Jump to content

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) .

seranb-1200x826.jpg

உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

‘இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது’ எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக " கடவுள் துகள் "  எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. விஞ்ஞானிகள் இங்குள்ள, வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவியில் நேர் மின் தன்மைகொண்ட புரோட்டான் துகள்களை அதிவேகத்தில் மோதவைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்தத் துகள் மோதல் கருவி 2009 – 2013 வரையிலும் பிறகு 2015 – 2018 வரையிலும் செயல்பட்ட போது கிடைத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்த போதுதான் ’டெட்ரா குவார்க்’ எனப்படும் புதிய துகளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் எது?’ எனும் கேள்விக்கான பதிலைத் தேடிச் செல்வதில் விஞ்ஞானிகள் ஒரு படி முன்னேறியுள்ளனர். ன்களை மேலும் பகுத்தால் குவார்க் எனப்படும் நுண்ணிய துகள்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது.

இதுவரை நடந்த ஆய்வு அடிப்படையில், இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து மெசான்வகை ஹெட்ரான்களும்; மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து பேர்யான் வகை ஹெட்ரான்கள் மட்டுமே இருப்பது உறுதிபடுத்தப்பட்டன. ஆனால், கணக்கீடு அடிப்படையில் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான்கள் துகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

https://www.vanakkamlondon.com/பிரபஞ்சம்-உருவான-ரகசியத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவரை கற்பனையாகவே இருந்துவந்த ‘நான்கு குவார்க்’ (டெட்ரா குவார்க்) துகள்களை முதல் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விரைவில் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளிப்படும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிந்து என்ன செய்யப்போகிறார்கள் இந்த விஞ்ஞானிகள்....? புதிதாகப் பிரபஞ்சங்களை உருவாக்கப் போகிறார்களா...?? அப்போ அந்தப் பிரபஞ்சங்களுக்குக் கடவுள்கள் யார்...??? என்னையும் ஒரு பிரபஞ்சத்துக்கு கடவுளாக்கும்படி விண்ணப்பிக்கலாமா....???? 

மனிதரை மனிதர் தீண்டமுடியாது அவதிப்படும் நிலையில் அதற்கொரு தீர்வைத் தேடமுடியாத மூஞ்சூறுகள் விளக்குமாற்றைத் தேடுகின்றன.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இதைத்தான் சொல்லுவது பொழுது போகலைன்னா நெருப்பு கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிவது  எண்டு .

முதலில் றோட்டிலை ஒருத்தன் நிம்மதியாய் தும்ம முடியலை அணுகுண்டு விழுந்ததை  போல் சனம் கொரனோ  கொரனோ  என்று கும்பிட்டுக்கொண்டு ஓடுதுகள்   .அதுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை .

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ்   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கனக்க கேட்டால் அது வேறை இது வேறை எண்டுவாங்கள்.
இல்லாட்டி விஞ்சான வளர்சிக்கு அவசியம் எண்டுவாங்கள். இதுக்கு மேலையும் கதைச்சியள் எண்டால் பள்ளிகூடம் போகாத கேஸ் எண்டு   போட்டு வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிவிடுவாங்கள்.😎

சிலருக்கு இப்ப இதுதான் வேலை எது கெடுத்தாலும் போலி / மூடநம்பிக்கை என்ற சுலோகலங்களுடன்  சாரத்தை மடித்துக்கட்டிக்கிட்டு திரிகினம்😎

 

51 minutes ago, பெருமாள் said:

அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செய்யும் வேலை அது ஏற்கனவே கடவுளின் துகள் என்பது குழப்பத்தில்  உள்ள ஒன்றாக்கி  விட்ட பெருமை அவர்களையே சேரும் .

நல்லது இப்படியாவது அவர்களை சிந்திக்க வைக்கின்றதே

Link to comment
Share on other sites

இவ்வாறான ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து  புதிய அறிவியல் கண்டு பிடிப்புக்களை  மேற்கொண்டு நிறுவினால் தானே அதை வைத்து   எதற்கும் வக்கற்ற மூடக்கூட்டம் பின்னர்  வந்து இதை எங்க முன்னோர் எப்பவோ கண்டு பிடித்தது தான் என்று போலி அறிவியல் பசப்பு கதைகளை கூறி எங்கள்  காலில் பூ சுற்ற முனைந்து அத்துடன் தங்களுக்குள்ளையே மெய்சிலிர்தது சுய இன்பம் காண முடியும்.

