Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிதற்றுகிறான் சுடலைமாடன்

Featured Replies

பிதற்றுகிறான் சுடலைமாடன்

கோடை வெப்பம் கொடுமையாய்

முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து

காத்திருக்க

இளவேனில் முடிந்து இருள் எங்கும்

படர தொடங்கும் போது உள் நுழைந்தான்

சுடலை மாடன் யாழ் இணையத்தினுள்

வந்தவனை வா என்று வாழ்த்தியது

ஒரு சிலரே

பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில்

வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர்

பொல்லாத கவி வடித்து புகழ்வதாய்

பொய்யுரைத்து வல்லோராய் தம்மை

காட்டயுள்ளார் பலபேர்

கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே

பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே

அலைந்து தேடி பல இணைப்புகளை

இணையத்தில் இணைத்திடுவார்

ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல்

படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து

பக்கங்களை நிரப்பிடுவர் .

வந்தவன் "சுடலைமாடன்" தானே என்று

ஏளனமாய் நினைத்து விட்டார்

செத்த பிணம் சுடுவது மட்டும்மின்றி

செத்தவன் போல வாழும் மாந்தருக்கு

சிதை அடுக்குவதும் என் கடனேயாம் .

வறண்ட வளர்த்துவரும் கள்ளி நான்

நட்புகளை நாடியே நாடினேன் இவ்விடத்தில்

தாயக நிலமைகளும் நெஞ்சில்

தணலாய் கொட்டுகின்றது, ஊரழிந்து, உறவழிந்து

வீடழிந்து நாம் இப்போ குரல் அறுந்து நிற்கிறோம்

இப்போது இங்கே ஆறுக்கு அடங்குகிறது ஊர்

கேட்டால் கிரீஸ் மனிதனாம் ஏன்

என்று கேக்க நாதியில்லை யாருக்கும்

ஊர் கூடி ஒன்றாய் முடிவெடுக்க முடியாமல்

கூறுபட்டு கிடந்தது ஊமையாய் அழுகிறது

அங்கத்தில் மை பூசி ஆள் இல்லா உறவுகளின்

அவலத்தை பெருக்கவே அலைகின்றனர் பலபேர்

தலை எல்லாம் மை யோடு அலைபவரின்

தலையெடுக்க யாருமில்லை இப்போது

சத்தியமாய் சொல்கின்றேன் எல்லோரும்

இப்போது ஏங்கி தவிக்கின்றனர் கடைசியாய்

இருந்ந்த கரிகாலனின் வரவை எதிர் பார்த்து .

சுடலை மாடா நீங்கள் பிதற்ரவில்லை . அத்தனையும் உண்மை சாமி . முதல் ஆட்டமே இந்தப் பிடி . இனித்தான் களம் சிதைபோல் சூடேறப்போகுது . மற்ரது , ஒருத்தரும் கனக்க உங்களை வாழ்த்தேல எண்டு கோபியாதீங்கோ . வாழ்த்தினதில் எத்தினை பேர் உங்களுக்கு பிரையோசனமாய் இருந்தீச்சினம் எண்டு பாருங்கோ . நான் 2 ஆவது பச்சை உங்களுக்கு போட்டிருக்கிறன் மாடன் சாமி :) :) . :)

Edited by komagan

சுடலை மாடன் வணக்கம். :)

தாயகத்திலிருந்து எழும் குரலுக்கு தலை வணங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ சுடலை மாடன் .

சுடலை மாடன் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நிலமைகளும் நெஞ்சில்

தணலாய் கொட்டுகின்றது, ஊரழிந்து, உறவழிந்து

வீடழிந்து நாம் இப்போ குரல் அறுந்து நிற்கிறோம்

இப்போது இங்கே ஆறுக்கு அடங்குகிறது ஊர்

கேட்டால் கிரீஸ் மனிதனாம் ஏன்

என்று கேக்க நாதியில்லை யாருக்கும்...........................

....... நிஜத்தைக் கவிதையாக பொழிந்துள்ளீர்கள் மேலும் தொடருங்கள்

ஆரம்பம் தானே . இது கவிதைபகுதியில் வந்தால் நன்று .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுடலை மாடன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

சரி சரி கோவிக்காதேங்கோ சுடலைமாடன்

தப்புத் தான் உங்கள் கவிதை அற்புதம்

உள்ளே வந்து யாழிற்குப் பெருமை சேருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சலாம் அழைக்கும் பாய்........................

வணக்கம் சுடலை மாடன்!

வந்தவனை வா என்று வாழ்த்தியது

ஒரு சிலரே

பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில்

வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர்

பொல்லாத கவி வடித்து புகழ்வதாய்

பொய்யுரைத்து வல்லோராய் தம்மை

காட்டயுள்ளார் பலபேர்

நீண்டகால 'அவதானிப்பாளர்' போல உள்ளதே? என் அவதானிப்பில் :lol:

வருக சுடலைமான், ச்சீ சுடலைமாடன்!

  • கருத்துக்கள உறவுகள்

ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல்

படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து

பக்கங்களை நிரப்பிடுவர்

எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்ட வரிகள், சுடலை!

உங்கள் 'யதார்த்தம்' உள்ளங்களை உறுத்துகின்றது !

உங்களைப் போலவே எங்களுக்கும் அந்த ஆதங்கம் உண்டு!

நாயின் வாலை மெல்ல, மெல்லத் தான் நிமிர்த்த வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கவிதை அருமை, வாழ்த்துக்கள், உங்களுக்கு இப்ப அனுமதி இருக்குமே யாழில் எங்கும் எழுத, ஏன் கவிதை பகுதியில் இணைக்கவில்லை, பல பேர் பார்க்க வசதியா இருக்கும்

  • தொடங்கியவர்

தோழர்களுக்கு வணக்கம்

சுடலையின் பிதட்டல்களுக்கு வரவேற்பு கூறி வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி

இன்னும் பலரின் அறிமுகத்தை வேண்டி கவி பகுதியிலும் இணைத்துள்ளேன் .

சுடலைமாடன் என்றால் சுடலை ஒன்றின் காவல் காரன் என்று வைத்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மாட்டுக்கார சுடலை - இனி

நமக்கில்லை என்றும் கவலை

சீக்கிரம் திறந்துவிடும் படலை

போட்டிடலாம் பலகோடி கடலை! :D

  • 3 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

இது தெளிவா இருக்கு . எழுதுனா இப்படி தான் எழுதணும் அத விட்டுட்டு வால் வால் அப்படின்னு எவ்வளவு நாள்தான் கிளிப்பிள்ளை மாதிரியே எழுதுவீர்கள் ????

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுடலை மாடன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

இது நல்ல கருத்து..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.