Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

13 NOV, 2022 | 08:52 PM
image

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

இதற்காக வருகிற செவ்வாய் கிழமை நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் ஒன்று கூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கிறோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நீங்கள் சமூகம் தருவீர்கள் என்று நம்புகிறோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139932

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல். இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமானால் இனிமேல் சகலவற்றையும் நாம் மறக்க வேண்டியதுதான். 

எங்களுக்கு அரிசிதான் தேவை. அது யார் குற்றினாலென்ன, யார் அவித்தாலென்ன? 

கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது.

இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல முயற்சி

நல்லது நடந்தால் அதுவே இன்றைய தேவை 

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

1) கபிதன் இரட்டைப் பேச்சு வேண்டாம். 

2) யார் குற்றினாலும் அரிசி தான் தேவை எனும் நீங்கள் சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது நகைப்பிற்குரியது. இதுவரை சம்பந்தனின் தலைமையில் தமிழர்களுக்கு பொங்கியது போதும்…

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையைhக இருநத கூட்டமைப்பை துண்டுகளாக உடைத்தததே நீங்கள்தான். நீங்களும் .சம்பந்தனும் விலகிநின்றாலே  போதும் எல்லாம் நல்லபடி நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு அமைச்சு பெற்றுத்தருகிறேன்....ரணிலுடன் சேர்வோம் என்பதே இதன் கருத்து...😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சர்வகட்சி மாநாடு நடத்தலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, satan said:

இவர் வெளியேறினால்; மற்ற எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இப்போ, வாங்கோ சேருங்கோ என்று அழைப்பார், காரியம் முடிந்தவுடன் விரட்டுவார். விக்கினேஸ்வரன், ஆனோல்ட், சிறிதரன் என்று பட்டியல் நீளும்!

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனும் சுமந்திரனும் அரசியலிருந்து விலகினால் ஈழத்தமிழருக்கு விமோசனம் உண்டு.

இரண்டும் தேவையில்லாத ஆணிகள்.

உண்மையும் அதுதான்.

 

4 hours ago, Kapithan said:

சம்பந்தனின் தலைமையில் ஆரம்பிப்பதுதான் தற்போதைய நிலையில் விவேகமான செயல்.

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

3 hours ago, Kapithan said:

அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.

இதைத் தானே குமார் பொன்னம்பலம் 2009 இல் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறார்.

அதனாலேயே இந்தியாவின் எரிச்சலுக்கு உள்ளாகி சகல வழிகளிலிலும் அவரது கட்சிக்கு அலுப்பு கொடுக்கிறார்கள்.

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை.

இந்த வருடத்துக்குள் தீர்வு என்று ரணில் சொன்னபடியால்

அனேகமாக உள்ள தமிழ்கட்சிகளின் உறவுகளையும் முறித்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமையாக இருந்த  தமிழ்க் கட்சிகளுக்கு இடையில்…
பேதங்களை வளர்த்து, பிரித்து விட்டதே நீங்கள் தான்.
இப்போ… சாத்தான் வேதம் ஒதுகின்ற மாதிரி உள்ளது உங்கள் அழைப்பு.

பேதங்கள் உங்களில் இல்லை என்றதற்கான சமிக்சையை,
நீங்கள் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆனால் அதனை, சம்பந்தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கச் சொல்வது…
உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே வெளிப் படுத்துகின்றது.

உண்மைதான், ஆனால் பாவம் வயதுபோன நேரத்திலை ஐயாவை இழுத்துக்கொண:டு திரியேக்கை ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமாக இருக்கலாம். சந்திப்பை அவரது இல்லத்தைவிடுத்து ஒரு பொது இடமாக வைத்திருந்தால் ஒருவேளை 90வீதமான வெற்றியை பெற்றிருக்கலாம்.
இந்த ஒன்றிணைப்பு முயற்சியும் இவர்களது சொந்த சிந்தனையாக இருக்க வாய்ப்பில்லை.அண்மைய சந்திப்புக்களின் பெறுபேறாகவே இருக்க வாய்ப்புள்ளது.

