Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ கேட்ட எல்லாம் கிடைக்கும் எமக்கு.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் கற்பழிப்பாம்

யாழில் கொலையாம்

தீவில் மண் பறிப்பாம்

அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம்

எழுதுகிறார்

பேசுகிறார்

சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார்

எல்லாம் சரிதான்

இதை மாற்ற என் செய்தார்

நாலு பேர் சேர்வோம் என்றால்

நாலே நாலு பேர் தானா...

சுமை யாவும்அவர் மேலா.....

வேலை வீடு

வீடு வேலை

நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா

பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார்

துளியளவும் அதற்கான உழைப்பில்லை

ஆனாலும் மண் வேண்டும்

தான் பிறந்த

தனை ஏற்ற மண் வேண்டும்

அதற்காக உழைப்பதெப்போ...?

அதற்கான உனது நேரம் என்ன..?

பாதை தெரிந்ததுதான்

பாதையில் நடந்தாயா

ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல்

பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்?

வா

வாரத்தில் சில நிமிடம் தா

சொல்லை விடுத்து செயலில் காட்டு

நீ கேட்ட

எல்லாம் கிடைக்கும் எமக்கு.........

விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு அண்ணா அடுப்பில மலமலக்கிற கொதிதண்ணீர் மாதிரி இப்படிச் சூடா இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இது சூடான வாரம் தானே சகோதரி, நல்ல க விதை, விசு!

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக இதனை தானே செய்கிறோம்.தப்பி ஓடி வந்தோம். புலிகளின் பெயரைச்சொல்லி அகதி அந்தஸ்து எடுத்தோம். வீடு வாசால் பணத்த்தை பெருக்கினோம்.புலிகளை அடியடா என்றோம்.புலிகள் கட்டுநாயக்காவை அடிக்க பியர் அடித்து பாட்டி.அநுராதபுரம் அடிக்க விஸ்கி பாட்டி.முள்ளிவாய்க்காலில் தோற்க மக்கள் அரசியல்மயமாக்கப்படாதது தான் தோல்விக்கு காரணமாம்.அப்போதும் காசு கேட்க வீட்டைப்பூட்டி விட்டு இருந்தவர்கள் இன்றும் அதனையே செய்கிறார்கள். ஏன் விடுதலை? ஏன் மண்ணை இந்த மக்களுக்கு. அடிமையாக பிறந்தவர்கள் அடிமையாக இறந்தே போகட்டும்.

ஒன்றில் முடிந்ததை கதைத்து அதில் பிழை கண்டு ( விட்டிருந்தால், அப்படி செய்திருந்தால்) நேரம் நாம் வீணடிப்போமா?

இல்லை,

சிங்களம் அதற்கு எதிராக தொடர்ந்து போராடி மீழ்வோமா ( போர்க்குற்ற விசாரணை, மக்கள் மேம்பாடு, சிங்கள பொருளாதார புறக்கணிப்பு, பரப்புரை..)?

தொடர்ந்து போராடினால் மட்டுமே வாழமுடியும்.

கவிதைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு அண்ணா,

ஏன் இவ்வளவு கோவம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல்

பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்?

பாதையில் அடியெடுத்து வைக்காதது மாத்திரமல்ல ... அந்தப் பாதையில் கல்லும் முள்ளும் இருக்கின்றதென்று ... பக்கத்தில் கூட நில்லாமல் எங்கோ ஓடிவிட்டு ... இன்று எல்லாம் முடிந்தவுடன் அதில் தலைமை தாங்கிச் சென்றவனை நோக்கி ... நீ போன பாதை பிழை என்று கூச்சமில்லாமல் சுட்டு விரலை நீட்டுகின்றோமே? வாழ்க இந்த ஒப்பற்ற இனம்!!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நன்றாக கவிதை எழுதுகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.கவிதையில் உங்கள் கோபம் தெரிகிறது.உங்களுக்கு எனது சார்பாக ஒர் பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

எதிலும் ஒற்றுமை அற்ற ஒத்துழைக்காத நமக்கு விடுதலை எதற்கு......

......நமக்குள்ளே அடிபட்டுச்சாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சோர்வை விட்டொழித்து ஒன்று சேருங்களப்பு..விடியல் தூரமில்லை..

விசுவின் மனத்தாங்கல் நியாமானதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா

சுவி

நுணாவிலான்

அகோதா

ஜீவா

காட்டாறு

ரதி

நிலாமதியக்கா

முனிவர்

மற்றும்

ராஜவன்னியன்

அனைவருக்கும் நன்றிகள்

ஒரு பொது வேலைத்திட்டம் சம்பந்தமான சில கூட்டங்களில் கலந்து கொண்டேன்

அதில் ஒரு சிலரே தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் என்னைப்போல் பங்கு பற்றியதை கண்டதால்

எமது மக்கள் தொடர்ந்து ஒரு சிலரின் தலையில் சுமையைக்கட்டிவிட்டு வாழாதிருப்பது ஆத்திரத்தை தந்தது.

அதை அது சம்பந்தமாக வெளிவர இருக்கும் வெளியீடு ஒன்றிற்கு என்னை ஏதாவது எழுதுமாறு கேட்டார்கள்

அதில்தான் நான் கண்டதை கொஞ்சம் இறக்கி வைத்தேன்.

மீண்டும் நன்றிகள் இதை வரவேற்றதற்கு...

Edited by விசுகு

யதார்த்தமாய் எழுதியிருக்கிறீர்கள் விசுகு.

உங்கள் கவிதைக்கு பதில்

எங்களிடமிருந்து செயலில் வரவேண்டும்.

வருமா ?????

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை வேள்விக்கு குறிப்பிட்ட மக்களே தொடர்ந்தும் பங்களிப்புச் செய்தார்கள்.எல்;லோரும் ஒற்றுமையாகக் கரம் கோத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.இனியாவது எல்லோரும் ஒற்றுமையாக போரடுவார்களா??????????????விசுவின் கோபம் நியாயமானதே!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

---------

வேலை வீடு

வீடு வேலை

நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா

பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார்

துளியளவும் அதற்கான உழைப்பில்லை

ஆனாலும் மண் வேண்டும்

தான் பிறந்த

தனை ஏற்ற மண் வேண்டும்

அதற்காக உழைப்பதெப்போ...?

அதற்கான உனது நேரம் என்ன..?

பாதை தெரிந்ததுதான்

பாதையில் நடந்தாயா

ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல்

பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்?

வா

வாரத்தில் சில நிமிடம் தா

சொல்லை விடுத்து செயலில் காட்டு

நீ கேட்ட

எல்லாம் கிடைக்கும் எமக்கு.........

விசுகு

சூடான கவிதை விசுகு. இன்னும் இதனை உணராமல் இருப்பவர்களின் மனதை இக் கவிதை தொட வேண்டும். plus_green_24.gif

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.