Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களை கண்டதும் சந்தோசம்.

அது குமாரசாமி அண்ணர் எப்ப எனக்கு வீபூதி அடிக்கிறார் எண்டதை பொறுத்து🤣

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, உடையார் said:

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

பத்த வச்சிட்டியே பரட்டை... 😁

Film History Pics on Twitter: "Tamil film '16 Vayathinile' : released today  in 1977. Featuring Kamal Haasan, Sridevi & Rajinikanth- later remade in  Hindi as 'Solva Savan'. @ikamalhaasan @rajinikanth… https://t.co/KxefiCvwnR"

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அவரை புளொட்காரன் (அவர் உண்மையில் புளொட்டா தெரியாது), துரோகி இப்படி பட்ட வர்ண கண்ணாடிகளினூடு பார்க்காதபடியால் அந்த உழைப்பை என்னால் பாராட்ட முடிகிறது.

👍

Tulpen  ஒரு இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என்று நம்புகிறேன். ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அந்த இயக்கத்திற்கு பற்றுறுதியுடன் அதன் தவறுகளை மூடி மறைப்பவராக இருப்பார் Tulpen சுதந்திரமாக சிந்திக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் முடிந்து விட்டது. செய்யுங்கள் என்கிறோம். இல்லை  விடுதலைப்புலிகள் செய்தது தவறு என்கிறார்கள். சரி செய்து காட்டுங்கள் என்கிறோம். வட்டுக்கோட்டையில் போய் நிற்கின்றார்கள்.
புலிகளுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கிறார்கள். செய்து காட்டுங்கள் என்கிறோம். இல்லை புலிகள் செய்தது பிழை என்கிறார்கள். ஆயுத போராட்டத்தில் ஓய்வு பெற்று அரசியல் நீரோட்டத்தில் நீந்தும் கட்சிகளும் ஏதாவது விமோசனம் செய்தனவா?

மெல்லிய நீலச்சட்டைக்கே பிரச்சனை எண்டால் பாருங்கோவன் 🤣

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

ஒரு மனிதன் சரி பிழை சொல்லி கதைப்பது வேறு.
நீ முட்டாள் நான் சரியானவன் என நிறுவ முனைவது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, உடையார் said:

அப்ப இந்த முறை பல மாதங்கள் இருப்பீர்கள் 😁, நாம் தமிழர் செய்திகள் சூடு பிடிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்👍

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பத்த வச்சிட்டியே பரட்டை... 😁

Film History Pics on Twitter: "Tamil film '16 Vayathinile' : released today  in 1977. Featuring Kamal Haasan, Sridevi & Rajinikanth- later remade in  Hindi as 'Solva Savan'. @ikamalhaasan @rajinikanth… https://t.co/KxefiCvwnR"

 

மேலே சப்பாணியாகிய எனது தன்னிலை விளக்கம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ...வணக்கம் 
எப்படி சுகமா ..கன நாளைக்கு பிறகு 
சரி மேட்டருக்கு வருவோம் 

52 minutes ago, goshan_che said:

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன்

எல்லாவற்றையும் கண்ட நீங்கள் ,இதையெல்லாம் ஏன் பெருசு படுத்துகிறீர்கள்,
கண்ணாடி கழண்டு விழுந்திட்டு போல, அண்ணனுக்கு கண்ணாடி கழண்டு விழுந்தால் எடுத்து தருவது 
தம்பியின் கடமையல்லவா இந்தாங்கோ 
கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?
ஆனால் ஒன்று எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் போங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நான் அங்கு சென்றிருந்த போது,  அந்த காலம் இனி என்றுமே வேண்டாம் என்று, அங்கு நான் சந்தித்த மக்கள் தெரிவித்தார்கள்.

அப்பு, ராசா! நீர் எங்கும் போகவேண்டாம். இருந்த இடத்திலேயே இருந்து பாரும். மாவீரர் வாரம் மக்கள் எவ்வளவு ஆவலாய் தம் வீரருக்கு விளக்கேற்ற அரசாங்கத்தோடு, இராணுவத்தோடு, நீதிமன்றத்தோடு போராடுகிறார்கள், அதை மூடி மறைக்க ஒட்டுக்குழுக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை? அதிலிருந்து புரிந்து கொள்ளும் உமக்கு கருத்து சொன்னவர்கள் எந்தவகை என்று. ஏனப்பு இப்ப போனவாரம் முள்ளிவாய்க்கால் நினைவை வெற்றி விழாவாக அந்த மக்களல்லவோ கொண்டாடியிருக்கணும்?  ஏன் மக்கள் துக்க நாளாகவும், சிங்களம் வெற்றி விழாவாகவும் கொண்டாடியது என்று சிந்திக்க முடியலையோ? அல்லது அந்த மக்கள் சொல்லையோ? அடுத்த முறை கேட்டுச் சொல்லும் கண்டிப்பாய்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

மேலே சப்பாணியாகிய எனது தன்னிலை விளக்கம்🤣

மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி ககோதரம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

வணக்கம் கோசான்.
நீண்ட நாட்களின் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...வணக்கம் 
எப்படி சுகமா ..கன நாளைக்கு பிறகு 
சரி மேட்டருக்கு வருவோம் 

எல்லாவற்றையும் கண்ட நீங்கள் ,இதையெல்லாம் ஏன் பெருசு படுத்துகிறீர்கள்,
கண்ணாடி கழண்டு விழுந்திட்டு போல, அண்ணனுக்கு கண்ணாடி கழண்டு விழுந்தால் எடுத்து தருவது 
தம்பியின் கடமையல்லவா இந்தாங்கோ 
கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?
ஆனால் ஒன்று எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் போங்கோ 

தம்பிடே வணக்கம் மனே,

சிங்கையில் எல்லாரும் சுகம்தானே.

