Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படும் - சம்பந்தன்

Featured Replies

sampanthan%204554d.jpg

 

சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
 
இன்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-
 
இன்று இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச சமூகத்துக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவுக்கு முன் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருகின்றன. அதன் நிமித்தம் சர்வதேச விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன. ஐ.நா .சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வருடம் மார்ச் மாதம் வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசு, தான் ஐ.நா. சபையினுடனும் மனித உரிமை பேரவையுடனும் ஒத்துழைக்கத் தயார் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்த விசாரணை வெளியிடப்படுவது இவ்வருடம் ஒக்ரோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் நிலைமைகளைப் பொறுத்தவரை உண்மைகள் அறியப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நடைபெற்ற வேண்டத்தாகத சம்பவங்கள் இலங்கையில் மீண்டும் நடைபெறக்கூடாது என்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடு.
 
விசேட அறிக்கையாளர்கள் கூட சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்கள். எனவே இவற்றை ஒட்டு மொத்தமாக அவதானிக்கின்ற போது எமக்கொரு நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அது சம்பந்தமாக தீர்க்கமான முடிவு அரசாங்கத்தினால் இன்னும் எடுக்கப்படவில்லை.
 
அரசாங்கம் புதிய தேர்தல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுக்கும் போது அந்த முடிவின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் நாம் பங்கு கொள்வோம். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி நாம் கலந்துரையாடியுள்ளோம்.
 
ஜனாதிபதியினால் ஒரு செயலணி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளோம். வட கிழக்கில் விசேடமாக தமிழ் மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இச்செயலணியை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் சென்றவாரம் சந்தித்து உரையாடினோம்.
 
நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சம்பந்தமாக உண்மைகள் அறிந்து - நீதி வழங்கி, அதன் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் - நல்லிணக்கம் ஏற்பட்ட பின்பு மீண்டும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கப்படவேண்டுமென்றும் கூறினோம். அதற்காக சில திட்டங்களை வகுத்து அதன்படி செயற்பட அரசாங்கம் தயாராகி வருகின்றது. இது இன்றைய நிலை.
 
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி பிரிவிலும் இதுவரை காலமும் காணி அபகரிப்புக்கள், தொழில்சார் விடயங்கள், புனர்வாழ்வு, கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், காணாமல் போனவர்கள், விதவைகள், வாழ்வாதாரம் சம்பந்தமாக அனைத்து தரவுகளையும் உண்மை நிலைமைகளையும் சேகரித்து ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது. கலாசார மையங்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பன கடந்த காலங்களில் அளிக்கப்பட்டுள்ளன. இவை சம்பந்தமாக போதிய விவரங்களையும் தரவுகளையும் சேகரித்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமர்பிப்பதன் மூலம் நல்லதொரு தீர்வை இவற்றுக்கு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றது. அதை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. - என சம்பந்தன் தெரிவித்தார்.
 
http://www.malarum.com/article/tam/2015/04/16/9629/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.0tlfIUId.dpuf
 
 

sampanthan%204555d.jpg

 

sampanthan%204556d.jpg

 

 

பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு தான் நாக்கிலை.... சனி பகவான் குடி இருக்கிறார் என்றால்.... அர்ஜுனுக்குமா? :D  :lol:


இன்று வாங்கிக் கட்ட, ரெடியாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்தை சிங்களவர்கள் தரவே மாட்டார்கள் என்பதை சம்பந்தர் ஐயா எப்போ புரிந்து கொள்வார்?

