Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இவங்க இப்பிடி இருக்காங்க..

Featured Replies

என் நண்பி இண்டைக்கு என்கிட்டே அழுது கொண்டே கேட்டதையே தலைப்பாக போட்டு உங்க கிட்ட கேட்கிறன்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்றது என்று தெரிய வில்லை SO உங்க கிட்ட ஆலோசனை கேட்பதற்காக இதை எழுதுறன் ...

அவள் யாழ் இல் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படிச்சு கொண்டு இருக்காள். வழமையாக தன்

நண்பிகளுடன் சென்று வாறவள்

இன்று நண்பி கோவிலுக்கு போனதால இவள் மட்டும் தனியாக நண்பகல் அளவில் வீடுக்கு வந்து கொண்டிருந்தாள். வீதியிலிருந்து வீடுக்கு திரும்புற ஒழுங்கைல திரும்ப முற்படும் போது பின்னால மோட்டார் சைக்கிள் வந்த ஒரு இளைஞன் படார் என இவள் முதுகில் அடிச்சு விட்டு போய் விட்டான் இவள் அதை எதிர்பார்க்கதால மிகவும் பயந்து விட்டாள் EVENING முழுக்க ஒரே அழுகை இரவு என் கிட்ட சொல்லி அழுதாள்...

கடந்த SUNDAY இவள் வீடுக்கு பக்கத்துக்கு வீடு அக்காவுக்கு இதே மாதிரி அடி

முதுகில அவனும் மோட்டார் பைக்காரன் தான் அவ என்ன செய்த எண்டா கீழ கிடந்த கல்லை எடுத்து அவனின்ட மண்டைய உடைச்சு விட்டாவம் நேற்று இவளின் அயல் கிராமத்தில ஒரு பாடசாலை மாணவிக்கு பிளேட்டால் நெஞ்சில கீறி இருக்கிறார்கள் இந்த சம்பவம்கள் ஏதும் இப்போது ஊடகம்களில் வர காணவில்லை

இப்பிடி ஆனவைகளில் இருந்து இவர்கள் தங்களை எப்பிடி பாதுகாக்கலாம்

இவள் சொல்கிறாள் தனக்கு அடிச்சவன் ஒரு (தமிழ்எருமை மாடாம் அவள் இப்பிடி தான் சொன்னாள்)

நான் அவள் கிட்ட சொன்னன்

இனிமேல் இப்பிடியான இடம்களில் கொஞ்சம் வேகமாக போக பார்

தனியாக போவதை தவிர்த்து கொள்

குடை கொண்டு போ அடிச்சால் மூஞ்சிய பொத்தி குடையால அடி

எங்க எண்டாலும் கவனமாக இரு

பின்னுக்கு யாரும் வருகினமா எண்டு இடைக்கிடை திரும்பி பார்த்துகொள்

வேற என்ன செய்யலாம் நீங்களும் ஏதும் சொல்லுங்களேன் அவள் தான் சொன்னாள் இதை yarl இல எழுத சொல்லி

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை நாளுக்குனாள் மோசமாகத்தான் போகிறது .

.முடிந்த வரை தனியே செல்லவதை தவிர்க்க வேண்டும்.

அந்த 'எருமைக்கும்' அக்கா/தங்கைகள் இருப்பினம், குறைந்தது அம்மா என்றாலும் இருப்பா. பாதிக்கப்பட்ட பெண், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பானது எனக்கருதும் நிலைமை இருந்தால், அந்த 'எருமை' வீட்டிற்கு சென்று அவனை கண்டிக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த கட்டாக்காலி மீண்டும் செய்வான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வேலை இல்லாத திண்டாடம் செய்யிறது..அப்புறம் இராத்திரி கூட கேள்விப் பட்டேன்..யாழ்ப்பாணம் அந்தமாதிரி இருக்கிறதாம்....அப்போ இப்படி நடக்கிறதுகள் தான் அந்த மாதிரி இருக்கிறதோ.....?ஒழுங்கானதுகள் இப்படி எல்லாம் செய்யாதுகள்..பெண் பிள்ளைகள் அனாவசியமாக வெளியில் போவது அதுவும் தனித்து செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொண்டால் நன்று என்று என் மனசுக்கு படுகிறது..

  • தொடங்கியவர்

அந்த 'எருமைக்கும்' அக்கா/தங்கைகள் இருப்பினம், குறைந்தது அம்மா என்றாலும் இருப்பா. பாதிக்கப்பட்ட பெண், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பானது எனக்கருதும் நிலைமை இருந்தால், அந்த 'எருமை' வீட்டிற்கு சென்று அவனை கண்டிக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த கட்டாக்காலி மீண்டும் செய்வான்.

