Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84

 

https://athavannews.com/2021/1252823

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! வழக்கின் அனைத்து செலவுகளையும் தவராஜ் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு! தமிழாக்கம் நடராஜா குருபரன். #cvria #european_court_of_justice
 
EU-Court-750x375.jpg
விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சை வழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி "பயங்கரவாதச் செயல்" என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.
(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது
செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்,
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;
(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;
(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை
(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;
(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;
(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;
(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;
(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;
(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.
- பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.
- பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.
- விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 17:52, nunavilan said:

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்

இதனை தாங்கள் உற்பத்தி செய்யலாம்.. தங்களுக்கு ஒத்துவராத இடங்களில் கொட்டலாம்.. மில்லியன் கணக்கில் அகதிகளை உருவாக்கலாம்.. அதெல்லாம்.. அதி உச்ச மனிதபிமானம்.. மனித உரிமைகள் காப்பு ஆகும்.

சரி.. அங்கீகரிக்கப்பட்ட சிரிய அரசு மீது ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட மிலேச்சதனமான தாக்குதல்களில் இவை பாவிக்கப்பட்டு.. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் தானே..??! மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்தார்கள் தானே.. அப்போ அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஏன் ஐரோப்பிய நீதிமன்றம் தண்டிக்கவில்லை.. தடை போடவில்லை..??! 

சிரியா மீதான தாக்குதலுக்கு எங்கு இவர்கள் ஒப்புதல் வாங்கினார்கள்..??! ஈராக்.. லிபியா.. சோமாலியா.. சேர்பியா மீதான தாக்குதல்களுக்கு.. ஐநாவில் ஒப்புச்சப்புக்காவது தாங்களே தங்களுக்கு வாங்கிச்சினம்...

கொசொவாவில்..அரசுக்கு எதிரான.. போராளிகளுக்கு இவையே மேற் குறிப்பிட்ட அத்தனையையும் சப்பளை செய்திச்சினமே.. அப்போ ஐரோப்பிய நீதிமன்றம் என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டிருந்தது.

நீதிமன்றங்கள் எப்போ பக்கச் சார்ப்பாக தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தனவோ அப்ப தான்.. மக்களுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை அதிகரித்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமும் விதிவிலக்கல்ல. 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இதனை தாங்கள் உற்பத்தி செய்யலாம்.. தங்களுக்கு ஒத்துவராத இடங்களில் கொட்டலாம்.. மில்லியன் கணக்கில் அகதிகளை உருவாக்கலாம்.. அதெல்லாம்.. அதி உச்ச மனிதபிமானம்.. மனித உரிமைகள் காப்பு ஆகும்.

சரி.. அங்கீகரிக்கப்பட்ட சிரிய அரசு மீது ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட மிலேச்சதனமான தாக்குதல்களில் இவை பாவிக்கப்பட்டு.. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் தானே..??! மில்லியன் கணக்கில் இடம்பெயர்ந்தார்கள் தானே.. அப்போ அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஏன் ஐரோப்பிய நீதிமன்றம் தண்டிக்கவில்லை.. தடை போடவில்லை..??! 

சிரியா மீதான தாக்குதலுக்கு எங்கு இவர்கள் ஒப்புதல் வாங்கினார்கள்..??! ஈராக்.. லிபியா.. சோமாலியா.. சேர்பியா மீதான தாக்குதல்களுக்கு.. ஐநாவில் ஒப்புச்சப்புக்காவது தாங்களே தங்களுக்கு வாங்கிச்சினம்...

கொசொவாவில்..அரசுக்கு எதிரான.. போராளிகளுக்கு இவையே மேற் குறிப்பிட்ட அத்தனையையும் சப்பளை செய்திச்சினமே.. அப்போ ஐரோப்பிய நீதிமன்றம் என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டிருந்தது.

நீதிமன்றங்கள் எப்போ பக்கச் சார்ப்பாக தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தனவோ அப்ப தான்.. மக்களுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை அதிகரித்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமும் விதிவிலக்கல்ல. 