http://www.yarl.com/forum3/index.php?/topic/156019-கூட்டமைப்புக்கே-எதிர்க்கட்சி/

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ என்ன இலக்கத்தில் இவர் ஏறி நிற்கிறார் ?? 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சைபர் கூட்டங்கள் பூச்ச்சியம் மையிர் சொறி சிரங்கு பற்றி கதைக்கிணம் மோட்டு கூட்டங்கள் இந்த நெருப்பை கொளுத்தி போட்டு பின்னம்கால் பிடரியில் பட கனடாவுக்கு போய் அங்குள்ள ஸ்நோவுக்குள் தலயை ஓட்டிக்கொண்டு நின்டதுகள் மைனஸ்  பற்றி கதைக்குதுகள் அட ஸ்நோவுக்குள் மைனஸ்தானே அதையா சொல்லுகிறார்.                                                        


பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

கிடங்கு வெட்டி தானே சுழிபுரத்தில் அவ்வளவு பேரையும் தாட்டது. தொடக்கி வச்ச பெருமக்கள் 


தமிழன் ஒற்றுமையாக இல்லாததன் குறியீடு நீங்கள்தான்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்- அப்படி என்றால் நாம் தற்போது பிளஸ் இருப்பதாக தானே சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

உங்களுக்கு உதுகும் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா தேர்தலில் வென்றால் மீண்டும் மைனஸ்தான்...சம்பந்தன் ஐயா-------

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படும் - சம்பந்தன்

 
 
புலிகள் தமது உயிரைக்கொடுத்து ஐநாவில் கொண்டு போய்விட்டனர்
 
ஐயா
 
சிறீலங்காவின்சுதந்திரதினக்கொண்டாட்டத்துக்கு பின் கதவால் போய் இருந்து எல்லாவற்றையும் பூச்சியம் ஆக்கினார்
 
குற்ற உணர்வு போல..
 
அது தான் இடைக்கிடை இவ்வாறு பழியை எங்காவது போடுகிறார்
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

 

சம்பந்தன் ஐயா பூச்சியம் எண்டுறார்...... இவர் அதுக்கும் கீழை எண்டுறார்.
 
இப்ப சொல்லுங்கோ உதிலை ஆருக்கு கனக்கத்தெரியும்?
 
அடேங்கப்பா செஞ்சோற்றுக்கடன் இன்னும் இருபது வருசத்துக்கு இருக்கா?????  :icon_mrgreen:
சம்பந்தனும் சுமந்திரனும் சந்தர்ப்பத்தை பயன் படுத்துவார்களா அல்லது பழியை வேறு  எங்கோ போடுவார்களா? அல்லது சில்லறைத் தீர்வு ஒன்றுக்குச் செல்வார்களா ? அவரின் கட் சிக் காரருக்கே தெரியாது அய்யா என்ன செய்யப் போறார் எண்டு.    
 
விரைவில் அனைத்து புலம்பெயர் அமைப்புக்களும் ஒன்று பட்டு ஒரு இடைக்காலத்தீர்வை  முன் வைக்க வேண்டும் .

மைனஸ் என்பது நான் சொல்லியோ அல்லது சம்பந்தர் சொல்லியோ தெரியவேண்டியதில்லை .

 

யாழில் அன்றாடம் இணைக்கும் செய்திகளை பார்த்தாலே தெரியும் .

நாட்டில்  எமது சனத்தொகை ,விடுபடாத பிரதேசங்கள் ,இன்னமும்  முகாமகளில் இருக்கும் மக்கள் எல்லாம் என்னத்தை சொல்லி நிற்கின்றது .

அரசியலில் அதை விட கேவலமான நிலை .

 

ஐ.நா விற்கு நீங்கள் பஸ் எடுத்து  போய் கொடி பிடித்து கூத்து போட வைத்திருப்பது மட்டும் உண்மை .

மைனஸ் என்பது நான் சொல்லியோ அல்லது சம்பந்தர் சொல்லியோ தெரியவேண்டியதில்லை .

யாழில் அன்றாடம் இணைக்கும் செய்திகளை பார்த்தாலே தெரியும் .

நாட்டில் எமது சனத்தொகை ,விடுபடாத பிரதேசங்கள் ,இன்னமும் முகாமகளில் இருக்கும் மக்கள் எல்லாம் என்னத்தை சொல்லி நிற்கின்றது .