அதற்காகவாவது இயற்பியலாளர்கள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளட்டும். அது பற்றிய அறிவு அற்றவர்கள் ஒதுங்கி வடிவேலு, கவுண்டன்  நகைச்சுவையை ரசித்துக்கொண்டு  இருப்போம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா?

 

 

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

spacer.png

புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.

இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.

அதில் முதல் காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் வாழும் இந்தப் பேரண்டம் எதனால் ஆனது என்ற கேள்வி பயணித்து வந்தப் பாதை மிகவும் முக்கியம். 

 

பேரண்டக் கட்டடத்தின் செங்கல் எது?

 

இந்த உலகம், இந்தப் பேரண்டம், எதனால் ஆனது என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தைத் துளைத்துக்கொண்டுள்ள கேள்வி. 

spacer.png

Getty Images

 

அணுத் துகள்களில் செய்யப்படும் ஆராய்ச்சி என்பது அந்த துகள்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்வதாக இருக்கிறது.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள், நம்பினார்கள். இந்த ஐந்து பூதங்களை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல்கூட ஒன்று உண்டு. 

spacer.png

Getty Images

பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன. 

ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. 

பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.

ஹெட்ரான் என்னும் பெரிய துகள்களை மேலும் பிரித்தால்...

ஆனால், பயணம் அத்தோடு முடியவில்லை. அணுவுக்குள் இருக்கும் துகள்களிலும், அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என்று இருவகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மிக மிகச் சிறியதான எதிர் மின் சுமையுடைய எலக்ட்ரான் போன்றவை பகுக்கமுடியாத துகள்களாக - ஆங்கிலத்தில் எலிமென்டரி பார்ட்டிகிள் - இருக்கின்றன. ஆனால், நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் தம்மினும் நுண்ணிய வேறு பொருள்களால் ஆனவை என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அணுவுக்குள் இருக்கிற துகள்களும் அடிப்படைப் பொருள்கள் அல்ல. அவற்றிலும் வேறொன்றால் செய்யப்பட்டவை உண்டு என்று ஆனது. அணுவுக்குள் இருக்கும் துகள்களில் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால் அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று தெரியவந்தது. 

குவார்க்கில் ஆண் பெண் - ஒரு சின்ன கற்பனை

அதாவது நாம் கண்ணால் காணும் பொருள்களைப் பகுத்தால் தனிம மூலக்கூறுகள் வரும், அவற்றைப் பகுத்தால் அணுக்கள். அணுக்களைப் பகுத்தால், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள், அவற்றில் பெரிய துகள்களான ஹெட்ரான் வகைத் துகள்களைப் பகுத்தால், குவார்க்குகள். இதுதான் புரிதல்.

இந்த குவார்க்குகளில் அப் - டவுன், சார்ம்-ஸ்ட்ரேஞ்ச், டாப்-பாட்டம் ஆகிய மூன்று ஜோடிகளாக, ஆறு வகை உண்டு. தவிர, இந்த ஆறிலும் குவார்க் - எதிர் குவார்க் என்ற முரண்பட்ட மின்சுமை உடைய வகையும் உண்டு. அதாவது ஆறு இனத்திலும் ஆண்-பெண் இருப்பது மாதிரி. 

இது வரையில், இரண்டு குவார்க்குகள் சேர்ந்து உருவான மெசான் வகை ஹெட்ரான்களும், மூன்று குவார்க்குகள் சேர்ந்து உருவான பேர்யான் வகை ஹெட்ரான்களும் மட்டுமே பொதுவாக காணப்பட்டன. ஆனால், கணித கணக்கீடுகள் மூலம் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்தார்கள். 

அப்படி நான்கு, ஐந்து குவார்க் கொண்ட கற்பனையில் மட்டுமே கண்ட அரியவகை ஹெட்ரான்களை எக்ஸோடிக் ஹெட்ரான் என்று அழைத்தார்கள். 

கற்பனையாகவே இருந்து வந்த இந்த நான்கு, ஐந்து குவார்க் கொண்ட அரிய வகை ஹெட்ரான்களை கடந்த சில ஆண்டுகளில் சில முறை ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள். 

ஆனால், அப்படிக் கண்டுபிடித்தவற்றில் எவையும், இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே வகை குவார்க்குகளைக் கொண்டவையோ, நான்குமே வலுவானவையோ இல்லை.

