Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

நீங்கள் எழுதுவதை பதிவிட முன் மீண்டும் வாசீப்பீர்களா?.... நீஙகள் சொல்லும் உதாரணங்கள், இன்னும் ஒரு ஈழத்தமிழருக்கு புரிந்து வாதிடக்கூடியவை. புரட்சிக்கு புரியிற மாதிரி உங்கள் வாதங்களை வையுங்கோ.

Edited by Nathamuni

  • Replies 231
  • Views 18.7k
  • Created
  • Last Reply
10 minutes ago, ஈழப்பிரியன் said:

துல்பன் நீஙகள் சொல்லுவது மக்களைப் பற்றி.

அவர் சொல்லுவது மாறிமாறி அரசுகளே இதை முன்னின்று ஊக்குவித்து செய்கின்றன.
ஆகவே அரசை மாற்ற வேண்டும் என்கிறார்.

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர்.

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

தலைவரின் குறுகியகால ஆட்சியில் ஊழல், பணமோசடிகள் இடம்பெற்றதாக நினைவில்லை. அப்படிநடந்திருந்தாலும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

தலைவன் வழி தொண்டன் வழி .. ஆண்ட கட்சிகள் சரியில்லை .. திராவிட கட்சிகளின் ஆட்சி  .?

பெண்களுக்கு சம உரிமை , சொத்துரிமை , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்டு 10% நல்லவை நடந்தது என்டால் 90% தீயவை . ஊரை அடித்து உலையில் போட்டது என்பதை மறுக்க இயலாது .👍

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

 

போர்த்துக்கீசர்  தென்இந்திய கரையோரங்களில் வந்து இறங்கியபோது 
பெரும்பாலமான கரையோரங்கள் விஜயநகர பேரரசின் ஆடசிக்கு உட்பட்டு இருந்தது 
போர்த்துக்கீசரின் வருகைகள் வணிகம் நோக்கியே இருந்தது இடங்களை பிடித்து ஆளுமை 
செய்யும் எண்ணம் அவர்களிடம் அப்போது  இருக்கவில்லை. ஆதலால் அந்த அரசர்களுக்கு 
லஞ்சம்போல தங்களிடம் இருந்த சில வெகுமாணங்களை கொடுத்து இங்கிருந்த திரவியங்களை 
அறாவிலையில் பெற்றுக்கொண்டார்கள் ... அப்படியொரு டீலில்தான் சொந்த ஆடசியை இழந்து இருந்த 
கேரளா மக்கள் விஜயநகர அரசுகளால் போர்த்துக்கீசருக்கு விற்கப்படடார்கள் அவர்கள்தான் மலபார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தென்காசி பாண்டியர்கள் மீள் எழுச்சிபெற்று விஜயநகர ஆடசியை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

அந்த மலபார்களை போர்த்துக்கீசர் யாழ் தீவுகளில் கொண்டுவந்து குடியேற்றினார்கள் நெடுந்தீவு புங்குடுதீவு  போன்ற இடங்களில் கொண்டுவந்து குடியேற்றி தமது குதிரைப்படையை வளர்ப்பது வணிக பொருட்களை ட்ரான்சிட் செய்ய அவர்கள் புங்குடுதீவையும் நெடுந்தீவையும் பயன்படுத்தினார்கள் அதற்கும் அவர்களை பயன் படுத்த்தினார்கள். 

தேசவழமை சட்டம் சங்கிலி மன்னர்களால்தான் அறிமுகமானது 
முன்பு நிலங்கள் ஏதும் மக்களுக்கு சொந்தம் இல்லை பின்பு வேளாண்மை செய்ய என்று 
சில நிலங்களை வேளாண்மை செய்பவர்களுக்கு இனாமாக அரசு வழங்கியது இதனால் இவர்கள் 
நிலவுடமை பெற்றதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தை பெற்று இங்குதான் ஈழத்தில் முதன் முதலில் ஏற்ற தாழ்வு  (சாதி) சமூகத்தில் ஏற்படுகிறது தம்மை வேளாளர் என்றும் உயர்வானவர்கள் என்றும் ஒரு போக்கை அவர்கள் கொண்டார்கள். 

தேசவழமை சட்டம் பின்னாளில் வன்னியில் ஆளுமை கொண்ட பண்டாரவன்னியனால் 
அங்கிருந்து நீக்கபட்டது ஆனால் அது யாழ் மைய பகுதியில் ஒல்லாந்தர் காலத்திலும் அது  நீடித்தது.  

