Jump to content

சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?


Recommended Posts

சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது?

 

bond_between_brother_and_sister_quotes.j

 

சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள்.

ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.

சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த கட்டுரையில் சகோதர உறவு முறை ஏன் முக்கியமானதாக உள்ளது என்று நாம் சில கருத்துகளை விவாதிப்போம். இதனை விளக்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

நண்பன், வழிகாட்டி மற்றும் ஆசான்

சகோதரர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை பராமரிக்க வேண்டும். சகோதரர் அல்லது சகோதரிகள் தான் தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்வதுடன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் விளக்கமாக தெரிந்தும் வைத்திருப்பார்கள். நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் சகோதரர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். கடினமான நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் பாசத்துடன் இருப்பார்கள்.

உணர்வு ரீதியான ஆதரவு

சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள். அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.

புரிதல்

சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புர்pந்து கொள்வார்கள். நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவுகளை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். ஆதன் மூலம் தனர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் குவலைகளையம், பிரச்னைகளையும் நம்பிக்கையான ஒருவரிடம் மனம் விட்டுப் பேச முடியும். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். உங்களுக்கு சகோதரர்கள் இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை.

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிகவும் முக்கியமானதாகும். சகோதரர்கள் பாசத்துடன் இணைந்திருக்கும் வரையில் குடும்பத்தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும். இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது. குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.

இரத்த பந்தம்

சகோதர உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வர வேண்டும்.

 

http://raonenews.blogspot.com/2014/02/blog-post_8.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தக் காலத்தில் சகோதரமாவது,உற்வுமுறையாவது,பாசமாவது....மண்ணாங்கட்டி :huh:
 
Link to comment
Share on other sites

 

இந்தக் காலத்தில் சகோதரமாவது,உற்வுமுறையாவது,பாசமாவது....மண்ணாங்கட்டி :huh:

 

 

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

 

Link to comment
Share on other sites

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

அது எல்லாம் இப்ப போலி, அதுவும் புலம் பெயர் நாடுகளில்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுகடக்கும்வரை அண்ணன் தம்பி. ஆறுகடந்தபின் நீயாரோ, நான்யாரோ. :(

 

தானாடாவிட்டாலும் தசையாடும் என்று ஏன் சொல்கின்றார்கள் அக்கை :D ??

இது பிள்ளைகள் தாய்ப்பால் குடித்த காலத்தில் எழுதப்பட்டது. புட்டிப்பால் குடிக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. :D :D

Link to comment
Share on other sites

ஆறுகடக்கும்வரை அண்ணன் தம்பி. ஆறுகடந்தபின் நீயாரோ, நான்யாரோ. :(

இது பிள்ளைகள் தாய்ப்பால் குடித்த காலத்தில் எழுதப்பட்டது. புட்டிப்பால் குடிக்கும் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. :D :D

தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களும் புலம் பெயர்ந்த பின்பு, புட்டிப்பால் குடித்து வளர்ந்தவர்களை விட மோசம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை மனுசிக்கு சகோதரங்கள்....சகோதரியள் கொஞ்சப்பேர் லண்டன் கனடா அவுஸ்ரேலியாவிலை இருக்கினம்.....அவவுக்கு அதுகளை கண்ணிலையும் காட்டப்படாது....அதுவும் லண்டனிலை இரண்டுபேர் இருக்கிறாங்கள்.....வேண்டாம் சோலி கதையை விடுவம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் மனிதம் கவிண்டுபோய்க் கிடப்பதற்கு உந்த லண்டன்தானே முழு முதற்காரணம். எனக்கும் ஒன்று லண்டனில் இருக்கு. என்னிடமும் எனக்குத் தெரிந்த பலரிடமும் புடுங்கிக்கொண்டு. ஆனால் நல்ல வசதியாய் இருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க.!! :rolleyes: 

Link to comment
Share on other sites

நன்றாக யோசித்துப் பார்த்தால் திருமணம் செய்வதற்கு முன் சகோதர உறவுமுறைகள் நன்றாக இருக்கும்.. அவரவர் திருமணங்களை முடித்த பின்.. :unsure:

"நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??" :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எல்லா சுத்து மாத்துக்காரர்களும் லண்டனில்தான் வந்து பதுங்கியிருக்கின்றார்கள் என்பது மாதிரியல்லவா தெரிகின்றது! நாங்களும் பிரித்தானியாவில்தான் இருக்கின்றோம். ஒற்றுமையான சகோதரர்களையும் ஊர்க்காரர்களையும் நிறையவே கண்டிருக்கின்றேன்.

