Jump to content

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு


Recommended Posts

On 20/02/2016 at 2:46 PM, பிரபாதாசன் said:

சிங்களமும் உலகமும் இப்பவும் தமிழரின் பலத்தினை அழிப்பதில் இன்னும் முழு மூச்சுடன் இயங்குகின்றது ..ஆனால் பாலாய் போன எங்கள் தமிழன் இன்னும் காக்கை வன்னியனகவே இருக்கின்றான் ...இந்த கேவலம் கெட்ட தமிழனுக்கு தனி நாடு ஏன் ...சிங்களத்தின் காலை நக்கி வாழ தான் சரி ....இப்ப உள்ள அரசியல் அதனை தானே தெளிவாக காட்டுகின்றது ....சிங்களவன் ஒன்றாக தமிழனை எதிர்க்கிறான் ..ஆனால் எங்களில் தான் இப்ப தர்மவான்களும் , நீதியாளர்களும் , எங்களுக்கே குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் ...

ஒருவருடம் ஆகியும் வித்தியாவின் கொலைக்கு தண்டனை கிடைக்காத இந்த நிலை தான் ...இங்க கொஞ்ச பேருக்கு மக்கள் சந்தோசமாக உள்ளார்களாம் .....இது மட்டும் புலிகள் காலம் என்றால் ....சில தினங்களில் தண்டனை முடிந்திருக்கும் ....
 

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
10 hours ago, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

காக்கை வன்னியன் எட்டப்பன் போன்ற கூட்டம் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குள் புகுந்து அதனை நிர்மூலமாக்கியதுபோன்று அந்தக் கூட்டத்தின் வாரிசுகள் இன்று மீண்டெழமுயலும் தமிழ்மக்களிடையேயும்  புகுந்து காசடித்தும், புலிக்கொடி தூக்கித் தேவாரம் பாடுவதையும் கண்டும் காணாமல் விடவேண்டுமா? அவர்களை மக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும் இல்லையெனில் பரமேசுவரன் போன்றவர்களிடமும் மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும். 


யேர்மனியில் சந்தர்ப்பவாதிகளிடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிக்கிக்கொண்டுள்ளது. இதனைக் கண்டும் ஏதும் செய்யமுடியாத கையறுநிலையில் இங்குள்ள தமிழர்கள் விரக்தியடைந்துள்ளனர். காரணம் யேர்மனி நாட்டின் சட்டங்கள் இந்தச் சந்தர்ப்பவாதிகளைப் பாதுகாக்கிறது. 


7 பேர் அங்கத்தவர்களாக இணைந்து இந்த நாட்டில் ஒரு மன்றத்தை உருவாக்கிப் பதிந்துகொள்ளலாம். அதில் அவர்கள் உருவாக்கியுள்ள யாப்பின்படி எத்தனை ஆயிரம் மக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பெற்ற உதவிகள் சரியாகவே கையாளப்பட்டது என அந்த ஏழுபேரில் நான்குபேர் ஏற்றுக்கொண்டால்... அது தவறு என்று எவராலும் எதிர்க்கவோ, புகார்கொடுக்கவோ முடியாது.  


கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அது உண்மைதான். அப்படி வாழ்பவர்கள் புலிகளல்ல. புலித்தோல் போர்த்திப் புகுந்துள்ள சந்தர்ப்பவாதிகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

Link to comment
Share on other sites

16 hours ago, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

பொய்யாக நடித்தவர்களுடன் உண்மையானவர்களும் ஒன்று சேர்க்கபட்டு உள்ளார்கள் ...அதுதான் என்வாதம் ...மற்றும்படி காசடித்தவ்ர்களை நான் ஆதரிக்கவில்லை ....அவர்கள் நிட்சயமாக தண்டிக்கப்படுவார்கள் ..மாவீரரின் ஆத்மா அவர்களை சும்மா விடாது ....தண்டனை கிடைத்தே தீரும் ....ஆனால் இப்ப அவசியமானது ...பிளவினை காட்டி விமர்சனகளை வளர்த்து சிங்களத்துக்கு கை கொடுக்க வேண்டாம் ...எத்தனை ஆயிரம் விலை மதிக்க முடியாத வீரர்கள் இறந்து விட்டார்கள் இந்த காசு மட்டுமா எங்களுக்கு பெரிதாக இருக்க போகின்றது ...

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதுபோன்ற மகிழ்ச்சி உங்கள் கருத்தில் தெரிகிறது. தமிழீழ விடுதலையை நேசித்த, நேசிக்கும் உண்மையான தமிழர்கள் புலிகளாகவே உலகெங்கும் இப்போதும் நிறைந்துள்ளனர். ஐரோப்பாவில் 'நான் சிறீலங்கா தமிழன்' என்று சொல்லும் ஒருவரை 'நீ புலி' என்று சொல்லித்தான் அந்த ஐரோப்பியர்கள் இன்றும் வினவுகின்றனர்.

 
புலிகள் வந்துவிடுவார்கள் என்று கதிகலங்கி, அதற்கான வேறு காரணங்களைக்கூறி, சிறீலங்கன் அரசு இப்போதும் நவீன ஆபுதங்கள் வாங்கிக் குவிக்கிறது....! மகிந்தா கூட்டம் வெளிபடையாகவே புலி, புலி என்று ஓடி ஓடிப் பிரசாரம் செய்கிறது....! இந்தியாவும் புலிகள்பற்றி ஏதேதோ எல்லாம் எழுதுகிறது....! நீங்கள்மட்டும் மே 09 க்கு பின் புலிகளே இல்லை என்று அடித்துச் சொல்கிறீர்கள். புலிகள் அனைவரையும் நீங்கள் ஒருவரே தனி ஆளாக நின்று அழித்தீர்களா...?? ஆச்சர்யம்!! 
 