டென்சன் ஆகவேண்டாம் தம்பி. என்னதான் இப்ப நீங்கள் கெளரவ சந்திரகாந்தனின் விழுது என்றாலும், உங்களின் நிலைப்பாடு ஏன் அப்படி அமைகிறது என எனக்கு புரிகிறது ஆகவே உங்களை நான் மேலே சொன்ன வகையீட்டில் 1 ஆக கருதவில்லை. ( ஏண்டா 2 இல சேத்தனி எண்டு டென்சன் ஆக வேண்டாம்🤣).

நான் கையலாகதவன் என்பதை எப்போதே சொல்லிவிட்டேனே தம்பி. நம்மட காரதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு பக்கத்தில ஒரு மரத்தடில எப்பவும் சில பென்சன் கேசுகள் உக்கார்ந்து கதையளக்குமே? அதுக்க்கும் யாழுக்கும் பெரிய வித்தியாச்ச்ம் இல்லை🤣.

ஆனா ஒன்று, என்னை ஊரில் எத்தனை பிரச்சினை இருக்கு இவர் சீமானை ஏன் நோண்டி முகர்கிறார் என யாழில் என்னை கேட்ட என் செல்லத்தம்பி, 

சீமானுக்குக் செந்திலுக்கும் இடையான சண்டையில் செமகாண்டாகி, செந்திலை சமூக ஊடகத்தில் உண்டு இல்லை என ஆக்குகிறேன் என இதே யாழில் சூளுரைத்து போனதையும் கண்டேன் தம்பி 🤣.

சீமானை நோண்டி முகர்ந்தால் நாறும். “செந்தில்ணே சாப்பிட்டியா”ந்னு செந்திலை முகர்ந்தால் நறுமணம் வீசும்? அப்படித்தானே என் செல்லாக்குட்டி?

சரி, சரி ஊரடங்கு நேரம் வீட்டிலேயே இருங்கோ, அண்ணன் போய் குஞ்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கீட்டு வாறன்.

6 hours ago, சுவைப்பிரியன் said:

மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி ககோதரம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.

உங்களையும் சுவை🙏🏾.

4 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்.
நீண்ட நாட்களின் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருங்கள்.

நன்றி அண்ணா. உங்களை கண்டதும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

இதற்குள் நான் எந்த வகை என தெரியவில்லை

ஆனால் அவர்களைப்போல ஏன் உங்களையும் போல தமிழகத்தில் சில மாற்றங்கள் வராது எமக்கு விடிவில்லை. தமிழகமாவது எமக்காக பேசும் என்ற நிலையாவது வரணும்.

அதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை கனவும் இல்லை

23 hours ago, Paanch said:

தமிழர் நாகரீகம் சிந்துவெளி நாகரீகத்திற்கும் முற்பட்டதாக உலக ஆராச்சியாளர் பலரின் கட்டுரைகளும் தெரிவிப்பதாகவே எங்கள் காலத்திலும் செய்திகள் வருகின்றன. 

இது தவறான செய்தி.

23 hours ago, Paanch said:

தமிழர் சைவசமயத்தைப் பின்பற்றிவந்த காலங்களில் வேறு இனங்களின் விரோதப்போக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எப்போது ஆரியம் உட்புகுந்து தமிழரிடையே இந்துசமயத்தைப் பரப்ப, தமிழரும் அதனைப் பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்றே தமிழர் விரோதப் போக்கு ஆரம்பமானதாகத் தோன்றுகிறது. 

இதுவும் தவறு. உதாரணம் சமண சமயம். 

திரிக்குத் தொடர்பில்லாமையால் இது பற்றி விவாதிக்கவில்லை.

11 hours ago, குமாரசாமி said:

ஒன்றை குறை சொன்னால் அதை  சரிவர செய்து காட்ட வேண்டும். இல்லையேல் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும்.

😂

உங்களின் இந்த கூற்று சரி என்று வைத்தால்,  சம்பந்தரையும், சுமந்திரனையும்  அடிக்கடி  இங்கு நீங்கள் கீழ்தரமாக  வசை பாட கூடாது.  சும்மா வசை பாடுவதை விடுத்து நீங்கள் தாயகம் சென்றுதேர்தலில் போட்டியிட்டு அவர்களை தோற்கடித்து அதை சரிவர செய்து காட்டவேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன். ஏனென்றால்  உங்களால் அது அறவே முடியாது என்பது எனக்கு தெரியும். இது நான் உட்பட இங்கு கருத்தெழுதும்  அனைவருக்கும் பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣. நான் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய பதிலை கண்டிருபீர்கள் என நம்புகிறேன்.

நான் பல மாதங்களுக்கு முன்னர் கூறிய பல விடயங்கள் இந்த தமிழக தேர்தலில் நடந்தேறியதை கண்டிருப்பீர்கள்.