யார் என்றே தெரியாது அவளுக்கு யாழ் நகரத்தை அண்டிய பகுதி என்பதால் அநேகமானோர் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை மோட்டார் பைக் நம்பர் கவனிச்சு கொள் இனிமேல் அப்பிடி ஏதும் நடந்தால்.. என்று சொல்லி இருக்கன்..

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருந்தால் அதேவீதியில் அதேநேரத்தில் மீண்டும் நடக்கவைத்து ஆளைச்சாக்கால் போர்த்தி .....................

'தாயகத்தில் எல்லாம் அந்த மாதிரி இருக்குது' ;

'சும்மா இங்கே இருந்துகொண்டு கதைக்காதீர்கள்' ;

'புலம்பெயர் மக்களால் தான் அங்கே மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் உள்ளது' ......

கிரீஸ் மனிதர்களில் இருந்து இப்படியான நிகழ்வுகள் வரை மக்கள் படும் அவலத்திற்கு தகுந்த பதிலை, மேலே இவ்வாறு கூறுபவர்களிடம் இருந்து ஆவலாக எதிர்பார்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு சொல்லி அழ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"செருப்பை தூக்கி காட்டுங்கள்" என்டு சொல்லத் தான் ஆசை ஆனால் அதால் வரும் விளைவு அவர்களுக்கு பாரதூரமாக அமையும்

ஒரு விடையம் இதில் எனக்குப் புரியவில்லை . முன்பு யாழ்ப்பாணத்தில் பகிடிவதை ஒருபோதுமே நடக்கவில்லையா ?? அப்போ யாழ் பிரபல ஆண்கல்லூரிகள் தங்களது மகளிர் கல்லூரிகளுக்கு விட்ட பகிடி வதைகளை எந்தக்கணக்கில் சேர்பது ??ஆக , இதில் உள்ளுடன் ஒன்றே வடிவங்கள் தான் மாறியிருக்கின்றது . இளம் பெண்கள் தற்காப்புக்கலைகளைப் பயில்வது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு ஒரு பச்சை.

பெண்பளை தற்காப்புக்கலைகளை கட்டாயமாக கற்பித்தல் அவசரியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு ஒரு பச்சை.

பெண்பளை தற்காப்புக்கலைகளை கட்டாயமாக கற்பித்தல் அவசரியமானது.

நீங்கள் ஆயுதம் தூக்குவதற்கு முதல்அடி எடுத்து கொடுக்கின்றீர்கள் என தாக்குதல் வரப்போகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடையம் இதில் எனக்குப் புரியவில்லை . முன்பு யாழ்ப்பாணத்தில் பகிடிவதை ஒருபோதுமே நடக்கவில்லையா ?? அப்போ யாழ் பிரபல ஆண்கல்லூரிகள் தங்களது மகளிர் கல்லூரிகளுக்கு விட்ட பகிடி வதைகளை எந்தக்கணக்கில் சேர்பது ??ஆக , இதில் உள்ளுடன் ஒன்றே வடிவங்கள் தான் மாறியிருக்கின்றது . இளம் பெண்கள் தற்காப்புக்கலைகளைப் பயில்வது நல்லது .

பகிடிவதை அப்பப்ப வேறை விதங்களாய் வரும் அதுக்கேற்ற மாதிரி மகளிர்கூட்டணியள் தங்களை மாத்தோணும் எண்டுறியள்?பொம்புளையளுக்கு தற்பாதுபாப்பு கலை அவசியம்தான்..அதுக்காக றோட்டிலை போகேக்கை சேட்டை விட்ட ஒரு பொடியனுக்கு தங்கச்சி குங்பூ காரட்டி வித்தை காட்டி இப்ப சமாளிக்கலாம்.....ஆனால் நாளைக்கோ இல்லை இன்னொரு நாளைக்கோ வந்து...காத்திருந்து தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து இன்னும் மோசமாக நடக்கமாட்டான் எண்டதுக்கு என்ன உத்தரவாதம்?தமிழ்ப்பிரதேசங்களில் முன்னர் நடந்த பெண்கொலைகள்,பாடசாலைமாணவிகள் பாலியல் வல்லுறவுகளை புரட்டிப்பாருங்கள்.அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஆண்களை எதிர்த்திருப்பார்கள் அல்லது கெட்டிக்காரிகளாக இருப்பார்கள்.நாங்கள் மேலைத்தேய நாடுகளில் இருந்து கொண்டு...இங்கிருக்கும் சுதந்திரங்களையும் உரிமைகளையும் மனதில் வைத்துக்கொண்டு...அங்கிருப்பவர்களுக்கு ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் கூறுவது நடைமுறைக்கே சாத்தியமில்லை.அதுவும் வடகிழக்கு பிரதேசங்களுக்கு???????தற்போது தங்களை காப்பாற்றுவதே புத்திசாலித்தனம்.

