Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களது குர‌ல் கம்பீர‌மாக இருக்க வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாவே எனக்கும்,என் தம்பிக்கும் சண்டை...அவன் சொல்லுறான் பெண்கள் என்டால் என்னை மாதிரி இருக்கக் கூடாதாம்,அப்படி என்னை மாதிரி இருக்கிற பெட்டையளை தான் கல்யாணம் கட்ட மாட்டானாம் ^_^ ...நீங்களே இந்தப் பிரச்சனையே கேளுங்கோ அதற்கு உண்மையான,நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ட நிலையில் இருந்து கொண்டு பதிலைத் தாருங்கள்.

பிரச்சனை இது தான் எனது குரல் கம்பீரமாக இருக்குதாம்,மற்றவர்களோடு கதைக்கும் போது குறிப்பாக பெடியங்களோடு கதைக்கும் போது நான் அதட்டி,உருட்டி,முகத்தில் அடிச்ச மாதிரி சுருக்கமாக சொல்லப் போனால் யாழில் எழுதிற மாதிரி கதைக்கிறனாம் :D [குரலில் கம்பீரம் இருக்க கூடாதாம்.]...இப்படியான பெட்டையளை ஒருத்தரும் கல்யாணம் கட்ட மாட்டாங்களாம்...என்ன தான் பெடியங்கள் படித்து முன்னேறி நல்ல வேலையில் இருந்தாலும் இப்படியான பெட்டையளை கட்ட மாட்டாங்களாம்...ஆண்களுக்கு அமைதியாக,அன்பாக கதைக்க கூடிய [அல்லது கல்யாணத்திற்கு முன் அப்படி நடிக்கின்ற :lol: ]பெண்களைத் தான் பிடிக்குமாம் என்று சொல்கிறான் அத்தோடு என்னையும் பெடியங்களோடு கதைக்கும் போது அமைதியாக,அன்பாக கதை என சொல்கிறான் எனக்கு என்டால் இதைப் பார்த்தால் நடி என்று சொல்கிற மாதிரி இருக்குது.

அண்ணாமாரே,தம்பிமாரே,அக்காமாரே,தங்கைமாரே எனக்காக எழுதாமல் உங்கள் உண்மையான கருத்தை தயவு செய்து எழுதி என்னைத் தெளிவு படுத்துங்கள்...நன்றி

  • Replies 59
  • Views 7.8k
  • Created
  • Last Reply

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

இனிய சொல்லு எண்டால் என்ன ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார்

இது தான் எனது கருத்து ரதி இதற்குப் பால்பேதம் இல்லை உங்கள் தம்பியின் சொல்லைக் கேளாதீர்கள் :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எழுதினால் நீங்கள் அதட்டுவீர்கள் என்றுதான் அப்பவே திருவள்ளுவன் எழுதிவிட்டான்.

இடம்

பொருள்

காலம்

அறிந்து பேசு. என்று.

இன்னொருவருடன் உரையாட ஏனங்க குரலில் கம்பீரம் வேண்டும்?

ஒரு இனிய உரையாடலுக்கு ஒரு இனிய குரலும் சேர்ந்தால் கூடாதா என்ன?

அதுவே நீங்கள் கிட்லர் போல ஒரு சிறந்த படையணியை உருவாக்க முயன்றால் கம்பீரமான குரல் என்பது அணுகுண்டு மாதிரி.

கருணாநிதியே சொல்லுவார் (சொல்லுவான் என்றுதான் எழுதவேண்டும் ஒரு கள நாகரீகம் கருதி.....) வைக்கோ எனது உறைவாள் என்று. வைக்கோவிடம் இருந்தது அவருடைய கம்பீரமான பேச்சுதான். கடைசியிலே அவரை கருவேப்பிலையா பாவித்து விட்டது குள்ளநரி.

நீங்க யாரோடு........

என்ன ...........

எப்ப...........

பெசபோறீன்கள் என்று எழுதினால்தான். எப்படி என்பதை நாமும் எழுதமுடியும். அதைவிட இப்படிதான் நான் பேசுவேன் என்றால்............. களத்தைபொருத்த வரைக்கும் அதுதான் நல்லது. எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எழுதினால் நீங்கள் அதட்டுவீர்கள் என்றுதான் அப்பவே திருவள்ளுவன் எழுதிவிட்டான்.

இடம்

பொருள்

காலம்

அறிந்து பேசு. என்று.