ஒரு கமெண்டில் ஏராளன் - கோசான் சொன்னபடி தமிழ் தேசியம் காயடிக்கபடுகிறதா? என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசியதையும் கண்டேன் 🤣.

உடனடியாக புலிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் சீமான் மீதும் இலங்கை தாய்நாடு மீதும் பேரபிமானம் கொண்டவர்கள் சேச்சே அப்படி எல்லாம் இல்லை என அடித்து பிடித்து கருத்து எழுதியதையும் கண்டேன்.

எமக்காக உயிரை கொடுக்க தயாராக இருந்தவர்களை நீ எப்படி வெளிநாடு வந்தாய் என்றும், எமக்காக உண்டியல் தூக்கியவரை நீ திராவிட செம்பு என்றும் யாழ்பாணத்தை வரைபடத்தில் மட்டும் பார்த்து, வலிந்து யாழ் மொழி நடையில் எழுதி, தம்மை “எங்கடை” என அடையாளப்படுத்த முயல்பவர்கள் எழுதியதையும் கண்டேன்.

புலிகள் போராட்டத்தை சீமானிடம் கொடுத்தார்கள் - தளபதி சூசையின் குரலை நம்புங்கள் என்பவர்கள். பொட்டம்மானை சீமான் ஏசிய குரலை நம்பாதீர்கள் அது மிகிக்கிரி எனும் போது, ஒன்று மிமிகிரி மற்றது மட்டும் ஒரிஜினல் என்று எப்படி நம்புவது என யாரும் கேள்வி எழுப்பாதமையையும் கண்டேன்.

தலைவரின் படத்தை போட்டால் டிவியில் காட்டமாட்டார்கள் என்ற போது - கடந்த மூன்று தேர்தல்களில் காட்டினார்களே என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

கூட்ட மேடையில் மட்டும் அல்ல, வீதியில் உள்ள பதாதைகள், கட்சியில் லெட்டர்பேட் சகலதிலும் அவரை நீக்க என்ன காரணம் என யாரும் கேட்கவில்லை என்பதை கண்டேன்.

மோடி என்னிடம் வா என ஆள் அனுப்பும் அளவுக்கு அவருக்கு சீமானை பிடித்தால் - ஒன்றில் மோடி பழுத்த தமிழ் தேசியவாதியாக இருக்க வேண்டும் அல்லது சீமான் பக்கா இந்திய தேசியவாதியாக இருக்க வேண்டும் - இந்த முரண் யாரையும் உறுத்தவில்லை என்பதை கண்டேன்.

தான் பேசியது சீமான் கேட்டதன்படிதான் என்ற தடா சந்திரசேகரின் ஒலிநாடா வெளிவந்தும் யாரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை என கண்டேன்.

முன்பு தாங்கள் என்னிடம் வாதாடும் போது எடுத்து இணைத்த பல இலங்கை தமிழ் ட்விட்டர் பக்கங்கள் ( பெர்னாந்து இன்னும் பலர்) சீமானை இனம் கண்டு அவரை விமர்சிக்க தொடங்கியபின்னும், இவர்கள் எல்லாம் ஏன் மாறுகிறார்கள் என யாரும் யோசிக்கவில்லை என கண்டேன்.

ஐயா மணியரசனை தமிழன் இல்லை என இகழ்ந்ததை கண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு சவுக்கு சங்கர் ஒரு திமுக சொம்பு என சொன்னவர்கள் அதே சவுக்கு சங்கரை எடுத்து பகிர்ந்த அபத்தத்தை கண்டேன்.

அப்பாவித்தனமாக தேர்தல் முடிவுக்கு முதல்நாள் வரை “நாம் தமிழர் 90 சீட்” “நாம் தமிழர் எதிர்கட்சி” “20% வாக்கு எடுக்கும்” என்றெல்லாம் ஆரூடங்கள் கூறியதை கண்டேன்.

நான் எதிர்வு கூறியபடியே 1996 க்கு பின் தமிழ்நாட்டில் ஒன்றல்ல 5 இடங்களை பிஜேபி பிடித்ததை கண்டேன். 

அமித் ஷாவின் திட்டம் வெற்றியடைந்ததை கண்டேன்.

தாமரை மலரக் கண்டேன்.

இத்தனைக்குப் பிறகும் சீமானை தவிர மிகுதி எல்லோரும் கட்டுபணம் இழந்த கட்சியை 3வது கட்சி என கொண்டாடியதை கண்டேன். 

இதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன்.

சீமானை ஆதரிப்பவர்கள் இருவகையினர்.

1. கயவர்கள் - இவர்கள் சீமானை போலவே தமிழ் தேசியம் காயடிக்கபட உழைப்பவர்கள். 

2. மடையர்கள் (பதத்துக்கு மன்னிக்கவும்) - இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். Stockholm Syndrome போல ஒரு மனோநிலையில் இருப்பவர்கள். தடா மாவீரரை கொச்சை படுத்தினாலும், சீமான் பொட்டம்மானை கொச்சை படுத்தினாலும், சீமான் திமிராக மறுப்பறிக்கை கூட விடாது இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்து தம்மை தாமே தேற்றிகொள்வார்கள். எதிர்பாராத தோல்வியில் ஏற்பட்ட விரக்தி - இவர்களை எந்த பிடியையாவது இறுக்கி பிடிக்க வைக்கிறது. பிடித்திருப்பது விசப்பாம்பு என கத்தினாலும் இல்லை அது கயிறு என்றேன் சொல்வார்கள். கத்துபவனை துரோகி ஆக்குவார்கள். இது ஒரு கூட்டு மனபிறழ்வு. 