Link to comment
Share on other sites

43 minutes ago, Paanch said:

உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டதுபோன்ற மகிழ்ச்சி உங்கள் கருத்தில் தெரிகிறது. தமிழீழ விடுதலையை நேசித்த, நேசிக்கும் உண்மையான தமிழர்கள் புலிகளாகவே உலகெங்கும் இப்போதும் நிறைந்துள்ளனர். ஐரோப்பாவில் 'நான் சிறீலங்கா தமிழன்' என்று சொல்லும் ஒருவரை 'நீ புலி' என்று சொல்லித்தான் அந்த ஐரோப்பியர்கள் இன்றும் வினவுகின்றனர்.

 
புலிகள் வந்துவிடுவார்கள் என்று கதிகலங்கி, அதற்கான வேறு காரணங்களைக்கூறி, சிறீலங்கன் அரசு இப்போதும் நவீன ஆபுதங்கள் வாங்கிக் குவிக்கிறது....! மகிந்தா கூட்டம் வெளிபடையாகவே புலி, புலி என்று ஓடி ஓடிப் பிரசாரம் செய்கிறது....! இந்தியாவும் புலிகள்பற்றி ஏதேதோ எல்லாம் எழுதுகிறது....! நீங்கள்மட்டும் மே 09 க்கு பின் புலிகளே இல்லை என்று அடித்துச் சொல்கிறீர்கள். புலிகள் அனைவரையும் நீங்கள் ஒருவரே தனி ஆளாக நின்று அழித்தீர்களா...?? ஆச்சர்யம்!! 
 

வெட்கபடவேண்டிய விடயத்திற்கு  பெருமைப்படுவர்களை என்ன செய்யாலாம் .

நீங்கள் புலிகளை எப்படி பார்த்தீர்கள் என்பது முக்கியமல்ல புலிகளை உலகம் எப்படி பார்த்தது என்பதுதான் முக்கியம் .

மகிந்தா தொட்டு இந்தியாவரை அவர்களை இன்றும் இழுப்பது அவர்களால் ஏற்பட்ட அழிவுகள் தான் .

இன்று ISIS ,அல்கைடா என்று உலகமெ பேசுது ,

தாடி தலைப்பாவுடன் யாரைப்பார்த்தாலும்  இவனும் அவர்களில் ஒருவனோ என்று ஒரு சந்தேகப்பார்வை.

YouTube இல் முழுநீள அங்கியுடன் தாடி தலைப்பா சகிதம்  ஒரு Bag கொண்டுவந்து அவர் போட மக்கள் விழுந்து அடித்து ஓடும் காட்சிகளை  பார்த்து சிரிக்கின்றார்கள் .

இது சிரிப்பதற்கு உரிய விடயமல்ல அவர்களை மக்கள் எப்படி பார்கின்றார்கள் என்ற உளவியல் சம்பந்தபட்ட விடயம் .

இன்றும் சிரியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து தினமும் நாற்பது ஐம்பது பேர்கள் என்று பலியாகும் போது  எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகள் இன்றும் இந்த நாகரீகமடை ந்த உலகில் இருக்கின்றார்கள் என்று கோவம் வரும் பிறகு நாங்களே அதை ஆராதித்தவர்கள் பிறகு மற்றவர்களை பார்த்து கோபப்பட என்ன இருக்கு என்ற நினைவும் வரும் . 

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

விசுகு அண்ணா எங்கட வீட்டில குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவனை திட்டி என்ன பயன்.

உண்மைதான்  சகோதரி.

நான் மேலேயே எழுதினேன்

இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை

அதை அவர்கள் முடிக்கணும்

உண்மைகளை மக்களுக்குச்சொல்லணும் என்று....

 எனது வரம்புக்கு உட்பட்டு  என்னால் சொல்லக்கூடியதை

தெரிந்தவற்றை நேரடியாகவே சொல்லியாச்சு...

 

இதில் எனது கவலை எல்லாம்

ஒருங்கிணைப்புக்குழுவின் கீழுள்ள

தமிழ்ப்பாடசாலைகளின் மாணவர்கள்

விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள்

இயல் இசை நாடகங்களின் எமது சிறார்களின்  எதிர்காலம் தான்...

இவை உலகம் பூராகவும் எமது அடுத்த சந்ததியின் தமிழ்க்கல்வி 

மற்றும் கலைகள் சார்ந்து செய்தவை தான் இன்றும் ஈழத்தமிழினத்தை ஒரு தனி அடையாளமாக காத்துவருகிறது.

ஒன்றை உடைப்பது

அல்லது இல்லாமல் செய்வது சிறியவிடயம்

ஆனால் உருவாக்குவது....

அதன் பழுவும் வேதனையும் நான் அறிவேன்.

ஏனெனில் இவற்றை உருவாக்கும்போது நானும் இருந்தேன்....

 

Link to comment
Share on other sites

3 hours ago, arjun said:

வெட்கபடவேண்டிய விடயத்திற்கு  பெருமைப்படுவர்களை என்ன செய்யாலாம் .

நீங்கள் புலிகளை எப்படி பார்த்தீர்கள் என்பது முக்கியமல்ல புலிகளை உலகம் எப்படி பார்த்தது என்பதுதான் முக்கியம் .

மகிந்தா தொட்டு இந்தியாவரை அவர்களை இன்றும் இழுப்பது அவர்களால் ஏற்பட்ட அழிவுகள் தான் .

இன்று ISIS ,அல்கைடா என்று உலகமெ பேசுது ,

தாடி தலைப்பாவுடன் யாரைப்பார்த்தாலும்  இவனும் அவர்களில் ஒருவனோ என்று ஒரு சந்தேகப்பார்வை.