இன்னொருவருடன் உரையாட ஏனங்க குரலில் கம்பீரம் வேண்டும்?

ஒரு இனிய உரையாடலுக்கு ஒரு இனிய குரலும் சேர்ந்தால் கூடாதா என்ன?

அதுவே நீங்கள் கிட்லர் போல ஒரு சிறந்த படையணியை உருவாக்க முயன்றால் கம்பீரமான குரல் என்பது அணுகுண்டு மாதிரி.

கருணாநிதியே சொல்லுவார் (சொல்லுவான் என்றுதான் எழுதவேண்டும் ஒரு கள நாகரீகம் கருதி.....) வைக்கோ எனது உறைவாள் என்று. வைக்கோவிடம் இருந்தது அவருடைய கம்பீரமான பேச்சுதான். கடைசியிலே அவரை கருவேப்பிலையா பாவித்து விட்டது குள்ளநரி.

நீங்க யாரோடு........

என்ன ...........

எப்ப...........

பெசபோறீன்கள் என்று எழுதினால்தான். எப்படி என்பதை நாமும் எழுதமுடியும். அதைவிட இப்படிதான் நான் பேசுவேன் என்றால்............. களத்தைபொருத்த வரைக்கும் அதுதான் நல்லது. எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா?

நான் யாழ் களத்தில் எப்படி எழுதுவது எனக் கேட்கவில்லை தற்போது எழுதுவதை நான் மாற்றப் போவதுமில்லை ...நான் கேட்க வந்தது தொலைபேசியில் உரையாடும் போதோ அல்லது நேரில் ஆண்களோடு உரையாடும் போதோ எப்படி உரையாட‌ வேண்டும்?...எப்படி உரையாடினால் இலகுவாக மாப்பிள்ளை பிடிக்கலாம் :)

நீங்க யாரோடு........

என்ன ...........

எப்ப...........

பெசபோறீன்கள் என்று எழுதினால்தான். எப்படி என்பதை நாமும் எழுதமுடியும். அதைவிட இப்படிதான் நான் பேசுவேன் என்றால்............. களத்தைபொருத்த வரைக்கும் அதுதான் நல்லது. எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா?

உதுக்கு நான் வரேல :):lol::o .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோமகன் அண்ணா கஷ்டபட்டு உலை வைச்சு பொங்கிவார நேரம்.

பானையை உடைக்கிறமாதிரி பேசுறீங்கள்.

வாங்கோ வாங்கோ .......... வெட்க படாமல் வந்து சாப்பிடுங்கோ.........

நான் யாழ் களத்தில் எப்படி எழுதுவது எனக் கேட்கவில்லை தற்போது எழுதுவதை நான் மாற்றப் போவதுமில்லை ...நான் கேட்க வந்தது தொலைபேசியில் உரையாடும் போதோ அல்லது நேரில் ஆண்களோடு உரையாடும் போதோ எப்படி உரையாட‌ வேண்டும்?...எப்படி உரையாடினால் இலகுவாக மாப்பிள்ளை பிடிக்கலாம் :)

எதற்காக மாப்பிளை பிடிப்பது...........

என்று எழுதினால்தானே எப்படி பேச வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் களத்தில் எப்படி எழுதுவது எனக் கேட்கவில்லை தற்போது எழுதுவதை நான் மாற்றப் போவதுமில்லை ...நான் கேட்க வந்தது தொலைபேசியில் உரையாடும் போதோ அல்லது நேரில் ஆண்களோடு உரையாடும் போதோ எப்படி உரையாட‌ வேண்டும்?...எப்படி உரையாடினால் இலகுவாக மாப்பிள்ளை பிடிக்கலாம் :)

எதற்கும் என்னோடு தொலைபேசியில் 0033611149470 ஒருதடைவை உரையாடுங்கள் உங்கள் குரலை கேட்டபின்னர்தான் உங்கள் குரல் கம்பீரமானதா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரீம் கோர்ட் என்று போனால் எப்படியும் மூன்று ஜட்ஜ் நீதிவான்கள் இருப்பார்கள்.

அப்படியே இங்கேயும் ஒரு கோலை போடுவதுதான் உண்மையான தீர்ப்பை சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னை மாதிரி இருக்கிற பெட்டையளை தான் கல்யாணம் கட்ட மாட்டானாம் ^_^ ...நீங்களே இந்தப் பிரச்சனையே கேளுங்கோ அதற்கு உண்மையான,நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ட நிலையில் இருந்து கொண்டு பதிலைத் தாருங்கள்.