நாளைக்கு தலைவரே வந்து சீமானை நம்பாதீர்கள் என சொன்னாலும் இவர்கள் நம்பபோவதில்லை.

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

ஆனால் இவர்களுக்கும் போக போக நிலைமை புரியும்.

ஏராளனின் மைண்ட்வாய்ஸ் இன்னும் ஏராளமாய் உரக்க கேட்க தொடங்கும். அவரவர் அறிவுடமைக்கு ஏற்ப விரைந்தும், பிந்தியும் இந்த கூட்டு மன பிறழ்வில் இருந்து மீள்வார்கள்.

இப்போதே டிவிட்டரிலும், முக புத்தகதிலும் இந்த மைண்ட்வாய்ஸ் உரக்க கேட்க தொடங்கிவிட்டது.

யாழிலும் கேட்கும்.

அதுவரை நோயாளிகள் தம்மை மீட்க வருபவரையே கடித்தும் வைப்பார்கள் 🤣. அதனால் கொஞ்சம் விலகி இருந்து காலத்தை அதன் பணியை செய்யவிட முடிவு செய்துள்ளேன்.

கெட்டிகாரன் புளுகு, கையை மடக்கி ஆக்ரோசமாக பேசினாலும், தலைவரின் பின்னால் ஒளிந்து கொண்டாலும் கூட - பத்து நாள்தான். 

அண்ணை அது மைன்ட் வாய்ஸ் இல்லை, உங்கள் எழுத்துக்களோடு அங்கு நடக்கும் சில நிகழ்வுகளையும் ஒப்பிட்டதால் வந்த கருத்து. சீமான் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அவருடைய வீழ்ச்சி தானாக நடக்கும். அப்பிடி நடந்தால் நீங்கள் யாழ் கள தீர்க்கதரிசியாக வரலாற்றில் பதியப்படுவீர்கள்.

10 hours ago, goshan_che said:

அண்ணை அவரின் நிலையை நீங்கள் சரிவர புரியவில்லையோ என நினைக்கிறேன்.

கோசானை, குமாரசாமியை போல் துல்பெனும் கையாலாகாதவர்தான். செயல்வீரர்கள் யாராவது யாழில் அலட்டி கொண்டிருப்பார்களா?

அவர், முன்னர் விடப்பட்ட சில தவறுகள் என அவர் காண்பதை சுட்டி காட்டியபடி இருந்தால் அடுத்த முறை அந்த தவறை அடுத்து வரும் செயல்வீரர்கள் தவிர்ப்பார்களே என்ற எதிர்பார்ப்பில் எழுதுகிறார். 

தானே ஒரு செயல்வீரன், என்னை விட்டால், அல்லது விட்டிருந்தால் நான் வெட்டி வீழ்த்தி இருப்பேன் என அவர் எழுதுவதாக எனக்கு படவில்லை.

 

கோசான் உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நான் ஒரு பொது மகனாக என்க்கு உள்ள கருத்துரிமையின் அடிப்படையில் எல்லா தமிழ் தலைமைகளையும் விமர்சிக்கிறேன்.  தலைமைகள  நான் விமர்சிக்கும் போது ஏதோ இவர்களை நான் குற்றம் சொல்வது போல் இவர்களுக்கு கோபம் வருவது ஏனோ?  ஏதோ இவர்கள் எல்லாம் இதுவரை செயற்பட்டவர்கள் போலவும் எனது விமர்சனம் இவர்களை செயற்படவிடாமல் தடுப்பது போலவும் இருக்கிறது இவர்கள் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அண்ணை அது மைன்ட் வாய்ஸ் இல்லை, உங்கள் எழுத்துக்களோடு அங்கு நடக்கும் சில நிகழ்வுகளையும் ஒப்பிட்டதால் வந்த கருத்து. சீமான் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அவருடைய வீழ்ச்சி தானாக நடக்கும். அப்பிடி நடந்தால் நீங்கள் யாழ் கள தீர்க்கதரிசியாக வரலாற்றில் பதியப்படுவீர்கள்.

அதைதான் மைண்ட் வாய்ஸ் என்கிறேன். உண்மையில் நான் நீங்கள் அப்படி எழுதியதை நல்ல அறிகுறியாகவே காண்கிறேன். 

தொடர்ந்து அவதானியுங்கள்…யாழில் மிக விரைவில் உண்மையை தரிசிக்க போகும் அடுத்த நபராக நீங்கள் இருப்பீர்கள் என்பது என் அனுமானம்.

அப்படி நிகழும் போது வெறுத்து விலகி செல்லாமல், ஏனையோருக்கும் தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.

