Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவகத்தில் இனவாத அறிவிப்பு; வேடிக்கையான விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
IMG_20191029_142454.jpg

கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது.

IMG_20191029_142456.jpg
https://newuthayan.com/?p=8886

மேட்டுக்குடி மக்கள் மட்டுமே செல்லக்கூடிய உணவகமாக இது இருக்குமோ என்னவோ ...


"கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ..."

  • கருத்துக்கள உறவுகள்

tea.png&key=e2786a3a32fe57d676ca71afe037

கடை மொதலாளி இப்போ (1956) குடித்த தேத்தண்ணி எல்லாம் வாந்தி எடுத்து காட்டுவார்.. 😄

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

.

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

கீழே உள்ளது இன்னொருவரின் முகனூலில் சுட்ட வழிமுறைகள் (steps)

1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும்.

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும்.

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

 

https://www.google.ca/search?sxsrf=ACYBGNSSF7mNtm0oL3VMLhE0C5gXimHadg%3A1572372386398&source=hp&ei=on-4XbvsFcm9ggfzx5nQBw&q=peppermint+cafe&oq=peppermint+ca&gs_l=psy-ab.3.0.0i3j0l9.59.3801..4571...0.0..0.191.1327.0j9......0....1..gws-wiz.......0i131.IDC0m6gP7K4

ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலையே புகைப்படத்தில் காண்கிறீர்கள். அதற்கு அந்நிறுவனம் கொடுத்திருக்கும் விளக்கமானது. படத்தில் உள்ளது

1. கூகிளில்  போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும். 

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும். 

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சவுத் ஆப்பிராகாவில் இனவாதம் தலை விரித்து ஆடிய காலப்பகுதியில்  பொது மக்கள் பாவனைக்கு உரிய சில இடங்களில் வெள்ளை இன மக்கள் மட்டுமே உட் பிரவேசிக்க முடியும் என்றும் கறுப்பு இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட  இனவாத செயல்பாட்டை நினைவு படுத்துவது போல் உள்ளது .

இது போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களால் நடாத்தப்படும் இடங்களுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பின்புலம் இருக்கும்!

மனோகணேசன் போன்ற அமைச்சர்களால் இவர்களுக்கு சேவகம் தான் செய்யமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

.

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஐயா,  நாங்கள் நடைமுறையில் சாத்தியமானதைதான் எதிர்பார்க்கலாம்.  

2 hours ago, போல் said:

இது போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களால் நடாத்தப்படும் இடங்களுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பின்புலம் இருக்கும்!

Owner முஸ்லிமாம். 😀

2 hours ago, போல் said:

மனோகணேசன் போன்ற அமைச்சர்களால் இவர்களுக்கு சேவகம் தான் செய்யமுடியும். 

மனோ கணேசனின் பதிவு.

 

இது அவர்கள் மீண்டும் கொடுத்த விளக்கமாம்.

EIDn3CgW4AAnVk5?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, poet said:

இலங்கையில் உணவகம் விடுதி மற்றும் வர்த்தக துறைகளில் பணியாற்றும்   தொழிலாளர்களில் மலையக தமிழர் பங்கு அதிகரித்து வருகிற பின்னணியில் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இது மலையக அமைச்சர் நண்பர் மனோகணேசனின் அமைச்சின் கீழ்வரும் இலங்கை அரசியல் யாப்புக்கெதிரான குற்றச் செயலாகும்.  

இவ்விடயத்தை தமிழ் மொழிவாரித் தலைவர்கள் தோழர் மனோ கணேசன்.  நண்பர்  ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் சம்பந்தன் ஐயா தோழர் ரவூப் ஹக்கீம் போறோர் தீவிர  கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

இனி இந்தப்பக்கம் ஆளை காணேலாது...... 🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பொயட் அண்ணே.....  கடை முதலாளி,  முஸ்லீமாம்.  :grin:
இதுக்கு... இனி எப்படி, முட்டுக் கொடுக்கப் போகின்றீர்கள், என்று பார்க்க ஆசையாக உள்ளது. 🤣