உங்கள் நண்பியின் வயதை ஒத்த ஆண்களாக இருந்தால் தங்களில் கவனம் வருவதற்காக செய்து இருப்பார்கள், அதானால் அவர்கள் செய்த பிழையைத் தன்மையாக சொல்லிவிடுவது நல்லதென நினைக்கிறேன். இதுவே கட்டாக் காலிகளாக இருந்தால், கொஞ்சம் அவதானமாகத்தான் கையாள வேண்டும். வரிஞ்சு கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனால் அதுவே வில்லங்கமாக போய்விடும். முதலில் அவர்கள் யார்? ஏன் அவ்வாறு உங்கள் நண்பி இருக்கும் ஏரியாவில் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அறிந்து கொண்டு செயல்ப்படுவது பாதுகாப்பும் கூட. நண்பர்களோடு சேர்ந்து செல்வது ஓரளவு பாதுகாப்பாகவும், தைரியமாகவும் உங்கள் நண்பிக்கு இருக்கும். அதனால் தனியாக செல்வதைத் தவிர்க்கச் சொல்லுங்கள்.

பாக்கு வெட்டி, சைக்கிள் செயின், உறியடித்தல் போன்றவைகள் எனது தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் காந்தீயத்தை தொடர வேண்டிய கட்டாயம்.

அந்தப் பையனுக்கு மனநலப் பிரச்சனைகளும் இருக்கலாம். அவர் இன்னும் யார் யாருக்கு இப்படி அடித்துக் கொண்டு திரிகிறாரோ தெரியாது.

நண்பர்களுடன் கூட்டமாகச் செல்வது நல்லது. அத்துடன் அந்தப் பையனின் பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வெளிநாட்டில இருந்து அணுப்பிற காசு செய்யிற வேலை...நம்ம யாயினியே டென்ஷன் ஆகிறான்னா.......நிலமை கவலைக்கிடம் தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

1995 ம் ஆண்டிலிருந்து சிங்களவன் அரும்பாடு பட்டு விதைத்த விதை.

இப்போ தான் அனுபவிக்க தொடங்கியுள்ளோம்.

இதுவும் ஒருவகை மனோவியாதியே,போர் நடந்த நாடுகளெங்கும் போர்வீரர்களும் சரி,பொதுமக்களும் சரி ஒருவித உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.மேற்கத்தைய நாடுகளில் அவர்களின் பொருளாதார நிலைமையும்,இருக்கும் வசதிவாய்புகளும்(கவுன்சிலிங் போன்றவை) இவற்றை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

எமது சும்மா ஆட்களுக்கே பிரச்சனை தீர்க்க வழியில்லை அதற்குள் இவர்களையெல்லாம் யார் பார்ப்பது?

தமிழனின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றது,இவ்வளவு கஷ்டப்பட்ட பின்பு ஒரு இடைக்கால தீர்விற்கு ஒருவரும் தயாரில்லை,முழுமையான சுயநிர்ணயஉரிமையுடன் கூடிய தீர்விற்கு சிங்களம் ஒரு போதும் தயாரில்லை.உலக நாடுகளும் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.

ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் அரசிடம் விலை போய்விட்டதாக குற்றச்சாட்டு,அரசோ எதுவும் செய்யாது,உலகம் ஏதாவது செய்யும்வரை இப்படியே அவர்கள் இருந்து அனைத்து துன்பங்களுக்கு ஆளாகவேண்டியதுதான்.புலம்பெயர்ந்த நாங்களும் அவர்கள் விதி என கூறிவிட்டு அடுத்த விடுமுறைக்கு எங்கே போவது என யோசிக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கு வெட்டி, சைக்கிள் செயின், உறியடித்தல் போன்றவைகள் எனது தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் காந்தீயத்தை தொடர வேண்டிய கட்டாயம்.

அந்தப் பையனுக்கு மனநலப் பிரச்சனைகளும் இருக்கலாம். அவர் இன்னும் யார் யாருக்கு இப்படி அடித்துக் கொண்டு திரிகிறாரோ தெரியாது.