அதேவேளை இங்கு கருத்தெழுதிய பலரது வினாக்கள் நியாயமானதே. அவை கடந்த காலப் பட்டறிவின் விளைவு.

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கும் வேறை வேலையில்லை உங்களுக்கும் வேறை வேலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) இரட்டைப் பேச்சு என்பதை நிரூபியுங்கள். சம்பந்தன் மீது எல்லோருக்கும் விமர்சனம் உண்டு என்பது உண்மைதான். அதற்காக சம்பந்தனது அனுபவத்திற்கு சமமாக முன்னிலைப்படுத்துவதற்கு  அங்கே யார் இருக்கிறார்கள்? 

2) சம்பந்தன் தவிர்த்து முன்னிலைப்படுத்த ஒருவரைக் கூறுங்கள் பார்க்கலாம் ? CVK சிவஞானம் 🤣

இந்தச் சந்தர்பம் TNA யாலோ அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளினால் வந்ததல்ல என்பது முக்கியமான விடயம். இந்தச் சந்தர்பம் மேற்குலகால் கொடுக்கப்படுகிறது. அது சிங்களவர் தமிழர் என எல்லோருக்கும் கொடுக்கப்படும் சந்தர்ப்பம். எனவே வீண் கற்பனைகளில் மூழ்காதீர்கள். 

நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

13 என்று தானே கொஞ்ச நாளாக இந்தியா சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொண்டிருந்தவை

பதின்மூன்றை சும்மா அப்பப்போ அசைத்து வேடிக்கை காட்டுறதும், வெருட்டுறதும் இந்தியாவின் பம்மாத்து வேலை. பதின்மூன்றை கொடுத்தால் நாளடைவில் அதற்கு மேல் போவார்கள் ஆகவே அதை வைத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவதே இந்தியாவின் திறமை. இல்லையாயின் இத்தனையாண்டுகளாய் தமது திட்டத்தை நிறைவேற்றாமல் அடம்பிடிக்கும் இலங்கைக்கு ஓடியோடி உதவுவதேன்? இலங்கையும் கூச்சமில்லாமல் கையை நீட்டுகிறது.

 அதென்ன ....... ஒருவர் எப்ப பார், அரிசி குத்துறதிலேயே குறியாய் இருக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1) நீங்கள் தூக்கிப் பிடிக்கும் சும் ஐ விட CVK க்கு அரசியல் அனுபவமும் நிர்வாக திறமையும் அதிகம் உள்ளது.

2) இவ்வளவு காலமும் கற்பனையில் இருந்தது தாங்கள், அமெரிக்காவடன் இணைந்து சும் தீர்வு கொண்டுவரப் போகிறார் என்று அவித்து விட்டது தாங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

3) இதுவரை காலமும் சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்காத சும் இன்று  பல்டி அடித்துள்ளார்.

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

9 hours ago, satan said:

உண்மையும் அதுதான்.

 

இதுவரை காலமும் ஆரம்பித்தது எல்லாம் இவர் தலைமையிர்த்தானே அப்போ ஆகாதது எல்லாம் இப்போ ஆகிவிடுமோ?

அவரது அனுபவத்தினால் தமிழருக்கு சாதித்தது என்ன என்பதை ஒருக்கா அடுக்கிவிடுங்கள் நாங்களும் பாப்போம்! சிங்களவன் அவரின் சேவையில் நனைந்து தங்க விருது கொடுக்கிறான், நாங்கள் எதை கொடுக்க? எங்களிடம் இருந்ததெல்லாம் தாரைவார்த்து அவருக்கு தங்கபரிசு  வாங்கிகொடுத்திருக்கிறோம், அதோடு வீடு போய்ச்சேருவதுதான் அவருக்கும் அவரை நம்பிய மக்களுக்கும் செய்யும் உதவி. இன்னும் பேராசைப்பட்டு அடம்பிடிக்கப்படாது. 