என்ன முன்வீட்டில் 10 வருடமாக இருப்பவர்கள் தமிழர்கள் என்றாலும் வணக்கம், ஹலோ சொல்லிக் கதைப்பதில்லை என்பது உண்மைதான். அது கொழும்பு நகரத் தமிழர்களிடம் இருந்து கற்றது மாதிரித் தெரிகின்றது!

எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்து நித்திரையால எழும்பியதும் அண்ணனுடன் சண்டை பிடிப்பதுதான் வேலையாக இருந்தது. ஒருநாள் அது கொஞ்சம் முற்றி அம்மா இரண்டுபேருக்கும் அடிபோட்டு இனிமேல் இருவரும் கதைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டா. தாய் சொல்லைத் தட்டமுடியாத தனயர்களாக இருந்ததால் பல வருடங்கள் நேரடியாகக் கதைத்ததில்லை. இடையில் பாலமாக இருப்பது தம்பிதான். ஆனால் நாங்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருக்கின்றோம்.

எப்போது கேட்டாலும் என்னை நெகிழச் செய்யும் பாட்டு.

 

http://www.youtube.com/watch?v=gaXGGYusLfM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தில் ஒரு சகோதரம் வில்லத்தனத்தோடு இருந்தாலும் போதும்.அந்த குடும்பத்தில் பிறந்த பெண்ணின் நிலை சொல்ல வேண்டியதில்லை...சில குடும்பங்களில் சகோதரங்கள் மற்றச் சகோதரங்களைப்படுத்தும் பாடு பக்கம்,பக்கமாக எழுதலாம்....அப்படியான மனிதர்களிடம் எனக்கு தெரிந்த ஒரே மொழி மௌனம் என்றதால் சமாளிக்க கூடியதாக இருக்கு..எப்போதும் எனக்கு ஒரு அக்கா,தங்கை இல்லையே என்று கவலைப்படுவதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தில் ஒரு சகோதரம் வில்லத்தனத்தோடு இருந்தாலும் போதும்.அந்த குடும்பத்தில் பிறந்த பெண்ணின் நிலை சொல்ல வேண்டியதில்லை...சில குடும்பங்களில் சகோதரங்கள் மற்றச் சகோதரங்களைப்படுத்தும் பாடு பக்கம்,பக்கமாக எழுதலாம்....அப்படியான மனிதர்களிடம் எனக்கு தெரிந்த ஒரே மொழி மௌனம் என்றதால் சமாளிக்க கூடியதாக இருக்கு..எப்போதும் எனக்கு ஒரு அக்கா,தங்கை இல்லையே என்று கவலைப்படுவதும் உண்டு.

 

அண்ணன் தம்பி சண்டை அடி தடியோடு முடிந்துவிடும். அக்கா தங்கை சண்டை அத்திவாரத்தையே தகர்த்துவிடும். இது நானாக எழுதவில்லை. நகமும் சதையுமாக வாழ்ந்த சகோதரிகளின் சண்டை தந்த அனுபவம் சொல்ல எழுதுவது. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தம்பி சண்டை அடி தடியோடு முடிந்துவிடும். அக்கா தங்கை சண்டை அத்திவாரத்தையே தகர்த்துவிடும். இது நானாக எழுதவில்லை. நகமும் சதையுமாக வாழ்ந்த சகோதரிகளின் சண்டை தந்த அனுபவம் சொல்ல எழுதுவது. :o

ரொம்ப 'பழுத்த பழம்' போலக் கிடக்கு. :o

 

பாசமெல்லாம் சரிதான், ஆனால் அனைவரும் திருமணமானதும், பெற்றோர்கள் மறைந்தவுடன் குடும்ப சொத்திற்காக வருமே பாருங்கள் சச்சரவுகள், சொல்லிடக்க முடியாது. சாகும்வரை சேராத குடும்பங்கள் பல உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கோ

நல்லதொரு தேவையான  பதிவும் வாழ்வும் கூட

 

இங்கு எழுதிய பலரும் மறுபக்கமாகவே  எழுதியுள்ளனர்

ஆனால் நாம் இங்கு பார்க்கவேண்டியது

சகோதர  உறவு முறை  என்றால் என்ன என்பதும்

அதை எவ்வாறு வளர்த்தெடுப்பதுமென்பதுமாகும்.....