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

சிங்கள இராணுவ அதிகாரியின் செயல் மதிக்கத் தக்கதாக உள்ளது. கவிஞரே,  நீங்கள் ஓரிரு உங்கள் நண்பர்களை வைத்து முழு  முஸ்லிம் மதத்தவரையும் பொதுமை படுத்துவதாகவல்லோ படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும்,  அவர்கள் தமது மதத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருப்பவர்கள்.  இனம் மொழி நாடு என்பதைதெல்லாம் அர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. (இது எனது கருத்து மட்டுமே. )

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய Maharajah, நீண்ட வாழ்வில் நான் அறிந்தது எல்லா இனத்திலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

அன்புகுரிய Maharajah, நீண்ட வாழ்வில் நான் அறிந்தது எல்லா இனத்திலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். நல்வாழ்த்துக்கள்

மரியாதைக்குரிய கவிஞரே,  நீங்கள் கூறியது சரிதான்,  நான் கூறியதில் தவறேதும் உண்டா  ? எனது கூற்று அனுபவத்தின்பாற்பட்டது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/29/2019 at 6:17 PM, நிழலி said:

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

Message from TripAdvisor: Due to a recent event that has attracted media attention and has caused an influx of review submissions that do not describe a first-hand experience, we have temporarily suspended publishing new reviews for this listing. If you’ve had a firsthand experience at this property, please check back soon - we’re looking forward to receiving your review!

அவன் முந்தியிட்டான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, poet said:

அன்புக்குரிய தமிழ்சிறி மற்றும் அன்புகுரிய மீராவுக்கு, என்னைபற்றி தெரிந்தது அவ்வளவுதான். நான் முஸ்லிம்களுக்காக தமிழரோடு வாதாடிய அதே அளவு கிழக்கு மாகாண தமிழர் நலன்தொடர்பாக முஸ்லிம்களோடும் போராடி இருக்கிறேன். உங்களுக்கு தோழர் Fauzer Mahroof தெரிந்தவர்தானே, அவரை விசாரியுங்கள். 2003 என ஞாபகம் Fauzer Mahroof நானும் திருமலையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தோம். தம்பலகாமத்தில் நாம் சென்ற வான் வாகனம் முக்கால்வாசியும் இலங்கை இராணுவ அதிகாரிகளால் நிறைந்தது. இராணுவம் ஏறியதும் வண்டிச் சாரதி பிரபாகனை கொச்சைப் படுத்தும் இனவாத பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். நான் எழுந்து நிறுத்து என கத்திவிட்டு அமர்ந்தேன். பேசாமல் இருக்கும்படி பவுசர் என்னிடம் மண்டாடினான். பாடல் தொடர்ந்தது  மீண்டும் எழுந்து கத்திவிட்டு இருந்தேன். வேறு பாடல் இல்லையென்று சாரதி சொன்னான். மீண்டும் நிறுத்துஎன நான் கத்தினேன். பின்னுக்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் எழுந்தபோது என் கதை முடிந்தது என்கிற சூழல். ஆனால் ஆச்சரியபடும் வகையில் பாடலை மாற்றும்படி அந்த அதிகார் கட்டளையிட்டார். அபோதுதான் Fauzer Mahroof என் உயிர்ப் பாதுகாப்புப் பற்றிய அச்சம் தவிந்தான். நான் தமிழர் சிங்களவர் முஸ்லிம்களின் முன்பு துப்பாக்கி முனையிலும் தலைபணிந்ததில்லை. இப்படித்தான் வாழ்ந்தேன். நான் அறிந்தவரை வடக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்முன்னர்மட்டும் பணிவாக நடந்திருக்கிறேன். அஞ்சுவதல்ல என்னை ஆகர்சித்த சங்க கவிஞர்களின் வீரமும் காதலும் அறமும்தான் என் வாழ்க்கை நெறி தோழ தோழியர்களே. 