நண்பர்களுடன் கூட்டமாகச் செல்வது நல்லது. அத்துடன் அந்தப் பையனின் பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கூற வேண்டும்.

தப்பிலி சொல்வதுதான் தற்போதைய சூழ்நிலையில் நல்ல தீர்வாக இருக்கும்

  • தொடங்கியவர்

உங்கள் நண்பியின் வயதை ஒத்த ஆண்களாக இருந்தால் தங்களில் கவனம் வருவதற்காக செய்து இருப்பார்கள், அதானால் அவர்கள் செய்த பிழையைத் தன்மையாக சொல்லிவிடுவது நல்லதென நினைக்கிறேன். இதுவே கட்டாக் காலிகளாக இருந்தால், கொஞ்சம் அவதானமாகத்தான் கையாள வேண்டும். வரிஞ்சு கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனால் அதுவே வில்லங்கமாக போய்விடும். முதலில் அவர்கள் யார்? ஏன் அவ்வாறு உங்கள் நண்பி இருக்கும் ஏரியாவில் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அறிந்து கொண்டு செயல்ப்படுவது பாதுகாப்பும் கூட. நண்பர்களோடு சேர்ந்து செல்வது ஓரளவு பாதுகாப்பாகவும், தைரியமாகவும் உங்கள் நண்பிக்கு இருக்கும். அதனால் தனியாக செல்வதைத் தவிர்க்கச் சொல்லுங்கள்.

பாக்கு வெட்டி, சைக்கிள் செயின், உறியடித்தல் போன்றவைகள் எனது தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் காந்தீயத்தை தொடர வேண்டிய கட்டாயம்.

அந்தப் பையனுக்கு மனநலப் பிரச்சனைகளும் இருக்கலாம். அவர் இன்னும் யார் யாருக்கு இப்படி அடித்துக் கொண்டு திரிகிறாரோ தெரியாது.

நண்பர்களுடன் கூட்டமாகச் செல்வது நல்லது. அத்துடன் அந்தப் பையனின் பெற்றோர்களுக்கும் இதைப் பற்றிக் கூற வேண்டும்.

எனது நண்பிக்கு அந்த பையன் யார் என்றோ எந்த இடம் என்றோ எதுவுமே தெரியா யாரோ road ல போற ஒருத்தன் முதுகில அடிச்சிட்டு போறான் அவனை பற்றி எதுவுமே தெரியா பிறகு எப்பிடி அவனின் பெற்றோரிடம் முறையிடுகிறது or அவனை கூபிட்டு தன்மையாக கதைப்பது

வீணா உங்க திரிக்கு என்ன சொல்ல என்றே தெர்ல...

அந்தப்பெண் ..நீங்க சொன்னமாதிரியே வண்டி நம்பரை நோட் பண்ணி வைச்சு ,,, காவல்துறை உதவிய நாடலாம்,,

(அது வேஸ்ட் ஆப் டைம் ,,எங்கிறது எனக்கும் தெரியும்)

ஒண்ணேஒண்ணுமட்டும் ... மனசுக்கு தோணுது... , உள்ளூர் இளைஞர்கள் ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்தலாம்!

அவர்கள்.. கொஞ்சம் சிங்களவன் செல்வாக்கை பெற்ற ஒருவரை தம் பக்கம் வைத்துக்கொண்டு(சட்ட சிக்கலை எதிர்கொள்ள),

இதுபோன்றவர்களை கொஞ்சமாவது களையெடுக்கலாம்!

தனிய உங்கட நண்பிக்கு தீர்வு தேட வேண்டாம் ஓட்டு மொத்த மக்களுக்கும் தீர்வை தேட வேண்டும் ,அதுவே உங்கள் நண்பிக்கான தீர்வாகவும் அமையும் .

  • தொடங்கியவர்

தனிய உங்கட நண்பிக்கு தீர்வு தேட வேண்டாம் ஓட்டு மொத்த மக்களுக்கும் தீர்வை தேட வேண்டும் ,அதுவே உங்கள் நண்பிக்கான தீர்வாகவும் அமையும் .

சரிங்க சொல்லுங்க எப்பிடி தீர்வு தேடலாம் ?

பெரிய பெரிய அரசியல் வாதிகளையும் பெரிய சினிமா புள்ளிகளையும் (நடிகைகளையும்) சந்தித்தவர் நீங்க

மற்றும் உலக அரசியலை பற்றி கரை கண்டவர் இதுக்கு சொல்லுங்க ஒரு தீர்வு

இது எல்லாம் உங்களுக்கு ஜுஜுப்பி மேட்டர் ( தீர்வு சொல்றது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.