 

நீங்கள் பட்டியலிட்ட ஒவ்வொரு விடயத்தையும் ஒரு வழக்காக இதே நீதிமன்றில் போட முடியும்! செய்வீர்களா? செய்ய மாட்டீர்கள். ஏனெனில் வழக்கு ஆவணங்களைத் தயாரிக்கும் போதே நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

எனவே, தடையான அமைப்புகளையும், இறைமையுடைய நாடுகளையும் ஒப்பிட்டு பிரச்சார எழுத்து/பேச்சு மட்டுமே செய்ய முடியும்! வேறெந்தப் பயனும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கொசொவாவில்..அரசுக்கு எதிரான.. போராளிகளுக்கு இவையே மேற் குறிப்பிட்ட அத்தனையையும் சப்பளை செய்திச்சினமே.. அப்போ ஐரோப்பிய நீதிமன்றம் என்ன கொட்டாவியா விட்டுக்கொண்டிருந்தது.

20 minutes ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

Kosovo Liberation Army.

The Kosovo Liberation Army (KLA; Albanian: Ushtria Çlirimtare e Kosovës [uʃˈtɾija t͡ʃliɾimˈtaɾɛ ɛ ˈkɔsɔvəs], UÇK) was an ethnic Albanian separatist militia that sought the separation of Kosovo from the Federal Republic of Yugoslavia (FRY) and Serbia during the 1990s and the eventual creation of Greater Albania due to the presence of a vast ethnic majority of Albanians in the region,[b] stressing Albanian culture, ethnicity and nation.[2][3][4] It was considered a terrorist group until the breakup of Yugoslavia.[14]

 

Allies 21px-Flag_of_Albania_%281992%E2%80%93200 Albania

 

https://en.wikipedia.org/wiki/Kosovo_Liberation_Army

The KLA received large funds from the Albanian diaspora in Europe and the United States, but also from Albanian businessmen in Kosovo.[38] It is estimated that those funds amounted from $75 million to $100 million and mainly came from the Albanian diaspora in the Switzerland, United States and Germany.[22] The KLA received the majority of its funds through the Homeland Calls Fund, but significant funds were also transferred directly to the war zones. Apart from the financial contributions, the KLA also received contributions in kind, especially from the United States and Switzerland. These included weapons, but also military fatigues, boots and other supporting equipment.[39]

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

Kosovo Liberation Army.

The Kosovo Liberation Army (KLA; Albanian: Ushtria Çlirimtare e Kosovës [uʃˈtɾija t͡ʃliɾimˈtaɾɛ ɛ ˈkɔsɔvəs], UÇK) was an ethnic Albanian separatist militia that sought the separation of Kosovo from the Federal Republic of Yugoslavia (FRY) and Serbia during the 1990s and the eventual creation of Greater Albania due to the presence of a vast ethnic majority of Albanians in the region,[b] stressing Albanian culture, ethnicity and nation.[2][3][4] It was considered a terrorist group until the breakup of Yugoslavia.[14]

 

Allies 21px-Flag_of_Albania_%281992%E2%80%93200 Albania

 

https://en.wikipedia.org/wiki/Kosovo_Liberation_Army

The KLA received large funds from the Albanian diaspora in Europe and the United States, but also from Albanian businessmen in Kosovo.[38] It is estimated that those funds amounted from $75 million to $100 million and mainly came from the Albanian diaspora in the Switzerland, United States and Germany.[22] The KLA received the majority of its funds through the Homeland Calls Fund, but significant funds were also transferred directly to the war zones. Apart from the financial contributions, the KLA also received contributions in kind, especially from the United States and Switzerland. These included weapons, but also military fatigues, boots and other supporting equipment.[39]

இணைப்பிற்கு நன்றி! இதே விக்கிபீடியாவில் கொசோவாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்பியோர் ரஷ்யாவின் பெரும்பான்மையினராகிய சிலாவிக் இனத்தவர் என்பதும், அதனால் மேற்குலகம் கொசோவா விடுதலை அமைப்பை ஆதரித்தது என்பதையும்  நீங்கள் காணவில்லையா அல்லது அப்படி ஒரு தகவலே இல்லையா?
 