YouTube இல் முழுநீள அங்கியுடன் தாடி தலைப்பா சகிதம்  ஒரு Bag கொண்டுவந்து அவர் போட மக்கள் விழுந்து அடித்து ஓடும் காட்சிகளை  பார்த்து சிரிக்கின்றார்கள் .

இது சிரிப்பதற்கு உரிய விடயமல்ல அவர்களை மக்கள் எப்படி பார்கின்றார்கள் என்ற உளவியல் சம்பந்தபட்ட விடயம் .

இன்றும் சிரியாவில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து தினமும் நாற்பது ஐம்பது பேர்கள் என்று பலியாகும் போது  எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகள் இன்றும் இந்த நாகரீகமடை ந்த உலகில் இருக்கின்றார்கள் என்று கோவம் வரும் பிறகு நாங்களே அதை ஆராதித்தவர்கள் பிறகு மற்றவர்களை பார்த்து கோபப்பட என்ன இருக்கு என்ற நினைவும் வரும் . 

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

2009 இல் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் "பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. 


2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கியுள்ளது.


2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 
16.10.2014 அன்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 ISIS ,அல்கைடா என்ற அமைப்பை உலகத்தில் எந்த ஒருநாடும் ஆதரித்ததில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்படியானதல்ல. அல்கைடா என்ற அமைப்புடன் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிடுவது மிகவும் ஒரு உச்சமான கேவலமான காழ்ப்புணர்ச்சியாகத் தெரியவில்லையா ?? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

2009 இல் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் "பயங்கரவாத அமைப்பு" அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. 


2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீங்கியுள்ளது.


2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 
16.10.2014 அன்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, லக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


 ISIS ,அல்கைடா என்ற அமைப்பை உலகத்தில் எந்த ஒருநாடும் ஆதரித்ததில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்படியானதல்ல. அல்கைடா என்ற அமைப்புடன் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிடுவது மிகவும் ஒரு உச்சமான கேவலமான காழ்ப்புணர்ச்சியாகத் தெரியவில்லையா ?? 
 

பாஞ்ச்! நன்றாக சொல்லியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

ஆண்டுகளை பாருங்கள் ,

2009 இற்கு எதை செய்தும் என்ன ஆகாப்போகுது 

அதைவிட பகிடி இந்தியாவும் தடை தமிழ் நாட்டை ஆளுபவர்களும் எதிர்ப்பு சீமானின் ஆதரவு எங்களுக்கு போலிருக்கு பான்சின் நியுசிலாந்து டச்சு நீதி மன்ற தீர்ப்பு பற்றிய கருத்துக்கள் .

சர்வதேசம் என்றால் என்னவென்று தெரியாது 

இந்தியா என்றால் யாரென்று தெரியாது 

தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்கள் யாரென்று தெரியாது 

ஆனால் ஒரு சுப்பன் சொன்னான் குப்பன் சொன்னான் என்று நியாயப்படுத்தல் 

இருபது வருடமாக எந்த ஒரு நாட்டிடமும்  இருந்து ஒரு அங்கீகாரமோ கடைசி ஆதரவோ பெறமுடியவில்லை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவவை மட்டும் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிய உங்களுக்கு சர்வதேசம் என்றால் என்ன என்று சொன்னால் புரியவா போகுது .

84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள் நாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் வந்தவுடனேயே காணாமல் போனவர்கள்...
84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள்..
கடைசியில் மாலைதீவை பிடித்து தமிழீழம் அமைக்க முயன்றமை குறித்து உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

3 hours ago, arjun said:

ஆண்டுகளை பாருங்கள் ,

2009 இற்கு எதை செய்தும் என்ன ஆகாப்போகுது 

அதைவிட பகிடி இந்தியாவும் தடை தமிழ் நாட்டை ஆளுபவர்களும் எதிர்ப்பு சீமானின் ஆதரவு எங்களுக்கு போலிருக்கு பான்சின் நியுசிலாந்து டச்சு நீதி மன்ற தீர்ப்பு பற்றிய கருத்துக்கள் .

சர்வதேசம் என்றால் என்னவென்று தெரியாது 

இந்தியா என்றால் யாரென்று தெரியாது 

தமிழ் நாட்டை ஆட்சி செய்பவர்கள் யாரென்று தெரியாது 

ஆனால் ஒரு சுப்பன் சொன்னான் குப்பன் சொன்னான் என்று நியாயப்படுத்தல் 

இருபது வருடமாக எந்த ஒரு நாட்டிடமும்  இருந்து ஒரு அங்கீகாரமோ கடைசி ஆதரவோ பெறமுடியவில்லை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவவை மட்டும் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிய உங்களுக்கு சர்வதேசம் என்றால் என்ன என்று சொன்னால் புரியவா போகுது .

84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள் நாங்கள்.

எனக்கு எதுவுமே தெரியாது! ஒப்புக்கொள்கிறேன். பெரும் அறிஞர்களும், அறிவாளிகளும்  நிறைந்துள்ள யாழ்களத்தில், நீயும் ஒருவனென்று ஏதோ கிறுக்குகிறாயே... உன்னைப்பற்றி அவர்கள் எப்படி எள்ளிநகையாடுவார்கள் என்று கொஞ்சமேனும் சிந்தித்தாயா? என்று என்னறிவு என்னைப் பரிகசிக்கத் துவண்டு கிடந்தேன். கவலைப்படாதேடா தோழா! நானிருக்கிறேன்!! என்று என்னைவிடவும் கீழாகக் கிறுக்கும் நீங்கள் எனக்குக் கைகொடுத்துள்ளீர்கள் நீங்கள் வாழவேண்டும்!!!  
 

