Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

315690_10150350842531551_702766550_8698188_1057607670_n.jpg

மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

Edited by valvaizagara

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை.... :):blink:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. :) ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது. :blink:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..! :(

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :blink:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :)

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி. :blink::)

:(:lol: :lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

:blink::(:lol: :lol: நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

அப்ப.... கவிதையை, நேற்றுக்கு முந்த நாளே.... அவுட்டு விட்டாச்சா...... :)

ஐயோஓஓஓஒ தமிழ் சிறி அண்ணா நான் சகரா அக்கா எழுதிய முதல் கவிதைகளை சொன்னன் :blink::(

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பு

blushing-main_Full.jpg

மழைக்காடு வறன்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?

எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும்

கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்?

பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக

வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்?

வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும்

வனையப்படாத வினையூக்கி எது?

நெருஞ்சியை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை

அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கனபேர் தமிழ் பெயில் போலை கிடக்கு :D

எழுத்துப் பிழைகள் உண்டு குமாரசாமியார். திருத்தியுள்ளேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேராக, பக்கவாட்டாக, தலைகீழாக நின்று எப்படி வாசித்துப் பார்த்தாலும் ஒன்றும் விளங்கின்றமாதிரி தெரியவில்லை.. எதோ ஒரு பேரின்பத்தை பூடகமாக சொல்வது போலவும் கிடக்கு, ஏதோ ஒரு சந்தோசத்தை ஒளிச்சுப் பிடிச்சு கவிதையாக்கினமாதிரியும் கிடக்கு. தயங்கு இயங்கு கவிதையின் இரண்டாம் பாகமோ என்றும் ஒரு எண்ணம் இடையில் ஓடுது. வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாத என் 'வீட்டுச் சூழலில்' காண்பதெல்லாம் 'அது' போலத்தான் எனக்கு தோன்றுதோ என்றும் தெரியவில்லை....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றும், காமாலைக்கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்னும் பழமொழிகள் ஏன் உருவாகியது என்று நிழலி உங்கள் பதிவில் புரிகிறது. :D

மண்டை தான் உடைப்பு எடுக்கும் போல சகாறா. ஒன்றும் விளங்கவில்லை.படம் தான் ஆயிரம் வரிகளை சொல்லி நிற்கிறது.

நுணாவிலான் இப்போதுதான் நான் கவிதை எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறேன் :lol:

இதுக்கு நான் எழுதிற செய்யுளே பரவாயில்லை போல..!

இசை இது காதல் கவிதை அதுதான்.

நீங்க கேட்ட.... கேள்விக்கு ......ஒரே ..... ஒரு பதில்.

ஸ்ரீலங்காவில் புலிகள் இல்லை.

:lol:

சஹாரா அக்கா எதுவும் புரியிற மாதிரி தெரியலை தலையைக் கொண்டுபோய் சுவரோடை முட்டவேணும் போல இருக்கு :lol:

சஹாரா அக்கா என்னைப் போல ஞானசூனியங்களுக்கும் புரியும் படி எழுதலாமே :o

உண்மையாக ஒவ்வொரு பந்தியும் ஒவ்வொரு கருத்தை சொல்வதாய் எனக்கு படுகிறது.

தப்பா இருந்தால் மன்னியுங்க

இதற்குமேல் இக்கவிதையைப் புரிகிற மாதிரி எழுதத் தெரியவில்லை

அய்யோ..சகாராக்கா எங்களுக்காக கவிதை எழுத இல்லை ஜீவா.திருமணம் செய்தவர்களுக்காகத் தான் எழுதி இருக்கிறா.அப்போ அவைக்குத் தான் விளங்கும்.எங்களுக்கு சுத்த சூனியம் தான் இப்போ யாழில் உலாவரும் அனேகமான கவிதைகள்.நாங்கள் இந்தப் பக்கம் தலை காட்டாமல் இருப்பதே மேல்.நன்றி.

"காதலிக்கக் கற்றுக் கொள்" கவிதையை நீங்கள் இன்னும் வாசிக்கவில்லையோ?

நேற்றே சகாரா அக்காவிடம் சொன்னன் கவிதை புரியவில்லை என்று.....

தினமும் கண்ணீரோடே வீடு திரும்புகிறேன் என்னும் எதிர்பார்ப்புக் கவிதை உருவாவதற்கு முன் ஒரு கவிதை எழுதியிருப்பின் அதன் பொருளை இக்கவிதை சுமக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் சுஜி. நீங்கள் என்னைக் காதல் கவிதை எழுத மாட்டீர்களா என்று கேட்டீர்கள் அல்லவா அதற்காகத்தான் இதனை இணைத்தேன்.

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :lol:

பொருளுரை வழங்கிய காவாலிக்கு நன்றி. பொருளுரைக்குள் சின்னப் பொழிப்புரையும் இலகுவாக இளசுகளுக்கு விளங்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.

மாற்றங்கள் இல்லையென்றால்,

பூமி, இன்னும் எரிகின்ற கோளப் பந்து..