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்புக்களாயிருந்தாலும் சரி, நாடுகளாயிருந்தாலும் சரி..

வல்லாதிக்க நாடுகளுக்கு நீங்கள் வேண்டபடுகிறவர்களாயிருந்தால் நீங்கள் மனிதாபிமானிகள்,

வேண்டபடாதவர்களாயிருந்தால்  நீங்கள் சர்வதேச  பயங்கரவாதிகள்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து அமெரிக்க கூட்டாட்சிவரை  சர்வதேச சமூகத்திற்கு எந்த வகையிலும் புலிகள் அச்சுறுத்தலாய் இருந்ததில்லை...

இருந்தும் ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்றால்...

எமது நிலமும், மக்கள் முக்கியத்துவமும் சர்வதேச நிலபரப்பில் ...  அதியுச்ச கவன ஈர்ப்பை பெறவில்லை...

எந்த வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்ட அமைப்பு பக்கம் ஈர்க்க புலம் பெயர் ஈழதமிழர் எதுவுமே பெரிதாக செய்ததில்லை, 

புறநடையாக  வானொலிகளில் கவிதை படிப்பது, இணைய தளங்களில் ஆவேசமா பேசுவது, விரல்களை கொண்டு விசை பலகையை தட்டி விரிந்து கிடக்கும் இந்தியா சீனாவை திட்டி தீர்ப்பது... என்பதை தவிர ....

அதில் பிறரை குற்றம் சொல்ல ஏதுமில்லை, புலிகள் எனும்  ராட்சத தமிழர்களின் கேடயம் எம்மை சுற்றி இருக்கும்வரை எவனாலும் எம்மை ஏதும் செய்ய முடியாது, இந்த கோட்டையை எவரும்  தாண்டி வந்து  தமிழரை தொட முடியாது என்ற அழகழகான ஆசையில், அதீத நம்பிக்கையில் நாம் எல்லாருமே வாழ்ந்தோம்.

போய் முடிந்தது புலிகள் மட்டுமல்ல, ஈழ தமிழர்கள் இதுவரை சந்திருக்காத நம்பிக்கை விசுவாசம், வீரம், மானம், அர்ப்பணிப்பு, தியாகம், நேர்மை, ஜாதி மத பேதமற்று மக்களை மக்களாகவே பார்க்கும் ஒரு மாபெரும் பேரியக்கம்.

இனிமேல் புலிகள் தடையை எடுக்க சொல்லி எவனையும் கேட்கலாம்,

அவர்களும் தடையை எடுக்கலாம்...

எடுத்தாலும் அந்தகால புலிகளை தாயக விடுதலையிலும் சரி , தன்மான உணர்விலும் சரி எந்த கூட்டத்தினாலும் மீள கொண்டுவர முடியாது.

ஒற்றுமை என்றால் என்னவென்று தெரியாத ஒரு இனத்தில் பிறந்ததால் ஒற்றையாய் இருந்து எம் தலைவர் இந்த இனத்தை திருத்த எவ்வளவோ முயற்சி செய்தார்...

அவர் இனி திரும்பி வரபோவதில்லை, எத்தனை தடைகளை எம் மீது போட்டாலும் சரி விலக்கினாலும் சரி...

இப்போது தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பி எம் டபிள்யூ காரில் அலைபவர்களை மனசில் வைத்து சர்வதேசம் தடையை போட்டாலும் விலக்கினாலும்...

எமக்குள்ள பாதிப்பு என்றுமே அப்படியே இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

இணைப்பிற்கு நன்றி! இதே விக்கிபீடியாவில் கொசோவாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்பியோர் ரஷ்யாவின் பெரும்பான்மையினராகிய சிலாவிக் இனத்தவர் என்பதும், அதனால் மேற்குலகம் கொசோவா விடுதலை அமைப்பை ஆதரித்தது என்பதையும்  நீங்கள் காணவில்லையா அல்லது அப்படி ஒரு தகவலே இல்லையா?