உங்கள் எல்லாருக்கும் முன்பாகவே சீமானின் மகுடிக்கு மயங்கி, மீண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

பிகு:

வாய்கரிசி போட்ட பின் தீர்கதரியா இருந்தாலென்ன விட்டலென்ன🤣

9 hours ago, satan said:

அப்பு, ராசா! நீர் எங்கும் போகவேண்டாம். இருந்த இடத்திலேயே இருந்து பாரும். மாவீரர் வாரம் மக்கள் எவ்வளவு ஆவலாய் தம் வீரருக்கு விளக்கேற்ற அரசாங்கத்தோடு, இராணுவத்தோடு, நீதிமன்றத்தோடு போராடுகிறார்கள், அதை மூடி மறைக்க ஒட்டுக்குழுக்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை? அதிலிருந்து புரிந்து கொள்ளும் உமக்கு கருத்து சொன்னவர்கள் எந்தவகை என்று. ஏனப்பு இப்ப போனவாரம் முள்ளிவாய்க்கால் நினைவை வெற்றி விழாவாக அந்த மக்களல்லவோ கொண்டாடியிருக்கணும்?  ஏன் மக்கள் துக்க நாளாகவும், சிங்களம் வெற்றி விழாவாகவும் கொண்டாடியது என்று சிந்திக்க முடியலையோ? அல்லது அந்த மக்கள் சொல்லையோ? அடுத்த முறை கேட்டுச் சொல்லும் கண்டிப்பாய்.

மாவீர‍ர்களுக்கு நாம் விளக்கு ஏற்றுவது பற்றியும்  இலங்கை இனவெறி அரசங்கத்தால் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகளையும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அனுசரிப்பது  நியாயமானது.  நிச்சயமாக அது தொடரவேண்டும்.அதுபற்றி நான் எதிராக கருத்து எழுதியதை போல நீங்கள் எனது கருத்தை திரிக்க பார்க்கின்றீர்கள்.  மாவீர‍ர்கள் எமது மக்களின் பிள்ளைகள். அவர்கள் ஒரு போராட்ட இயக்கத்தின் சொத்துக்கள் அல்ல. அவர்களை பெற்றெடுத்த பெற்றோருக்கும்  அவர்களின் தியாகத்திலும் அர்பணிப்பிலும் பெருமையும் பங்களிப்பும் உண்டு.  இங்கு விவாதிக்கபடுவது அவர்களை பற்றி அல்ல.  அரசியல் தீர்மானங்களை எடுத்த, எடுக்கும் அரசியல் தலைமைகளை மட்டுமே.

மாவீர‍ர்கள் என்பவர்கள் எக்காலத்திலும் நினைவிலை வைத்து போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களின் வீரமும். அர்ப்பணிப்பும் அரசியல் தலைமைகளின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்க, அந்த அரசியல் அமைப்பின் ஆதரவாளர்களால்  கேடயங்களாக பயன்படுவதற்கல்ல.

உலகில் எந்த நாட்டிலும் யுத்தம் நடைபெற்ற மக்கள் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுகளாலும் கொல்லபட்ட,  அவர்களின் அன்றாட மகிழ்ச்சியான வாழ்க்கை பாதிக்கபட்ட காலம் என்பது பொற்காலமாக கணிக்கப்பட்டதில்லை.  உலகம் முழுவதும் உள்ள இந்த இது தான் நிலை.  இது எமது மக்களுக்கும் பொருந்தும். அதுவே நான் அங்கு சென்ற போது அங்குள்ள மக்களின் மனநிலை. அதில் தவறு இல்லை.  அதுவே இயல்பான மனநிலை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இதற்குள் நான் எந்த வகை என தெரியவில்லை

ஆனால் அவர்களைப்போல ஏன் உங்களையும் போல தமிழகத்தில் சில மாற்றங்கள் வராது எமக்கு விடிவில்லை. தமிழகமாவது எமக்காக பேசும் என்ற நிலையாவது வரணும்.

அதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை கனவும் இல்லை

அண்ணை நம்மில் பலர் 2ம் வகைதான் அண்ணை. கோவிக்க வேண்டாம் - அந்த பதம் எதுகை மோனைக்கு எழுதியது. ஆனால் பகலவன் அண்ணாவுக்கு எழுதிய சில பதில்கள் அந்த பெயருக்கு பொருத்தமானவைதான்😡.

மொழி தெரியாத ஒரு நாட்டிற்கு வந்து, தொழில் முனைவராகி, அதில் வென்று, ஊருக்கும் கொடுத்து, பிள்ளைகளை பெரும் படிப்பாளிகளாக்கிய உங்களை மடையன் என்று சொல்பவந்தான் மடையன்.

நான் கேட்பதெல்லாம், கோஷான் சொல்வதை மனதின் ஓரத்தில் போட்டு வையுங்கள். நடப்பதை அவதானியுங்கள். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, goshan_che said:

டென்சன் ஆகவேண்டாம் தம்பி. என்னதான் இப்ப நீங்கள் கெளரவ சந்திரகாந்தனின் விழுது என்றாலும், உங்களின் நிலைப்பாடு ஏன் அப்படி அமைகிறது என எனக்கு புரிகிறது ஆகவே உங்களை நான் மேலே சொன்ன வகையீட்டில் 1 ஆக கருதவில்லை. ( ஏண்டா 2 இல சேத்தனி எண்டு டென்சன் ஆக வேண்டாம்🤣).

நான் கையலாகதவன் என்பதை எப்போதே சொல்லிவிட்டேனே தம்பி. நம்மட காரதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு பக்கத்தில ஒரு மரத்தடில எப்பவும் சில பென்சன் கேசுகள் உக்கார்ந்து கதையளக்குமே? அதுக்க்கும் யாழுக்கும் பெரிய வித்தியாச்ச்ம் இல்லை🤣.