 

எந்த ஒரு அன்பும்

உறவும்

கொடுக்கல் வாங்கல் கணக்குகளை  வைத்து வரக்கூடாது

அவை அன்பாக  

உறவாக இருக்கமுடியாது

அவையே  தடம்புரள்கின்றன

அன்புக்குள் சுயநலங்கள் புகுவதே

அதனை ஆட்டம் காணவைக்கமுடியும்.

 

நாங்கள் ஒன்பது பேர்

சகோதரர்கள் என்றால் இப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமாக உள்ளோம்

எந்த பிரிவும்

எந்த இடைவெளியும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்

பலர் இதற்குள் இடையிட்ட போதும்

எமக்குள் அவற்றை  பேசிக்கொள்ளும் பழக்கத்தால்

அக்கா

அண்ணன்

தம்பி

தங்கை 

ஆகியவற்றுக்கான அவரவருக்கான மதிப்பையும்

அவர்களுக்கான முதல் மரியாதையையும்  கொடுக்க  தவறுவதில்லை.

 

இன்றும் ஒரு சபையில் 

மேடைக்கு நாங்கள் ஒன்றாக சென்றால்

அவரவர் பிறந்த ஒழுங்கிலேயே நிற்போம்

என்னைத்தாண்டி என் தம்பி  செல்லான்

அவன் மனைவியும்   செல்லார்

அதேபோல்

என் அக்கா  அத்தான்மாரைத்தாண்டி நான் சென்றதில்லை

என் மனைவியும் அப்படியே.முதலில் உறவு முறை  வேண்டுமா  என்பதை நாமும்

நமது நடவடிக்கைகளும்  சொல்லவேண்டும்...........

 

அத்துடன் சகோதரர்களிடையே  பணக்கொடுக்கல்வாங்கல்களை  முடிந்தவரை  தவிர்க்கணும்

ஒருவருக்கு உதவவேண்டிவரின்

கொடுத்துவிட்டு மறந்துவிடணும்

நான் அப்படித்தான் செய்தேன்...........


அம்மா எப்பொழுதும் பெண் பிள்ளைகள் பக்கம் நிற்பார்

அப்பா

எங்கள் பக்கம் நிற்பார்

ஆனால் பெண் பிள்ளைகள் கண்ணீர்  விட்டால் அப்பாநிலையும் மாறிவிடும்..........

நாம் வெளியில் கண்ணீரைக்காட்டமாட்டோம்

அதை அவர்களும் அறிவர்..... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக யோசித்துப் பார்த்தால் திருமணம் செய்வதற்கு முன் சகோதர உறவுமுறைகள் நன்றாக இருக்கும்.. அவரவர் திருமணங்களை முடித்த பின்.. :unsure:

"நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு??" :huh::D

 

100% உண்மை.

 

கலியாணம் கட்டிற பெண்கள்.. தங்கள் கணவன்மார்களை மட்டும் மாத்திறதில்லை.. அவங்கட சகோதரங்கள்.. தாய் தந்தை சொந்தங்கள்.. மற்றும்.. தங்கட சகோதரங்களையும் எனிமியாக்கிடுகிறார்கள்.

 

இதில்.. பெண்களின் சூழ்நிலைக்கு அமைய எழும்.. சுயநலத்தால் தான்.. இந்த பேரழிவே...! மற்றும்படி.. வேறு ஒன்றும் காரணமல்ல. தான் தான் அந்த ஆணின் எல்லாத்தையும் அனுபவிக்கனும் என்ற வெறி பெண்களிடம் திருமணத்தின் பின் ஏற்பட்டுப் போகிறது. இது மோசமான ஒரு வெறி ஆகும்.