 

1 hour ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் செயல் புரிந்தோர் இறைமையுடைய நாடுகள் என்பது உச்சந்தலையில் உறைக்கும்!

 

1 hour ago, nedukkalapoovan said:

It was considered a terrorist group until the breakup of Yugoslavia.[14]

 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, valavan said:

அவர் இனி திரும்பி வரபோவதில்லை, எத்தனை தடைகளை எம் மீது போட்டாலும் சரி விலக்கினாலும் சரி...

இப்போது தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பி எம் டபிள்யூ காரில் அலைபவர்களை மனசில் வைத்து சர்வதேசம் தடையை போட்டாலும் விலக்கினாலும்...

எமக்குள்ள பாதிப்பு என்றுமே அப்படியே இருக்கும்.  

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை. எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் அதனை ஆரம்பித்தவர்கள் விடுதலையை பெற்றுக் கொடுத்ததாக இல்லை. அதேபோல்.. ஆரம்பித்த போராட்ட வடிவத்தாலேயே வென்றி கொண்டதாகவும் இல்லை.

அது.. தென்னாபிரிக்க கறுப்பின விடுதலையாக இருக்கட்டும்.. கிழக்குத் திமோர் விடுதலையாக இருக்கட்டும்.. கொசாவோ விடுதலையாக இருக்கட்டும்.. நாங்கள் சமீப கால வரலாற்றில் கண்டவற்றில் கூட இதுவே தான் யதார்த்தமாகும்.

ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்த நெல்சன் மண்டேலா.. பின்னர் ஜெயிலில் தான் அதிகம் இருந்தார்.. போராட்டக் களத்தில் அல்ல. ஆனால் இறுதியில் ஆயுதமற்ற வழியில் தான் விடுதலை அவருக்குச் சாத்தியமானது. 

ஒருவேளை தலைவர் இருந்திருந்தால் கூட.. இன்றைய பூகோள நகர்வுகளை கருத்தில் கொண்டு அவரும் நிச்சயம்.. எமது தாயக விடுதலையை பிறிதொரு வடிவில் நகர்த்தவே முயன்றிருப்பார். அதனால் தான் என்னவோ.. வழமையாக வலிந்து யுத்தத்தை ஆரம்பிக்கும் புலிகள் கடைசிவரை.. 4ம் கட்ட ஈழப்போரில்.. வலிந்து தாக்குதல்களை தவிர்த்தே வந்தனர். 

புலிகள் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை அதன் தேவையை உலகறியச் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஒரு பிராந்தியத்துக்குள் தந்தை செல்வாவால் ஒலித்த தமிழீழக் கோரிக்கை இன்று சர்வதேசப் பரப்பில் ஒலிக்கிறது என்றால்.. அது புலிகளால் தான். எனவே புலிகள் ஆரம்பித்த வடிவில் இல்லை என்றாலும்.. தமிழீழ தேச விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய வழிகளை ஆராய்ந்து அதனை முன்னகர்த்திச் செல்வதே தமிழ் மக்களுக்கும் மண் மீட்க போராடி வீழ்ந்த தியாகிகளுக்கும் செய்யும் இனக்கடமையாக இருக்க முடியும். அதையே சிறை மீண்ட பின் மண்டேலா செய்து காட்டினார். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

 

 

 

சரி, இந்த அமைப்பிற்கு உதவிய நாடுகள், கண்டும் காணாமலிருந்த நாடுகளை நீதிமன்றில் நிறுத்த முடியுமா? இல்லையல்லவா?