ஆனா ஒன்று, என்னை ஊரில் எத்தனை பிரச்சினை இருக்கு இவர் சீமானை ஏன் நோண்டி முகர்கிறார் என யாழில் என்னை கேட்ட என் செல்லத்தம்பி, 

வாக்கு போட்டவர்கள்/ஆதரித்தவர்கள்  எல்லாம் விழுதுகள் category  என்றால் அண்ணையும்  கூத்தமைப்பின் கூத்தாடி விழுது  categoryக்கு அச்சுஅசலாக பொருந்துறது மாதிரி தெரியுதே , சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும், சுமந்திரனிடம் போகலாமா என்ன....?
அப்புறம் மக்களுக்கு தங்கட சொந்த இரத்தங்களுக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லாமல் இருக்கைக்க ராணுவத்துக்கு அஞ்சலி செலுத்துறீங்களோ என்று உங்கடை காலரை பிடிச்சுபோடுவினம், பிரீயா விடுங்க  அண்ணை, நாங்கள் இங்கை எங்கடையாக்கள் தள்ளாதவயதிலும் டம்பல்ஸ் எடுத்து உறுமி வறுவி வாயால் சிங்களவனுக்கு பேதி புடுங்க வைப்பதுபோல  போல அங்கனைக்க உடல் கொஞ்சம் வலுவான ஆள் சீன் போடுறார் என்று எடுத்துக்கிட்டு போயிருவோம், ஆனால் சில பென்ஷன் கேசுகளுக்கு பொட்டம்மானை ஏசினால் தான் நரம்பு புடைக்கும், விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று முக்கியமான புள்ளி சொல்லிவிட்டால் புடைத்த நரம்பு சுருண்டு படுத்துக்கும், ராசதந்திரம் அண்ணே ராசதந்திரம் ,  முக்கால் வாசி  செந்தில்னே திராவிட ஸ்டாக்குகளுக்கு நாம் எப்போதும் அகதிதான்னே, ஆனால் சீமானை எதிர்க்கிறோம் பேர்வழி என்று வெளிக்கிட்டவைகள் தான் அவரிடம் நிறைய  எதிர்பார்க்கினம் என்று தெரியுது  , தாமரை தமிழ்நாட்டில் மலர முன் இலங்கையில் இலங்கை பிஜேபி என்று  மலர்ந்திருச்சி இதுக்கே புடுங்க வக்கில்லை அடுத்தவனை மடையன் என்று சொல்லி நாம் கூழ் பானைக்குள் விழத்தான் அண்ணே லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 

வாக்கு போட்டவர்கள்/ஆதரித்தவர்கள்  எல்லாம் விழுதுகள் category  என்றால் அண்ணையும்  கூத்தமைப்பின் கூத்தாடி விழுது  categoryக்கு அச்சுஅசலாக பொருந்துறது மாதிரி தெரியுதே , சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும், சுமந்திரனிடம் போகலாமா என்ன....?
அப்புறம் மக்களுக்கு தங்கட சொந்த இரத்தங்களுக்கே அஞ்சலி செலுத்த வக்கில்லாமல் இருக்கைக்க ராணுவத்துக்கு அஞ்சலி செலுத்துறீங்களோ என்று உங்கடை காலரை பிடிச்சுபோடுவினம், பிரீயா விடுங்க  அண்ணை, நாங்கள் இங்கை எங்கடையாக்கள் தள்ளாதவயதிலும் டம்பல்ஸ் எடுத்து உறுமி வறுவி வாயால் சிங்களவனுக்கு பேதி புடுங்க வைப்பதுபோல  போல அங்கனைக்க உடல் கொஞ்சம் வலுவான ஆள் சீன் போடுறார் என்று எடுத்துக்கிட்டு போயிருவோம், ஆனால் சில பென்ஷன் கேசுகளுக்கு பொட்டம்மானை ஏசினால் தான் நரம்பு புடைக்கும், விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று முக்கியமான புள்ளி சொல்லிவிட்டால் புடைத்த நரம்பு சுருண்டு படுத்துக்கும், ராசதந்திரம் அண்ணே ராசதந்திரம் ,  முக்கால் வாசி  செந்தில்னே திராவிட ஸ்டாக்குகளுக்கு நாம் எப்போதும் அகதிதான்னே, ஆனால் சீமானை எதிர்க்கிறோம் பேர்வழி என்று வெளிக்கிட்டவைகள் தான் அவரிடம் நிறைய  எதிர்பார்க்கினம் என்று தெரியுது  , தாமரை தமிழ்நாட்டில் மலர முன் இலங்கையில் இலங்கை பிஜேபி என்று  மலர்ந்திருச்சி இதுக்கே புடுங்க வக்கில்லை அடுத்தவனை மடையன் என்று சொல்லி நாம் கூழ் பானைக்குள் விழத்தான் அண்ணே லாயக்கு.

சரி சரி டென்சன் ஆக வேண்டாம் தம்பி.

நீங்கள் சொல்றதும் சரிதான்

சந்திரகாந்தன் = சீமான் தான்.