 

நான்கும் பெரிய குவார்க் - புதிய கண்டுபிடிப்பு

 

இந்நிலையில், செர்ன் நிறுவனத்தின் எல்.எச்.சி.பி. (LHCb) எனப்படும் ஆய்வுத் திட்டம் கடந்த மாதம் இரண்டு சார்ம் வகை குவார்க்குகளையும், இரண்டு சார்ம் வகை எதிர் குவார்க்குகளையும் கொண்ட ஒரு அரிய ஹெட்ரான் துகளை கண்டுபிடித்தது. இத்தகவலை செர்ன் தனது இணைய தளத்திலேயே அறிவித்துள்ளது. முன்னெப்போதும் நான்கும் ஒரே வகையை சேர்ந்த, வலுத்த வகை குவார்க்குகளைக் கொண்ட துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செர்ன் செய்தித் தொடர்பாளர் கியோவானி பசலேவா தெரிவித்தார். 

செர்ன் நிறுவனத்துக்கு நிலத்துக்கடியில் 27 கி.மீ. நீளமுள்ள வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவி இருப்பது பிரபலம். கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசானைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி இங்குதான் நடக்கிறது. லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும் இந்த துகள் மோதல் கருவி 2009 முதல் 2013 வரையிலும், பிறகு 2015 முதல் 2018 வரையிலும செயல்பட்டபோது கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இப்படிப் புதிய வகை டெட்ராகுவார்க் என்னும் துகள் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது என்று இந்த மாதம் முதல் தேதி அறிவித்தது செர்ன். 

spacer.png

Getty Images

புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்' என்பதை ஆராய்வதற்கான 'ஆராய்ச்சிக்கூடமாக' இந்த புதிய, அரிய வகை ஹெட்ரான்கள் இருக்கும் என்றும் செர்ன் அறிவித்துள்ளது. 

 

புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி - அமோல் திகே

 

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றி மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் அமோல் திகே-விடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம். 

'குவான்டம் குரோமோடைனமிக்ஸ்' எனப்படும் முழுமையான ஸ்ட்ராங் இன்டராக்ஷன் கோட்பாட்டின் கீழ் இப்படி, நான்கு, ஐந்து குவார்க்குகளைக் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்கலாம் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கணிப்பை மெய்யாக்கியது மட்டுமல்ல, அந்தக் கோட்பாடும் சரி என்று நிரூபித்துள்ளது. அந்த வகையில் இது முக்கியமானது. நான்கும் பெரிய குவார்க்குகள் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படி ஆனாலும், புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி இது என்றார் அவர்.

இரண்டு குவார்க் உள்ள ஹெட்ரான்களை மெசான் என்றும், மூன்று குவார்க் உள்ளவற்றை பேர்யான் என்றும் அழைக்கிறார்கள். இப்போது, நான்கு, ஐந்து உள்ளவற்றை கண்டுபிடித்தால், அதற்கும் புதிய வகை உருவாகுமா? என்று அவரிடம் கேட்டோம். இப்போதைக்கு புதிதாக கண்டுபிடிக்கும் இத்தகைய நான்கு குவார்க் கொண்ட டெட்ராகுவார்க்குகள், 5 குவார்க் கொண்ட பென்டா குவார்க்குகளுக்கு x, y, z என்று பெயர் வைத்துக்கொண்டு போவார்கள், நிறைய வந்த பிறகு ஒருவேளை புதிய வகைகளுக்குப் பெயர் சூட்டலாம் என்றார் திகே. 

இது ஒருவேளை உண்மையிலேயே நான்கு குவார்க்குகள் வலுவாக பிணைந்து உருவான டெட்ரா குவார்க் ஆகவும் இருக்கலாம், அல்லது இரண்டு மெசான்கள் வலுவற்ற முறையில் இணைந்து இப்படி ஒரு தோற்றம் தரலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. இன்னும் கூர்ந்து கவனித்து இதற்கான சாத்தியக்கூற்றை ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் திகே. 

கோட்பாட்டைத் தெளிவுபடுத்த உதவும் - அர்ச்சனா ஷர்மா

செர்ன் ஆய்வகத்தில் பணியாற்று மூத்த துகள் இயற்பியலாளரான அர்ச்சனா ஷர்மாவுடன் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம். எக்ஸோடிக் ஹெட்ரான் எனப்படும் அரிய வகை ஹெட்ரான்கள் தொடர்பான மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடக்கின்றன. இது போன்ற அரிய வகை ஹெட்ரான்களை பலமுறை பார்க்க நேர்வது இந்த மாதிரிகளை தெளிவுபடுத்தி உரைக்க உதவியாக இருக்கும் என்கிறார். புதிதாக கண்டறியப்பட்ட துகளில் நான்கும் பெரிய வகை குவார்க்காக இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் அர்ச்சனா. 

