Jump to content

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

 
12-1.png
 31 Views

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்ஸுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்ஸில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் வீசினர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

 

https://www.ilakku.org/?p=51963

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 23:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

நீங்கள் இப்படி பிரிவினை பேசக்கூடாது.....நோயிலும் நாங்கள் தேசியத்தையும் ,நல்லிணக்கதையும் கடைபிடிக்கிறோம்....என சிங்கள மக்களுக்கு சொல்லியினம் அவையளும் நம்பி அடுத்த தேர்தலில் வாக்கு போடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 15:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

அதைத்தான் நானும் நினைத்தேன்.. அவ்ளா பெரிய தேசம் இருக்க அதை எல்லாம் கடந்து எதுக்கு இங்க கொண்டுவாறானுவள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

On 10/6/2021 at 18:03, உடையார் said:

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு விரோதமான செயல் நடை பெற்றால் ஏன் நாங்கள் தடுத்தாட போறோம் ....அங்.. அங்...
எங்கள் விருப்ப்மும் அது தானே....

எங்கள் தலிவர்கள் பாணந்துறையில் கொரானா கைதி மரணம் பற்றி புலன்விசாரணை செய்யினம் 

6 minutes ago, satan said:

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

 

6 hours ago, putthan said:

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

ஒன்றுபட்ட நாட்டுக்குள் என்ற  இலங்கைக்குள் எண்டு ஏதும் நினைக்கினமோ தெரியேல்லை. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது..

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

இன்றும் தமிழர் தரப்புகளில் பிழைகளையும் குறை குற்றங்களையும் கண்டு பிடிக்கின்றார்களே ஒழிய சிங்கள தரப்பின் அட்டூழியங்களை மறந்தும் கூட முன்னிறுத்தி கதைக்கவோ கருத்தெழுதவோ மாட்டார்கள்.

4 hours ago, putthan said:

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

அடேங்கப்பா நல்லாய்ச்சொன்னியள் போங்கோ.
ஆனால்   சிங்களத்தரப்பு எது சொன்னாலும் செந்தில் ஆக்ஸன் 🤣

Senthil GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

அப்ப ஏனாம் சீமான் எண்ட பெயரை கண்டவுடனை வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையாய் வருகினமாம்? அதையும் அங்கையே வெள்ளுத்துக்கட்டலாமே. அதுமட்டுமில்லாமல் கலைஞர் கருநாநிதியெண்டாலும் சேம் பிரச்சனை அவையளுக்கு....

அது வேறை லெவல் இணையங்கள் விசுகர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்நெஞ்சம் படைத்த மாற்றுகருத்து மாணிகம்ஸ்.

கால்ல விழுந்து கதறினாலும் - கிட்னிய கண்ல காட்ட மாடேங்கிறீங்களேப்பா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

பொலிஸ் சந்தேகநபர்களை அடிச்சுக் கொல்லுது... இப்படியும் கொல்லுது. இராணுவம் விறகு வெட்டிறவரை சுட்டுக்கொல்லுது... காட்டுக்க பன்றி பிடிக்கப் போறவனையும் கொல்லுறாங்கள்.

ஆக மொத்தத்தில் சொறீலங்கா சிங்கள இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சிக்குள்.. மனித உரிமைகளை மீறியே பழகிப் போனவர்கள்..கேட்பார் கேள்வி இல்லை என்று ஆகிப்போனதால்.. மனித உரிமைகளை காக்க யாரும் இல்லை. ஆதிக்க அதிகார பேரினவாதத் திமிர் பிடித்து அலையும்.. சிங்கள.. அரச இயந்திர குற்றவாளிகளை தண்டிக்க அங்கு நீதித்துறை என்ற.. எதுவும் உருப்படியாக இல்லை. 

இந்த நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

நீங்கள் இலங்கையில் வாழ்கிறீர்கள் என்பதற்காக அதிகம் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. இதே நீங்கள் ஒருவேளை அரபுலகிலோ.. ஐரோப்பாவிலோ.. கனடா அமெரிக்காவிலோ.. அவுஸி.. நியூசிலாந்திலோ வாழ்ந்திருந்தால்.. நிச்சயமாக.. இப்படி கருத்தெழுதி இருக்கமாட்டீர்கள்.