 

எங்கள் வீட்டில் கூட.. சின்னனில் இருந்தே நாங்கள் எல்லோரும் மிகவும் ஒற்றுமை. சண்டை என்று வந்ததில்லை. அந்தளவுக்கு.. புரிந்துணர்வுடன் கூடிய சகோதரர்கள். திருமணம் என்று மூத்த சகோதரர்களுக்கு ஆகிச்சு.. அதோடு.. சரி. எங்கிருந்து தான் இந்தப் பெண்களுக்கு ஆட்களை கொழுவி விடுற.. குறை பிடிக்கிற.. மூளை வருகுதோ.. அந்த பிரம்மாவுக்கு தான் வெளிச்சம். அதுவும் அவங்க கண்டுபிடிக்கிற காரணங்கள் கடவுளே.. நாங்க மனசால எண்ணி இருக்க முடியாத கொடுமைகளாக இருக்கின்றமை.. இந்தப் பெண்களை பெற்று வளர்க்கிற பெற்றோர்கள் என்ன விசத்தையா ஊட்டி வளர்க்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

 

அண்ணிகள்.. சரியாக அமைந்தால்..கணவர்மாரின்.. சகோதர பாசம்.. கணவர்மாரின் குடும்ப உறவு நல்லா அமையும். அண்ணிகள்.. எங்க.. எல்லாம்.. மோசமான.. உண்ணிகளாக எல்லோ இருக்கின்றன. அதுவும் தமிழ் பெண்கள் கேவலம். :icon_idea::)

 

இறுதியாக நாங்க எடுத்த முடிவு.. அண்ணிகளோடு.. எந்த விடயத்தையும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.. நல்லது கெட்டது விசாரிக்கிறதும் இல்லை... எங்கட விசயத்தை நாங்களே தீர்மானிப்பது என்று. அண்ணிகளை.. எனிமியாவே வைச்சுக் கொள்ளுறது என்று. அதன் பின்னர் தான் ஓரளவுக்கு சகோதரர்களிடையே பழைய உறவு நிலையை பேண முடிகிறது. அது போலியோ நிஜமோ.. அதுவே போதும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்பது பேர்

சகோதரர்கள் என்றால் இப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமாக உள்ளோம்

நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.! வாழ்த்துக்கள்..!! :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆயிரத்தில் ஒருவர்.! வாழ்த்துக்கள்..!! :):D

இதில் பொய்யும் இருக்கலாம் ,கூடப்பிரந்தவர்களை  ஏன் காட்டிக்கொடுப்பான் என்று  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பொய்யும் இருக்கலாம் ,கூடப்பிரந்தவர்களை  ஏன் காட்டிக்கொடுப்பான் என்று  :(

 

 

இது தான் பிரச்சினை

இப்ப  நோண்டிக்கொண்டு திரிஞ்சா......

 

சகோதரம் என்ன

எவனுடனும் உறவோட  இருக்கமுடியாது..... :(  :(

நம்மை திருத்துவம் ராசாக்கள். :D

Link to comment
Share on other sites

இந்த திரியை பார்க்க உண்மையில் சகோதர பாசத்தை பற்றி இத்தனைபேர் குறையாக எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே இரத்தமாக இருக்கும் உறவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா? :o அப்போ வேறு யாரோடு உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடியும்? :huh: விட்டுக்கொடுப்பும், அனுசரிக்கும் மனப்பான்மையும் இல்லாமையே இதற்கு முதல் காரணம். அண்ணி வந்தபின்பு அத்தான் வந்த பின்பு என்பது எல்லாம் நொண்டி சாட்டுக்கள்....சகோதரங்களுக்குள் உண்மையான உறுதியான அன்பிருந்தால் எவராலும் அந்த அன்பை உடைக்கமுடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது இதற்குள் எம் உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்காமல், போகும் போது எதை கொண்டு போகப்போகின்றோம்? அண்ணா,அக்கா,தம்பி, தங்கை என்று ஒரு பாசக்கயிற்றால் கட்டுண்டு அன்பை மட்டுமே பரிமாறி வாழ்ந்து பாருங்கள் - வாழ்க்கை சொர்க்கம் தான்.