Link to comment
Share on other sites

 

 

[url=http://www.yarl.com/forum3/topic/112639-பங்கு-பிரிப்புக்களும்-படுகொலையும்-பாகம்-2/?page=1]பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2 

 

சாத்திரியார் யாழை மேய்பவர் என்ற அடிப்படையில இதை வாசிப்பார் என நினைக்கிறேன்.

புதிய  தலைமுறைக்காக "அன்று சிந்திய இரத்தம்" எழுதும் கப்பில இதையும் எழுதி முடித்து விடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆளாளுக்கு எதிர்க்கருத்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு விதண்டாவாதம் செய்யாமல் யதார்த்தத்துக்கு வருவோம்.

புலிகளுடன் இருந்தவர்களே ( நான் சொல்வது இயக்கத்தில் வன்னியில், தலைமைக்கு வெகு அருகில் இருந்தவர்கள் பற்றி) அவ்வப்போது பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டியிருக்கிறார்கள். பணமென்று வரும்போது எவருமே விதிவிலக்கில்லை. 

அப்படியிருக்க இயக்கத்தால் வெளிநாட்டில் காசு சேர்க்கலாம் என்று அனுமதிப் பத்திரம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் அள்ளு கொள்ளையாய்த் தம்மிடம் மக்கள் இன உணர்வால் உந்தப்பட்டுக் கொடுத்த பணத்தைக் கைய்யாடாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இப்படிச் சொல்வதால் வெளிநாட்டில் பணம் சேர்க்கும் எல்லோருமே மற்றவர்களின் பணத்தைக் கைய்யாடுகிறார்கள் என்று சொல்ல வரவில்லை, ஆனால் கைய்யாடுபவர்களும் அங்காங்கே இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவருகின்றேன்.

இயக்கத்திற்காகப் பணம் சேர்த்தவர்கள் சேர்த்த பணத்தில் எத்தனை வீகிதத்தை வன்னிக்கு அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை இயக்கமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஏனென்றால், சேர்க்கும் பணத்தையெல்லாம் மரியாதையாக ஊருக்கு அனுப்பிப் போடவேணும் என்று இயக்கம் கட்டளையிட்டால் எவருமே (மற்றவனின் காசில் ஆசைப் பட்டவர்களைச் சொல்கிறேன்) பணம் சேர்க்க முன்னுக்கு வரமாட்டார்கள். ஆகவே இயக்கமும் அவர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துக்கொண்டுதான் மீதியைப் பெற்றுக்கொண்டதாம்.

முதலில் இயக்கத்துக்காகப் பணம் சேர்ப்பவர்கள் எல்லாருமே சொக்கத் தங்கங்கள், நேர்மைக்கு இலக்கணங்கள் எனும் மாயைவிட்டு வெளியே வாருங்கள். சிலர் இருக்கிறார்கள், ஆனால் கைய்யாடுபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இயக்கத்துக்காகப் போராடவில்லை, பணம்தான் சேர்க்கிறார்கள். 

மாதாந்தப் பணம் கேட்டவர்களும், வீட்டு மோர்ட்கேஜில் மேலதிகமாகக் கடன் பெற்றுத் தாங்கோ என்று கேட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதைவிட 2009 போரின் இறுதிக் காலத்திலும் பணம் கேட்டவர்களும் இருக்கிறார்கள். வன்னிக் கொலைக் களத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த இவர்கள் எப்படிப் பணம் சேர்த்து யாருக்கு யாரினூடாக அனுப்ப அன்று சேர்த்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று பணத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. மாவீரர் தினம் இரண்டாக நடக்கிறது. குழுவுக்குக் குழு போட்டியாக மாவீரர் தின அறிக்கையும், செய்திகளும் வெளியிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கு எதிரிதான் காரணம் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் அவர்களின் வியாபாரம் களை கட்டுகிறது.

இறுதியாக, தலைமையையே ஏமாற்றி சேர்த்த பணத்தில் பகுதியை மட்டுமே வன்னிக்கு அனுப்பி மீதியை ஏப்பம் விட்டவர்களுக்கு இன உணர்வால் உந்தப்பட்டு, எதுவுமே யோசிக்காமல், "பொடியளுக்குத்தானே" என்று அள்ளிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தை ஏப்பம் விடுவது ஒன்றும் அவ்வளவு கடிணமான காரியமாக இருக்கப்போவதில்லை.  

 

முதலில் யார் யார் எவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும், அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும். அந்தப் பணத்தை தாயகத்தில் போரில் ஊணமான போராளிகளுக்கும், கணவனை, மனைவியை பெற்றொரை இழந்த அநாதைகளுக்கும் செலவழிப்பதாகச் சொல்லட்டும், அப்போது நம்புகிறோம் இவர்கள் நேர்மையானவர்கள் என்று. அதுவரை, இவர்கள் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.  

 

வாங்கோ, வந்து எல்லாரும் என்னை ஒரு திட்டு திட்டிவிட்டுப் போங்கோ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்கள் கருத்தைப்பார்க்கும் போது

மிகவும் தள்ளி நின்றிருக்கின்றீர்கள் என்பது மட்டும் தான் தெரிகிறது..

அது உங்கள் தப்பல்ல

90 வீதமானவர்கள் இவ்வாறு தான் இருந்தார்கள்

நின்றார்கள்.

நீங்களுமா ரகு ......???

இதற்கு மேல் இத்திரியில் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2016 at 1:14 AM, தெனாலி said:

இப்ப என்ன சொல்ல வாறிங்க? காசடித்த கூட்டம் புலிக்கொடி தூக்கி தேவாரம் பாடியதால அவர்களை கண்டும் காணாமல் விடவேண்டுமா? இதுக்குள்ள காக்கை வன்னியன் எட்டப்பன் எல்லாம் எதுக்கு? சத்தியமாக எனக்கு உங்களை போன்றவர்களின் சிந்தனையோட்டம் விளங்குவதே இல்லை. கண்ணுக்கு முன்னால ஒரு கூட்டம் போராட்டத்தை காட்டி கோடி கோடியாக கொள்ளையடித்து வாழுது. அதை எவராவது சுட்டி காட்டினா அவன் சிங்கள கைக்கூலி. 