மேலும் இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் - நாட்டின் தலைவராக வந்த பின்னர் கூட- போர்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது ஹேக்கில் தடுப்பில் இருக்கிறார். இதன் அர்த்தம் தடை செய்யப் பட்ட அமைப்புகளும் இறைமையுடைய அரசுகளும் நீதிமன்றில் ஒன்றாகப் பார்க்கப் படுவது கிடையாது! 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சரி, இந்த அமைப்பிற்கு உதவிய நாடுகள், கண்டும் காணாமலிருந்த நாடுகளை நீதிமன்றில் நிறுத்த முடியுமா? இல்லையல்லவா?

மேலும் இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் - நாட்டின் தலைவராக வந்த பின்னர் கூட- போர்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது ஹேக்கில் தடுப்பில் இருக்கிறார். இதன் அர்த்தம் தடை செய்யப் பட்ட அமைப்புகளும் இறைமையுடைய அரசுகளும் நீதிமன்றில் ஒன்றாகப் பார்க்கப் படுவது கிடையாது! 

நீதி என்பது எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டும். அது இல்லாமல் இப்படிப் பக்கச்சார்ப்பாக அமைவது தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நீதிச் சமனிலைக்காகவும் தான் இந்த உலகில் குரல்கொடுக்க வேண்டி உள்ளது. எமக்கான நீதி அந்தக் குரலின் வெற்றியில் தங்கியுள்ளது.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும்.. இறைமயற்ற நாட்டு மக்கள் ஆகிய எமக்கும்.. அப்படி இந்த உலகில் வாழும் பிற இன மக்களுக்கும்... நீதி மறுக்கப்படக் கூடாது. அவர்களும் தமக்கான அரசியல் சமூக பொருண்மிய விடுதலையுடன் கூடிய உரிமையை சுவைக்க உரித்துடையவர்களே. அதனை ஐரோப்பிய நீதிமன்றக் கணவான்கள் மறுதலிக்கக் கூடாது.. தங்களுக்கு எட்டிய அறிவை மட்டும் வைச்சுக் கொண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:59, nedukkalapoovan said:

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை. எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் அதனை ஆரம்பித்தவர்கள் விடுதலையை பெற்றுக் கொடுத்ததாக இல்லை. அதேபோல்.. ஆரம்பித்த போராட்ட வடிவத்தாலேயே வென்றி கொண்டதாகவும் இல்லை.

அது.. தென்னாபிரிக்க கறுப்பின விடுதலையாக இருக்கட்டும்.. கிழக்குத் திமோர் விடுதலையாக இருக்கட்டும்.. கொசாவோ விடுதலையாக இருக்கட்டும்.. நாங்கள் சமீப கால வரலாற்றில் கண்டவற்றில் கூட இதுவே தான் யதார்த்தமாகும்.

ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்த நெல்சன் மண்டேலா.. பின்னர் ஜெயிலில் தான் அதிகம் இருந்தார்.. போராட்டக் களத்தில் அல்ல. ஆனால் இறுதியில் ஆயுதமற்ற வழியில் தான் விடுதலை அவருக்குச் சாத்தியமானது. 

ஒருவேளை தலைவர் இருந்திருந்தால் கூட.. இன்றைய பூகோள நகர்வுகளை கருத்தில் கொண்டு அவரும் நிச்சயம்.. எமது தாயக விடுதலையை பிறிதொரு வடிவில் நகர்த்தவே முயன்றிருப்பார். அதனால் தான் என்னவோ.. வழமையாக வலிந்து யுத்தத்தை ஆரம்பிக்கும் புலிகள் கடைசிவரை.. 4ம் கட்ட ஈழப்போரில்.. வலிந்து தாக்குதல்களை தவிர்த்தே வந்தனர். 

புலிகள் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை அதன் தேவையை உலகறியச் செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். ஒரு பிராந்தியத்துக்குள் தந்தை செல்வாவால் ஒலித்த தமிழீழக் கோரிக்கை இன்று சர்வதேசப் பரப்பில் ஒலிக்கிறது என்றால்.. அது புலிகளால் தான். எனவே புலிகள் ஆரம்பித்த வடிவில் இல்லை என்றாலும்.. தமிழீழ தேச விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய வழிகளை ஆராய்ந்து அதனை முன்னகர்த்திச் செல்வதே தமிழ் மக்களுக்கும் மண் மீட்க போராடி வீழ்ந்த தியாகிகளுக்கும் செய்யும் இனக்கடமையாக இருக்க முடியும். அதையே சிறை மீண்ட பின் மண்டேலா செய்து காட்டினார். 