அரசியலில் அதை விட கேவலமான நிலை .

ஐ.நா விற்கு நீங்கள் பஸ் எடுத்து போய் கொடி பிடித்து கூத்து போட வைத்திருப்பது மட்டும் உண்மை .

மெனஸோ பூச்சியமோ சிங்கள அரசின் சில எடுபிடிகள் கூட அதுபற்றி கவலைப்படுவது போல் நடிப்பது தம்முள் ஊறி இருக்கும்.புலி எதிர்ப்பை கக்க மட்டுமே. அந்த வகையில்........
  • கருத்துக்கள உறவுகள்

பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

 

 பான்கி மூன், வி கே சிங்க் இப்படிப் பலர் தங்களுடைய சுருதியை மாற்றும்போது உங்களுக்கு இதை விட்டால் வேறு ஒரு சுருதி தெரியவில்ல, பாவம் நீங்கள். உங்களை யாரும் புரிஞ்சு கொள்ள மாட்டேன் என்கிறாங்களே.
 ............வாலை நிமிர்த்த முடியுமா?

இறுதியில் எல்லாமே சூனியம்தான்.

 

இறுதியில் சனத்தை நடுத்தெருவில் விட்டதுதான் மிச்சம். போராட்டமும் வெல்லவில்லை அரசியல் தீர்வும் இல்லை. இப்பவெல்லாம் தண்ணிக்கும் சொத்துக்குமே போராட்டம் செய்யவேண்டியதாகிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் எல்லாமே சூனியம்தான்.

 

இறுதியில் சனத்தை நடுத்தெருவில் விட்டதுதான் மிச்சம். போராட்டமும் வெல்லவில்லை அரசியல் தீர்வும் இல்லை. இப்பவெல்லாம் தண்ணிக்கும் சொத்துக்குமே போராட்டம் செய்யவேண்டியதாகிடக்கு. 

நானும் நீங்களும் இதை போராட்டம் நடந்தபோது யோசித்திருக்கவேண்டும் 
டீன் வயது பெண்கள் கரும்புலியாக படகு ஏற 
நாம் கனடா பக்கம் விமானம் ஏறினோம்.
 
புலி வெட்டிய வரியால் நலிந்துபோன இனம்.
இனி மீளவே சாத்தியம் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா சுதந்திர தின கொண்டாட்டத்தில்.. போய் குந்திறது. சிங்கக் கொடிய தூக்கிப் பிடிக்கிறது.. புலிகளை பயங்கரவாதிகள் என்றது.. தமிழீழத்தை கைவிட்டாச்சு.. சந்திரிக்காவுக்கு வால் பிடிச்சாச்சு. இப்படி எத்தனையோ செய்திட்டியள். இன்னும் பூச்சியத்தில தானே நிற்குது எல்லாம். இதனை விட சோரம் போக என்ன இருக்குது.

 

தமிழர்களை பூச்சியத்தில் அல்ல.. அதளபாதாளத்தில் வீழ்த்தாமல் சம்பந்தனும் சுமந்திரனும் ஓயமாட்டார்கள். :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டும் சம்பந்தனும் சுமந்திரனும் என்ன இது வரைக்கும் செய்து விட்டார்கள் விடை பூச்சிசியம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவில் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் தமிழ் அரசியல்வாதிகள் போடும் கூத்துக்கள் பற்றிச்  சொல்லி வேலையில்லை.

 

இப்ப இப்படி  ஆரம்பித்துத் தேர்தலுக்கு முதல் நாள்
தமிழரின் ஒரே இலட்சியம் தனி நாடே

அதற்காக வாக்களியுங்கள் மக்காள் என்பார்கள்
பாவம் மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டும் சம்பந்தனும் சுமந்திரனும் என்ன இது வரைக்கும் செய்து விட்டார்கள் .