இப்படி யாழில் வந்து காட்டுக்கத்து கத்துவதை விட அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்யுங்களேன். அது இப்படியான நயவஞ்சகர்களை அறிந்துகொள்ளவும்  எமது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும்  பேருதவியாக இருக்கும்.

On 2/22/2016 at 3:06 PM, goshan_che said:

பாஞ்,

ஜேர்மனியில் மட்டுமில்லை உலகில் எங்கேயும் இப்போ நான்தான் புலி, புலி ஆதரவாகக் என்று சொல்லும் அனைவரும் இப்படிப்பட்ட கயவர்களே.

 

புலி எந்த ஒன்று மே 09 க்கு பின் இல்லை.

இப்போ இருபதெல்லாம் புலியை காட்டி வயிறு வளர்க்கும் கூட்டம்.

புலிதான் இப்போது இல்லைஎன்றாகிவிட்டதே  அப்படியிருந்தும் இப்போதும் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள். இதில் யார் முட்டாள் என்று புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

மிகவும் யதார்த்தமான கருத்துகள்.

வெடிவிழப் போது தலை கவனம்.

எப்போதும்,

பெயரை எப்படி மாற்றினாலும் அதே அசட்டுக் கேள்விகள் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, arjun said:

உலகம் முழுக்க ஒருவரை தெரிகின்றதென்றால் அவர் பலவகையில் பிரபலாமாக இருக்கலாம் .

காந்தி ,மார்டின் லூதர் கிங் ,மாண்டேலா ஒரு விதம் 

கிட்லர் ,முசோலினி ,போல்போட் வேறுவிதம் 

பிரபலமாவது பெரியவிடயமல்ல அது எப்படி என்பதுதான் முக்கியம் .

தயவுசெய்து காந்தியையும் மண்டேலாவையும் ஒரேதட்டில் வைத்து ஒப்பிடாதீர்கள். காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பல வீரர்களின் உயிர் தியாகத்தால் கிடைத்த விடுதலையை தனதாக்கிக் கொண்டவர். மண்டேலா அப்படியல்ல.

 

இதே நாகரிக உலகத்தில்தானே ஜார்ஜ் புஷ்ஷும் பொய்யான காரணங்களைக்காட்டி இஸ்ரேலை பாதுகாக்க எத்தனையோ ஆயிரம் ஈராக்கியர்களை கொன்றுகுவித்தனர். 

Link to comment
Share on other sites

11 hours ago, Sasi_varnam said:

கலவரம் வந்தவுடனேயே காணாமல் போனவர்கள்...
84 இலேயே டெல்கியில் அலுவலம் திறந்து வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த ஆட்கள்..
கடைசியில் மாலைதீவை பிடித்து தமிழீழம் அமைக்க முயன்றமை குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் சிறுவனாக பார்க்கும் சசி பல வேலைகளில் குழந்தைதனமாகவும் கருத்தை எழுதுவார் .

84 இல் டெல்கியில் அலுவலகம் திறந்து நிருபர்களையும் வெளிநாட்டுதூதுவர்களை சந்தித்ததும் பயிற்சிக்கு பாலஸ்தீனத்திற்கு போராளிகள் சென்றதும் உமா மோரிசியல் உத்தியோகபஊர்வ பிரயாணம் மேற்கொண்டதும் பின்னர் செய்த பல தவறுகளால் இல்லை என்று ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில் இருந்த அக்கறை சற்றேனும் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதில் காட்டியிருந்தால் பலருக்கு இப்படி எழுதவேண்டிய தேவை வராது .

உங்களை மாதிரி நானும் எழுதுவதென்றால் முப்படையும் வைத்திருந்தவர்கள் எப்படி வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் காலில் விழுந்தது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு சொன்ன கருத்தையே பல இடங்களில், பல திரிகளில் பதிவு செய்து இருக்கிறேன்.
அது யதார்த்தம். எவனோ செய்த தவறுகளுக்கு யாரும் வெள்ளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரம் மாறி, மாறி இங்கே உறவாடும் ஒருவருக்கொருவர் காரி உமிழ்து கொள்ளவும் தேவை இல்லை.

இன்னும் ஒரு திரியில் கனடாவில் தேசியத்தின் பெயரால் காசு சுருட்டியவர்களின் பெயர் விவரங்கள் இருந்தால் தாருங்கள், நான் அவர்களிடம் இது பற்றி கதைக்கிறேன் ஏன் என்றால் இது ஒரு ஈழ தமிழனின் கடமை எனவும் எழுதினேன்.

இதோ ஒரு உதாரணம்.
கொழும்பான் வாழ்க்கையில தெரிஞ்சு கொள்ள நெறையவே இருக்கு.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புறிய செல்வோரை அரபுக்காரன் எப்படி ஆட்டிப்படைகிறான் என்பதை நாங்கள் அறிவோம்.  இங்கே அப்படி அல்ல, அவனவன் அவனவனுக்கு கைதேர்ந்த கலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருப்பான். 
இங்கே சீக்கியர் முதல், சிங்களவர் வரை
பாக்கிஸ்தானி முதல்  பாலஸ்தீனியன் வரை 
அயர்லாந்துக்காரன் முதல் ஆப்கானிஸ்தான் காரன் வரை
ஆக மொத்தம் வெள்ளையன் முதல் கருப்பன்வரை
ஒரு கொஞ்ச பேர் இந்த இந்த மாதிரியான முறை கேடான வேலைகள தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருப்பார்கள் , இதில் தமிழர் ஒன்றும் விதி விலக்கல்ல.
இவர்களில் கொஞ்ச பேர் நொந்து போன தமிழனையே "தேசியம்" என்ற பெயரில் குறி வைகிறார்கள்.