நெடுக்கர் நீங்கள் கூறுவது சரி.ஆனால் மண்டேலாவைப்போல் மதிநுட்பத்தோடு மக்களை இணைத்துப் பயணிகக்கூடிய, மக்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தலைமையென்று யாராவது இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:23, Justin said:

எனவே, தடையான அமைப்புகளையும், இறைமையுடைய நாடுகளையும் ஒப்பிட்டு பிரச்சார எழுத்து/பேச்சு மட்டுமே செய்ய முடியும்! வேறெந்தப் பயனும் இல்லை!

ஏன் தலிபானும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புத்தானே? இப்போ அவர்கள் ஆட்சி செய்யும்போது வாய்பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 21:19, nedukkalapoovan said:

நீதி என்பது எல்லோருக்கும் சமனாக இருக்க வேண்டும். அது இல்லாமல் இப்படிப் பக்கச்சார்ப்பாக அமைவது தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நீதிச் சமனிலைக்காகவும் தான் இந்த உலகில் குரல்கொடுக்க வேண்டி உள்ளது. எமக்கான நீதி அந்தக் குரலின் வெற்றியில் தங்கியுள்ளது.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும்.. இறைமயற்ற நாட்டு மக்கள் ஆகிய எமக்கும்.. அப்படி இந்த உலகில் வாழும் பிற இன மக்களுக்கும்... நீதி மறுக்கப்படக் கூடாது. அவர்களும் தமக்கான அரசியல் சமூக பொருண்மிய விடுதலையுடன் கூடிய உரிமையை சுவைக்க உரித்துடையவர்களே. அதனை ஐரோப்பிய நீதிமன்றக் கணவான்கள் மறுதலிக்கக் கூடாது.. தங்களுக்கு எட்டிய அறிவை மட்டும் வைச்சுக் கொண்டு. 

 

On 4/12/2021 at 21:10, Justin said:

சரி, இந்த அமைப்பிற்கு உதவிய நாடுகள், கண்டும் காணாமலிருந்த நாடுகளை நீதிமன்றில் நிறுத்த முடியுமா? இல்லையல்லவா?

மேலும் இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் - நாட்டின் தலைவராக வந்த பின்னர் கூட- போர்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது ஹேக்கில் தடுப்பில் இருக்கிறார். இதன் அர்த்தம் தடை செய்யப் பட்ட அமைப்புகளும் இறைமையுடைய அரசுகளும் நீதிமன்றில் ஒன்றாகப் பார்க்கப் படுவது கிடையாது! 

 

2 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் தலிபானும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புத்தானே? இப்போ அவர்கள் ஆட்சி செய்யும்போது வாய்பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

நீங்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் மூர்கமாக உடன்படுகிறீர்கள் (agreeing violently).

உள்நாட்டு சட்டமும், சர்வதேச சட்டமும் ஒன்றல்ல. 

உள்நாட்டு சட்டத்தில் இருக்கும் நீதியின் மேலாண்மை (rule of law), சட்டத்தின் முன் அநேகரும் சமன் (equality before law) என்பன சர்வதேச சட்டத்தில் வெறும் பேச்சளவில்தான் உண்டு.

சர்வதேச சட்டம் என்பது சட்டமே அல்ல, அது ஒரு உலக ஒழுங்கு (world order) என்பது ஒரு பார்வை.

இதில் state party களே எல்லாம். Judge, jury and executioner. அரிதாக சில non state parties பங்களிக்கும்.

குறிப்பாக பலமான state parties அல்லது வசதியான state parties இன் கூட்டுக்களே, எதிரெதிராக இருந்து இந்த ஒழுங்கை தீர்மானிக்கின்றன.

