Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமைப் பரிசில் முடிவுகள் வெளியாகின! யாழ்ப்பாணத்தில் மூவருக்கு முதலிடம்

Featured Replies

fhffhhfhfrh.jpg

 

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின.
 
இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி ம.வி., கண்ணகிபுரம் ம.வி. ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மாணவ ,மாணவி களுக்கு வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை இருண்டதுபோல் தோற்றமளித்தாலும் அவ்வப்போது ஒளிக்கீற்றுகளும் தோன்றத்தான் செய்கிறது. மாணவ நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள்!!.  :rolleyes:  :rolleyes:

சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். சித்தியடையாத மாணவர்கள் சோர்ந்து போய் விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவ ,மாணவி களுக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மாணவ ,மாணவி களுக்கு வாழ்த்துக்கள்

மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் தயானந்தரூபன் அபினேஸ் 195 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

 

abinesh%20669d.jpg

 

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் தயானந்தரூபன் அபினேஸ் 195 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன் வடமாகாணத்திலும் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனாக பதிவாகியுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் முரளி சாகித்தியன் 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி தவப்பிரகாஸ் அக்சிகா 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

 

இதேவேளை, வடமாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன் தயானந்தரூபன் அபினேஸுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரராரலிங்கம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். - See more at: http://malarum.com/article/tam/2014/09/28/5820/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.0VWwQmUK.dpuf


 

மாணவ ,மாணவி களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்  !

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மண்ணில் மணம் வீசும் மாணவச் செல்வங்களே உங்கள் எதிர்காலம் ஒளிமயமாய் அமைய எம் இனிய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு நல்வாழ்த்துக்கள்..!

மாணவ ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த, மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசில்: அகில இலங்கையில் எம்.வெனுஜா நிம்சாத் முதலிடம்,நுவரெலியாவில் கிர்ஷான் முதலிடம்,பிரியலோஷனி 2ஆம் இடம்

 
D545d40d.jpg
(க.கிஷாந்தன்)
 
 
வெளியாகியுள்ள ஐந்தாம் தரம் புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எம்பிலிபிடிய கனிஸ்ட பாடசாலையைச் சேர்ந்த எம்.வெனுஜா நிம்சாத் 199 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூவட் தமிழ் மகா வித்தியாலய மாணவன் கிறிஸ்டோபர் கிர்ஷான் 188 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்று கொண்டுள்ளார். இவர் நோர்வூட் இலக்கம் 2 நிவ்வெளி மஸ்கெலியா வீதி நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடம் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி 
பத்மராஜ் பிரியலோஷனி 187  புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இவர் அட்டன் டன்பார் பகுதியை சேர்ந்தவராவர்.
 
இப்பரீட்சை முடிவுகளை http://www.doenets.lk/exam/index.html என்ற திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.
 
 
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வெட்புப்புள்ளி விபரம்

* 159 புள்ளிகள் 

கொழும்பு 

கம்பஹா

களுத்துறை

மாத்தறை 

காலி

கண்டி

மாத்தளை 

குருணாகல்

கேகாலை

*158 புள்ளிகள்

யாழ்ப்பாணம்

வவுனியா

மட்டக்களப்பு

அம்பாறை

திருகோணமலை

மொனராகலை

*157 புள்ளிகள்

நுவரெலியா

கிளிநொச்சி

மன்னார்

முல்லைத்தீவு

பொலநறுவை

இரத்தினபுரி

*156 புள்ளிகள்

பதுளை

புத்தளம்

*155 புள்ளிகள்

அம்பாந்தோட்டை

அநுராதபுரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்.. இந்தப் போட்டிப் பரீட்சையால் மண்டை காய்ந்து திரிந்தோரில் நாமும் அடக்கம்.

 

பரீட்சை எழுதும் வரை ஒரு வகை மண்டை காய்தல். அப்புறம் பரீட்சை எழுதி.. பெறுபேறு வரும் வரை இன்னொரு வகை மண்டை காய்தல். அப்புறம் பெறுபேறு வந்து வெட்டுப்புள்ளி வெளிவந்து நல்ல பாடசாலைக்கு அனுமதி கிடைக்கும் வரை இன்னொரு மண்டை காய்தல். அதிலும் எதிர்பார்த்த புள்ளி வரேல்லைன்னா.. பெற்றோரின்.. உறவினரின்.. நச்சரிப்பால்.. ஆசிரியர்களின் இழக்காரப் பார்வையால்.. இன்னொரு மண்டை காய்தல்...!

 

இந்தச் சின்ன வயசில்.. இது தேவையா..????!

 

சித்தி பெற்ற பெறாத எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். யாரும் இதில சித்தி பெறேல்ல.. சித்தி பெற்றும் நல்ல பாடசாலை கிடைக்கல்ல.. என்று கவலைப்படாதீங்க. அதேபோல.. சித்தி பெற்றிட்டம்.. என்று தலைகால் புரியாமலும் ஆடாதேங்க. இந்த வயசில.. நீங்கள் இந்தப் பரீட்சையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. சவால்களை எதிர்கொள்வது. கிடைக்கும் வாய்ப்பை வைச்சு.. முன்னேற இந்த அனுபவத்தைப் பாவியுங்க.

 

இந்தப் பரீட்சையில் சித்தி அடைந்து பின்னர் படிப்பில் சிறந்தவங்களும் உண்டு.. கவிழ்ந்தவங்களும் உண்டு. அதேபோல்.. தவறவிட்டு.. சிறந்தவங்களும் உண்டு.. சிறக்காதவங்களும் உண்டு. ஆனால்.. எல்லோருக்கும் வாழ்க்கை என்ற ஒன்றுண்டு. அதனை நோக்கி தொடர்ந்து படியுங்க. சிந்தியுங்க. செயற்படுங்க.

 

பெற்றோரும்.. ஆசிரியர்மாரும்.. இதனை ஒரு அளவு கோலாகக் கருதாமல்.. பிள்ளைகளை மட்டம் தட்டாமல்.. ஒரு சந்தர்ப்பம்.. சவால்.. அதை சரியாக கையாண்டவன் போக.. கையாளத் தெரியாமல் தோற்றவனிடத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள். அவனையும் அடுத்த நிலையில்.. இன்னொரு சந்தர்ப்பத்தில்.. சவாலை திறமையாக எதிர்கொள்ள தயார்ப்படுத்துங்கள். அதுதான் முக்கியம்..!!!! சமூக உயர்வுக்கு அவசியம்..!!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மண்ணில் மணம் வீசும் மாணவச் செல்வங்களே உங்கள் எதிர்காலம் ஒளிமயமாய் அமைய எம் இனிய வாழ்த்துக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.