பேரண்டம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காண்பதற்கான பயணத்தில், இந்த கண்டுபிடிப்பு அறிவியலை ஒரு படி அருகே நகர்த்திச் சென்றதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு, ஆம் என்கிறார் அமோல் திகே. 

 

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது?

spacer.png

Getty Images

 

பெருவெடிப்புக்குப் பிறகு எப்படி இந்தப் பேரண்டம் விரிவடைந்தது என்பது குறித்த கோட்பாட்டை விளக்கும் வரைபடம்.

குவார்க் துகள் வகைகளில், குவார்க் - எதிர் குவார்க் (ஆங்கிலத்தில் ஆன்டி குவார்க்) என்று முரண் வகை இருக்கிறது என்று மேலே பார்த்தோமில்லையா. அதைப் போல அணுத் துகள் அனைத்துக்கும் கூட எதிர் துகள்கள் உண்டு. அணுவிலும் எதிர் அணு உண்டு. அணுக்களால் ஆன பொருளிலும் எதிர்ப் பொருள்கள் இருக்கவேண்டும் என்று 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டைராக் கணித்தார்.

ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறிவிடும். 

ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பால் இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது. 

ஆனால் பல லட்சம் கோடி விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், அண்டசராசரம் அத்தனையும் வெறும் பொருள்களால் ஆனவை மட்டுமே. எதிர்ப் பொருள் எங்குமே இல்லையே ஏன்?

அல்லது சம எண்ணிக்கையில் எதிர்ப் பொருள், எதிரணு இருந்து பொருளை, பொருளணுவை அழித்திருந்தால், இந்தப் பேரண்டத்தில் எந்தப் பொருளுமே, விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், சூரியனும், பூமியும் எதுவுமே இருந்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் இருக்கிறன்றனவே ஏன்? இந்தக் கேள்விதான் இன்றைய உலக இயற்பியலின் அதிமுக்கியமான கேள்வி. விண்வெளி அறிவியல் முதல், துகள் அறிவியல் வரை எல்லாவற்றையும் குடையும் அதிமுக்கியப் பிரச்சனையாக இதுதான் இருக்கிறது. 

பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை. 

தற்போது நான்கு 'சார்ம்' வகை குவார்க்குகள் கொண்ட முக்கியமான இந்த டெட்ராகுவார்க் கண்டுபிடிப்பை நிகழ்த்திய LHCb திட்டத்தின் முழுப்பெயர் Large Hadron Collider beauty என்பதாகும். இந்த ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கமே பெருவெடிப்புக்குப் பிறகு, எதிர்ப்பொருள்களால் அழிக்கப்படாமல் பொருள்கள் தப்பிப் பிழைத்து நமது இந்தப் பேரண்டத்தை உருவாக்கியது எப்படி என்பதை ஆராய்வதுதான்.

தமது அடிப்படை நோக்கமான இந்த ஆய்வுக்கு இந்தக் கண்டுபிடிப்பு எல்.ஹெச்.சி. பியூட்டிக்கு எப்படி உதவி செய்யப்போகிறது என்பதுதான் இப்போது ஆர்வமூட்டும் கேள்வி.

 

 

https://www.bbc.com/tamil/science-53410739

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தோழர் புரட்சி,

நீங்கள் இணைத்த பதிவு பிபிசி தமிழில் இருந்து உருவப்பட்ட செய்தி.  ஒரு நன்றி அல்லது மூலம்   கூடக் கொடுக்காமல் தங்கள் ஆக்கங்கள் போல இப்படிப் பல தளங்கள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யாழிலும் இலவசமாக இந்த இப்படியான இணையங்களுக்கு விளம்பரம் கொடுக்கவேண்டுமா

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புது வகை அணுத் துகள் கண்டுபிடித்த செர்ன் ஆய்வகம்

16 ஜூலை 2020
  • அ.தா.பாலசுப்ரம

 

 

 

ஓம் கோட் செய்யாததால் இப்போதுதான் கவனித்தன் தோழர் .. இது மொத்தமாக ctrl +a , ctrl + c , ctrl + v போல தெரிய வில்லை.. உள்ளடக்கத்தில் மாறுபாடு தெரிகிறது..👍

அதிலும் பார்க்க..,

வணக்கம்லண்டன் ..

<time class="entry-date published updated" datetime="2020-07-16T17:09:28+00:00">July 16, 2020</time>

பிபிசிதமிழ்..