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

1) மீராவீட்டுக் கத்தரிக்காய் முத்திவிட்டது..😉. ஆனால் CVK யின் அரசியல் அனுபவம் , நிர்வாகத் திறமை தவிர்ந்த வேறு  முக்கியமான இரு விடயங்களை சோற்றில் மறைத்துவிட்டீர்களே MIர..😉

2) இப்போது  அரசியல் தீர்வை கொண்டுவர அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பிற்கும் நிற்பந்தந்தத்தைக் கொடுப்பது யாராம்? இந்தியா என நம்புகிறீர்களோ ? 

3) உமது மூக்குப் போனாலும் பரவாயில்லை, சும்மிற்கு சகுனம் பிழைக்கோணு என்கிறீரா? நல்ல ஆளய்யா நீவீர்..😀

சம்பந்தன் வேண்டாம் என்றால் இன்னொருவரின் பெயரை முன்மொழிவதுதானே சரியான அணுகுமுறை? 

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உங்கள் கூடைக்குள் தான் முத்தின கத்தரிக்காய்கள் உள்ளன.

இங்கு CVK ஐ கொண்டு வந்ததே தாங்கள் தான்.

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

என்னிடம் கூடையே இல்லாதபோது கத்தரிக்காய் மட்டும் எப்படி வரும் ? 

CVK யை உதாரணமாகத்தான் கூறினேன்.

பொறிக்கு வந்து எலி வடையைச் சாப்ப்ட்டால் பொறி என் செய்யும்? 

😉

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

தாங்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

நம்பிக்கை தான் வாழ்க்கை இதுவரையும் 12 வருடங்கள் தாண்டியும் ஒன்றையும் காணோம் அப்படியானவர்களிடம் நம்பி நம்பி ஏமாறுவது சரியா அண்ணை?

என்னிடமும்  இதே கேள்விகளும் சந்தேகங்களுமுண்டு
ஆனால் பிரச்சினைகளை வளர்ப்பது  அல்லது அதைப்பற்றி  பேசி அலசிக்கொண்டு நேரத்தை  வீணடிப்பதைவிட
பேசிப்பார்க்கலாமே?
ஒரு முயற்சியையாவது  செய்து  பார்க்கலாமே???
போனாலும்  உரோமம்  தானே போகப்போகிறது

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 11:14, MEERA said:

உங்களிடம் கூடையே இல்லத போது அமெரிக்கன் தீர்வு வரப் போகிறது என்று அவித்தீர்கள் இப்போது பொறி உள்ளது எலி வரும் என்கிறீர்கள்.

உங்கள் திட்டம் இங்கு செல்லாது, கிளம்புங்கள் காத்து வரட்டும்….

ஐயோ அதை ஏன் நியாபகப்படுத்துறியள்🤣.

சும் சாணாக்கியன் கனடா வந்த நேரம் கற்ப்ஸ் அவிச்ச, அவியல் - நாகபூசணி அம்மன் அன்னதானத்தில கூட இராது🤣.

நான் கொஞ்சம் டவுட் ஆகி ஒரு கேள்வி கேட்க,

கொஞ்சம் அமெரிக்கன் படை இப்பவே கொழும்பில இறங்கீட்டு எண்டெலே ஒரே போடாய் போட்டவர்🤣.

ஒன்றில் இவர் அதீத கற்பனாவாதி.

அல்லாட்டில் யாரோ ஆளுக்கு நல்லா மொட்டையும் அடிச்சு, சந்தணமும் தடவி, விட அதை இங்க வந்து அவிச்சு இறக்கி இருக்கிறார்.

இந்த இலட்சணத்தில் உலக அரசியல் வியாக்கியானம் வேற.

#சாமி இங்கிலீஷ் எல்லாம் பேசுது 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.