இதை நீங்கள் புரிந்து கொண்டதுபோல், ஏராளனும், குமாரசாமி அண்ணையும், விசுகு அண்ணையும், பெருமாளும், ரஞ்சித்தும், உடையாரும் இன்னும் இதய சுத்தியோடு இனத்தை நேசிக்கும், உங்களால் “தேசிக்காய்கள்” என கேலிக்குள்ளாகும் எல்லாரும் புரிய வேண்டும். என்பதே என் அவா. புரிவார்கள்.

இணைந்திருங்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சந்திரகாந்தன் = சீமான் தான்

வந்தாலும் வந்தீர்கள், ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் போல?!

அதுசரி, உந்தச் சமன்பாட்டின்ர அர்த்தம் என்ன? 

சீமான் தமிழ்த்தேசிய (இன)வாதி. சந்திரகாந்தன் (பிள்ளையானைத்தான் நீங்கள் இப்படி அழைக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு...)  அப்படியொன்றும் தமிழ்த்தேசிய இனவாதி...வேண்டாம், தமிழர் நலன்பற்றி சிந்திப்பதுகூட இல்லையே? அப்படியிருக்க சமன்பாட்டின் இடதுபக்கத்தை வலப்பக்கத்திற்குச் சமன் என்று எப்படி நிறுவப் போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

உங்களின் இந்த கூற்று சரி என்று வைத்தால்,  சம்பந்தரையும், சுமந்திரனையும்  அடிக்கடி  இங்கு நீங்கள் கீழ்தரமாக  வசை பாட கூடாது.  சும்மா வசை பாடுவதை விடுத்து நீங்கள் தாயகம் சென்றுதேர்தலில் போட்டியிட்டு அவர்களை தோற்கடித்து அதை சரிவர செய்து காட்டவேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன். ஏனென்றால்  உங்களால் அது அறவே முடியாது என்பது எனக்கு தெரியும். இது நான் உட்பட இங்கு கருத்தெழுதும்  அனைவருக்கும் பொருந்தும். 

செல்வா...பண்டா  ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை.. ஏன? இலங்கையரசிடம்  தமிழருக்கு தீர்வு  இல்லை..........செல்வா...டட்லி.   ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை ...ஏன்? இலங்கையரசிடம்  தமிழருக்கு  தீர்வு இல்லை....

1972இல் அரசிலமைப்பிலிருந்து  சோல்பரி சரத்து 29. நீக்கப்பட்டது ஏன் ?தமிழர் நிதி  கேட்டு யு.கேஇல் வழக்கு தாக்கல் செய்யப்படாது. இது வெளிநாடுகளிலும் தமிழர் தீர்வு தேடக்கூடாது....இலங்கையிலும் தீர்வு இல்லை...பல இனக்கலவரங்களின் பிற்பாடு  ...விசாரனைக்கமிஷன்கள் நிறுவப்பட்டு ...விசாரனை செய்து. தமிழருககு சார்பானா தீர்வு அமைத்தபோதும். நடைமுறைப்படுத்தப்படவில்லை ஏன்'? இலங்கையில் தமிழருக்கு தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை தோற்றதுக்கு  முழுககாரணம் இலங்கையரசிடம் தமிழருககு ஒர்தீர்வு இல்லை  புலிகள் ராஐதந்திரத்துடன் நடத்தமையால்  போலியான ஒப்பந்தங்களைச் செய்யவில்லை இலங்கையரசு உளசுத்தியுடன் தீர்வ ஒன்றை தன்னிச்சையாக மேசையில் வைத்து நடைமுறைப்படுத்தியிருத்தால் போர் நீண்டிராது  முள்ளிவாக்காலும்  வத்திராது  ...புலிகள் பிழை செய்யவில்லை  தமிழ்மக்களுக்காகப் போராடினார்கள்...தமிழனை பூண்டோடு ஆழிக்க இலங்கையரசு முயன்றாமையால் முள்ளிவாக்கால் வந்தது... தீர்வு கிடைக்கவில்லை....இலங்கையரசிடம்  தமிழருக்கு தீர்வு இலலை என்பது  துல்பனுக்கு. 1% கூடத்தெரியவில்லை. 

மேலும் புலிகள் போராடியது பிழை என்பது ஒரு பிழையான  கூற்று  ஆகவே. அது. நிறுவப்படவேண்டும். சம்பந்தனைக் குறை கூறுவது மிகச்சரியாது  அது நிறுவவேண்டியதில்லை...விளைவுகள்.  பாரதுரமாக இருககும்...பெங்களுக்கு தீர்வு வரும்  வருசத்துக்கு தீர்வு வரும்....... 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

வந்தாலும் வந்தீர்கள், ஒரு பிளானோடுதான் வந்திருக்கிறியள் போல?!

அதுசரி, உந்தச் சமன்பாட்டின்ர அர்த்தம் என்ன? 

சீமான் தமிழ்த்தேசிய (இன)வாதி. சந்திரகாந்தன் (பிள்ளையானைத்தான் நீங்கள் இப்படி அழைக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு...)  அப்படியொன்றும் தமிழ்த்தேசிய இனவாதி...வேண்டாம், தமிழர் நலன்பற்றி சிந்திப்பதுகூட இல்லையே? அப்படியிருக்க சமன்பாட்டின் இடதுபக்கத்தை வலப்பக்கத்திற்குச் சமன் என்று எப்படி நிறுவப் போகிறீர்கள்?