கனேடிய பாராளுமன்ற செனட்  சபையில் இருந்த மைக் டாப்பி, பர்மேலா வாலின், இன்னும் கொஞ்ச பேர் பொய்யான கணக்கு வழக்குகளை காட்டி அரசாங்க பணத்தை கையாடி கோர்ட்டு, கேஸு என்று இன்னும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி எத்தனையோ தில்லாலங்கடி இருக்கு கொழும்பான்.
நமக்கென்னவோ கண்ணில் படுவது "புலம் பெயர் ~ ஈழத்து தமிழரின்" ஜில்மால் மட்டும்தான்.
அதற்காக அவர்கள் செய்வது சரி என்று மட்டும் நான் சொல்ல வரவில்லை.
அவர்கள் பத்தோடு பதினொன்று மட்டுமே. 
மற்றையவர்கள் எல்லாம் புனிதர்கள் என்ற உங்கள் விம்பம் தவறானது.

  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

நான் சிறுவனாக பார்க்கும் சசி பல வேலைகளில் குழந்தைதனமாகவும் கருத்தை எழுதுவார் .

84 இல் டெல்கியில் அலுவலகம் திறந்து நிருபர்களையும் வெளிநாட்டுதூதுவர்களை சந்தித்ததும் பயிற்சிக்கு பாலஸ்தீனத்திற்கு போராளிகள் சென்றதும் உமா மோரிசியல் உத்தியோகபஊர்வ பிரயாணம் மேற்கொண்டதும் பின்னர் செய்த பல தவறுகளால் இல்லை என்று ஆகிவிடாது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில் இருந்த அக்கறை சற்றேனும் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதில் காட்டியிருந்தால் பலருக்கு இப்படி எழுதவேண்டிய தேவை வராது .

உங்களை மாதிரி நானும் எழுதுவதென்றால் முப்படையும் வைத்திருந்தவர்கள் எப்படி வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் காலில் விழுந்தது குறித்து உங்கள் கருத்து என்ன ?

உங்கள் கருத்துக்களில் ஒன்று மட்டும் புறிவதில்லை..

அடிக்கடி "போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவதில்" என்ற சொற்களை பாவிக்கிறீர்களே ...

84 நாளில் வெளியேறியவர் நீங்கள்... 90 களில் வெளியேறியவன்  நான்.

சிங்கள காடையர், இலங்கை ராணுவ கெடுபிடி, இந்திய ராணுவ அட்டூழியங்கள், ஈ.பீ.டீ.பீ, ஒட்டுக்குழு, ஒட்டாத குழு, மாணிக்கதாசன், வெள்ளையன் இப்படி பல பேரின் கொடூரங்களுக்கு மத்தியில், அடக்கு முறைக்கு முகம் கொடுத்தவன்.

போராட்ட காலத்தில் புலிகளுக்கும், மக்களுக்கும் மண்ணில் நின்று சின்ன அளவிலாவது ஒத்தாசைகள், உதவிகள் புரிந்தவன் நான். 
எந்த விதத்தில் நீங்கள் போராட்டத்தில் என்னை விட பங்கெடுத்தவன், தோல் கொடுத்தவன் என்று சிலாகிக்கிறிர்கள்.        

வெள்ளை கொடி பிடித்து எதிரியின் காலில் ....

பல துரோகிகளின் உதவிகளோடு,

சர்வதேசத்தின் அரவணைப்போடு,

எதிரியின் கை ஒங்க,

நாம் பலம் இழக்க

முடிவுக்கு வந்ததே புலிகளின் ஆயுத போராட்டம்.   

Link to comment
Share on other sites

கருணாநிதி அடிக்காத காசா அல்லது ஜெயலலிதா அடிக்காத காசா இவற்றை எல்லாம் விட்டு விட்டு அவனவன் ரீமோர்ட்கேஜ் செய்து ,கிரடிற் காட்டில் அடித்து போராட்டத்திற்கு என்று கொடுத்த  கொஞ்ச காசை பற்றி ஏன் அலட்டிகொள்கின்றீர்கள் ?

ராஜீவ்காந்தி போபர்ஸில் அடிக்காத கொள்ளையா லல்லு பிரசாத் மாட்டுதீவனத்தில் செய்யாத ஊழலா நிதியுடன் தொடர்பில் இருந்தால் நாலு பணத்தை பொக்கெட்டுக்குள் வைக்கத்தான் சொல்லும் இதையெல்லாம் போய் பெரிதுபடுத்திக்கொண்டு ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

இங்கே ஆளாளுக்கு எதிர்க்கருத்து எழுதுவதாக நினைத்துக்கொண்டு விதண்டாவாதம் செய்யாமல் யதார்த்தத்துக்கு வருவோம்.

புலிகளுடன் இருந்தவர்களே ( நான் சொல்வது இயக்கத்தில் வன்னியில், தலைமைக்கு வெகு அருகில் இருந்தவர்கள் பற்றி) அவ்வப்போது பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டியிருக்கிறார்கள். பணமென்று வரும்போது எவருமே விதிவிலக்கில்லை. 