Link to comment
Share on other sites

இந்த திரியை பார்க்க உண்மையில் சகோதர பாசத்தை பற்றி இத்தனைபேர் குறையாக எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே இரத்தமாக இருக்கும் உறவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா? :o அப்போ வேறு யாரோடு உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடியும்? :huh: விட்டுக்கொடுப்பும், அனுசரிக்கும் மனப்பான்மையும் இல்லாமையே இதற்கு முதல் காரணம். அண்ணி வந்தபின்பு அத்தான் வந்த பின்பு என்பது எல்லாம் நொண்டி சாட்டுக்கள்....சகோதரங்களுக்குள் உண்மையான உறுதியான அன்பிருந்தால் எவராலும் அந்த அன்பை உடைக்கமுடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது இதற்குள் எம் உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்காமல், போகும் போது எதை கொண்டு போகப்போகின்றோம்? அண்ணா,அக்கா,தம்பி, தங்கை என்று ஒரு பாசக்கயிற்றால் கட்டுண்டு அன்பை மட்டுமே பரிமாறி வாழ்ந்து பாருங்கள் - வாழ்க்கை சொர்க்கம் தான்.

உண்மை.. ஆனால் புலம்பெயர் வாழ்வில், நேரமில்லாமல் (அல்லது இவற்றுக்கு நேரத்தை ஒதுக்காமல்) ஓடிக்கொண்டிருக்கும்போது தவறுகள் ஏற்படுவது சகஜமானது. மனிதன் வளர்ந்து வரும்போது தனக்கு ஏற்படும் அனுபவங்களின் ஊடாகத்தான் தனது நடவடிக்கைகளை ஒருங்கமைத்துக் கொள்கிறான்.

ஊரில் இருக்கும்போது வயதில் பெரியவர்கள் யாழ்கள மட்டுறுத்தினர்கள்போல் இருந்து :D , பிள்ளைகளை ஒருங்கிணைத்து நடத்திச் செல்வார்கள் (பெரும்பாலும்). புலம்பெயர் வாழ்வில் அவை இழக்கப்படும்போது தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. பின்னர் அவற்றை உணர்ந்து திருத்திக்கொல்ள காலம் எடுத்துவிடுகிறது. பிறகு உடைந்த பானை ஒட்டாது என்கிற கதைதான்.

Link to comment
Share on other sites

உண்மை.. ஆனால் புலம்பெயர் வாழ்வில், நேரமில்லாமல் (அல்லது இவற்றுக்கு நேரத்தை ஒதுக்காமல்) ஓடிக்கொண்டிருக்கும்போது தவறுகள் ஏற்படுவது சகஜமானது. மனிதன் வளர்ந்து வரும்போது தனக்கு ஏற்படும் அனுபவங்களின் ஊடாகத்தான் தனது நடவடிக்கைகளை ஒருங்கமைத்துக் கொள்கிறான்.

ஊரில் இருக்கும்போது வயதில் பெரியவர்கள் யாழ்கள மட்டுறுத்தினர்கள்போல் இருந்து :D , பிள்ளைகளை ஒருங்கிணைத்து நடத்திச் செல்வார்கள் (பெரும்பாலும்). புலம்பெயர் வாழ்வில் அவை இழக்கப்படும்போது தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. பின்னர் அவற்றை உணர்ந்து திருத்திக்கொல்ள காலம் எடுத்துவிடுகிறது. பிறகு உடைந்த பானை ஒட்டாது என்கிற கதைதான்.