மனித நாகரீகத்தில் நாடுகள் என்ற concept  வந்த நாள் முதல் இதுதான் நிலை. இனியும் இது மாறப்போவதில்லை.

உலகம் முழுதும் ஒரு ஒற்றை தலைமையின் கீழ் வந்து, world parliament, world police என்று வரும் வரை இதுதான் தொடரும் (அப்படி வராது என சொல்லி தெரிய தேவையில்லை).

ஆகவே பலம் பொருந்திய நாடுகளின் நலனுக்கு ஏற்ப ஒரு சமயம் மண்டேலாவை பயங்கரவாதி என்பார்கள், மறு சமயம் பங்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து தேனீர் கொடுத்து, வெஸ்மினாடரில் சிலையும் வைப்பார்கள்.

இந்த உலக ஒழுங்கை தமக்கு சாதகமாக வளைத்து, பலமான நாடுகளுக்கு நண்பணாகி, அவர்களுக்கு உதவியாக இருக்கும் இடத்தில் எம்மை position  பண்ணி, தமது போராட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு போகும் non state party தலைவர்களே - இந்த ஒழுங்கில் ஈர்க்கப்பட்டு வெற்றி ஈட்டி, ஈற்றில் அவர்களே state party யும் ஆகிறார்கள்.

மண்டேலா, காந்தி இந்த அணுகுமுறையில் வெற்றி ஈட்டிய உதாரணங்கள்.

அரபாத் ஒரு அளவுக்கு முன்னேறினாலும் இஸ்ரேல் மிக தந்திரமாக அவரின் பாதையை அடைத்து விட்டது. ஹமாஸ், ஹிஸ்புல்லா உசார் மடையர்கள் இதற்கு துணை போனார்கள்.

தலிபான் மிக அண்மைய உதாரணம். Revolutionary students front, stable state party in Afghanistan, state sponsors of terrorism, terrorists, de-listed insurgents, peace talk partners, state party in Afghanistan.

👆🏼 1996-2021 வரை தலிபான் பற்றிய மேற்கின் பார்வை இது.

அடிப்படையில் ஒரே தலிபாந்தான்.

மாறிகள் (variables) - மேற்கு மீதான தலிபானின் அணுகுமுறையும், மேற்கின் பிராந்திய, பாதுகாப்பு தேவைகளும் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nochchi said:

நெடுக்கர் நீங்கள் கூறுவது சரி.ஆனால் மண்டேலாவைப்போல் மதிநுட்பத்தோடு மக்களை இணைத்துப் பயணிகக்கூடிய, மக்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தலைமையென்று யாராவது இருக்கிறார்களா?

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

ம்கூம் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அக்னியஷ்த்ரா said:

இருக்கிறாங்கோ ...இருக்கிறாங்கோ 
சுமந்திரன் அங்கிளும் அம்பிகா அன்ரியும் 

 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கூம் 

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

என்ன சார்வாள்  செய்வது 
பொன் ராமநாதன் காலத்திலிருந்தே நமக்கு அந்த தகுதி கிடையாதே, சிங்களவனுக்கு காவடி எடுப்பது தானே எமக்கு பிடிக்கும், லண்டன் போய் வழக்குப்பேசி தேரில் இழுத்துச்செல்லப்படுவதற்கு போட்ட முயற்சி (effort) இல் ஒரு இரண்டு வீதம் தன்னோட சொந்த இனத்தின் நன்மைக்காக போட்டிருந்தாலே போதுமே 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் தம்மைத்தாமே ஆளத்தகுதியுள்ளவரானால், அவர்களிடம் அதற்கு தகுதியான பல தலைவர்கள் இருந்திருப்பார்கள். 