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

போர்த்துக்கீசர் அதை செய்திருக்க வாய்ப்பு இருக்கு 
காரணம் அவர்கள் உள்ளூர் அரசியலில் தலையிட ஆரம்பத்தில் விரும்பவில்லை 
அவ்வாறான ஒரு பலம் அவர்களிடம் இருக்கவும் இல்லை. 
ஆகாவே தமிழர் மலையாளிகள் என்று அவர்களுக்கு பிரிவு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கலாம் 
தெரிந்தாலும் அதை பற்றி அலட்டுவதுக்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை 
ஆதலால் மலபார் என்று பொதுவாகவே லைஹ்த்து இருக்கலாம் 

ஆனால் பிரிடிஷ் காலத்தில் தமிழர்கள் என்பது கண்டி தமிழர்கள் என்பது எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது.

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அது போன வருசம்...

புது கணக்கு எட்டு மாதத்தில் தெரியுமே... 😁

இரட்டிப்பாகலாம் என்பதே என் கணிப்பும். 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

 

ஓம் தோழர் முன்னாள் வெ.உ மந்திரி.

தமிழ் தேசியம் வளர்வது சந்தோசமே.

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/8/2020 at 18:09, பிழம்பு said:

இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்

இதை வாசித்த பின்னரும் இனவாத அரசிற்கு சார்பாக கருத்து எழுதும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களை என்னவென்பது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

உண்மை தான். எல்லாம் நரி திராட்சைப்பழக்கதை தான். 

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்.

எது எப்பிடியோ உங்களுக்கும் நாதமுனிக்குமான பதில் கீழே:

அது அப்படியாம், இது இப்படியாம் என்று எழுதுவதில் அர்த்தம் இல்லை. 

டச்சு மொழி மூலம், ஹேக்கிலும், இதர உசாத்துணைகள் கொழும்பு, ஜகார்த்தாவிலும் உண்டு. இவை 1706க்கானவை. நான் போட்டோ போட்டது பின்னாளில் இதை ஆங்கிலேயர் தமது சட்ட கோவையில் இட்டது.

தேசவழமை - யாழ்பாணத்துகு பொறுப்பான திசாவையினால், யாழில் இருந்த சமூக தலைவரகளிடம், நீங்கள் யார்? உங்கள் சட்டம் என்ன, வழக்கம் என்ன என கேட்டு தொகுக்கபட்டதே தேசவழமை.

இது தனியே ஒரு கூட்டத்துக்கான சட்டம் அல்ல. யாழில் பிறந்த எல்லோருக்குமானது.

இன்றுவரை, யாழில் பிறந்த ஒருவரது தனியுரிமை விடயங்கள் சிலதை இதுவே ஆளுகிறது. 

முந்தைய யாழ்பாணராச்சியம் முழுமைக்குமான சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரின் சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரை டச்சுகாரம் “மலபாரி வந்தேறிகள்” என்றும் “தேச வழமையை” மலபாரி வந்தேறிகளின் சட்டம்” என்றும் எழுதி வைத்துள்ளான்.

இவ்வளவும் primary sources உள்ள ஆவணபடுத்த பட்ட வரலாறு.

அது அப்படியாம், இது இப்படியாம் கதைகளை விட்டுவிட்டு, ஆதாரங்களோடு வாருங்கள், பேசுவோம்.

2 hours ago, Nathamuni said:

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

துல்பன் நீங்கள் ஒரு குடும்ப தலைவனாக 100 வீதமும் சரியாக நடக்க முடியாது.
அது போலவே அரசியலிலும் அங்கங்கே ஒருசில தவறுகள் நடக்கலாம்.
அதுக்காக முழு அரசையுமே குற்றம் சுமத்த முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

எனக்குத்தெரிய  தென்மராட்சியில் உள்ள ஒரு ஊரில் "மலயாள பக்கம்" என்று ஒரு பிரிவினரை சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

1 hour ago, Justin said:

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி தருவோம் என்றீர்கள் 
இப்போ ஓட ஓட விரட்டுவோம் 
என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

காரணம் எல்லோரும் எதோ ஒரு இலக்கை நோக்கியே ஆய்வை மேற்கொள்ளுகிறார்கள் 
அவர்களுடைய இலக்கை எட்டுவதுதான் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது 

உண்மையில் ஒரு முழுமையான ஆய்வு வேண்டுமெனில் 
அதுக்கு பாரிய செலவு ஆகும் அதற்கு ஒரு குழுமம் அமைக்கவேண்டும் 
எல்லா  ஆதாரங்களையும் சேகரிக்கவேண்டும் 

அரசர்கள் கால நேரம் 
மதங்களின் கால நேரம் 
புதிய புதிய பொருட்களின் தோற்ற கால நேரம் 
கலாச்சார  பண்டிகைகள் மாறுதலின் கால நேரம் 
பாரிய இயற்கை அழிவுகளின் பூகோள மாறுதலின் கால நேரம் 
இலக்கியங்களின் படைப்பாளிகளின் புலவர்களின் கால நேரம் 
என்று ஒவ்வோர் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களை ஒன்று கூட்டி 

எல்லாவற்றையும் ஒரே நேர் கோட்டில் கொன்டு செல்ல வேண்டும்.