 

நாங்களும் புலம் பெயர் நாட்டில் தானே இருக்கிறம் இசை அண்ணா? :) ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது ஒரு வீட்டில் எல்லோரும் சந்திப்போம். மனம் உண்டானால் இடம் உண்டு...உண்டு   :)  :D  :icon_idea:

 

Spoiler
சில வேளை சகோதரங்கள்  ஒன்பது பேராக இருந்தால் தான் ஒற்றுமையாக இருப்பாங்களோ!!!!!! :icon_idea: 
Link to comment
Share on other sites

நாங்களும் புலம் பெயர் நாட்டில் தானே இருக்கிறம் இசை அண்ணா? :) ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது ஒரு வீட்டில் எல்லோரும் சந்திப்போம். மனம் உண்டானால் இடம் உண்டு...உண்டு   :)  :D  :icon_idea:

 

Spoiler
சில வேளை சகோதரங்கள்  ஒன்பது பேராக இருந்தால் தான் ஒற்றுமையாக இருப்பாங்களோ!!!!!! :icon_idea: 

பாரதூரமான புடுங்குப்பாடுகள் இங்கு இல்லை.. ஆனால் மைக்ரோசாஃப்ட் கம்பனி, கூகிள், அமசான் இவர்கள் சந்தித்தால் எப்பிடி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

பாரதூரமான புடுங்குப்பாடுகள் இங்கு இல்லை.. ஆனால் மைக்ரோசாஃப்ட் கம்பனி, கூகிள், அமசான் இவர்கள் சந்தித்தால் எப்பிடி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். :lol:

 

:lol: :lol: இந்த இடைவெளியை இன்னும் குறைக்க இடமுண்டு  :)

 

Link to comment
Share on other sites

இந்த திரியை பார்க்க உண்மையில் சகோதர பாசத்தை பற்றி இத்தனைபேர் குறையாக எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்து, ஒரே இரத்தமாக இருக்கும் உறவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா? :o அப்போ வேறு யாரோடு உங்களால் ஒற்றுமையாக இருக்கமுடியும்? :huh: விட்டுக்கொடுப்பும், அனுசரிக்கும் மனப்பான்மையும் இல்லாமையே இதற்கு முதல் காரணம். அண்ணி வந்தபின்பு அத்தான் வந்த பின்பு என்பது எல்லாம் நொண்டி சாட்டுக்கள்....சகோதரங்களுக்குள் உண்மையான உறுதியான அன்பிருந்தால் எவராலும் அந்த அன்பை உடைக்கமுடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது இதற்குள் எம் உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்காமல், போகும் போது எதை கொண்டு போகப்போகின்றோம்? அண்ணா,அக்கா,தம்பி, தங்கை என்று ஒரு பாசக்கயிற்றால் கட்டுண்டு அன்பை மட்டுமே பரிமாறி வாழ்ந்து பாருங்கள் - வாழ்க்கை சொர்க்கம் தான்.

 

உண்மைதான் தமிழினி. எனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டுமே இருப்பதால் இதில் அதிகம் எழுதுவது சரியாகாது. ஆனால் என் அனுபவத்தில் சகோதரம் என்பது அருமையான ஒரு உறவு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மை, இன்று வரைக்கும் என் சகோதரி ஒரு நல்ல தோழியாகவே எனக்கு இருக்கின்றார்.

 

பல வீடுகளில் கணவன் தன் சகோதரத்துக்கு உதவுவதை மனைவி எதிர்ப்பதற்கு காரணம் மனைவியிடம் அது பற்றி கதைத்து தெளிவுபடுத்தாமல் விடுவதே. பல அண்ணிமார்களுக்கு  சகோதரங்களுக்கு காசு அல்லது உதவி செய்வதை அண்ணன்மார்கள் முற்றாக மறைக்க முயல்வதுதான் பிரச்சனையின் மூல காரணமாக இருப்பதைக் கண்டுள்ளேன். அத்துடன் மனைவியின் அப்பா அம்மாக்களும் தேவையில்லாமல் இந்த விடயங்களில் வேலை வெட்டி இல்லாத தம் மூக்குகளை நுழைப்பதும் காரணம்.

 

எனக்கு ஒரு டவுட் இருக்கு, இந்த தமிழகத்து தொடர் நாடகங்களால் (ரீ வி சீரியல்கள்) எம் மக்கள் அதிகம் பாதிப்புறுகின்றனரோ என்று. 90 வீதமான தொடர் நாடகங்களில் சகோதரங்களை வில்லன்கள் மாதிரிக் காட்டுவதும், சகோதரிகளே சகோதரிகளை வெறுப்பதாகக் காட்டுவதும் வழமை என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.