பேரண்டம்+உருவானதன்+ரகசியம்+என்ன?+புது+வகை+அணுத்+துகள்+கண்டுபிடித்த+செர்ன்+ஆய்வகம்+-+BBC+News+தமிழ்]&amp;x11=[2020-07-16T05:51:04.000Z]&amp;x12=[2020-07-16T10:29:52.000Z]&amp;x13=[Science~Physics~Nuclear+power]&amp;

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இரு தள பதிவேற்ற திகதி மற்றும் நேரத்தை ஒப்பீடு செய்கையில்  பெரிய வேறுபாடு இல்லை.. மற்ற ஆக்கங்கள் குறித்து தெரியாது.. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இந்த ஆக்கங்களை இருவருமே வேறு எங்கோ இருந்து சுட்டு இருக்கிறார்கள் அல்லது தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல...👌

தோழர், 

பிபிசி சுட்டமாதிரி தெரியவில்லை.  பிபிசி தமிழ் நிருபர் இந்தியாவில் சிலருடன் உரையாடிய தகவல் கட்டுரையில் உள்ளது. பிபிசியின் கட்டுரையை அப்படியே வெட்டி ஒட்டினால் பிபிசி ஆக்கம் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும் என்று வணக்கம் லண்டன்காரர்கள் முக்கியமான பகுதியை மாத்திரம் போட்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விவசாயி விக் said:

எமது சாதுக்கள் சித்தர்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்து எல்லாவற்றையும் கண்டார்கள்.   கடவுள் இல்லை என்று விட்டு கடவுள் துகள் என்று பேரையும் வைத்து நடராசாரையும் வாசலிலே வைத்திருக்கிறார்கள்.  

இதுதான் உலகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா , கொரோனா எண்டு பொத்திக் கொண்டிருந்து விட்டு எழும்பி வந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரன் எல்லையைக் கொஞ்சம் தள்ளி அடைச்சிருப்பான்.  அதை தவிர்க்க முயல்பவர்களின் முயற்சியே தவிர கொள்ளிக்கட்டை மாதிரி தெரியவில்லை .

எதை செய்தாலும் ,ஏதாவது இசகுபிசகாக சொல்லுவதே வாடிக்கையாக போய் விட்டது . பின் நிலைமை கை மீறியவுடனும் “ஆத்தர பீத்தர”  என்று ‘மல்லாத்தும்’  போது கத்த வேண்டியது….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது முதலே தெரிந்தபடியால் ஒரு தகவலுக்காக மாத்திரம் இங்கே பதிகிறேன்: Leon Lederman என்ற விஞ்ஞானி 90களில் தனது புத்தகத்தில் இந்த ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) துகளுக்கு ஆரம்பத்தில் வைத்த செல்ல பெயர் "God Damn Particle". இந்த துகளை இப்பிடி, இப்பிடி இருக்க வேண்டும் என்று முதலே வரையறை செய்துவிட்டார்கள், ஆனால் இதை தேடுவதில் அல்லது உருவாக்குவதில் உள்ள கஷ்டத்தை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக அவர் இவ்வாறு "God Damn Particle" என்று பெயர் வைத்தார், இந்த புத்தகத்தை வெளியிட முன்வந்த publisher இந்த பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த பெயர் வாசிப்பவர்களுக்கு நன்றாக இருக்காது என்பதால், இதை "God Particle - கடவுளின் துகள்" என்று மங்களகரமாக மாற்றினார்கள். மற்ற துகள்கள் போன்று இதுவும் ஒரு அடிப்படை துகள், வேறு விசேசம் ஒன்றும் கிடையாது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் பலர் கடவுளின் துகள் (God Particle) என்ற பெயரையும்  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சொல்லியது போல் பின்னாளில் இந்த துகள் தேவை அற்ற முறையில் கடவுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு ஆரம்பத்தில் சேர்ன் (CERN) என்ற இடத்தில் (ஜெனிவாவுக்குள் சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை அண்டி.. இருக்கும் ஓர் இடத்தின் பெயர் தான் CERN.) உள்ள large Hadron collider இருக்கும் ஆய்வகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்த ஆய்வின் தொடக்கம்.. தற்போதைய நிலை வரை விளக்கி இருந்தார்கள். எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை. சொல்லப்பட்டிருக்கும் விடயம்.. அணுவை..உடைக்க உடைக்க புதிசு புதிசா வந்து கொண்டிருக்கிறதே தவிர.. முடிவாக ஒன்றையும் சொல்ல முடியவில்லை என்பதே. அங்கும் முடிவிலி தான் கதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

எங்குமே தாங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை கூறைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லவில்லை

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

உண்மை. மேலே உள்ள செய்தியிலும் அடிப்படைத் துகளை கண்டுபிடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் என்றுதான் உள்ளது.

