழில் பேசினார். சரி குடியேற்றம் இங்கே வரை வந்து விட்டதே என நொந்தபடி ஆட்டோவில் ஏறி அவருடன் சிங்களத்தில் பேச்சு கொடுத்தால் ஆள் மலங்க மலங்க முழித்தார் 😂.

வெளிநாட்டில் இருந்து வந்த சக தமிழனிடம் கொஞ்சம் அதிகமாக் ஆட்டையை போட சிங்கள வேடம் 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஒரு முறை யாழ் பஸ்நிலையத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் தமிழில் பேச அவர் கொச்சை தமிழில் பேசினார். சரி குடியேற்றம் இங்கே வரை வந்து விட்டதே என நொந்தபடி ஆட்டோவில் ஏறி அவருடன் சிங்களத்தில் பேச்சு கொடுத்தால் ஆள் மலங்க மலங்க முழித்தார் 😂.

வெளிநாட்டில் இருந்து வந்த சக தமிழனிடம் கொஞ்சம் அதிகமாக் ஆட்டையை போட சிங்கள வேடம் 🤦‍♂️

பிளைக்க்த்தெரிந்த மனிதர்.

On 10/15/2019 at 5:28 AM, தனிக்காட்டு ராஜா said:

கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார்

அவங்க எல்லாம் யாழ்ப்பாண தமிழன் என்டு கண்டுபிடிக்கும் உங்க திறமை அபாரம்!
ஆனா ராஜா! ஏன் இந்த பிரதேசவாதம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 3:50 PM, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

சொல்லி  சில நாட்களே ஆகின்றது. கூட்டமைப்பு புலம்ப தொடங்கி உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 12:41 PM, Rajesh said:

இதெல்லாம் சொறிலங்காவின் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலக அமைச்சர் மனோகணேசனுக்கு தெரிந்த தமிழாம்!

யாழ்பாணத்திலும் சிங்கள மொழியை கொன்டால்தான் சிங்களவனுக்கு விளங்கும்

சிங்களவன் வருகின்ர இடமாகப்பார்த்து சிங்கள மொழியை கொல்லவேண்டும்

Edited by ragaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.