இது பல மில்லியன்கள் டாலர் செலவுடன் கூடிய ஒரு செயல்படாக அமையும்.
ஆதலால் இன்று வரை இதை எவராலும் செய்ய முடியாது இருக்கிறது 

இது தவிர இதுக்கு இந்திய அரசோ சிங்கள அரசோ உங்களுக்கு அனுமதி தரப்போவதில்லை 
காரணம் பல உண்மைகள் இந்த அரசால் மூட் மறைத்து அடைகாக்கப்பட்டு வருகிறது.

யாழ்கள தத்துவ ஞானிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 
காரணம் அவர்களுக்கு தெரிந்தது மட்டுமே உலகம் உண்மை மற்றதெல்லாம் பொய் 
என்பதே அவர்கள் அடிப்படை தத்துவம் .......இருந்தும் எழுதுகிறேன் 

இந்திய அரபி கடலுக்குள் துவாரகை (துவாரகா) என்ற நகரம் இப்போதும் கடலின் கீழ் கிடக்கிறது 
இது இப்போதைய துவாரகை என்ற நகரில் இருந்து வெறும் 20 மைலில்தான் இருக்கிறது 
இதை முதன் முதலில் கண்டுபிடித்தபோது இந்திய அரசு பாரிய மகிழ்ச்சி .. காரணம் அவர்கள் வைஷணம் 
சார்ந்த நகர் துவாரகை கிருஸ்ணர் பிறந்த ஊர்  ஆகையால் தாம் தமது மதத்துக்கான  ஆதாரங்களை 
அடையப்போவதாக எண்ணி உடனேயே பாரிய அளவில் நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி தொடங்கியது 
அகழ்வாய்வாளர்கள் கொண்டுவந்த ஆதாரம் இவர்களை திருப்திப்படுத்தவில்லை 
(எனது சொந்த கணிப்பில் அங்கு இஸ்லாம் சார்ந்த விடயம் அல்லது தமிழ் சார்ந்த விடயம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்) ஆதலால் உடனடியாகவே அகழ்வாய்வு நிறுத்தப்பட்டது. அதுக்கான நிதி ஒதுக்கீடு 
 நிறுத்தப்பட்ட்து. பின்பு சில வெளிநாட்டு அகழ்வாய்வு நிறுவனர்கள் தமது சொந்த செலவிலேயே அதை தொடர கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அங்கு அகழ்வாய்வு செய்ய இப்போ இந்திய அரசால் நிரந்தர தடை விதிக்க பட்டுள்ளது. 

இதேபோல கன்னியாகுமரி கீழேயும் ஓர் இடம் உண்டு அதுபோல் தடையும் உண்டு.
இந்த ராமர் பால ஆய்வை ஒரு அமெரிக்க நிறுவனம் செய்தது அதுக்கு அனுமதி ஏன் கிடைத்த்து என்றால் 
கடலுக்குள் இருக்கும் மணலும் அந்த குறிப்பிட்ட பாலம் இருக்கும் இடத்தில் இருக்கும் மணலும் 
வேறு வேறு கால பகுதி உடையவை என்பதை அது நிரூபித்தது. ஆகவே மனிதர்களால் எதோ ஒரு மாற்றம் அங்கு நடந்திருக்கிறது என்பது தெளிவு ஆகவே அது ராமர் பாலம்தான் என்று நிரூபிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும் அங்கே கிடக்கும் கற்பாறைகள் சாதகமா இல்லை 
அவைகள் தென்னிந்திய மலைசார் பகுதிக்கு சார்பற்றவையாக இருக்கிறது என்கிறது அதே நிறுவனம். 

இப்படி பல இடியப்ப சிக்கல்கள் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

இவ்வளவுதான் மேட்டர்.

இறுதி பனிகாலம் (ice age ) முடிந்து பனி உருகி ஓடும் வரை இந்தியாவின் ஒரு அங்கம் இலங்கை. அடுத்து மிக கிட்டிய கடல் தூரம் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும். ஆகவே இங்கே தமிழருக்கும் சிங்களவருக்கும் அடிப்படை தென்னிந்திய குடிகளே என்பதில் எந்த வியப்பும் இல்லை.