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஒரு படி தானே. போக இன்னும் எத்தனை படி இருக்கு என்றே யாருக்கும் தெரியாத நிலையில்.. அது ஒரு படியோ.. அரைப்படியோ.. கால் படியோ.. யாருக்குத் தெரியும்...!! 😃

பல பில்லியன்கள் செலவழித்து படிப்படியாக நடந்து கண்டுபிடிப்பவற்றை எல்லாம் வெறும் “பாங்க்” ஐ உருட்டி வாயில் போட்டு சித்தர்கள் அப்போதே ஞானக்கண்ணால் பார்த்துச் சொல்லிவிட்டார்கள். 

இந்தப் பூமியில் இருக்கும் மனிதன் பூமி அழியமுதலே அருகிக் காணாமல் போவான். அப்படி இருக்க ஏன் இப்படி பணத்தை வாரி இறைத்து இப்படி ஆராய்ச்சி செய்கின்றார்கள் என்பதும் நியாயமான கேள்விதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

முன்பும் ஒரு திரியில் இது பற்றி நான் குறிப்பிட்டதாக ஞாபகம். CERN என்பதின் உண்மையான விரிவாக்கம் பிரென்ச் மொழியில் Conseil européen pour la recherche nucléaire என்பதாகும். அதற்கு ஈடாக ஆங்கிலத்தில் சொல்வதாயின் European Organization for Nuclear Reseach. பொறுப்பான நாடுகள் பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், யூகோசுலோவியா, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், சுவிற்சலாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி.

இன்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் உள்ள பிரதேசம்... சுற்றயல் எல்லாமே.. CERN என்று தான் அழைக்கப்படுகிறது. 

ஊரில் அறிவியல் நகர் என்ற ஒன்று கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டது போன்று. 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்த யுகம் சமன்பாடுகளுக்கானது. எனக்கு தெரிந்த வகையில்இ பௌதிகவியலில் இரண்டே இரண்டு முறைதான் எமது புரிதல்கள் இருவேறு தளங்களுக்கு உந்தித்தள்ளப்பட்டன. 

முதலாவதாக சேர் ஐசாக் நியூட்டன் தன் இயக்க விதிகளை தந்தபோது
இரண்டாவது ஆல்பேட் ஐன்ஸ்டைன் பொது சார்பியல் கொள்கைகளை வெளியிட்டபோது

இரண்டுக்கும் கிட்டத்தட்ட 200 வருடங்கள் இடைவெளி. இந்த காலவெளியில் தரப்பட்ட கொள்கைகளை வைத்து சமன்பாடுகள்மூலம் இயந்திரங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வது வியாபாரமாக்குவதாக உலகம் அசைந்து வந்திருக்கிறது. இதுவும் தொடரும். வியாபார உத்திகள் மட்டும் மாறும்.

இவை அனைத்தையும் கடந்து ஒவ்வொருகணமும் இயங்கியபடி ஏதோவொன்று உயிர்ப்புடன் இருக்கிறது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் அதை அறிய முனைகின்றன.

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eelathirumagan said:

சிறிது சிந்தித்துபாருங்கள். அடிப்படை கணிதம்கூட எமது எடுகோளே. உதாரணமாக
புள்ளி என்பது கூட வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்று
நேர்கோடு தளம் பொருள் எல்லாமே புள்ளி என்பதில் இருந்து வருவனவே.
விசை என்பது கூட என்ன என்று புரியமுடியாத ஒன்று. நியூட்டன் மேலோட்டமாக சொல்லி சென்றார். இப்படி நிறைய விடயங்கள் ஆழமாக சென்றால் எல்லாம் எமது எடுகோள் என்பது புரியும்.

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஈழத்திருமகனை காண்பதில் மகிழ்ச்சி.

மனிதன் cyborg ஆக மாறினாலும் தேடல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்😀

யார்கண்டது  cyborg கிழும்  மேம்பட்ட தலைமுறை  குடுவையொன்றினுள் நமது எண்ணம்களும் நினைவுகளும் அடைபட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் இருக்கலாம் அப்போதும் யாழை மறக்காது நினைவு மீட்டல்களுக்கு குடுவையான பாதி சிப்கள்  கொல்லுப்படலாம் 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.