கடற்படை கொண்ட சோழப் பேர‌ர‌சு,

காணாம‌ற் போன‌தேன் ?

ஆங்கில‌ சாம்ராச்சிய‌ம்,

அஸ்த‌ம‌த்தை க‌ண்ட‌தேன் ?

வ‌ர‌லாறு, வென்ற‌வரின்

சுய‌ச‌ரித‌ம் அல்ல‌..

க‌ருத்திருக்கும் ம‌ட்டும்,

க‌ன‌வுக‌ள் இருக்கும்..

க‌ன‌வுக‌ள் ஓர் நாள்,

காட்சிக‌ளாகும்..

ஈசன் உங்கள் கோணத்தில் நின்று பார்த்தலும் நன்றாக இருக்கிறது.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உடைப்பு என்ற சொன்னவுடம் வந்து பார்த்தன் ஐயோ ஐயோ

:unsure::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

படம் ஒரு நல்ல கவிதை!

முடிந்தவரை பொருளுரைக்கிறேன்.

எப்படித்தான் மூடி மறைத்தாலும்

உள்ளே இருப்பது வெளியேவரும்

கைகளுக்கு இடையே சிறு உடைப்பு-அது

காதலைச் சொல்வதாய் படைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

மழை என்றால் குடைபிடிக்கவும்

வரி என்றால் ஓடி ஒழிவதும்

சக்கரை என்ற வியாதி ஒன்றையும்

எண்ணை என்றவுடன் விலை ஏறுவதும்

கன்னம் என்றால் கொஞ்ச என்பதாயும்

பூமி என்பது ஓடி ஒழிக்க என்றும்

வானுலகத்தை அடைய விரும்புவதும்

வல்லமை என்று கொக்கரிப்பதும்

வனையப்படாதவை என வெறுப்பதும்

நெருஞ்சியை கண்டால் தொட முயல்வதும்

அறிவோமன்றி

அள்ளி வந்த காற்றின் முகவரி

யாரறிவார் அக்கா?

புரிந்தால்தானே பதில்தர......?

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீளப்பார்த்தேன் அனைவர் பதில்களும் மீளவும் ஒரு நட்பின் தடங்களை ஞாபகப்படுத்துகின்றனtw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Fri Dec 25 2009 14:53:44 GMT+0530 (India Standard, வாலி said:

 

 

சக்கரவாகப் பறவை பூமியின் மழைக்காடுகள் வறண்டு போகுமளவில் மழைநீரைக் குடித்துவிட்டதோ என எண்ணும்படி அவள் பார்வை எனக்குள்ளே தாகத்தை உண்டுபண்ணிவிடுகின்றது.

 

மறந்து போய் சாம்பலாகிவிட்ட அவள் நினைவுகள் மீண்டும் அவள் பார்வை பட்டு பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று என் கன்னங்களை வருடிச் செல்கின்றன.

 

அவள் கண்கள் என்னும் பூமிப்பந்துக்குள் நுழைந்து என் நினைவுகள் வானவெளிபோல் பரந்து விரிகின்றன.

 

அவள் பார்வை யாருக்கும் அடிபணியாத என் ஆண்மையை தனக்குள் அடக்கி என்னை நான் என்று இல்லாமல் என்னைஅவளுடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

 

முள்ளுகளை மீறி வந்து சிரிக்கின்ற ரோசா பூவின் வாசனையை அவள் பார்வை சுமந்து வருகின்றது.

 

சகாரா காவாலிக்கும் கொஞ்சம் ஊர் உலகம் தெரியுமாக்கும்...... :)

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2015 at 1:53 AM, seyon yazhvaendhan said:

வாலியின் விளக்கம் கண்டபின்பு, மிகவும் ரசிக்க முடிகிறது கவிதையை.  (படம் தெரியவில்லை,  தளத்தில் கோளாறோ?)

 யாழ்கருத்துக்களத்தின் வடிவங்கள் மாறும்போது இப்படி கனக்க விடயங்கள் காணாமல் போய்விடுகிறது. என்ன படம் இணைத்தேன் என்ற ஞாபகமும் இல்லாமல் போய்விட்டது.700_FO36911792_6b75f91ab4c02cef9c2c0aa00

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

என்ன கவிஞரே #metoo ல உங்க பெயரும் வரும்போல இருக்கு :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/21/2018 at 11:22 PM, poet said:

"மழைக்காடு வறண்டதென்று

வரி புனையும் வண்ணம்

சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு?" வல்ல படிமம்

நன்றி பொயட்

 

On 10/22/2018 at 9:49 PM, அபராஜிதன் said:

என்ன கவிஞரே #metoo ல உங்க பெயரும் வரும்போல இருக்கு :)

காதும் காதும் வச்சமாதிரி எனக்கு கவிதை சொல்லத்தெரியாது. ரொம்ப அப்பாவிம்மா நானு :)

  • கருத்துக்கள உறவுகள்

2009 உடைப்பு  மீண்டும் 2018 கட்டப்பட்டு வந்திருக்கிறது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.