வணக்கம் ரஞ்சித்,

சுகம்தானே.

இந்த சமன்பாட்டை நான் கீழே விளக்குகிறேன். ஆனால் 

55 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சீமானை கேட்டால் சந்திரகாந்தனுக்குத்தானே போகவேணும்,

என்பதன் மூலம் சீமானை ஆதரிப்பதும், சந்திரகாந்தனை ஆதரிப்பதும் ஒரு இயற்கையான-முரணற்ற நிலைதான் என்று கூறியவர் அக்னி.

உங்களுக்கு அப்படியா தெரிகிறது? இல்லைத்தானே?

அப்போ நீங்கள் என்ன செய்யவேண்டும்?

சந்திரகாந்தனை ஆதரிப்பவர் ஏன் சீமானையும் ஆதரிக்கிறார் என யோசிக்க வேண்டும்.

அப்படி யோசிக்கும் போது கீழே கோசான் எழுதியதையும் சேர்த்தே யோசியுங்கள்.

1. இலங்கையில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும், இந்தியாவில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும் - ஒரே நோக்கம்தான். ஆனல் இரு வேறுபட்ட அணுகுமுறைகள்.

2. இலங்கையில் தமிழ் தேசியத்தை நேரடியாக மோதி எதிர் கொள்வது. தமிழ் தேசியவாதிகளை வினைதிறனற்றவராக்குவது. முஸ்லீம் பூச்சாண்டி காட்டுவது. பிரதேசவாதத்தை கிளப்புவது. சந்திரகாந்தன் போன்றோரை வினைதிறன் மிக்க, முஸ்லீம்களை எதிர்க்க கூடிய தலைவர்களாக பிம்பத்தை கட்டி எழுப்பி அவர்களை கொண்டு தமிழ் தேசிய அரசியலை பிரதியீடு செய்வது.

இலங்கையில் புலிகளின் அழிவுக்கு பின்னும் நிலையாக இருந்த தமிழ் தேசிய உணர்வை அழிக்கும் வேலைத்திட்டம்.

3. தமிழ்நாட்டில் இந்த அழிவில் இருந்து தமிழ் தேசியம் புதிதாக எழுந்துவிடாமல் பார்த்துகொள்ளும் வேலைத்திட்டம்.

இங்கே இதுவரை தமிழ் தேசியத்தின் தளமாக இருந்த நாயக்கர் உட்பட்ட சாதியினரை தமிழர் இல்லை என்றாக்கி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட கூடியோரை சரிபாதியாக குறைப்பது.

தொடர்ந்து இனத்தூய்மைவாதம், முன்னுக்கு பின் முரணான நடைமுறைகள், தனிவாழ்வில் களங்கம். அப்பட்டமான மறைமுக அதிமுக/சசிகலா ஆதரவு. எல்லாவற்றிற்கும் மேலாக அய்யநாதன், மணியரசன் போன்றோரை ஒதுக்குவது, மேதகு படத்தை முடக்குவது இப்படி தமிழ் தேசியத்தை மறைமுகமா காயடிக்கும் அணுகுமுறையை மேடையில் நரம்பு புடைக்க தமிழ் தேசியம் பேசியபடியே செய்வது. பின்னர் படிபடியாக பிரபாகர நீக்கம் செய்து சீமானிசத்தை புகுத்துவது.

தமிழ்நாட்டில் 2009 க்கு பின்னான சீமானின் வருகையின் பின், முன்னர் தமிழ் தேசியம் என்றாலே என்ன என தெரியாமல் இருந்த பலர் இப்போ தமிழ் தேசியத்தின் ஜென்ம எதிர்களாக்கபட்டு விட்டனர் - சீமானால்.

1991 இல் காங்கிரஸ்காரர் மட்டுமே தலைவரை திட்டினார்கள். இப்போ? கிட்டதட்ட திமுகவின் நிரந்தர வாக்குவங்கி (30%) அப்படியே புலி எதிர்பாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள்

இவை எல்லாம் மிக நுணுக்கமாக செய்யபடும் காயடிப்புகள்.

சீமான் இருக்கும் வரை வேறு ஒரு இதயசுத்தி உள்ள தமிழ் தேசிய தலைமை தமிழ்நாட்டில் எழாது அல்லவா? இதுதான் அவருக்குரிய வேலை.

சீமான் பொது மேடையில் ராஜீவை நாம்தான் கொன்றோம் என்கிறார். சாட்டை துரை - சமாதிக்கே போய் நாம்தான் கொன்றோம் என்கிறார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால் ஒரு படம் மேதகு - இணையத்தில் வெளியிட முடியாது முடக்கி விட்டார்கள்.

ஏன்? சீமானுக்கு டெல்லியின் ஆசீர்வாதம் உண்டு. தஞ்சை குகன் குமாருக்கும், கிட்டுவுக்கும் அது இல்லை. 

ஆகவே சந்திரகாந்தன்=சீமான் தான் சமன்பாடு. 

சந்திரகாந்தனும், சீமானும் தமிழ் தேசியத்தை கருவறுக்க பயன்படும் கருவிகள்தான். ஒருவர் கத்தி, இன்னொருவர் கத்தரிக்கோல்.

தேவைக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வெளித்தோற்றம் மட்டுமே மாறும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.