என்ன செய்வது தலைவராவதை பலர் விரும்புவதில்லை காலை வாருவது வழமைதானே 

புலிகள் இப்போதும் பலத்துடன் இருந்து தமது கடந்த கால தவறுகளை திருத்தி,  அந்த பலத்தை வைத்து பேரம் பேசி தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை (அது தமிழீழமாய் இருக்கவேண்டும் என்றில்லை)  பெற்று கொடுப்பார்கள் என்றால் தடையை நீக்குவதில் அரசியல் பலன் தமிழ் மக்களுக்கு உண்டு. 

இப்போது தடையை நீக்கினால் புலம்பெயர் சுயநல புலிவால்கள் தமது திருட்டை தொடர மட்டுமே இந்த title ஐ பயன்படுத்துவார்கள். உருப்படியாக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகள் பட்டறிவு உணர்ததி நிற்கிறது. 

ஆகவே இனி தடை நீக்கி எந்த பலனும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2021 at 13:18, tulpen said:

புலிகள் இப்போதும் பலத்துடன் இருந்து தமது கடந்த கால தவறுகளை திருத்தி,  அந்த பலத்தை வைத்து பேரம் பேசி தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை (அது தமிழீழமாய் இருக்கவேண்டும் என்றில்லை)  பெற்று கொடுப்பார்கள் என்றால் தடையை நீக்குவதில் அரசியல் பலன் தமிழ் மக்களுக்கு உண்டு. 

இப்போது தடையை நீக்கினால் புலம்பெயர் சுயநல புலிவால்கள் தமது திருட்டை தொடர மட்டுமே இந்த title ஐ பயன்படுத்துவார்கள். உருப்படியாக எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதை கடந்த 40 ஆண்டுகள் பட்டறிவு உணர்ததி நிற்கிறது. 

ஆகவே இனி தடை நீக்கி எந்த பலனும் இல்லை. 

புலத்தில் இருக்கும் அத்தனை மக்களும் முட்டாள்கள். உங்களைத் தவிர??

இது ஒரு வகை மனநோய் தான்.???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடை நீக்க முயற்சி தவிர வேறெந்த நேரத்திலும் நா.க.த.அ பெயர் செய்திகளில் வருவதில்லை. தற்போது சில விடயங்கள் செய்ய முடியாமல் தவிக்கிற புலிகளின் வால்கள் தவிர வேறு எவருக்கும் தடை நீக்கத்தால் ஒரு பயனுமில்லை! மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இந்த தடை நீக்க முயற்சி தவிர வேறெந்த நேரத்திலும் நா.க.த.அ பெயர் செய்திகளில் வருவதில்லை. தற்போது சில விடயங்கள் செய்ய முடியாமல் தவிக்கிற புலிகளின் வால்கள் தவிர வேறு எவருக்கும் தடை நீக்கத்தால் ஒரு பயனுமில்லை! மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தான்.

அப்படியே உலகத்தில் அவர்கள் பெயர் நிலைப்பதற்காக பாடுபடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தான்.

அப்படியே உலகத்தில் அவர்கள் பெயர் நிலைப்பதற்காக பாடுபடுகிறீர்கள்?

இப்போது தமிழர்கள் செய்ய வேண்டிய முதல் பத்து அவசரச் செயல்பாடுகளை பட்டியலிடச் சொன்னால், ஊர், உலக நிலவரம் தெரிந்த எவரும் "புலிகளின் பெயரை நற்பெயராக மீள உலகுக்குக் காட்டுதல்" என்பதை அந்தப் பத்துக்குள் சேர்க்க மாட்டார்கள்! 

இல்லாமல் போன ஒரு அமைப்பை, தியாகத்தை நன்றியுடன் தமிழ் மக்கள் நினைவுகூர்கின்றனரா இல்லையா? இதை விட இல்லாத ஒரு அமைப்பை exonerate செய்யும் முன்னெடுப்புகள் தமிழருக்கு ஒரு செயற்பாட்டு ரீதியான நன்மையும் தரா என்பதால் அது அவசியமில்லை!   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மக்களும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை!

யார் அவர்கள் சுமத்திரன் ஆட்களோ ?

யாழில் பொய்களை  விதைப்பதே உங்கள் நோக்கமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.