எமது  பெரு மதிப்பிற்குரிய    நடிகரும் கவிஞருமான மாண்புமிகு பொயட் ஐயா அவர்கள்  தான் பல இராணுவத்தினர் மத்தியில் பலமாக சத்தம் போட்டு தனது எதிர்ப்பை காட்டியதாக இங்கே கூறியுள்ளார்.இது உண்மையில் வரவேற்கத்தக்க செயல்.பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

இருந்தாலும் எமது மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இந்த பாரபட்சம் காட்டும் செயலை கண்டிக்காமல் இருப்பது மிகவும் வேதனை தரும் செயல் என இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

Edited by குமாரசாமி

On 10/30/2019 at 2:28 AM, Lara said:

மனோ கணேசனின் பதிவு.

இது அவர்கள் மீண்டும் கொடுத்த விளக்கமாம்.

இது போன்ற பயனற்ற பல அறிவிப்புகளை மனோகணேசன் கடந்த 4 வருடங்களாக செய்து, இன்றுவரை எதையுமே சாதித்ததில்லை. இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியது  தான் மிச்சம்.

இறுதியாக நீராவியடிப் பிள்ளையார் கோவில் விடயத்தில் மனோகணேசன் உத்தரவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை. இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியது  தான் மிச்சம். இந்த விடயத்தில் சுமந்திரனின் முயற்சி பாராட்டுக்கு உரியது. ஆனால், முன்பு சில சந்தர்ப்பங்களில் செய்ததுபோல் காசை வாங்கிகொண்டு வழக்கை கைவிடாமல் இருக்க வேண்டும்.

பேரினவாதக் கட்சிகளுக்கு சேவகம் செய்யும் மனோ கணேஷனின் போலித்தனத்தை ஏமாளிகளால், அரசியல் பேதைகளால் விளங்கிக்கொள்ள முடியாது.

இந்த திரிக்கும் மதம் தொடர்பான உரையாடல்களுக்கும் என்ன சம்பந்தம்? திரியின் போக்கை திசை திருப்பும் கருத்துகளை எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.

On 10/29/2019 at 11:47 PM, நிழலி said:

இந்த மேட்டுக்குடி விடுதியினை பற்றி கூகிள் ரிவியூ பக்கம் போய் எம் சனம் தாறுமாறாக விமர்சித்ததில் நேற்றிரவு 4.8 ஆக இருந்த தரம் இப்ப 1.9 இற்கு இறங்கி விட்டது.

நானும் ஒரு  Review போட்டுள்ளேன்

கீழே உள்ளது இன்னொருவரின் முகனூலில் சுட்ட வழிமுறைகள் (steps)

1. கூகிளில் போய் "Peppermint cafe Sri lanka' என்று டைப் செய்யவும்.

2. இந்தக் கடையை கண்டுபிடித்து ' Review ' என்னும் பகுதிக்கு போகவும்.

3. அங்கே ஐந்து நட்சத்திரங்களை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் முதலாவதை மட்டும் அழுத்தவும்.

4 . பிறகு வாழ்த்து எழுதுவதற்கு விடப்பட்டிருக்கும் கட்டத்தில் காரணத்தை எழுதிவிடுங்கள்.

https://www.google.ca/search?sxsrf=ACYBGNSSF7mNtm0oL3VMLhE0C5gXimHadg%3A1572372386398&source=hp&ei=on-4XbvsFcm9ggfzx5nQBw&q=peppermint+cafe&oq=peppermint+ca&gs_l=psy-ab.3.0.0i3j0l9.59.3801..4571...0.0..0.191.1327.0j9......0....1..gws-wiz.......0i131.IDC0m6gP7K4

இவ்வாறு பலர் 24 மணித்தியாலத்துல செய்த பதிவுகளும் ரேட்டிங் உம் காணாமல் போயிருக்கு!

24 மணித்தியாலத்துக்குள்ள எல்லாரும் பதிவு செய்தது காரணமா இருக்கலாம்.

தினமும் ஒவ்வொரு பதிவு செய்தா இந்த ரேட்டிங்கை மீண்டும் குறைக்கலாம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.