பிரச்சனை இது தான் எனது குரல் கம்பீரமாக இருக்குதாம்,மற்றவர்களோடு கதைக்கும் போது குறிப்பாக பெடியங்களோடு கதைக்கும் போது நான் அதட்டி,உருட்டி,முகத்தில் அடிச்ச மாதிரி />

அண்ணாமாரே,தம்பிமாரே,அக்காமாரே,தங்கைமாரே எனக்காக எழுதாமல் உங்கள் உண்மையான கருத்தை தயவு செய்து எழுதி என்னைத் தெளிவு படுத்துங்கள்...நன்றி

அமைதியாக பேசும் பெண்களும் ஆண்களை திட்டலாம் என தம்பியிடம்சொல்லவும்..கம்பீரமான குரலிலும் அன்பாக பேசலாம்...அமைதியான குரலில் அதட்டி உருட்டி,முகத்தில் அடித்தமாதிரி பேசலாம்.....மொத்ததில் குரலில் ஒன்றுமில்லை வார்த்தைகளில் தான் .....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குரலில் மட்டுமல்ல, ரதி!

நீங்கள் எழுதும் கருத்துக்களிலும் ஒரு 'கம்பீரம்' எப்பவுமே இருக்கும்!!! :D

குரலிலும் கருத்திலும் கம்பீரம் இருப்பதில் எந்த தவறும் இல்லை, மாறாக அது உங்கள் பலமே :D.

எமது சமூக வளர்ப்பில் இவ்வாறான பெண்கள் குறைவு. அந்தவகையில் உங்கள் பெற்றோர் உங்களை சுதந்திரம் தந்து வளர்த்துள்ளார்கள் என்று தெரிகின்றது. அவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே.

கலியாணம் என்று வரும்பொழுது உங்களை விரும்புவரை கைப்பிடிப்பதே சிறப்பாக அமையும் என்பது அடியேனின் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சிக்கு ரியூசன் எடுக்க கொஞ்ச கடுவன்மார் வெளிக்கிட்டினம்........ :D

தங்கச்சி விட்டுடாதை...புடிச்சபுடியை புடி. :wub:

பணிவும் பரிவும் ஆணுக்கும் வேணுமடி. :icon_idea:

ஆண் மலடுகளும் பெண்ணை குறைசொல்லும் காலமடி இது <_<

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கட்டில் இல்லை மன்னன் நோக்கம் - தையல்

விரல் கட்டில் போடும் தாளமே சூட்சுமம். :lol: :lol: :lol:

கொப்பிரைட்: இசைக்கலைஞர் கவிராயர் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கட்டில் இல்லை மன்னன் நோக்கம் - தையல்

விரல் கட்டில் போடும் தாளமே சூட்சுமம். :lol: :lol: :lol:

கொப்பிரைட்: இசைக்கலைஞர் கவிராயர் :icon_mrgreen:

கோமகன், இசையின் குறளுக்கு, சரியான கருத்தை எழுதவும்!

வள்ளுவனைப் போலவே, இவரும் நேரடியாக விசயத்திற்கு வராமல், மறை பொருளுடன் குறள் வடிக்கின்றார்! :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட ரதியும் என்னைப் போலவா குரல்வளம் உடையவர்....ஒரு காலத்தில் கவலைப்பட்டிருக்கிறேன் இனிமையான குரல் இல்லையே என்று இப்போதெல்லாம் அந்தக்கவலை துளியும் கிடையாது. என்ன இனிமையான குரல்வளம் இருந்தால் பாட்டுப்படிக்கலாம் மற்றப்படி நத்திங்...

எந்த மடையன் சொன்னது இனிமையான குரல் இருந்தால்தான் பெண்களை திருமணம் செய்வோம் என்று?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ரதியும் என்னைப் போலவா குரல்வளம் உடையவர்....ஒரு காலத்தில் கவலைப்பட்டிருக்கிறேன் இனிமையான குரல் இல்லையே என்று இப்போதெல்லாம் அந்தக்கவலை துளியும் கிடையாது. என்ன இனிமையான குரல்வளம் இருந்தால் பாட்டுப்படிக்கலாம் மற்றப்படி நத்திங்...

எந்த மடையன் சொன்னது இனிமையான குரல் இருந்தால்தான் பெண்களை திருமணம் செய்வோம் என்று?