அப்படியிருக்க இயக்கத்தால் வெளிநாட்டில் காசு சேர்க்கலாம் என்று அனுமதிப் பத்திரம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டும் அள்ளு கொள்ளையாய்த் தம்மிடம் மக்கள் இன உணர்வால் உந்தப்பட்டுக் கொடுத்த பணத்தைக் கைய்யாடாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இப்படிச் சொல்வதால் வெளிநாட்டில் பணம் சேர்க்கும் எல்லோருமே மற்றவர்களின் பணத்தைக் கைய்யாடுகிறார்கள் என்று சொல்ல வரவில்லை, ஆனால் கைய்யாடுபவர்களும் அங்காங்கே இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவருகின்றேன்.

இயக்கத்திற்காகப் பணம் சேர்த்தவர்கள் சேர்த்த பணத்தில் எத்தனை வீகிதத்தை வன்னிக்கு அனுப்பினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை இயக்கமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஏனென்றால், சேர்க்கும் பணத்தையெல்லாம் மரியாதையாக ஊருக்கு அனுப்பிப் போடவேணும் என்று இயக்கம் கட்டளையிட்டால் எவருமே (மற்றவனின் காசில் ஆசைப் பட்டவர்களைச் சொல்கிறேன்) பணம் சேர்க்க முன்னுக்கு வரமாட்டார்கள். ஆகவே இயக்கமும் அவர்களுக்கு ஒரு பிடியைக் கொடுத்துக்கொண்டுதான் மீதியைப் பெற்றுக்கொண்டதாம்.

முதலில் இயக்கத்துக்காகப் பணம் சேர்ப்பவர்கள் எல்லாருமே சொக்கத் தங்கங்கள், நேர்மைக்கு இலக்கணங்கள் எனும் மாயைவிட்டு வெளியே வாருங்கள். சிலர் இருக்கிறார்கள், ஆனால் கைய்யாடுபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இயக்கத்துக்காகப் போராடவில்லை, பணம்தான் சேர்க்கிறார்கள். 

மாதாந்தப் பணம் கேட்டவர்களும், வீட்டு மோர்ட்கேஜில் மேலதிகமாகக் கடன் பெற்றுத் தாங்கோ என்று கேட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். அதைவிட 2009 போரின் இறுதிக் காலத்திலும் பணம் கேட்டவர்களும் இருக்கிறார்கள். வன்னிக் கொலைக் களத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்த இவர்கள் எப்படிப் பணம் சேர்த்து யாருக்கு யாரினூடாக அனுப்ப அன்று சேர்த்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று பணத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. மாவீரர் தினம் இரண்டாக நடக்கிறது. குழுவுக்குக் குழு போட்டியாக மாவீரர் தின அறிக்கையும், செய்திகளும் வெளியிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கு எதிரிதான் காரணம் என்று நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் அவர்களின் வியாபாரம் களை கட்டுகிறது.

இறுதியாக, தலைமையையே ஏமாற்றி சேர்த்த பணத்தில் பகுதியை மட்டுமே வன்னிக்கு அனுப்பி மீதியை ஏப்பம் விட்டவர்களுக்கு இன உணர்வால் உந்தப்பட்டு, எதுவுமே யோசிக்காமல், "பொடியளுக்குத்தானே" என்று அள்ளிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தை ஏப்பம் விடுவது ஒன்றும் அவ்வளவு கடிணமான காரியமாக இருக்கப்போவதில்லை.  

 

முதலில் யார் யார் எவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும், அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள் என்று சொல்லட்டும். அந்தப் பணத்தை தாயகத்தில் போரில் ஊணமான போராளிகளுக்கும், கணவனை, மனைவியை பெற்றொரை இழந்த அநாதைகளுக்கும் செலவழிப்பதாகச் சொல்லட்டும், அப்போது நம்புகிறோம் இவர்கள் நேர்மையானவர்கள் என்று. அதுவரை, இவர்கள் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.  

 

வாங்கோ, வந்து எல்லாரும் என்னை ஒரு திட்டு திட்டிவிட்டுப் போங்கோ !

இங்கு ஒரு யாதர்தமும் இல்லை எதார்த்தமும் இல்லை 

புலியை வைத்து வாந்தி எடுப்பது ....
புலம்பெயர்ந்தவர்களை வைத்து வாந்தி எடுப்பது ...
(அவர்களுக்கு புலன் பெயர்ந்துள்ளதால் அந்த லிஸ்டில் அவர்கள் இல்லை) 
தமிழ் இனத்தை வைத்து வாந்தி எடுப்பது ....
"தமிழ் ஈழம்"  அது எதோ புலிகள் உருவாக்கிய நிலம் என்று 
இரு மனபிராந்தி அதைவைத்து வாந்தி எடுப்பது ....


எல்லாம் முடிய ஒன்றுமில்லை என்றால் 
மக்கள் எவளவு கஸ்ட்ரபட்டு காசு கொடுத்தார்கள் ?
என்று நீலி கண்ணீர் வடிப்பது ....
காசு கொடுத்த நாங்களே எதோ நடப்பது நடக்கட்டும் என்று 
பார்த்துகொண்டு இருக்கிறோம்.

புலி இல்லை 
புலம்பெயர்ந்தவர்கள் இல்லை 
தமிழ் இல்லை 
தமிழ் ஈழத்தை சார்ந்தவரில்லை 

இப்ப ஏன் குத்தி முறிகிறார்கள் ? 
எங்கேனும் சொறிஞ்சா ...? போய் நல்ல கடி சொறி மருத்துவரை பார்க்க வேண்டும் 
மூளை குறைபாடு என்றால் பொய் ஒரு சைகொலோஜிச்டை பார்க்க வேண்டும்.

குறைந்த பட்சம் ஒரு கடிதம் போடுபவனுக்கே ஒரு முகவரி வேண்டும்.
இதில் அடுத்தவனுக்கு வாந்தி எடுக்க வெளிக்கிட்டு விட்டார்கள்.