 

நாங்கள் பூச்சியத்தில் நிற்கிறோம் என்று கண்டுபிடித்துள்ளனர்.....இதை சொல்லவதற்கு ....பயங்கர அரசியல் ஞானம் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவில் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் தமிழ் அரசியல்வாதிகள் போடும் கூத்துக்கள் பற்றிச்  சொல்லி வேலையில்லை.

 

இப்ப இப்படி  ஆரம்பித்துத் தேர்தலுக்கு முதல் நாள்

தமிழரின் ஒரே இலட்சியம் தனி நாடே

அதற்காக வாக்களியுங்கள் மக்காள் என்பார்கள்

பாவம் மக்கள்

அந்த பருப்பெல்லாம் வேகதுங்க அது அந்த காலம் தமிழ் சனம் ஒருமுறை ஏமாந்து விட்டுதுகள் இனி வராது என்ன விக்கி கொஞ்சம் எடுப்பார் மிகுதி எல்லாம் இப்பவே ஏறக்கட்டுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பூச்சியத்தில் நிற்கிறோம் என்று கண்டுபிடித்துள்ளனர்.....இதை சொல்லவதற்கு ....பயங்கர அரசியல் ஞானம் வேண்டும்

 

யூ மீன் படித்த ஆட்கள் வேண்டும் இதை சொல்வதற்கு ரைட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் எல்லாமே சூனியம்தான்.

 

இறுதியில் சனத்தை நடுத்தெருவில் விட்டதுதான் மிச்சம். போராட்டமும் வெல்லவில்லை அரசியல் தீர்வும் இல்லை. இப்பவெல்லாம் தண்ணிக்கும் சொத்துக்குமே போராட்டம் செய்யவேண்டியதாகிடக்கு. 

 

 

இந்தக்கோபம்

எம்மை  நடுத்தெருவில் விட்டவர்கள் மீது வரணும்

அவர்கள் யாரென்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கோபம்

எம்மை  நடுத்தெருவில் விட்டவர்கள் மீது வரணும்

அவர்கள் யாரென்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.....

 

நாங்கள்தான் நடுத்தெருவில போய் நின்றோம்.....எங்களில்தான் பிழை....அங்க நின்றால் துவக்கை தூக்கிறீயள் புலத்திற்கு வந்தால் கொடியை தூக்கிறோம்....:D

Edited by putthan

பூச்சியம் இல்லை மைனஸ் அவர்கள் விட்டு சென்றது .

நாங்கள் பூச்சியதிற்கே வரவே இருபது வருடங்கள் எடுக்கும் அந்த அளவு கிடங்கு வெட்டி விட்டு போய்விட்டார்கள் .

அர்ஜுன் சும்மா உளறுவதை விட்டுட்டு நிஜத்தை உணர முயற்சி செய்ய வேண்டும் .
பூச்சியமா ? முதலில் இலங்கையில்   தமிழன் என்ற இனம் உண்டா ? அவர்களுக்கு பிரச்சனை உள்ளதா ? அவர்களுகென்று ஒரு அரசியல் தீர்வு கொடுக்கவேணும் என்று இப்படியாக சர்வதேசமும் ஈழ மக்கள பற்றி உண்மையை அறிந்ததும் சகட்டு மேனிக்காவது போர்குற்றம் அரசியல் தீர்வு என்று கொஞ்சமாவது அக்கறை கொணடது யாரால் .....
 
நாய் கூட தமிழனை மதித்திராது .... புலிகள் இல்லாவிட்டால் .  
 
இந்த சம்பந்தனும் சுமந்திரனும் வந்துட்டங்கள் பூச்சியத்தில் இல்லை, -20 இல் இல்லை , எதிர்காலமே இல்லாமல் பண்ணுவதற்கு . கிழடுகள் கட்டிலில் ஓய்வு எடுப்பதை விட்டுட்டு வந்துட்டங்கள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.