ஆகாயத்தில் போய்க்கொண்டிருக்கும் சீதேவிகளை வலிய கூப்பிட்டு தங்கள்மடியில் வைத்திருக்கும் பண்டாரங்கள்.......எங்களுக்கும் நீங்கள் சொல்லும் மடையனை பெண்பாலாக மாற்ற அதிக நேரம் செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், இசையின் குறளுக்கு, சரியான கருத்தை எழுதவும்!

வள்ளுவனைப் போலவே, இவரும் நேரடியாக விசயத்திற்கு வராமல், மறை பொருளுடன் குறள் வடிக்கின்றார்! :lol::D:lol:

கோம்ஸ் நித்தாக்குப் போயிருப்பார்.. அதனால் இதோ பொழிப்புரை.. :D

இசைக்கச்சேரியில் மங்கையின் குரலில் அல்ல தலைவனுக்கு நாட்டம்.! விரல் கட்டைக் கொண்டு அவள் மடியில் மெதுவாகப் போடும் தாளமே அவனுக்கு விருந்தாகும் என்கிறார் கவிராயர்..! :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ் நித்தாக்குப் போயிருப்பார்.. அதனால் இதோ பொழிப்புரை.. :D

இசைக்கச்சேரியில் மங்கையின் குரலில் அல்ல தலைவனுக்கு நாட்டம்.! விரல் கட்டைக் கொண்டு அவள் மடியில் மெதுவாகப் போடும் தாளமே அவனுக்கு விருந்தாகும் என்கிறார் கவிராயர்..! :lol:

மிக்க நன்றிகள், கவிராயரே!!!

உங்கள் குறளுக்கும், அதற்கேற்ற அருமையான பொழிப்புரைக்கும்!!!

தொடர்ந்தும் குறளுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தில் போய்க்கொண்டிருக்கும் சீதேவிகளை வலிய கூப்பிட்டு தங்கள்மடியில் வைத்திருக்கும் பண்டாரங்கள்.......எங்களுக்கும் நீங்கள் சொல்லும் மடையனை பெண்பாலாக மாற்ற அதிக நேரம் செல்லாது.

கு.சா அண்ணை சுட்டிக்காட்டியதற்கு நன்றி திருத்தம்

"எந்த முட்டாள் சொன்னது இனிமையான குரல் இருந்தால்தான் திருமணம் செய்வோமென்று?" :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள், கவிராயரே!!!

உங்கள் குறளுக்கும், அதற்கேற்ற அருமையான பொழிப்புரைக்கும்!!!

தொடர்ந்தும் குறளுங்கள் :D

ச்சே.. தொடர்ந்தும் உளறுங்கள் என்று படித்துவிட்டேன்..! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மென்மையான குரலால் பேசி ஆளை கவிழ்பவரை விட

ஆழமான குரலால் ஆணின் மனதை ஆள்பவர் அன்பானவர்.

நீங்கள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் உங்களின் நிஜ இயல்பை "ஏற்றவர்" உங்களை வாழ்நாள் முழுவதும் விரும்புவார்.

நடித்தால், சுயரூபம் வெளிப்படும்போது கசப்பாக மாறும்!

ஆனால் இதனால், உங்களை அறிந்த உங்கள் தம்பி கூறியதுபோல், உங்களுக்கு கல்யாணமே நடக்காவிடால் அதற்கு எனது கருத்தில் குற்றம் காணக் கூடாது.

கட்டைக் குரல் பிரச்சனையானது அல்ல. எப்படிக் கதைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சில கட்டைக் குரல் பெண்களின் குரல்தான் Husky ஆக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பேசும் பொழுது மீண்டும் மீண்டும் கேட்க்க வேணும் போல இருக்கும்.அதால அவர் சொல்லும் கருத்து தேனோட சேர்ந்த மருந்து போல உள்ளே போகும்.இதுக்கு குரல் மட்டும் காரணம் என்றில்லை.மற்றவர்களை மதித்தால் எங்களை மிதித்து விடுவார்களோ என்ற எண்மும் தான் காரனம்.மற்றும் அன்பு பாசம் கருனை காதல் இருந்தால் குரல் முக்கியம் இல்லை.ஏன் வார்தையே தேவையில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "இவர்களைப் பாரேன்! அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் இவர்களுக்கு பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை" என்று ஏளனம் செய்தனர்............http://www.ru-home.net/book/export/html/188

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.