Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுக்களுக்கு வாழ்த்துக்கள். ரதியின் கேள்வியிலும் (எப்பவும் போல) நியாயம் இருக்குத்தான்.

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா மட்டுறுத்தினராக பதவி உயர்வுபெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாடபட்சமின்றி மிகவும் திறமையாக செயற்பட வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

[size=3](ஒரு அப்பிராணிய போட்டுட்டாங்களே..... :lol:[/size][size=3] :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3] :icon_idea:[/size][size=3] )[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அப்புறம் யாருப்பா அது கல்யாணியோ நியாநியோ? ரொம்ப நியாயமா நடந்துக்கணும் சொல்லிப்புட்டன்.......

அப்புறம் யாழுக்காக உங்கள் நேரங்களை ஓதிக்கியதர்க்கு நன்றிகள் மட்டுவாக வாரத்திக்கு எதையும் தாங்கும் இதையம் வேண்டும் விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல் கடமையை நேர்வழியில் நின்று கடமை தவறாது உறவுகளை அனைத்து செல்லுங்கள்.... அப்புறம் வேற ஏன்னா? வெட்டு வாங்க நான் ரெடி வேட்டு வைக்க நீங்க ரெடியா ? :D

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மட்டுறுத்தினராக வர இருக்கும் நுணா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள். :) :) யார் நியானி என்று தெரியவில்லை. அவருக்கும் என் வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானிற்கு பராட்டுக்கள்(இப்பவே பந்தம் பிடிச்சு வைப்பம் :lol: ) யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

யாழ்கள நிர்வாகத்தினரால் புதிய நிர்வாக மட்டுறுத்தினராக நியமனம் பெற்ற நுணாவிலான், மற்றும் நியானிஇருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ..........இதன் மூலம் நிழலி,இணையவனின் பாரம் குறைக்கப்படுவது நிச்சயம் .......

இது இந்த களத்தை மேலும் மேலும் சிறந்த முறையில் கொண்டு செல்லும் என்பதும் திண்ணம் ......................

[size=1]யாரப்பா அந்த நியாணி ...................[/size] :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அருமைத்தம்பி நுணாவிலானுக்கும் நியானிக்கும் வாழ்த்துக்கள்.

நியானியை யாரென்று அறிய எல்லோருக்கும்ஆவலாகத்தான் இருக்கு. ஆனால் அதை மறைத்தத்தானே செய்கிறார்கள். ஒளித்து வருபவரை முகத்தைக்காட்டு என்று கேட்பது என்ன நியாயம். காலம் பதில் தரட்டும்.

தாயகம் சார்ந்து நல்ல முடிவுகளையே நிர்வாகம் எடுத்துவருவதால் எந்த குழப்பமும் இல்லை எனக்கு.

நன்றி நிர்வாகத்தினருக்கு. அதிலும் தம்பி நுணாவிலானின் தெரிவுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

யோவ் .. அது கஜானியப்பா..

புதிய மட்டுறுத்தினர்களாக பதவியேற்றிருக்கும் நுணாவிலன் அண்ணாவிற்கும் நியானி அண்ணாவிற்கும் :) வாழ்த்துக்கள்...!

Edited by தமிழினி

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமானது. இந்த நேரத்தில் யாழ் களத்தை பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கச் செய்துவரும் யாழ்களப் பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

யாழ் முரசத்தில் வந்துள்ள அறிவித்தலின் படி யாழ்கள பொறுப்பாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் சக கருத்துக்கள உறவு நுணாவிலானுடன் மட்டுறுத்துனராக செயற்பட சம்மதித்தேன். எனினும் அதிக சர்ச்சைகள் இல்லாமல் யாழ் களம் இயங்குவதால் மட்டுறுத்தல் வேலை எனக்கு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன். யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைய மட்டுறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதாவது பிழைகள் வந்தால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நியானி - நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை. அநியாயமும் ஞானமும் மிகவும் சொற்பமாக இருக்கும்.

நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109049&hl=

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]தெளிந்தேன் ...........மிக்க மகிழ்ச்சி ..எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது. பழைய உறுப்பினர் மட்டுறுத்தினராக தன் கடமையை செய்வதற்காக இப்புனைபெயரில் வரும் தங்களை வரவேற்கிறேன். [/size]

மட்டுறுத்தினர்களாக பொறுப்பேற்றிருக்கும் நுணாவிற்கும், புதிய உறவு நியானிக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுக்களாக வேட்டுக்களை தீர்க்க வரும் அன்பிற்குரிய நுணாவிலானுக்கும்

நியானிக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. :) நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. :rolleyes: ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.. :lol:

எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர‌ நாங்கள் ஆதரித்ததிற்கு கார‌ணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நட‌ப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதர‌வு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ர‌தி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 03:33 PM

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக

Edited by sathiri

நியாயமான கருத்து ரதி. நியாயமாக நடக்க எத்தனித்திருந்தால் ஏன் இந்த இரட்டை வேடம்? இதிலிருந்தே இவரின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட வேண்டியுள்ளது. வேண்டுமானால், கருத்துக்களை வைப்பதற்குப் புதிய பெயரில் வந்திருக்கலாம். ஆனால், மட்டுறுத்துவதற்குப் புதிய பெயரைத் தேர்ந்தெடுத்தது சரியாகப் படவில்லை. மட்டுறுத்தினராக வரும் போதே முரண்படுகிறாரே.

புதிய மொந்தையில் பழைய கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்....

துணிந்து நில்லுங்கள் நன்றி

:D

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மட்டுறுனர்த்தினராக நியமிக்கப் பட்ட, நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

நுணாவிலானுக்கு மட்டுறுத்தினாராவதற்குரிய... அத்தனை தகுதியும் உண்டு என்பதில், எவ்வித ஐயமுமில்லை.

ஆனால்.... ஒரு இரவில், மட்டுறுத்தினாராக வந்த நியானி, பல சங்கடங்களை... எதிர் நோக்க வேண்டி வரலாம்.

காலம் தான்... பதில் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் நியானி.computer-fight-smiley.gif?1292867574

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடித்தான் முந்தியொருக்கால் "எழுவான்" எண்டொரு ஆளும் ரீச்சர்வேலை பாக்க வந்தவர்......குடுத்த குடுவையிலை...வந்த வேகத்திலையே திரும்பி ஓடினவர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது...

யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும்.

இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும்.

சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்.

சாத்திரி,

யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை.

நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர் தூயவன் அண்ணா மட்டுசை நியமிக்கும் பொறுப்பு யாழ் கல நிர்வாகத்தின் முடிவு சார்ந்தது அப்பிடி தான் முதலில் பலரும் நியமிக்கப்பட்டார்கள் இராவணன் அண்ணா கருத்து எழுதினத நான் காணவே இல்லை ஒரே வெட்டு தான் இதனால் பாதிக்கப்போவது நானாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை யாழின் செயற்ப்பாடு தான் முக்கியம் சுண்டல் என்ற தனிமனிதன் கிடையாது இப்பிடியனவர்கள் நேரம் ஒதுக்கி வரதே பெரிய விஷயம் அவர்களுக்கு குடும்பம் வேலை என்று ஒன்றும் இல்லியா?

இதனால யாழ் களத்த விட்டு யாரு விளத்தினாலும் பருவாள்ள தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு யாழ் களத்தை நடத்த முடியாது......நியாணி நீங்கள் பயபிடாமல் களம் இறங்குங்கள் ஒரு நல்ல விஷயம் செய்ய போனால் நாலு பேர் எதிர்பாங்க அதுக்காக நிறுத்த முடியுமா?

அதுவும் வலைஞன் சொல்லி வேலை இல்லை வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு ஒரு பய பேசமாட்டான் :D

  • கருத்துக்கள உறவுகள்

6000 கருத்துக்கள் வரை எழுதியிருக்கின்றீர்கள் சுண்டல்.... ஆனால் இன்று வரை தமிழ்... உகும்....

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.