கொரோனா மரணங்களில் 125,000 மேல் மரணத்தைக் கண்ட நாட்டில் வாழ்ந்தாலும்.. இப்படி கொரோனா தோற்றாளர்கள் ஊர் விட்டு ஊர் கடத்தும் நடவடிக்கையை சொறீலங்கா சிங்கள இராணுவ அரசைத் தவிர வேறு எவரும் செய்யவில்லை. நோய் தொற்றாளர்களை அவர்கள் வாழும் வீட்டுக்குள் ஊருக்குள் தான் முடக்கினமே தவிர.. தொற்றாளர்கள் ஊர் விட்டு ஊர்.. பிரதேசம் விட்டு பிரதேசம்.. கொண்டு போகவில்லை.

அண்மையில் முழுத்தீவானா நயினாதீவிற்கு எப்படி கொரோனா நுழைந்தது. ஊரே அறியும் அதன் பின்னணி. இறுதியில் ஆலயக் குருக்கள் அதற்குப் பலி. 

சொந்த ஊருக்குள் ஒருவர் சைக்கிளில் போவது பயணத்தடைக்குள் வருமென்றால்.. நோய் தொற்றாளர்களை பிரதேசம் விட்டு பிரதேசம் கடத்தும் செயல் ஏன் அந்த பயணத் தடைக்குள் வரவில்லை. ஆம் அதையிட்டு கேள்வி கேட்க முடியாது. ஏனெனில்.. சுகாதார சேவை செய்ய வேண்டிய பணியை செய்வது இனப்படுகொலை இராணுவமும் பொலிஸும் அல்லவா.

என்றாலும்.. நீங்கள் இந்தளவுக்கு பயந்து வாழனுன்னு இல்லை. ஊரில் உள்ள எத்தனையோ மக்கள் இதனை அநியாயம் என்றே சொல்கிறார்கள். ஆனால்.. நீங்கள் அநியாயத்துக்கு நியாயம்..கற்பிப்பது மிகவும் அநியாயமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

கொரோனா சகலருக்கும் சமமானது. இதில் கேள்வி என்னவென்றால் கொழும்பிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து ஏன்  கொரோனா நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே.

முதியவரின் மரணம் அது விபத்தாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறந்தவர் முதியவர் என்பதற்காக ஏற்பட்ட விபத்தை சரியென நிஞாயம் கற்பிக்க முடியாது. பயணத்தடை விதிப்பவர்கள் சாதாரண மக்களின் ஜீவனோபாயத்திற்கு தகுந்த ஏற்பாடு ஏதும் செய்து கொடுத்தார்களா? அரசும், சம்பந்தப்பட்டவர்களும் ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கிறார்களா? பேசப்பயம் என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இங்கு வலிந்து கட்டிக்கொண்டு வந்து அநிஞாயத்துக்கு வெள்ளை அடிப்பவர்கள் அநிஞாயம் செய்பவரும்,   அதன் (அரசின்) பங்காளிகளுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகளை வடக்கிற்கு கொண்டு வந்தது தப்பில்லை, விபத்தை ஏற்படுத்தியது அதுவும் தப்பில்லை.  வயிற்றுப்பிழைப்புக்காக வெளியில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கி இறந்ததுதான் தப்பு இங்கு. இப்படிபட்டவர்களால் வழிநடத்தப்படும் இளம் சமுதாயம் எப்படிப்பட்ட ஆரோக்கியமான எண்ணங்களை கொண்டவர்களாக உருவாவார்கள்? என்பதை  நினைக்கவே பயமாக இருக்கிறது. பயணத்தடை அமுலில் இருக்கும்போது நாமல் வடக்கிற்கு விஜயம் செய்யலாம் தப்பில்லை. ஆனால் முதியவர் வெளியில் வந்தது தப்பு. அவர்  என்ன அரசியல் தேவைக்கா வெளியில் சென்றார்? என்ன, அவர்களின் திட்டம் இவரின் மரணத்தால் கசிந்து விட்டதே என்கிற ஆதங்கம், இறந்தவர் மேல் குற்றச் சாட்டு வைத்து நிஞாயப்படுத்துகிறார்கள் அரசின் முகவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

தனி,
அப்ப பாஸ் இல்லாமல் வெளியாலை போனால் அடிச்சுக் கொல்லலாம் அப்பிடித் தானே. உங்கடை சொந்தம் ஆருக்கும்நடந்தால் இப்பிடிச் சொல்லுவியளோ? அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க வேணும் என்பதற்காக எப்பிடியெண்டாலும் கதைக்கலாம் என்றுநினைக்கக் கூடாது. விவசாயிகள் தோட்டத்துக்கு போக பாஸ் இருக்குத் தானே.பாஸ் இல்லாமல் வெளியாலை போய் கொரோனா வந்தால் முதியவரில் பிழை என ஏற்றுக் கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.