மரபணு ஆராய்சியும் சொல்வது இதையே.

யார் தமிழர்? என்பதில் எமக்கு தெளிவு இருந்தால் 

நாங்கள் மலையாள வந்தேறியா, தெலுங்கு வந்தேறியா என்ற ஆராய்சியே தேவையற்றது.

பின்வரும் வரைவிலக்கணம் யார் தமிழர் என்பதை அளவிட நான் கைக்கொள்வது.

1. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் மரபுரிமையில் வந்தவர் அல்லது

2. தமிழை அடிப்படை மொழியாக (primary language ) கொண்டு, உணர்வால் “நாம் தமிழர்” என்று (subjective identification) தம்மை தமிழராக அடையாளப்படுத்துபவர்கள்.

இப்படி யார் தமிழர் என்பதை நாம் வரையறுத்தால் நாமும் தமிழர் நாயக்கரும் தமிழர், இசை வேளாளரும் தமிழர்.

ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழர் இல்லை, எனென்றால் அவர்கள் ஒரு குழுவாகவே தம்மை தமிழர் இல்லை என subjective ஆக உணர்ந்தவர்கள்.

இல்லை மரபுரிமை மட்டுமே யார் தமிழர் என்பதை தீர்மானிக்கும் என்றால் பின்னர் நீங்கள் மலையாளா வந்தேறியா இல்லையா என பார்க வேண்டி வரும்.

அது மட்டும் இல்லை புலத்தில் வேறு இனத்தில் திருமணம் செய்தால் பேரப்பிள்ளைகளும் தமிழ் இல்லை என்றாகிவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

அப்போதும் கொடுத்தேன் அண்ணா.

என் தங்கச்சி புருசன் என் தங்கச்சிய போட்டு அடிகிறான். அதுக்காக அவன் தங்கச்சியான என் பொண்டாடிய, நானும் போட்டு மதிக்கோணுமா?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99

இரண்டு பேருக்கும் தங்களின் பெயர் பெருமை கொண்டவர்கள் காசை கண்டால்   எஸ்கிமோவுன் இனப்பரம்பல் ஈழத்தமிழர் என்றும் சொல்லுவார்கள் .

 

43 minutes ago, goshan_che said:

99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்

இப்பவும் சிலம்பம் சுத்துவார்  காலையில் மெதுவாக என்றாலும் வீடு கட்டி முடிப்பார்(வீடு என்பது சிலம்பத்தில் ஏழு அடிமானம்களின் தொகுப்பு ) அவரின் தொழிலே பர்மாவுக்கும்  நாகபட்டினத்துக்கும் ஓடிய கடலோடி .

முதலில் உங்கடை நுனி பபுல்  மேய்ந்த வரலாற்று கதைகளை திரும்பவும் சரிபார்க்கவும் பல இடங்களில் இடறியுள்ளீர்கள் ஆனாலும் இப்படியொரு  கதையை  தொடக்கியபின் எவ்வளவு ஆதாரம்களையும் கொண்டுவந்து போட்டாலும் நீங்களோ  அல்லது உங்களுக்கு பாய்ந்து விழுந்து பச்சை குத்தும் ஐடிகளோ ஏற்று கொள்ள போவதில்லை ஆனால் உங்களை பொறுத்தவரை  குறிப்பிட்ட மனிதர்கள் மீது தொடர் சேறு பூசுதல் மூலம் ஒருவகையான மனப்பிறழ்வு இன்பம் கான்கிறீர் கள் வெற்றி  கொண்டதாக எண்ணி மகிழ்ச்சி கொள்கிறீர்கள் ஏனென்றால் உங்கள் வாழ்வின் கடந்த காலங்களில் அந்த பகுதி மக்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாய் நம்புகிறீர்கள் இல்லை அவர்களை  பார்த்து தேவையில்லாமல் பொறாமை உணர்வு கொள்ள முயல்கிறீர்கள் . நல்ல வைத்தியரை நாடுவது உங்கள் இனத்துக்கு நல்லது .

 

43 minutes ago, goshan_che said:

வரலாற்று ஆசிரியரா?

வரலாற்று ஆசிரியர் சொல்வது உண்மை என்று நம்ப சொல்லும் உங்களால் விக்கிரமபாகு கருணாரத்ன சொல்வதை ஏற்க முடியாது உள்ளது ?

undefined

 

41 minutes ago, goshan_che said:

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

இது இங்கிருக்கும் ஒருத்தரை மகிழ்விக்க சொல்லும் சொல் உண்மையில் உங்கள் பிரச்சனை வேறு என்பது எங்களுக்கு தெரியும் .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.