இதுக்குள் அல்கெய்டா ... ஐ ஸ் ஸ் பற்றி புலியை செருகி விட 
மன கனவு கானபவர்களுக்கு ஒன்றை சுருக்ககமாக சொல்கிறேன்.

முடிந்தால் ஐ ஸ் ஸ் கொடியுடன் கனடாவில் நாலு வீதியில் திரிந்துவிட்டு 
வந்து இந்த வர்னைகளை கொட்டவும்.

எங்களிடம் நீதி நியாயம் இருக்கிறது 
அது அவர்களுக்கும் தெரியும் 
எமக்கு முகவரி இருக்கிறது .... அதுதான் புலிக்கொடி !
வரும் 14ஆம் திகதியும் இதே கொடியுடந்தான் ஐ நா போகிறோம் .
வெள்ளை மாளிகை போனோம் ...
பக்கிங்கம் பலஸ் போனோம் ....
டில்லிக்கும் போனோம் .....
உலகம் எங்கும் போய்க்கொண்டுதான் இருக்கிறோம்.

நாம் ஈழ தமிழர்கள் 
அடுக்கமுறைக்கு ஆளானவர்கள் 
அகிம்சை தோற்றது 
ஆயுதம் ஏந்தி போராடினோம் 
சர்வ ஆதிக்க உலகம் எம்மை அழித்தது 
(உலகில் இது புதியதல்ல ) 
மீண்டும் கதவுகளை தட்டுவோம்.

உரிமை போர் உடைந்ததாய் உலகில் இல்லை ஒரு உவமை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கனடாவில் ஐ எஸ் கொடியோடு நடக்கணும் எண்டா 

நீங்கள் கொழும்பில் கோல்பேசில் புலிக் கொடியோடு நடக்கோணும் அதுதான் நியாயமான சவால்.

அவருக்கும் ஈராக் தெருக்களில் போய் ஐ எஸ் கொடி ஆட்டப் பயமிருக்காது.

மேற்கின் பார்வையில் புலியும் ஐ எஸ் சும் பயங்கரவாதிகள்.

ஆனால் ரெண்டும் ஒண்டல்ல.

ஐ எஸ் எதிரி.

புலி தேவைக்கேற்ப பயன்படுத்தக் வேண்டிய அமைப்பு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலிக்கொடியை புலிகளின் கட்டுப்பாடில் உள்ள 
பிரதேசத்தில் மட்டுமே பிடிக்கிறோம் என்று எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
உலகம் எங்கும் பிடிக்கிறோம் என்றுதான் எழுதினேன்.

ஜெனங்கள் தங்கள் உரிமைகளை கொல்பேசில் (கொழும்பில்)
ஜெனநாயக ரீதியாக பேசும் நிலைமை இருந்திருந்தால் 

புலியே இருந்திருக்காது!

நாட்டு பற்று காரணமாக 
எனது வீட்டு முற்றத்திலேயே ஒரு சிங்க கொடி பறந்து கொண்டு இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://thodarum.com/ltte-intelligent-mathavanmaster/ இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958   தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புலனாய்வுத்துறையில் மிகத் திறமையான செயற்பாடுகளை உடைய பலரை இனம் கண்டு அவர்களின் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கான புலனாய்வின் வீச்சை அதிகரித்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் மாதவன் மாஸ்ரர் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென பதிவுசெய்தவர். தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ள  மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்ட புலனாய்வுத் துறைப் போராளிகள் பலரை முள்ளி வாய்க்காலில் இருந்து கடுமையான முயற்சிகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரால் பயிற்றப்பட்டு சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், அரச நிர்வாகங்களுக்குள்ளும், அதன் படைகளுக்குள்ளும் ஊடுருவி தமது செல்வாக்கைச் செலுத்தி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர், கடைசி நேர சரணடைவின் போது மிகக் கடுமையான காயங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் இருந்து  மாதவன் மாஸ்ரர் அவர்களும் பாதுகாப்பாக வெளியேறியிருப்பார் என எண்ணியிருந்த போராளிகளுக்கு இவரின் வீரச்சாவு செய்தி ஏற்க முடியாத ஒன்றாகவே அமையும். அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம். சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது. தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வனஜா, ,ஜனனி, ஜெயா,.. ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார். நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள். அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது. வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு. ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார். 26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர். ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது. அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது. கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார். ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார். அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர். அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயாராகியது. புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது. பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது. பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள். யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர். பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது. புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது. குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார். யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார். பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். யாழ்மாவட்டம் மாதகல் ராஜன் , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள், எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது. இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது. அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது. இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது. கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார். அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது. மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார். இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள். அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர். கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும் அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார். 1993 காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வெவ்வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார். மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது. குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது. மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை. யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது. 09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர். முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது. குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது. அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும், எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது. நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர். எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது. அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம் புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர். தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும். நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான். புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது. 17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண். காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம். 6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. 30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா விடுதலைப்புலிகள் முதல்பெண் கரும் புலியை உருவாக்கிபெருமைக்குரியவரும்.அவர்களின் புலனாய்வுத்துறையின்பணிகளானது ஒரு தனி வரலாறு. புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது. இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும். எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார். இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம். பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது. இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது. பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம். ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது. இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது. ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது. புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள். இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர். இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது. 2009 மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு. பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார். தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார். 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார். புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….! புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார். உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.     நினைவுப்பகிர்வு : சாந்தி நேசக்கரம்
    • அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......!  😁
    • இருவரும் மன்னிக்கவும்.., தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை… அதுதான் விமானநிலையத்தில் அமளி…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.